Jump to content

இரட்டை - இன்னுமொரு நல்ல படம்


Recommended Posts

May be an image of 2 people, beard and text

என் நண்பர் ஒருவர் சொன்னதால், ஞாயிற்றுக் கிழமை இரவு இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் இல் பார்த்தேன். தமிழ் மொழியில் பார்க்க முடியும்.

மலையாளிகளால் எப்படி இப்படி ஒரு சின்ன கதையை ஆழமாக சொல்ல முடிகின்றது எனும் வியப்பை மீண்டும் ஏற்படுத்திய படம்.

படத்தின் இறுதி வரைக்கும் உங்களால் முடிவை / யார் அவரைக் கொன்றார்கள் என்பதையும் ஏன் என்பதையும் ஊகிக்கவே முடியாது. 

ஒரு ஆழமான சிறுகதை ஒன்றை வாசிக்க விரும்புகின்றவர்கள் இப் படத்தை பார்க்கலாம்.

கீழே இப்படத்திற்கான விமர்சனம். இவ் விமர்சனத்தை நண்பர் காட்டியதால் தான் இப் படத்தை பார்க்க தெரிவு செய்தேன்.

---------------------------------------------------------------

இரட்டை 

இரட்டையர்களில்  ஒருவன் காமுகன், குடிகாரன், சுயநலம் நிரம்பியவன். இன்னொருவன் புனிதமானவனாக இல்லாவிட்டாலும் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்து அதனால் தான் இழந்த குடும்பத்தை எண்ணி ஏங்குபவன்.
முழுத் திரைப்படமும் தீமைகள் முழுவதும் நிரம்பி வழியும் திரைக்கதையாக மாறி நகர்கிறது.ஒவ்வொரு கதாபாத்திரமும் தீடிரென்று வெளிப்படுத்தும் தீமைகள் திரைப்படம் முழுவதும் நமக்கு ஒரு சங்கடத்தைத் தந்தாலும் மனித மனங்கள் கணங்கள் தோறும் எப்படி தீமைகளின் ஊற்றுக்கண்களாக  மாறுகிறது என்பதையும் நமக்கு  அப்பட்டமாகச் சொல்கிறது.


மொத்த தீமைகளையும் தனது உடல் மொழி முதல் நடிப்பு வரை சுமந்து நடித்திருக்கிறார் ஜோஜூ ஜார்ஜ். தனது வித்தியாசமான உடல் மொழியில், நடிப்பில், வசன உச்சரிப்புகளில் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்கள் வழியாக அவர் காட்டிருக்கும் நுணுக்கமான வித்தியாசங்கள் பார்வையாளனாக நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அஞ்சலியிடம் நான் அழுக்கு என்று சொல்லும் இடத்திலும். திரைப்படத்தின் இறுதிப்பகுதியில் தான் என்றோ செய்த தீமை ஒன்று கண் முன்னே வந்து  இன்னும் இன்னும்  நீ பெரிய அழுக்கு  என்று அவருக்கே உணர்த்தும் போதும் ஜோஜூ ஜார்ஜ் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் தானும் ஒருவர் என்பதைத் தனது நடிப்பின் வழியாக நிரூபிக்கிறார்.


திரைப்படம் பார்க்கும் போது எனக்கு ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் தந்தை கதாபாத்திரம் கரமசோவ் தான் நினைவில் வந்து போனது. ஏறக்குறைய ஜோஜூ ஜார்ஜ் கதாபாத்திரம் கரமசோவ் கதாபாத்திரத்தை இமிடேட் செய்யப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு விஷயம் நாவலில் கடைசி வரை கரமசோவ் தனது அழுக்குகளுக்குக் கலங்கி எங்கும் தலைதாழ்ந்த நிற்கவில்லை. இதில் ஜோஜூ ஜார்ஜ் தனது சரியான இடத்தில் தனது அழுக்கை உணர்ந்து கொள்கிறான். அதற்காக அவன் எடுக்கும் முடிவும். அந்த முடிவு தனது இரட்டைச் சகோதரனையும் சேர்த்து எப்படிப் பாதிக்கிறது என்பதைச் சொல்கிறது #iratta என்கிற இத்திரைப்படம்.


மேசமான குழந்தைப் பருவம் அமைகிறது என்பதால் மட்டும் ஒருவன் வாழ்நாள் முழுதும் தீமைகளைச் சுமந்து அலைய மாட்டான். திரைப்படத்தில் இந்த இடம் மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை அல்லது இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்கிற சலிப்பா என்று தெரியவில்லை.
இதைமட்டும் சற்று ஒதுக்கி வைத்துப் பார்த்தால் மிகச்சிறந்த  காட்சி அனுபவமாக அமைந்துள்ளது 
கரமசோவ் நாவலில் இந்த வரிகள் வரும்


"இழிநிலையிலிருந்து உயர்நிலை நோக்கித் தன் அழிவிலா ஆன்மாவை உயர்த்திக் கொள்ளும் நல்ல மனிதனே என்றுமுள பூமித்தாயின் அணைப்பில் மகிழ்கிறான்...."


அதனால் தீமைகளின் பெரும் ஊற்றுக்கண் மனித மனம். அதை வென்றிட நீங்கள் அடிக்கடி செய்ய வேண்டியதெல்லாம் கொஞ்சம் ஆன்மாவைப் பக்குவமாகப் பார்த்துக் கொள்ள முயற்சி செய்வது.  அந்தப் பக்குவத்தை வாழ்வின் நல்ல அல்லது மேசமான அனுபவங்கள் வழியாகத்  தேடித்தேடி அறிந்துகொள்பவனே கொஞ்சமாவது மேன்மை பெறுகிறான். 
திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் உள்ளது.

க. விக்னேஸ்வரன்
https://www.facebook.com/groups/997256144439563/user/100001499004580/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரைப்படம் ஒரு சிறந்த படம் என கூறுகிறார்கள், ஆனால் படம் எனக்கு பிடிக்கவில்லை. படம் முழுவதும் ஒரே மோசமான காட்சிகள் நிறைந்த மோசமான படம்.

சில வேளை எனக்கு இலக்கிய இரசினை இல்லாததால் படம் பிடிக்கவில்லை என கருதுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் இறுதியில் தந்தை யார் என்று மகளிடம் சொல்ல ஆசைப்படும் தகப்பன், உருவ ஒற்றுமை என்ற காரணத்தால் மறைப்பது இந்த படத்தின் அதி உச்ச உணர்வுபூர்வமான காட்சி.

Link to comment
Share on other sites

10 hours ago, vasee said:

 

சில வேளை எனக்கு இலக்கிய இரசினை இல்லாததால் படம் பிடிக்கவில்லை என கருதுகிறேன். 

அப்படியெல்லாம் இல்லை, ரசனைகள் மாறுபடும் வசி. ஒன்றை பிடிப்பதற்கும் பிடிக்காமல் விடுவதற்கும் அவரவர்களுக்கு உள ரீதியிலான காரணங்கள் பல இருக்கும். 

27 minutes ago, முதல்வன் said:

படத்தின் இறுதியில் தந்தை யார் என்று மகளிடம் சொல்ல ஆசைப்படும் தகப்பன், உருவ ஒற்றுமை என்ற காரணத்தால் மறைப்பது இந்த படத்தின் அதி உச்ச உணர்வுபூர்வமான காட்சி.

ஓம்... அதுவும் அந்த நிலைக்கண்ணாடியில் தன்னை அவராக பார்த்த பின் போனை தூக்கி வீசும் காட்சி..!

இரட்டையரின் வாழ்வு இருவருக்குமே மோசமாகவே அமைந்து விடுகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இண்டைக்குதான் பாத்தன்.. கடுப்பா இருக்கு.. விமர்சனங்கள பாத்து ஓவரா நம்பி போய் பாத்தன்.. ஒன்னும் இல்லை..

இதைவிட எத்தினையோ நல்ல படங்கள் வந்திருக்கு.,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் வேற்று மொழி படம் தமிழில் மொழிமாற்றம் பெற்று வர நீண்ட நாட்களாகும் ஆனால் ரசிகர்களின் குறைவு காரணமோ அல்லது இணையத்தின் மூலம் படம் பார்ப்பது இலகுவானபின்னர்  கன்னடா தெலுங்கு மலையாளம் தமிழ் அனைத்து மொழி படம்களும் ரிலிஸ் அன்றே மொழிமாறி வந்து அவரவர் மொழிகளில் படம் காட்டுகின்றன .எனக்கு இந்த படத்தை பார்த்ததே வீண் நேரமினகெடல் என்று தோன்றுகின்றது .இந்திய படங்கள் அனைத்துமே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவன எப்பவாவது அத்தி பூத்தது போல் நாலைந்து படம்கள் பேர் சொல்வது போல் நின்று பிடிக்கும் .

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

படத்தின் இறுதியில் தந்தை யார் என்று மகளிடம் சொல்ல ஆசைப்படும் தகப்பன், உருவ ஒற்றுமை என்ற காரணத்தால் மறைப்பது இந்த படத்தின் அதி உச்ச உணர்வுபூர்வமான காட்சி.

பொறுமை கூடிய ஆள் நீங்கள் வாழ்துக்கள் உங்கள் ரசனைக்கு .

Link to comment
Share on other sites

8 minutes ago, பெருமாள் said:

பொறுமை கூடிய ஆள் 

அப்படி என்றால் என்னை என்னவென்று சொல்வீர்கள்? நான் இரண்டு தரம் பார்த்துள்ளேன் 😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதுவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நெட்பிளிக்ஸில் வந்த அன்றே பார்த்திருந்தேன். துப்பறியும் படத்தை பார்க்கும் ஆவலில் பார்த்துக்கொண்டிருந்தபோது படம் சிக்கலான முடிச்சுக்கள் கொண்டது என்று புரிந்தது. தற்கொலை என்பதை முதலிலிலே உய்ர்துணர்ந்திருந்தாலும் காரணத்தை கடைசியில்தான் புரியமுடிந்தது. இரட்டையர்களாக நடித்த ஜோஜூ ஜார்ஜின் இயல்பான நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் மீசை கூட ஒரே மாதிரியாக இருக்கவேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

அப்படி என்றால் என்னை என்னவென்று சொல்வீர்கள்? நான் இரண்டு தரம் பார்த்துள்ளேன் 😅

இந்த படத்தை பார்த்து கொண்டு இருக்கும்போதே நிழலியருக்கு பிடித்து இருக்குமென்று 

வினோத் சார் இங்கு ஸ்டேசனில்  இருக்கும்போது யாராவது....... குழந்தைகளை கூட்டி வருவார்களா என்ற ஒருவார்த்தையின் பதமே போதும் படம் எங்கு செல்கிறது என்று அப்படியொரு போலிஸ் நிலையம் வேணுமா ?அதுவும் இந்திய ஜனநாயக நாட்டில் வெட்டுகளில் இருந்து தப்பி வந்ததாம் சென்சார் பணம் வாங்குவது உண்மைதான் போல் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2023 at 03:33, நிழலி said:

அப்படியெல்லாம் இல்லை, ரசனைகள் மாறுபடும் வசி. ஒன்றை பிடிப்பதற்கும் பிடிக்காமல் விடுவதற்கும் அவரவர்களுக்கு உள ரீதியிலான காரணங்கள் பல இருக்கும்

ஓம்... அதுவும் அந்த நிலைக்கண்ணாடியில் தன்னை அவராக பார்த்த பின் போனை தூக்கி வீசும் காட்சி..!

இரட்டையரின் வாழ்வு இருவருக்குமே மோசமாகவே அமைந்து விடுகின்றது.

ஊருக்குதான் உபதேசம் உனகில்லையடி🤣

On 21/3/2023 at 05:12, நிழலி said:

அப்படி என்றால் என்னை என்னவென்று சொல்வீர்கள்? நான் இரண்டு தரம் பார்த்துள்ளேன் 😅

🤣

On 21/3/2023 at 04:03, பாலபத்ர ஓணாண்டி said:

நானும் இண்டைக்குதான் பாத்தன்.. கடுப்பா இருக்கு.. விமர்சனங்கள பாத்து ஓவரா நம்பி போய் பாத்தன்.. ஒன்னும் இல்லை..

இதைவிட எத்தினையோ நல்ல படங்கள் வந்திருக்கு.,

👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2023 at 22:17, கிருபன் said:

இரட்டையர்களாக நடித்த ஜோஜூ ஜார்ஜின் இயல்பான நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் மீசை கூட ஒரே மாதிரியாக இருக்கவேண்டுமா?

இறுதிக் காட்சியில் கண்ணாடியில் தோன்றும் விம்பம் அச்சு அசலாகத் தன்னைப் போல் இருப்பதால்தான் அந்த முடிவை அவர் எடுக்கிறார். மீசையும் ஒரேமாதிரி இருப்பது என்னை குழப்பவில்லை.

கன்னத்தில் மரு, அல்லது வெட்டுக்காயம், நிறத்தில் மாற்றம், குரலில் வேறுபாடு என எதையும் சேர்க்காமல் தனது நடிப்பால் மட்டும் இரண்டு பாத்திரங்களையும்   வேறு படுத்திக்  காட்டியிருக்கிறார் ஜோஜூ ஜோர்ஜ்.  கதை சொன்ன விதம், நடிப்பு என  படத்தில் எனக்கு எல்லாமே பிடித்திருந்தது

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற கதைகளை படமாக கொண்டு வருவதற்கும் ஒரு துணிவு வேண்டும்......ஜோர்ஜ் இன் நடிப்பு அபாரம்......இடையில் வந்த அமலாபால் நல்ல நடிப்பு.......!  👍

ஒரு போலீஸ் நிலையத்தை அப்படியே எக்ஸ்ரே எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.....அதற்கு ஒரு சபாஷ் .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2023 at 06:33, நிழலி said:

அப்படியெல்லாம் இல்லை, ரசனைகள் மாறுபடும் வசி. ஒன்றை பிடிப்பதற்கும் பிடிக்காமல் விடுவதற்கும் அவரவர்களுக்கு உள ரீதியிலான காரணங்கள் பல இருக்கும். 

உண்மைதான், பெரியளவில் எதிர்பார்க்கும் ஒரு படம் எமது இரசினையினை பூர்த்தி செய்யாவிட்டதால் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக இருக்கலாம், வெளிநாடு வந்த காலத்தில் வேலை செய்யும் இடத்தில் நல்ல படத்தினை கேட்டேன் அதில் பலர் கூறிய ஒரே படத்தினை வாடகைக்கு எடுத்து பார்த்தேன், படம் நல்ல படம்தான், முதல் தரம் எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்தார்கள் என கருதினேன் ஆனால் காலப்போக்கில் பல தடவை அந்த ப்டத்தின் காட்சிகளை யூடுப்பில் பல தடவை பார்த்தாலும் சலிக்காத படமாக இன்றுவரை உள்ள ஒரே படமாக உள்ள படம்.
இந்த படத்திலும் சில மோசமான காட்சிகள் உள்ளன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் எழுதின மாதிரி இந்த படம் நெட் பிளிக்சில் வந்தவுடனேயே பார்த்து விட்டேன் ...சுப்பர் படம்...அந்த படத்தில் நடித்தவர்களது நடிப்பு அருமை ...படம் பார்த்தவுடனேயே யாழில் வந்து எழுத வேண்டும் என்று நினைத்தேன்...இப்ப எல்லாம் எழுதவே பஞ்சியாய் இருக்கின்ற படியால் எழுதவில்லை 
 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.