-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
0
பிழம்பு · தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By பிழம்பு · பதியப்பட்டது
த்யா காயத்ரி Entertainment கோவை குணா விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்று கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திருக்கிறார். பல குரல் பேசி பலரையும் வியக்க வைத்தவர். மிமிக்ரி உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர். அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவருடன் கலக்கப்போவது யாரு மேடையில் பழகி நண்பனாக பயணித்த வெங்கடேஷை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினேன். "கோவை குணாவுக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்துச்சு. கடந்த மூன்று வருஷமா டயாலிசிஸ் பண்ணிட்டு இருந்தார். நண்பர்கள் எல்லாரும் எங்களால முடிஞ்ச சின்ன, சின்ன உதவிகளை அவருக்கு பண்ணிட்டு இருந்தோம். கிட்டத்தட்ட 5,6 வருஷம் முன்னாடியே அவர் இறந்திடுவார்னு எல்லாரும் நினைச்சோம். அந்த அளவுக்கு மோசமா அவருடைய உடல்நிலை இதுக்கு முன்னாடி இருந்துச்சு. ஆனாலும், இத்தனை நாட்களாக அவரை ஆக்டிவ் ஆக வச்சிருந்தது அவருடைய நகைச்சுவை உணர்வு தான்! கோவிட் முன்னாடி வரைக்கும் ரொம்ப பரபரப்பா நிகழ்ச்சிகள் பண்ணிட்டு தான் இருந்தார். கடந்த 7,8 மாசமாகத்தான் எந்த நிகழ்ச்சிகளும் பண்ணல. அவருடைய ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டார். அவருடைய இழப்பு எங்க எல்லாருக்குமே மிகப்பெரிய இழப்பாகத்தான் கருதுறேன்!" என்றார். ஆழ்ந்த இரங்கல்கள்! கோவை குணா : `கலக்கப்போவது யாரு' ஷோவின் முதல் டைட்டில் வின்னரான குணா மரணம்!|kalakkapovathu yaru show first title winner kovai guna passed away (vikatan.com) -
யாராவது IMF ஆபீஸ் பக்கம் போனால் அப்படியே பெரிய அதிகாரிக்கு சொல்லி விடுங்கப்பா கொடுக்கிற கடன் 2.பில்லியன் டாலருக்கும் சைனா வெடிக்கு ஓடர் பண்ணியிருக்கான்கள் என்று .
-
`திருமணத்தை எதிர்த்த பெற்றோர்; பல பெண்களுடன் நெருக்கத்தைத் தொடர்ந்த பாதிரியார்!' - விசாரணையில் தகவல் கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29). பேச்சிப்பாறை, பிலாங்காலை தேவாலயங்களில் பங்குத்தந்தையாக இருந்திருக்கிறார். பேச்சிப்பாறையைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச சாட்டிங் செய்த வழக்கில் சைபர் க்ரைம் போலீஸார் இவர்மீது வழக்கு பதிவுசெய்த நிலையில், நேற்று கைதுசெய்யப்பட்டார். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பாதிரியாரை, வரும் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் நேற்று காலை முதல் போலீஸார் நடத்திய விசாரணையில், பல புதிய தகவல்கள் வெளியாகியிருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் முடிவுசெய்திருக்கின்றனர். போலீஸார் பிடியில் சிக்காமல் இருக்க தனது செல்போனின் சிம்கார்டை மாற்றியிருக்கிறார் பாதிரியார். மொத்தத்தில் மூன்று புதிய செல்போன்களை வாங்கியவர், 11 சிம்கார்டுகளை மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கைதான பாதிரியார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு இறையியல் கல்வி, தத்துவவியல் உள்ளிட்டவை படித்திருக்கிறார். இவருக்கு ஆங்கிலம், மலையாளம், தமிழ் ஆகிய 3 மொழிகள் தெரியும். சென்னையில் பயிற்சி காலத்தின்போது ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் அந்தப் பெண்ணை பாதிரியார் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். காதலித்தவர்கள் பின்னர் மிக நெருக்கமாக இருந்திருக்கின்றனர். கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ளாமல் சேவையாற்ற வேண்டும் என்பது மரபு. ஒருகட்டத்தில், பாதிரியார் பொறுப்பிலிருந்து வெளியேறி காதலியைக் கரம்பிடித்து குடும்ப வாழ்க்கை வாழ அவர் ஆசைப்பட்டிருக்கிறார். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபோது ஆனால் அவரது வீட்டில் உள்ளவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லையாம். சிறு வயதிலேயே பாதிரியாராக வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டதால், அவரை சாதாரண வாழ்க்கைக்கு வர வேண்டாம் என குடும்பத்தினர் கூறினார்களாம். தனது காதல் ஆசை நிறைவேறாத பிறகும், அந்தப் பெண்ணுடன் தொடர்ந்து பழகிவந்திருக்கிறார். இருவரும் அவ்வப்போது வீடியோ காலில் பேசுவது வழக்கமாம். அவ்வாறு பேசும் சமயங்களில்தான் அந்தரங்க காட்சிகளை வீடியோவில் பதிவுசெய்திருக்கிறார். அந்த வீடியோக்களை லேப்டாப் ஒன்றில் வைத்திருந்திருக்கிறார். சென்னையிலுள்ள அந்தப் பெண் அவ்வப்போது குமரி மாவட்டத்துக்கும் வந்து, பாதிரியாரை தனியாகச் சந்திப்பது வழக்கமாம். கைதுசெய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இது தவிர தனக்கு அறிமுகமான அனைத்து இளம்பெண்களுடன் செல்ஃபி எடுத்து, அந்த போட்டோக்களை லேப்டாப்பில் பாதுகாத்து வைத்திருக்கிறார். புது...புது இளம்பெண்களுடன் வாட்ஸ்அப் சாட்டிங் செய்வது பாதிரியாரின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. சாட்டிங் செய்யும்போதே இளம்பெண்களின் மனநிலை என்ன என்பதை புரிந்துகொள்வாராம். யாரையும் மிரட்டியோ, அச்சுறுத்தியோ எதுவும் செய்யவில்லை என பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ விசாரணையில் கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. `திருமணத்தை எதிர்த்த பெற்றோர்; பல பெண்களுடன் நெருக்கத்தைத் தொடர்ந்த பாதிரியார்!' - விசாரணையில் தகவல் | Police interrogates priest Benedict arrested for sexual abuse - Vikatan
-
ஓம் வறுத்து வைத்தால் நல்ல ஒரு வாசம் வரும். கலரும் மண்ணிறமாக இருக்கும். கோதுமை மாவில் பார்க்க தாய்லாந்து, வியட்நாம் சீனா கடைகளில் விற்கும் மாவை 2 நிமிடம் வறுத்து எமது அரிசிமாவுடன் கலந்து அவித்தால் புட்டு பஞ்சு போல வரும். அவர்கள் dumplings செய்ய பாவிக்கிறார்கள். ஊரில் இருந்து வரும் சில மா க்கள் சரியில்லாதபோது இதை கலந்தால் நல்ல வாசமாகவும் இருக்கும். சரியான அறணை வியாபாரிகள் போல இருக்கு சிறி 😁. தாமரைக் கிழங்கு, கோகிலா தண்டு இந்தியன் கடைகளை frozen section இல் இருக்குமே. Oriental ( Thailand, Vietnaam, China, Japan) ஆக்கலும் விட்ப்பார்கள் தகவலுக்கு நன்றி நாதமுனி.
-
By Eppothum Thamizhan · Posted
நாங்கள் கேள்விமட்டும்தான் கேட்பம். அதையே நீங்கள் திருப்பிக்கேட்டால்?? வேறென்ன எஸ்கேப் அல்லது தூங்குபவர்களை போல நடிக்கிறார்கள் என்பது. கவுண்டர் சொல்வதுபோல், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!! என்ன விசுகர், எந்த கிரகத்தில இருக்கிறீர்கள்? சரி சரி நம்பிக்கைதானே வாழ்க்கை!
-
Recommended Posts