Jump to content

பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!

பிரான்ஸ் ஓய்வூதிய எதிர்ப்பு: பரிஸில் மோதல்!

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து பரிஸில் பொலிஸார் போராட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 64ஆக உயர்த்தியதன் எதிரொலியாக பிளேஸ் டி லா கான்கார்டில் கூட்டம் கூடியது.

இந்தத் திட்டங்கள் இரண்டு மாதங்கள் சூடான அரசியல் விவாதங்களையும் வேலைநிறுத்தங்களையும் தூண்டின.

இறுதியாக, பிரதமர் எலிசபெத் போர்ன் அரசியலமைப்பின் 49:3-ஐப் பயன்படுத்தினார். இது சட்டமன்றத்தில் வாக்கெடுப்பைத் தவிர்க்க அரசாங்கத்தை அனுமதித்தது.

பெரும்பான்மையை பெறுவதற்கான உத்தரவாதம் இல்லாததால், சர்ச்சைக்குரிய சட்டமூலம் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. பலர் பிரதமரை கேலி செய்தனர் மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்கான அடையாளங்களை வைத்திருந்தனர்.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்படும் என தீவிர வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவர் மரின் லு பென் பரிந்துரைத்துள்ளார்.

பரிஸ் மற்றும் பிற முக்கிய நகரங்களின் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நடவடிக்கையை நிராகரித்து, தேசிய கீதத்தைப் பாடி, தொழிற்சங்கக் கொடிகளை அசைத்தனர்.

மாலையில் சில போராட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதிக்கொண்டனர். ப்ளேஸ் டி லா கான்கார்ட்டின் நடுவில் தீ மூட்டப்பட்டது மற்றும் கேடயங்கள் மற்றும் தடியடிகளுடன் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களை அகற்றினர். இரவுக்குள், 120 பேர் கைது செய்யப்பட்டதாக, பரிஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2023/1327830

Link to comment
Share on other sites

பரிசில் குப்பை அகற்றும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் வீதியெங்கும் குப்பை நிறைந்துள்ளது.

சற்று நேரத்துக்கு முன் எதிர்க்கட்சியினரால் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றும் பிரேரிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, தமிழ் சிறி said:

ப்ளேஸ் டி லா கான்கார்ட்டின் நடுவில் தீ மூட்டப்பட்டது மற்றும் கேடயங்கள் மற்றும் தடியடிகளுடன் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களை அகற்றினர். இரவுக்குள், 120 பேர் கைது செய்யப்பட்டதாக, பரிஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையே மாண்புமிகு புட்டின் செய்திருந்தால்????????

இந்த உலகம் என்ன சொல்லியிருக்கும்? அய்யோ கடவுளே யோசிக்கவே பயமாய்க்கிடக்கு :face_with_tears_of_joy:

Link to comment
Share on other sites

15 minutes ago, குமாரசாமி said:

இதையே மாண்புமிகு புட்டின் செய்திருந்தால்????????

இந்த உலகம் என்ன சொல்லியிருக்கும்? அய்யோ கடவுளே யோசிக்கவே பயமாய்க்கிடக்கு :face_with_tears_of_joy:

 

கடந்த செப்டெம்பரில் ரஸ்யாவில் நடந்தது. 1300 பேர்வரை கைது செய்யப்பட்டனராம்.

நீங்கள் சொன்னதுபோல் மக்கள் போராட்டமெல்லாம் ரஸ்யாவில் கற்பனை செய்யக்கூட முடியாது. வீடியோவைப் பார்த்தால் நாடகம்போல்  உள்ளது.😂

  • Thanks 2
Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை

ஜனநாயகம் என்றால் வாக்களிப்பு  இருக்க வேண்டுமே??
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் நான் அரசுக்கு  ஆதரவானவன்

ஆனால் 49.3 யை  பயன்படுத்துவதற்கு  ஆதரவில்லை

Link to comment
Share on other sites

7 minutes ago, nunavilan said:

ஜனநாயகம் என்றால் வாக்களிப்பு  இருக்க வேண்டுமே??
 

ஒரு சட்ட வரைவு பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் விவாதத்தின்பின் அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்படும். முக்கியமானதொரு சட்டம் இவ்வாறான அதிகப்படியான வாக்குகள் பெறாது என்று ஊகித்தால் பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யபட்ட கட்சியிலுள்ள முதலமைச்சரால் அரசியல் வரைபில் உள்ள 49.3 சரத்திற்கு உட்பட்டு வாக்கெடுப்புக்கு உட்படுத்தப் படாமலே அமுல்படுத்த முடியும்.

இவ்வாறு அமுல்படுத்தும்போது இதற்குச் சமனாக ஆழும் கட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை யாரும் கொண்டு வரலாம் என்ற வாய்ப்பு உடனடியாக உருவாகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆழும் கட்சிக்கு 50 வீத வாக்குகள் கிடைக்கவில்லையானால் அரசாங்கம் பதவி விலக வேண்டும்.

இது ஜனநாயகம்.

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு நன்றி இணையவன் .....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

ஒரு சட்ட வரைவு பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் விவாதத்தின்பின் அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்படும். முக்கியமானதொரு சட்டம் இவ்வாறான அதிகப்படியான வாக்குகள் பெறாது என்று ஊகித்தால் பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யபட்ட கட்சியிலுள்ள முதலமைச்சரால் அரசியல் வரைபில் உள்ள 49.3 சரத்திற்கு உட்பட்டு வாக்கெடுப்புக்கு உட்படுத்தப் படாமலே அமுல்படுத்த முடியும்.

இவ்வாறு அமுல்படுத்தும்போது இதற்குச் சமனாக ஆழும் கட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை யாரும் கொண்டு வரலாம் என்ற வாய்ப்பு உடனடியாக உருவாகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆழும் கட்சிக்கு 50 வீத வாக்குகள் கிடைக்கவில்லையானால் அரசாங்கம் பதவி விலக வேண்டும்.

இது ஜனநாயகம்.

அருமையான விளக்கம். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, இணையவன் said:

கடந்த செப்டெம்பரில் ரஸ்யாவில் நடந்தது. 1300 பேர்வரை கைது செய்யப்பட்டனராம்.

நீங்கள் சொன்னதுபோல் மக்கள் போராட்டமெல்லாம் ரஸ்யாவில் கற்பனை செய்யக்கூட முடியாது. வீடியோவைப் பார்த்தால் நாடகம்போல்  உள்ளது.😂

இதை விட மோசமாக பல வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ்சில் பல போராட்டங்கள் அடித்து நொருக்கி  அடக்கப்பட்டது. அது போல்  ஜேர்மனியிலும் ஒரு போராட்டம் அடக்கப்பட்டது. இந்தா  மே தினம் வருகின்றது. காத்திருங்கள்.

ரஷ்யாவில் 1300 பேர் கைது செய்யப்படுமளவிற்கு போராட்டம் நடந்திருக்கு என்றால் அங்கே போராட்டம் நடத்த அனுமதி உள்ளது என்பதுதானே அர்த்தம். ஏதோ பிரான்ஸ்லும் மற்றைய மேற்குலக நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள்  நடக்கும் போது  தடியடிகளும் கைதுகளும் நடக்காதது போல் கதையளக்க வேண்டாம் இணையவரே :face_with_tears_of_joy:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.