Jump to content

யாழ்ப்பாணத்து வேலி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of outdoors and tree
 
யாழ்ப்பாணத்து வேலி
********************
இந்த வேலிகளை பார்க்கையில் பலருக்கும் பல நினைப்புகள் வந்து போகும்.
இந்த வேலிகளுக்கு நிறைய வரலாறுகள் உண்டு. நிறைய விடயங்களுக்கு இந்த வேலிகளே தூதாகவும் ஏன் சாட்சியாகவும் கூட இருந்துள்ளது. சில விடயங்களுக்கு இந்த வேலிகளே குறியீடாகவும் இருக்கின்றன. எல்லாத்துக்கும் மேலாக இந்த வேலிகளால் சண்டைகள் ஏற்படாத வீடுகளே இல்லை எனலாம்.
 
வேலி உயர்த்திக் கட்டிய வீடுகளில் குமர்கள் உண்டு என்பதும் சீற் உயர்த்தி சைக்கிள் பெடியள் அடிக்கடி வந்து போனால் மறுநாளே ஒரு அடுக்கு கிடுகு உயர்வதும் யாழ்ப்பாண வேலிகளுக்குள்ள சிறப்பு அடையாளமாகும்.
 
இந்த வேலிகளில் பலவிதமான வேலிகள் உண்டு. கிடுகு வேலி, மட்டை வேலி, ஓலை வேலி, தகரவேலி,கம்பி வேலி, அலம்பில் வேலி, தூண் நிறுத்திய முள்க்கம்பி வேலி போன்றவை இதில் முக்கியமானவையாகும்.
 
இதில் கிடுகு வேலிகள் பின்னப்பட்ட தென்னோலைகளால் அடைக்கப்படும். ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி குத்தூசியால் கயிறு கொண்டு கட்டி இவ்வேலி அமைக்கப்படும். இது கொஞ்சம் செலவு குறைவு பாவனை காலமும் குறைவு. அடுத்து பனை ஓலை வேலிகள், இந்த பனை ஓலை வேலிகள் மிதித்து நேராக்கப்பட்ட்ட பனையோலைகளை குறுக்காக சரிவாக வைத்து அடைக்கும் முறை, இதன் ஆயுள்காலம் கிடுகு வேலியின் ஆயுட்காலத்தைவிட அதிகமானாலும் யாழ்ப்பாணத்தார் அதிகம் விரும்புவது என்னவோ கிடுகு வேலிகளைத்தான். அடுத்து மட்டை வேலிகள் இவை மூரி வேலிகள் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த மூரி வேலிகள் பனையோலை நீக்கப்பட்ட மட்டைகளை ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து அடுக்கி கம்பியால் வரித்துக்கட்டப்படும். இது நீண்ட கால ஆயுளைக்கொண்டது. செலவு கொஞ்சம் அதிகமானது. அந்தநாட்களில் பெரும்பாலும் வசதி படைத்தவர்களின் வேலிகளே மட்டைவேலியாக வரியப்படும். இந்த மட்டை வேலிகளின் மீது சில அடுக்கு கிடுகுகளால் வரிந்துவிட்டால் கொள்ளை அழகாக இருக்கும். இந்த மட்டை வேலிகளின் கீழ்ப்பகுதியை கறையான் அரிக்காதவாறு கழிவு எண்ணையால் வர்ணம்போல் தீட்டிவிடுவோரும் உண்டு.
 
இந்த வேலிகளில் யாழ்ப்பாணத்து வேலிகள் எப்போதுமே தனி அழகுதான். பிரதேசவாதம் என்று ஆரன் கிழம்பி வந்தாலும் அதுதான் உண்மையும், அதற்கு அந்தக் காணிகளின் அளவுகளே முக்கிய காரணம். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் காணிகள் இரண்டு முதல் ஆகக்கூடியது ஐந்து பரப்பு வரைதான் இருக்கும். அப்படியான அளவைக்கொண்ட காணிகளை அச்சறுக்கையான அழகான வேலிகளை அமைத்து பராமரிப்பது சுலபம்.
 
இந்த வேலி அடைப்புக்கும் சில விதிமுறைகள் உண்டு. இரண்டு காணிகளுக்கு நடுவேயுள்ள வேலியை அடைக்கும்போது அரைவாசி வேலியை ஒரு காணிக்காரரும் மறுபாதி காணியை ஒரு காணிக்காரருமாக அடைப்பார்கள். அப்படி அடைக்கப்படும் போது அரைவாசி வேலி ஒருகாணியின் உட்புறமாயும் மறுபாதி வேலி வெளிப்புறமாயும் இருக்கும்.
 
அனேகமான யாழ்ப்பாணத்து வேலிகளை கிளுவங் கதியால்களே அலங்கரித்து இருக்கும். முன்னர் பூவரசு, வாதராணி, முள்முருங்கை, சீமையில் கிளுவை போன்றவை அதிகளவில் இடம்பிடித்திருந்தன. இந்த வாதராணி இலை புளியம் இலை சாயலில் இருக்கும் அந்த இலை மருத்துவ குணம் மிக்கதென்று அம்மா அடிக்கடி அதில் வறை வறுப்பா. பூவரசும் வாதராணியும் விரைவாக மொத்தித்துவிடும், முள்முருங்கை மற்றும் பூவரசில் மயிர்க்கொட்டிகளின் தொல்லை என்பதாலும் காலப்போக்கில் அவை வெகுவாக குறைவடைந்துவிட்டன. இந்த கிளுவை நீண்டகாலத்துக்கு சிம்ரன் போல இருக்கும் என்பதால் பிற்காலத்தில் கிளுவை முற்றுமுழுதாக ஆக்கிரமித்துக் கொண்டது. எல்லைகளை நிர்ணயிக்கும் பகுதிகளில் தொடர்ச்சியாக பூவரசுகளே நிலைத்திருந்தன.
 
புகையிலை பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் ஊர்களின் வேலிகளில் அதிகளவு பூவரச மரங்கள் இருந்தன. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் இந்த பூவரசங் கிளைகள் வெட்டப்பட்டு தோட்டக்காணிகளில் குழைகள் பசளைக்காக தாழ்க்கப்படும். பின்னர் புகையிலை நட்டு வளர்ந்து வெட்டிய பின் அந்த குழைகள் உக்க மிஞ்சிக் கிடக்கும் தடிகள் கிழறி எடுக்கப்படும். அப்பம்மா வீட்டடியில் இலைகள் வெட்டிய பின் சாற்றிக் கிடந்த பூவரசந் தடிகளால் அருளானந்தத்தார் இந்திய இராணுவத்தால் நையப்புடைக்கப்பட்டது இன்னமும் கண்களில் நிழலாடுகின்றது.
 
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்கள் பகுதிகளில் இந்த வேலி அடைத்தல் காலம் வரும்போது எமக்கெல்லாம் கொண்டாட்டமாயிருக்கும். நாங்களும் பங்காளர்களாக இருப்போம். அனேகமாக கூலிக்கு ஆள்ப்பிடிப்பதெல்லாம் கிடையாது. எங்கள் பகுதியில் பெண்கள் இணைந்துதான் வேலி அடைப்பார்கள். வேலிகளை பார்த்து சரிந்த கதியால்களை நேராக்கி புதிய கதியால் இட வேண்டிய இடங்களுக்கு புதிய கதியாலிட்டு வேலி அடைக்கப்படும். அடைத்த வேலிகளில் சிறு பொட்டு அமைத்து குறுக்குப்பாதைகள் அமைக்கப்படும். எங்கள் பிராந்தியத்தவர்கள் சிவகாமி அம்மன் கோயிலுக்கு விரைவாகப் போவதற்கான பொட்டு எங்கள் வேலியில் அமைந்திருந்தது. நாம் சிறுவர்களாக இருந்தபோது சில அப்புமார் பொட்டுக்குள் குனிந்து போவதை பின்னுக்கு நின்று வாய்பிழந்து பார்த்து சிரிப்பம். பொட்டுக்குள் பூந்த புழுக்கொட்டி துரையப்பரின் வாயிலிருந்து புழுக்கொட்டியதைப்போல் விழுந்த செந்தமிழ் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்...
 
சரி விடயத்துக்கு வாறன் என்னவோ சொல்ல வெளிக்கிட்டு கடைசியா இவ்வளவு நீட்டி முழங்கீட்டன். இந்த வேலிகள் சார்ந்து பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் இருக்கும்.
 
எனக்கு மட்டைவேலிகளை கண்டா தடியாலை இழுத்துக்கொண்டு ஓடுவதென்றா கொள்ளை விருப்பம். தட தட என்ற அந்த சத்தத்துக்காக திரும்ப திரும்ப என்று பல தரம் இழுப்பேன். பதினொரு வயது வரை ஊரிலை இருந்த உனக்கு வேலிதாண்டின காதல் கதையோ இருக்குமென்று நீங்கள் முனுமுனுப்பது கேக்குது.
 
பதினொரு வயதில் ஊரை விட்டு சுவிசுக்கு புலம்பெயர்ந்த நான் என் அஞ்ஞாதவாசம் முடித்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின் என் 23 வது வயதில் ஊரில் கால்பதித்தபோது பாதைகள் எல்லாம் ஒடுங்கி வேலிகள் வீதியின் நடுப்பகுதிகள் வரை வந்திருந்தை கண்டபோது அதிசயமாக இருந்தது. பூமி சுற்றுவது உண்மைதான் என்பதை உறுதியாய் நம்ப ஆரம்பித்தேன்.
 
அப்படி ஊரில் நின்ற ஒரு நாளில் இரவு ஒன்பது மணியிருக்கும் இணுவில் அங்களப்பாயில் உள்ள அத்தை வீட்டிலிருந்து இருந்து எங்கள் வீட்டுப் பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்தேன். தர்மலிங்கத்தாரின் கடைக்கு அருகே இருந்த ஒழுங்கைக்குள் நுழைந்து நடக்க மட்டை வேலியொன்று தென்பட்டது நிலத்தில் ஒரு தடி 80களின் திரைப்படங்களில் வருவதுபோல என் கண்கள் மட்டை வேலியையும் தடியையும் மாறி மாறி பார்த்தது. உருக்கொண்டவன் போல குனிந்து தடியை எடுத்து தட தடவென இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கினேன். அந்த வீட்டு நாய் வேலியையும் தாண்டி குரைத்துக்கொண்டு கலைக்கத் தொடங்கியபோதுதான் சுயநினைவுக்குத் திரும்பினேன். தண்டவாளக் கரை வரை ஓட்டம் தொடர்ந்தது.
 
இப்ப ஊருக்கு போனாலும் மட்டை வேலியை கண்டால் கை துருதுருப்பது தவிர்க்க முடியாதது. கடந்த பயணத்தில் மகளுக்கு சின்ன வயசில் நாங்கள் இப்படித்தான் என்று தடிகொண்டு இழுத்துக்காட்டி என் அவாவை தீர்த்துக்கொண்டேன். அனேகமாக பேரப்பிள்ளையோடு போகும் காலத்திலும் இது தொடரும் போல... அதற்கு வேலியும் இருக்க வேண்டுமே...
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்து வீட்டு காணி எல்லைகள் பாதுகாப்பு அரண்கள்  பற்றி நல்ல தகவல்கள்.

1 hour ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தார் அதிகம் விரும்புவது என்னவோ கிடுகு வேலிகளைத்தான்.

தென்னோலைகளால் கட்படும் வேலிகள்தான்  அழகாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Keine Fotobeschreibung verfügbar.

578785_428201147232391_675537967_n.jpg?w=535&h=361

முன்னரெல்லாம் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் எல்லாம் குறிப்பாக வட பகுதிகளில் வேலிகள் இயற்கையோடு ஒட்டியிருந்தது. வீடுகளும் நிலமும் நல்ல காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருந்தது. இன்றோ நாகரீகம் /பணக்காரர் எனும் பெயரில் எல்லா வீடுகளுக்கும் சுற்றுமதில்கள்.அது மட்டுமல்லாமல் கட்டிய வீடுகள் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக குளிர்மை தரும் மரங்களையும் தறித்து விடுகின்றார்கள்.

வீட்டுக்கு குளிர்மை தரும் மரங்களை தறித்து விட்டு  குளிரூட்டிகளை பொருத்துகின்றார்கள்.
காலக்கொடுமை.

இணைப்பிற்கு நன்றி சிறித்தம்பி :314:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்பாணத்து வீட்டு காணி எல்லைகள் பாதுகாப்பு அரண்கள்  பற்றி நல்ல தகவல்கள்.

தென்னோலைகளால் கட்படும் வேலிகள்தான்  அழகாக உள்ளது

 

47 minutes ago, குமாரசாமி said:

முன்னரெல்லாம் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் எல்லாம் குறிப்பாக வட பகுதிகளில் வேலிகள் இயற்கையோடு ஒட்டியிருந்தது. வீடுகளும் நிலமும் நல்ல காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருந்தது. இன்றோ நாகரீகம் /பணக்காரர் எனும் பெயரில் எல்லா வீடுகளுக்கும் சுற்றுமதில்கள்.அது மட்டுமல்லாமல் கட்டிய வீடுகள் வெளியே தெரிய வேண்டும் என்பதற்காக குளிர்மை தரும் மரங்களையும் தறித்து விடுகின்றார்கள்.

வீட்டுக்கு குளிர்மை தரும் மரங்களை தறித்து விட்டு  குளிரூட்டிகளை பொருத்துகின்றார்கள்.
காலக்கொடுமை.

இணைப்பிற்கு நன்றி சிறித்தம்பி :314:

veli-01.jpg

👆 முகமாலையில்,  அமைக்கப் பட்டுள்ள  அழகிய பனைவேலி! பாராட்டை அள்ளும் அழகு!!

பனை மட்டை வேலி.. - விவசாயம் » இயற்க்கை » சுற்றுசூழல் காப்பகம் | Facebook 

Palm Frond Fence 2 Photograph by Ron Kandt - Fine Art America

Palm Leaves Fence Northern Province Sri Lanka Stock Photo - Download Image  Now - Dry, Palm Leaf, Abstract - iStock

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு வேலிகள், ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அழகு........வேலி  அடைக்கும் பொழுது ஆளுக்கு ஒரு பக்கம் நின்றுகொண்டு ஒருத்தர் ஈர்க்கு கம்பியை குத்த மற்றவர் அதற்குள் ஈர்க்கை கொழுவ இழுத்து வைத்து முறுக்கிக் கட்டுவது ஒரு தனிக்கலை.......!   😂

கிணத்தடி வேலி உயர்த்திக் கட்டுவது நான் சொல்ல நினைத்தது, நீங்கள் சொல்லி விட்டடீர்கள் ........!  😁

மற்றும் படி பொட்டுக்குள்ளால் கறி, தூள்,பலகாரம் என்று கொடுக்கல் வாங்கல் செய்வது......பெரியவர்கள் ஏதாவது பிரச்சனைப் பட்டு பொட்டை அடைத்து விட்டால் சத்தமின்றி வேறொரு இடத்தில் பொட்டைத் திறப்பது என்று நிறைய நடக்கும்.......!  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் சகல வீடுகளிலும் வேலிகளே இருந்தன. இப்போது வேலிகளை பார்ப்பது அரிது.

சுற்று மதில் கட்டி மாரிமழைக்கு தண்ணியும் ஓடாது.

இணைப்புக்கு நன்றி சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை கலந்து எழுதிய இணுவையூர் மயூரனுக்கும் பகிர்ந்த தமிழ் சிறீக்கும் நன்றிகள். இனி வருங்காலம்   வேலி என்றால் என்ன என்று தெரியுமோ தெரியாது. அண்ணா மார்  வேலி அடைக்க அம்மா வழிகாடட உள் வேலியில் நின்று  குத்தூசிக்கு கயிறுக்கோர்த்த   அனுபவம்  எனக்கும் உண்டு . ஊசி வரும்போது பிராக்குப்பார்த்தல் அண்ணாவின்   ஏச்சும் விழும். ஊசி வரும்போது  ஒரு கிளுவந்த்தடியும் சேர்த்து கோர்க்க வேண்டும்.  எங்கள்பகுதியில் அதிகம் மடடையால்   வரிந்து மேலே கிடுகுகளால் அமைந்த வேலிகள் அதிகம் . அது ஒரு  கனாக் காலம். வரலாறாக சேமிக்க வேண்டிய பதிவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

எழுதுமட்டுவாளில எங்கட சொந்தக்கார இளம் பெண்கள் தமது வளவில் இருக்கும் தென்னைமரங்களின் ஓலைகளை எடுத்து கிடுகு பின்னி விற்று தமது கலியாணத்துக்கு தேவையான நகைகள் செய்த ஞாபகம் வருகிறது. அவர்கள் வீட்டில் 5 பெண்கள். ஐவரும் போட்டி போட்டு பின்னி யாருடைய அடுக்கு உயரமாக இருக்கு என்று நான் போகும் போது காட்டுவார்கள்.

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

veli-01.jpg

👆 முகமாலையில்,  அமைக்கப் பட்டுள்ள  அழகிய பனைவேலி! பாராட்டை அள்ளும் அழகு!!

பனை மட்டை வேலி.. - விவசாயம் » இயற்க்கை » சுற்றுசூழல் காப்பகம் | Facebook 

படத்தில் உள்ள முதலாவது இரண்டாவது வேலிகளை நான் கண்டதில்லை மிகவும் அழகான வேலைபாடுகள் கொண்டவை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

கிணத்தடி வேலி உயர்த்திக் கட்டுவது நான் சொல்ல நினைத்தது,

எங்கடை கிணத்தடி வேலியை சூறாவளியாலையும் அசைக்கேலாது.காத்துக்கூட உள்ளுடாது.கருங்கல்லு மதில் மாதிரி இருக்கும். இருந்தாலும் அதையும் எட்டிப்பாக்கிற அளவுக்கு அப்பனுக்கு அப்பனான ஆக்கள் இருக்கினம். :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கு கடிதம் வைப்பதற்கு உகந்தது கிடுகு வேலிதான் என்பது எனது தாழ்வான அபிப்பிராயம்..

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எங்கடை கிணத்தடி வேலியை சூறாவளியாலையும் அசைக்கேலாது.காத்துக்கூட உள்ளுடாது.கருங்கல்லு மதில் மாதிரி இருக்கும். இருந்தாலும் அதையும் எட்டிப்பாக்கிற அளவுக்கு அப்பனுக்கு அப்பனான ஆக்கள் இருக்கினம். :rolling_on_the_floor_laughing:

காவோலை வேலி தாண்டிய அனுபவமுள்ளவர்கள் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள்!

பொட்டுக்குள்ளால பூந்து போனவர்களும் மேடைக்கு வரலாம்!😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

எவ்வளவு வேலிகள், ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அழகு........வேலி  அடைக்கும் பொழுது ஆளுக்கு ஒரு பக்கம் நின்றுகொண்டு ஒருத்தர் ஈர்க்கு கம்பியை குத்த மற்றவர் அதற்குள் ஈர்க்கை கொழுவ இழுத்து வைத்து முறுக்கிக் கட்டுவது ஒரு தனிக்கலை.......!   😂

கிணத்தடி வேலி உயர்த்திக் கட்டுவது நான் சொல்ல நினைத்தது, நீங்கள் சொல்லி விட்டடீர்கள் ........!  😁

மற்றும் படி பொட்டுக்குள்ளால் கறி, தூள்,பலகாரம் என்று கொடுக்கல் வாங்கல் செய்வது......பெரியவர்கள் ஏதாவது பிரச்சனைப் பட்டு பொட்டை அடைத்து விட்டால் சத்தமின்றி வேறொரு இடத்தில் பொட்டைத் திறப்பது என்று நிறைய நடக்கும்.......!  😇

மிகவும் சுவாரசியமான தகவல்கள் . பகிர்ந்தமைக்கு நன்றி சுவி

6 minutes ago, புங்கையூரன் said:

காவோலை வேலி தாண்டிய அனுபவமுள்ளவர்கள் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள்!

பொட்டுக்குள்ளால பூந்து போனவர்களும் மேடைக்கு வரலாம்!😆

இப்படியான அனுபவங்கள் கிடைக்கவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை. கேட்க ஆவலாக உள்ளேன்

1 hour ago, குமாரசாமி said:

எங்கடை கிணத்தடி வேலியை சூறாவளியாலையும் அசைக்கேலாது.காத்துக்கூட உள்ளுடாது.கருங்கல்லு மதில் மாதிரி இருக்கும். இருந்தாலும் அதையும் எட்டிப்பாக்கிற அளவுக்கு அப்பனுக்கு அப்பனான ஆக்கள் இருக்கினம். :rolling_on_the_floor_laughing:

நீங்களும் அதில் அடங்குமா கு சா அண்ணா?😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, புங்கையூரன் said:

பொட்டுக்குள்ளால பூந்து போனவர்களும் மேடைக்கு வரலாம்!😆

பூங்கதவே தாழ்திறவாய்
பூவாய் பெண் பாவாய்
திருத்தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என்னுள்ளம்
பொன்நாதம் பூவாடை
ஆடும் காரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்...:rolling_on_the_floor_laughing:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

பூங்கதவே தாழ்திறவாய்
பூவாய் பெண் பாவாய்
திருத்தேகம் எனக்காகும்
தேனில் நனைந்தது என்னுள்ளம்
பொன்நாதம் பூவாடை
ஆடும் காரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்...:rolling_on_the_floor_laughing:

சந்தேகமே இல்லாமல் ஒராள் சரியாத்தான் கிடுகு வேலிகளை அனுபவித்திருக்கிறார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

No photo description available.

 

INSPIRED TREASURES: 2011

 

Thal Leave Fence | Jaffna, Crafts, Leaves

 

INSPIRED TREASURES: 2011

 

Passion Parade: Lifestyles of Jaffna ~ An Exhibition to Preserve Our  History and Heritage

 

Jaffna – A Sentimental Journey Home | Sanjiva Wijesinha -writer and  physician

 @விளங்க நினைப்பவன் , @குமாரசாமி@suvy@ஈழப்பிரியன்

@நிலாமதி, @nilmini, @alvayan@புங்கையூரன்

முன்பு ஊரில் இருந்த சண்டியர்கள், தங்கள் ஆயுதமான... 
சைக்கிள் செயின், வாள் போன்றவற்றை வேலியில் தான் மறைத்து வைப்பார்களாம் 
என ஊரில் இருக்கும் போது கேள்விப் பட்டுள்ளேன். 

எனது அப்பாவின் அம்மா கூறியது இது... 👇
ஆங்கிலேயர் காலத்தில்..... வெள்ளிக்கிழமை  போன்ற விசேட நாட்களில், விரதம் இருந்து 
வாழை இலையில் சாப்பிட்ட பின்... அந்த இலையை வேலியில் செருகி மறைத்து விடுவார்களாம்.

ஆங்கிலேயர்... மதம்  மாற்றி விடுவார்கள் என்ற பயமோ, 
அல்லது தண்டனை கொடுப்பார்கள் என்றோ மறைத்திருக்கலாம் என நினைக்கின்றேன். 

போர்த்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில்...
விரதம் இருந்து... வாழை இலையை, ஒழிக்கத்  தெரியாத சைவர்கள்தான் 
ஆங்கிலேயரால் மதம் மாற்றப் பட்டவர்கள் என நினைக்கின்றேன். 😂
 @நிலாமதி அக்கா... கோவிக்காதேங்கோ  பகிடிக்கு எழுதியது. 😂

👆 மேலே இறுதியாக உள்ள  படத்தில்... வேலி மிக உயரமாக கட்டி உள்ளதை பார்க்க...
"குமர்ப் பிள்ளைகள்" இருக்கின்ற வீடு போல் தெரிகின்றது. 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

👆 மேலே இறுதியாக உள்ள  படத்தில்... வேலி மிக உயரமாக கட்டி உள்ளதை பார்க்க...
"குமர்ப் பிள்ளைகள்" இருக்கின்ற வீடு போல் தெரிகின்றது. 🤣

வேலி உயர்த்தி அடைச்சால் அங்கை ஏதோ வில்லங்கம் இருக்கு எண்டு அர்த்தம்...:rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

 

No photo description available.

 

INSPIRED TREASURES: 2011

 

Thal Leave Fence | Jaffna, Crafts, Leaves

 

INSPIRED TREASURES: 2011

 

Passion Parade: Lifestyles of Jaffna ~ An Exhibition to Preserve Our  History and Heritage

 

Jaffna – A Sentimental Journey Home | Sanjiva Wijesinha -writer and  physician

 @விளங்க நினைப்பவன் , @குமாரசாமி@suvy@ஈழப்பிரியன்

@நிலாமதி, @nilmini, @alvayan@புங்கையூரன்

முன்பு ஊரில் இருந்த சண்டியர்கள், தங்கள் ஆயுதமான... 
சைக்கிள் செயின், வாள் போன்றவற்றை வேலியில் தான் மறைத்து வைப்பார்களாம் 
என ஊரில் இருக்கும் போது கேள்விப் பட்டுள்ளேன். 

எனது அப்பாவின் அம்மா கூறியது இது... 👇
ஆங்கிலேயர் காலத்தில்..... வெள்ளிக்கிழமை  போன்ற விசேட நாட்களில், விரதம் இருந்து 
வாழை இலையில் சாப்பிட்ட பின்... அந்த இலையை வேலியில் செருகி மறைத்து விடுவார்களாம்.

ஆங்கிலேயர்... மதம்  மாற்றி விடுவார்கள் என்ற பயமோ, 
அல்லது தண்டனை கொடுப்பார்கள் என்றோ மறைத்திருக்கலாம் என நினைக்கின்றேன். 

போர்த்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில்...
விரதம் இருந்து... வாழை இலையை, ஒழிக்கத்  தெரியாத சைவர்கள்தான் 
ஆங்கிலேயரால் மதம் மாற்றப் பட்டவர்கள் என நினைக்கின்றேன். 😂
 @நிலாமதி அக்கா... கோவிக்காதேங்கோ  பகிடிக்கு எழுதியது. 😂

👆 மேலே இறுதியாக உள்ள  படத்தில்... வேலி மிக உயரமாக கட்டி உள்ளதை பார்க்க...
"குமர்ப் பிள்ளைகள்" இருக்கின்ற வீடு போல் தெரிகின்றது. 🤣

மிகவும் முக்கியமான சாமான் திருக்கை வாலை விட்டிட்டியள் தமிழ் சிறி…! நாய்க்கு எட்டாத உயரத்திலை வைக்க வேணும்…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

வேலி உயர்த்தி அடைச்சால் அங்கை ஏதோ வில்லங்கம் இருக்கு எண்டு அர்த்தம்...:rolling_on_the_floor_laughing:

"கசிப்பு காய்ச்சுற"  இடத்திலேயும்... வேலி, உயரமாக இருக்குமாம்.  animiertes-lachen-bild-0116.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

"கசிப்பு காய்ச்சுற"  இடத்திலேயும்... வேலி, உயரமாக இருக்குமாம்.  animiertes-lachen-bild-0116.gif

சில இடங்களில் கடியன் நாய் கவனம் எண்டு எழுதி தொங்கவிட்டிருப்பனம் :beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புங்கையூரன் said:

மிகவும் முக்கியமான சாமான் திருக்கை வாலை விட்டிட்டியள் தமிழ் சிறி…! நாய்க்கு எட்டாத உயரத்திலை வைக்க வேணும்…!

புங்கையூரான்...  ஜேர்மனிக்கு, வந்து கனகாலம் என்ற படியால்...
ஊரில் பாவிக்கப் பட்ட  ஆயுதங்கள் பட்டென்று நினைவுக்கு வரவில்லை. 😂

திருக்கைவாலுடன்,  நாம்பன் மாட்டில் இருந்து பெறப்படும் 
அதன், இனவிருத்தி செய்யும் உறுப்பையும்... காய வைத்து   பாவிப்பார்களாம்.   
அதனால் அடித்து ஏற்படும் புண், சாகும் மட்டும் மாறாமல் இருக்கும் என்று சொல்வார்கள்.

நீங்கள் சொன்ன மாதிரி... இரண்டு ஆயுதத்தையும்... 
நாய்க்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். 😂
இல்லாட்டி நாய்..  கவ்விக்  கொண்டு போயிடும். 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பனை ஓலை வேலிகளை மாற்றும்போது அதில் இருந்து கொட்டும் ஏராளமான கறையான்களும் அவற்றைக் கொத்தித் தின்ன முண்டியடிக்கும் கோழிகளையும் பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கும்......!  😁

இந்த வெளி சம்பந்தமாய் ஒரு "A " ஜோக் ஒன்று உண்டு ....அநியாயத்துக்கு அதுவும் நினைவில் வந்து போகுது.......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலிக்கதைகளும், தகவல்களும் மடகஸ்கார் கதையை விட சுவாரசியமாக இருக்கிறது.  வழமைபோல கு சா அண்ணாவின் தருணத்துக்கேற்ற பகிடிகளுடன். அறிந்து சிரித்து மகிழ்ந்தேன். ஆங்கிலேயரை விட பல மடங்கு போர்த்துக்கீசர், மற்றும் ஒல்லாந்தர் தான் கொடூரமாக இருந்துளார்கள். அம்ம்மா சொன்னது ஞாபகம் வந்தது. போர்த்துக்கீசர் காலத்தில் ஒவ்வொரு நாளைக்கு ஓர் வீட்டில் இருந்து வரிசையாக வாசலில் ஒரு மாட்டை கொண்டு வந்து  அவர்களுக்கு கொடுத்தார்களாம்.  அவர்களது ஆட்சி கொடுங்கோல் ஆட்சி.

 
 
 
 
 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

578785_428201147232391_675537967_n.jpg?w=535&h=361

 

வேலியளுக்கை காவோலை வேலிதான் பாதுகாப்பானது.ஆரும் கள்ளர் களவாக வேலி பாய்ஞ்சால் காவோலை சரசரக்கிற சத்தம் காட்டிக்குடுத்துடும்.கீழாலை பூந்து போனால் கருக்குமட்டை கீறும்.
எனவே காவோலை வேலியோடை சேட்டை விடேலாது கண்டியளோ:beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.