Jump to content

இந்திய முட்டைகள் நாளை நாட்டை வந்தடையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய முட்டைகள் நாளை நாட்டை வந்தடையும்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றிய கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Feeding-layers-extruded-flaxseed-can-boo

தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.

குறித்த முட்டை இருப்புகள் பேக்கரி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக அரச வர்த்தக சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/245329

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

இனித்தான் வரப் போகுதா

Cartoon Chicken Laying Eggs GIFs | Tenor

கோழி வரும் முன்னே... முட்டை  வரும் பின்னே....  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் முட்டை எண்டால் கூழ்முட்டைதானே?

ஏப்ரல் fool எண்டு அடிக்க வசதியா இருக்கும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்தியன் முட்டை எண்டால் கூழ்முட்டைதானே?

ஏப்ரல் fool எண்டு அடிக்க வசதியா இருக்கும்🤣

உப்பிடி இந்தியாவை கூடாமல் கதைச்சு  தேவையில்லாத எதிர்ப்பை தேடக்கூடாது கண்டியளோ.தமிழீழம் அமைக்க இந்திய உதவி தேவை.😎

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

உப்பிடி இந்தியாவை கூடாமல் கதைச்சு  தேவையில்லாத எதிர்ப்பை தேடக்கூடாது கண்டியளோ.தமிழீழம் அமைக்க இந்திய உதவி தேவை.😎

@கற்பகதரு @arjun 

லேட்டா வந்தாலும், அண்ணர் உங்கள் வழிக்கு லேட்டஸ்டா வந்து விட்டார் 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்திற்கு என தனியே ஒரு பொக்ஸ் எடுத்து வைக்குக..👌

IMG-20230319-213637.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் !

 

 

Asela Sampath arrested by CID | Daily News

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கேக்குகளை கொள்வனவு செய்யவேண்டாம் என அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், கொழும்பு துறைமுகத்துக்கு வந்த திரவ முட்டைகள் சுமார் ஏழு நாட்களாக விடுவிக்கப்படாமல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், அவை பழுதடைந்திருக்கலாம் என்ற அடிப்படையில், எதிர்வரும் புத்தாண்டுக்கு இந்த முட்டைகளை பயன்படுத்தி கேக் தயாரிக்க வேண்டாம் என்று வெதுப்பக உரிமையாளர்களிடம் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த இறக்குமதி மூலம் சுங்கம் ஏற்றுமதி – இறக்குமதி சட்டத்தை மீறியுள்ளது. எனவே பொது சுகாதார ஆய்வாளர்கள் துறைமுகத்திற்குச் சென்று முட்டைகளின் நிலையை பரீட்சிக்கவேண்டும் என்றும் அசேல சம்பத் கோரியுள்ளார்.

https://thinakkural.lk/article/246588

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறக்குமதியாகும் முட்டைகள் பேக்கரி உற்பத்திகளுக்கு பொருத்தமற்றவை - கோழி பண்ணை உற்பத்தியாளர் சங்கம்

Published By: DIGITAL DESK 5

29 MAR, 2023 | 03:05 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் உள்நாட்டு பேக்கரி உற்பத்திகளுக்கு பொருத்தமற்றது என கோழி பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள்  55 கிராம் முதல் 70 கிராம் வரையில்  நிறையுடைய அதேவேளை  தற்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் 45 கிராம் நிறையுடையனவாகும்.

இவற்றுள் தேன் போன்ற வாசனை வீசுகிறது. மேலும் குறித்த முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள நிலையில் அவற்றுள் 50 வீதமானவை பழுதடைந்துள்ளன.

அரசாங்கமானது கோழி பண்ணை உற்பத்திகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குமாயின் வெளிநாடுகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் வேண்டிய தேவை ஏற்படாது.

முன்னதாக முட்டை விற்பனை தொடர்பில் கட்டுப்பாட்டு விலை அறிவித்து வர்த்தமானி வெளியிடப்படவில்லை எனின் உள்நாட்டில்  உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை 30 முதல் 35 ரூபாய் வரையில் விற்பனை செய்திருக்கலாம்.

இதேவேளை நாட்டில் முட்டைகள் சந்தைகளில் காணப்பட்ட போதிலும் வர்த்தகர்கள் அவற்றை போதைப் பொருட்கள் விற்பனை செய்வது போன்று குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் விற்பனை செய்கிறார்கள். 

நாட்டில் முட்டை தட்டுப்பாடு காணப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றும் வர்த்தக அமைச்சர் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/151667

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி வளர்த்திருந்தாலும் இப்ப முட்டை போட்டிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்லீஸ்ட் சாதாரண கோழி முட்டையை கூட உற்பத்தி செய்ய முடியாத வக்கற்ற சிங்கள அரசுக்கு நாடு தேவையாம் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

 

May be an illustration

 

கொழும்பு துறைமுகத்துக்கு வந்த  முட்டைகளை, 
ஏழு நாட்களாக நாட்டுக்குள்  விடுவிக்கப்படாமல் வைத்திருந்திருக்கிறார்களாம். 
அந்த அளவுக்கு...  உணவுப் பொருட்களை கையாள்வதில் அவர்களின் இலட்சணம் தெரிகிறது. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

எனக்கு இந்த கேலிச்சித்திரத்தை பார்க்க நக்கல் சிரிப்புத்தான் வருது.
ஏதோ முட்டை அத்தியாவசிய சாப்பாடு மாதிரியும்......அதாலை சனம் உடம்பு மெலிஞ்ச மாதிரியும்.....

ஒரு கூழ் முட்டை நாடு சிறிலங்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

எனக்கு இந்த கேலிச்சித்திரத்தை பார்க்க நக்கல் சிரிப்புத்தான் வருது.
ஏதோ முட்டை அத்தியாவசிய சாப்பாடு மாதிரியும்......அதாலை சனம் உடம்பு மெலிஞ்ச மாதிரியும்.....

ஒரு கூழ் முட்டை நாடு சிறிலங்கா.

 

👆 ஒவ்வொரு நாளும் காலையில்... பிறண்டி, விஸ்கியுடன்...   
முட்டை கோப்பி குடிக்கும் ஆட்களுக்கு கஸ்ரமாக இருக்கும் அல்லவா. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

May be an illustration

 

May be an illustration

 

கொழும்பு துறைமுகத்துக்கு வந்த  முட்டைகளை, 
ஏழு நாட்களாக நாட்டுக்குள்  விடுவிக்கப்படாமல் வைத்திருந்திருக்கிறார்களாம். 
அந்த அளவுக்கு...  உணவுப் பொருட்களை கையாள்வதில் அவர்களின் இலட்சணம் தெரிகிறது. 

 

6 hours ago, குமாரசாமி said:

May be an illustration

எனக்கு இந்த கேலிச்சித்திரத்தை பார்க்க நக்கல் சிரிப்புத்தான் வருது.
ஏதோ முட்டை அத்தியாவசிய சாப்பாடு மாதிரியும்......அதாலை சனம் உடம்பு மெலிஞ்ச மாதிரியும்.....

ஒரு கூழ் முட்டை நாடு சிறிலங்கா.

இது ஏப்ரல் பூலுக்கு பாவனைக்காக இறக்கப்பட்டது.

தெரிந்தோ தெரியமலோ திண்டுடாதேங்கோ.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இது ஏப்ரல் பூலுக்கு பாவனைக்காக இறக்கப்பட்டது.

தெரிந்தோ தெரியமலோ திண்டுடாதேங்கோ.

இந்தியா இலங்கையை வைத்தே பிழைத்துக் கொள்ளும்......ஒன்றுக்கும் உதவாத கச்சடாக்கள் எல்லாம் இனி இங்குதான்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

இந்தியா இலங்கையை வைத்தே பிழைத்துக் கொள்ளும்......ஒன்றுக்கும் உதவாத கச்சடாக்கள் எல்லாம் இனி இங்குதான்.....! 

பணத்தை கொடுத்து வாங்கினால் பரவாயில்லை

எந்த நாளும் பிச்சை பாத்திரம் என்றால் இப்படி தான் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2023 at 05:40, பெருமாள் said:

அட்லீஸ்ட் சாதாரண கோழி முட்டையை கூட உற்பத்தி செய்ய முடியாத வக்கற்ற சிங்கள அரசுக்கு நாடு தேவையாம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2023 at 08:46, தமிழ் சிறி said:

கொழும்பு துறைமுகத்துக்கு வந்த  முட்டைகளை, 
ஏழு நாட்களாக நாட்டுக்குள்  விடுவிக்கப்படாமல் வைத்திருந்திருக்கிறார்களாம். 
அந்த அளவுக்கு...  உணவுப் பொருட்களை கையாள்வதில் அவர்களின் இலட்சணம் தெரிகிறது. 

கடன் கிடைத்ததுக்கு வெடியும் பால்சோறும் தின்னுகிட்டு வெறியில் கிடப்பாங்கள் தேடுங்கையா ....௨௦௦9 லிருந்து வெடிபோடுவதே அவங்கடை முக்கிய தொழில் ஆகிவிட்டது .

Edited by பெருமாள்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2023 at 02:09, ஈழப்பிரியன் said:

பணத்தை கொடுத்து வாங்கினால் பரவாயில்லை

எந்த நாளும் பிச்சை பாத்திரம் என்றால் இப்படி தான் வரும்.

தானத்துக்கு உழுத மாட்டின்ர பல்லைப்பிடிச்சு பாக்கக்கூடாது!

On 30/3/2023 at 19:24, குமாரசாமி said:

ஒரு கூழ் முட்டை நாடு சிறிலங்கா.

அதே! வருமானம் கொழிக்கும் வர்த்தக நிறுவனங்களை வெளிநாடுகளுக்கு விக்குதுகள், விவசாயிகளை சோம்பேறிகளாக்கி உள்ளூர் உற்பத்தியை நிறுத்தி இறக்குமதி செய்யுதுகள், இதுகளுக்கு ஒவ்வொரு அமைச்சர், இவர்களை நம்பி கடன் கொடுக்கவும் ஆட்கள், இதற்குள் தன்னிறைவுக்கனவு வேறு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி -நளின் பெர்னாண்டோ

 

மாதாந்தம் 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வர்த்தகம், விவசாயம் மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, தேவை ஏற்பட்டால், ஒவ்வொரு மாதமும் 30 மில்லியன் முட்டைகள் வரை இறக்குமதி செய்ய முடியும் என்றார்.

எவ்வாறாயினும், அதிக அளவு இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு போதுமான அளவு முட்டைகளை சந்தைக்கு தட்டுப்பாடு இன்றி வெளியிடும் திறன் மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கான விருப்பத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

அதன்படி, முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து இதுவரை மொத்தம் 3 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/247442

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய முட்டைகளை பொது மக்களுக்கு விற்பனை செய்ய அனுமதியில்லை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். அனுமதி கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், ஒரு மில்லியன் முட்டைகளை தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அந்த கப்பலில் உள்ள முட்டைகளுக்கான அனுமதியை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் பெற வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அந்த முட்டைகளை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் நாளைய தினம் ஒப்படைக்கவுள்ளதாக அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தள்ளார். இதேவேளை, கடந்த 23 ஆம் திகதி இரண்டு மில்லியன் முட்டைகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இதன்படி, இதுவரை நான்கு மில்லியன் முட்டைகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/248030

பாவனைக்குதவாதவற்றை வாங்குவதாக சொல்லிவிட்டு(ஏற்றுமதி இறக்குமதி இரு பக்கமும் ஊழல்) விற்றால் அம்பலமாகும் என அனுமதிக்கவில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இங்கால பக்கம் வரல முட்டை விலை என்னவோ 65 ஓவாதான் 

ஆனால் வடகிழக்கில் இருக்கும் சாதரண குடும்ப பிள்ளைகளின் போஷாக்கு வீதம் தற்போது குறைந்துள்ளது சில கணக்கெடுப்புக்களில் காரணம் பொருட் கள் விலையேற்றத்தால்  இதை நாங்களும் உணர்கிறோம்  ஒரு மாதுளை 800 ரூபா குறைஞ்ச விலை அப்படி இருக்க பிள்ளைகளுக்கு எப்படி போசாக்கான உணவுகள் கொடுக்க முடியும் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் இங்கால பக்கம் வரல முட்டை விலை என்னவோ 65 ஓவாதான் 

ஆனால் வடகிழக்கில் இருக்கும் சாதரண குடும்ப பிள்ளைகளின் போஷாக்கு வீதம் தற்போது குறைந்துள்ளது சில கணக்கெடுப்புக்களில் காரணம் பொருட் கள் விலையேற்றத்தால்  இதை நாங்களும் உணர்கிறோம்  ஒரு மாதுளை 800 ரூபா குறைஞ்ச விலை அப்படி இருக்க பிள்ளைகளுக்கு எப்படி போசாக்கான உணவுகள் கொடுக்க முடியும் ??

இங்க இந்திய மாதுளம்பழம் 1000ரூபா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

இங்க இந்திய மாதுளம்பழம் 1000ரூபா!

3 கறுத்த கொழும்பான மாம்பழம் 1000 ரூபா காரணம் நோன்பு கால, விலை அதிகம்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.