Jump to content

டெஸ்ட் போட்டிகளைப் போல மாறுமா ஒருநாள் ஆட்டம்? சுவாரஸ்யம் கூட்ட சச்சின் புதுமையான யோசனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் போட்டிகளைப் போல மாறுமா ஒருநாள் ஆட்டம்? சுவாரஸ்யம் கூட்ட சச்சின் புதுமையான யோசனை

ஒருநாள் போட்டி - சச்சின் யோசனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

18 மார்ச் 2023

மாற்றம் ஒன்று மட்டுமே எப்போதும் மாறாதது என்ற வார்த்தைகள் கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். ஒருநாள் போட்டிகளின் வருகைக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகள் நெருக்கடியைச் சந்தித்தன.

தற்போது டி20 அறிமுகத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகள் சுவாரசியம் அற்றவையாக மாறியுள்ளன. ஒரு நாள் போட்டிகள் இனியும் பிழைத்திருக்குமா? கிரிக்கெட்டின் 3 வடிவங்களையும் தொடர்ந்து தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்?

அதற்கு ஜாம்பவான் சச்சின் என்ன சொல்கிறார்?

கிரிக்கெட்டின் நூறாண்டுகளுக்கும் மேலான வரலாற்றில், ஒருநாள் போட்டிகள் அறிமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற குறிப்பிட்ட சில நாடுகளின் எல்லை கடந்து கிரிக்கெட்டை பரவலாக்கியதில் ஒருநாள் போட்டிகளுக்கு முக்கிய இடம் உண்டு.

 

ஒருநாள் போட்டி அறிமுகத்தால் டெஸ்டிற்கு நெருக்கடி

நாள்கணக்கில் விளையாடியும்கூட டெஸ்ட் போட்டிகளில் பல தருணங்களில் முடிவு கிடைக்காமல் போகும் அதேநேரத்தில், ஒரே நாளில் வெற்றி, தோல்வியைத் தெரிந்து கொள்ள வழிவகுக்கும் ஒருநாள் போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் வரவற்பைப் பெற்றன.

ஒருநாள் கிரிக்கெட்டில், 1975ஆம் ஆண்டு உலகக்கோப்பை அறிமுகமான பிறகு கிரிக்கெட் வெகுவேகமாக இளைஞர்களிடையே பிரபலமாகத் தொடங்கியது.

இந்தக் காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ரசிகர்களின் வரவேற்பு குறைந்து போகவே, டெஸ்டின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது உண்டு. இதையடுத்து, டெஸ்ட் போட்டிகளை சுவாரஸ்யமானதாக மாற்ற போட்டி நாட்கள் 5ஆக குறைப்பு என்பது போன்ற பல மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது அதேபோன்றதொரு நெருக்கடி ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ஏற்பட்டுள்ளது.

2003ஆம் ஆண்டு 20 ஓவர் போட்டி அறிமுகம்

2003ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டி20 போட்டிகள் படிப்படியாக பிற நாடுகளிலும் பிரபலமாயின.

2004ஆம் ஆண்டு பாகிஸ்தானிலும் 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலும், 2006ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசிலும் டி20 போட்டிகள் அறிமுகமாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன.

இந்தியாவில் ஜீ எண்டெர்டெயின்மெண்ட் என்டர்பிரைசஸ் பின்புலத்தில் 2007ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான அமைப்பு சார்பில் இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) முன்னெடுக்கப்பட்டது.

ஒருநாள் போட்டி - சச்சின் யோசனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோனியை ஜாம்பவானாக்கிய டி20 உலகக்கோப்பை

கிரிக்கெட்டின் புதிய குழந்தையான டி20 போட்டிகளுக்கு ரசிகர்களிடம் இருந்த வரவேற்பைப் புரிந்துகொண்ட ஐ.சி.சி. அதே ஆண்டில் முதன் முதலாக டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்தியது.

அப்போதைய இந்திய அணியில் முன்னணி வீரர்களாகத் திகழ்ந்த சச்சின், கங்குலி, டிராவிட் ஆகிய மும்மூர்த்திகளும் ஒதுங்கிக் கொள்ள, தோனி தலைமையிலான இளம் படை யாருமே எதிர்பாராத வகையில் கோப்பையை வென்று அசத்தியது. அது முதல் தோனி இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக, சச்சினுக்கு அடுத்த ஜாம்பவானாக உருவெடுத்தார் என்பது தனிக்கதை.

2002ஆம் ஆண்டே மாற்றத்தின் அவசியத்தை உணர்த்திய சச்சின்

டி20 போட்டிகளுக்கு ரசிகர்களிடையே கிடைத்த மாபெரும் வரவேற்பு, கிரிக்கெட்டின் மற்ற வடிவங்களாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு அச்சுறுத்தலாகிப் போனது.

குறிப்பாக, ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் மீது கேள்விக்குறி விழுந்தது அன்றுதான். ஒருநாள் போட்டிகள் இனியும் வேண்டுமா என்ற பட்டிமன்றம் சர்வதேச கிரிக்கெட்டில் அப்போதே தொடங்கிவிட்டது.

ஒருநாள் போட்டிகள் வேண்டுமா? வேண்டாமா? ஒருநாள் போட்டிகளைக் காப்பாற்ற என்ன செய்யலாம்?

இது போன்ற விவாதங்கள் சூடு பிடித்தன.

ஆனாலும், ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர், 2002ஆம் ஆண்டே ஒருநாள் போட்டிகளில் மாற்றங்கள் அவசியம் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்தியா - இலங்கை இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி மழை காரணமாக முதல் நாள் கைவிடப்பட, அடுத்த நாளில் மீண்டும் தொடங்கி நடைபெற்ற போதும் அதை முடிக்க மழை விடவில்லை. இதனால், 110 ஓவர்கள் பந்துவீசியும்கூட அந்தப் போட்டியில் முடிவு கிடைக்காமல் போகவே, கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஒருநாள் போட்டி - சச்சின் யோசனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

2002 சாம்பியன்ஸ் கோப்பையுடன் அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி, இலங்கை கேப்டன் ஜெயசூர்யா

டி20 வருகையால் கிரிக்கெட் வீரர்கள் இளம் வயதிலேயே ஓய்வு

அப்போதே, ஓவர்கள் குறைப்பு என்பதற்குப் பதிலாக ஒரு நாள் போட்டிகளை நடத்தும் விதத்தில் மாற்றம் செய்யலாம் என்று சச்சின் யோசனை கூறியிருந்தார். இதுகுறித்துப் பல முறை பேசியிருந்தாலும், 2011ஆம் ஆண்டுதான் அலுவல்பூர்மாக ஐ.சி.சி.யிடம் தனது யோசனையை அவர் முன்வைத்தார்.

அப்போதைய ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி லோர்கட்டிடம் கடிதம் வாயிலாக தனது யோசனையை சச்சின் தெரியப்படுத்தினார்.

சச்சின் யோசனை குறித்து ஐ.சி.சி. வெளிப்படையாகக் கருத்து ஏதும் தெரிவித்திராத நிலையில், உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுமே உள்ளூரில் அறிமுகப்படுத்திய டி20 தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கின.

பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் பலரும் கிளப் டி20 போட்டிகளில் விளையாட வசதியாக, மிக விரைவிலேயே தங்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரத் தொடங்கினர்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

பென் ஸ்டோக்ஸ் ஓய்வு அறிவிப்பால் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி

அவர்களில், 31 வயதிலேயே இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

2019 ஒருநாள் உலகக்கோப்பை, 2021 டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை இங்கிலாந்து கைப்பற்றக் காரணமாகத் திகழ்ந்த அவர், அந்த அணியின் கேப்டனாக புகழின் உச்சியில் இருந்தபோதே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

"மிக நெருக்கமான கிரிக்கெட் போட்டி அட்டவணையால் டெஸ்ட், ஒருநாள், டி20 என கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் கவனம் செலுத்துவது இயலாத காரியம், அதிகப்படியான சுமையைக் குறைக்கவே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்" என்ற பென் ஸ்டோக்ஸின் அறிவிப்பு, ஒருநாள் போட்டிகளுக்கான முடிவுரையின் தொடக்கம் என்றே கிரிக்கெட் உலகில் பலரும் கருதினர்.

ஒருநாள் போட்டி - சச்சின் யோசனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வாசிம் அக்ரம்

ஒருநாள் போட்டி - வாசிம் அக்ரம், ரவி சாஸ்திரி கருத்து

கிரிக்கெட் வீரர்களின் சுமையைக் குறைக்க ஒருநாள் போட்டிகளை முடிவுக்குக் கொண்டு வரும் நேரம் வந்துவிட்டதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்தார். இந்திய அணியின் முனனாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியோ, ஒரு நாள் போட்டிகளில் ஓவர்களின் எண்ணிக்கையை 40-ஆகக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

டி20 போட்டிகளைப் போல் அல்லாமல், ஆட்டத்தில் பின்தங்கிய ஓர் அணி சுதாரித்துக்கொண்டு மீண்டு எழுவதற்கு வாய்ப்பு தரும் ஒருநாள் போட்டிகள் நீடித்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வலியுறுத்தியுள்ளார்.

தோணி, 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை ஆகிய இரண்டையும் கைப்பற்றிய இந்திய அணி கேப்டன் என்ற பெருமைக்குரியவர்.

ஒருநாள் போட்டிகளைப் பொருத்தவரை, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதும் போட்டிகளுக்கு மட்டுமே ரசிகர்கள் வரவேற்பு காணப்படுகிறது. மற்ற அணிகள் மோதும் போட்டிகளின்போது மைதானம் வெறிச்சோடியே கிடக்கிறது. டி20 போட்டிகளின் வருகைக்குப் பின்னர், அதில் நிமிடத்திற்கு நிமிடம் கிடைக்கும் திரில் அனுபவம் ஒருநாள் போட்டிகளில் இல்லை என்று ரசிகர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.

இந்தப் பின்னணியில்தான் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது யோசனையை மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். தனியார் விளையாட்டு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது முந்தைய யோசனையை மீண்டும் அவர் நினைவூட்டியுள்ளார்.

ஒருநாள் போட்டி - சச்சின் யோசனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருநாள் போட்டியிலும் 4 இன்னிங்ஸ்கள் - சச்சின் யோசனை

ஓவர்களை குறைப்பதற்குப் பதிலாக, டெஸ்ட் போட்டிகளைப் போல ஒருநாள் போட்டிகளையும் தலா 25 ஓவர்களுடன் 4 இன்னிங்ஸ்கள் கொண்டதாக மாற்றவேண்டும் என்பது சச்சின் முன்வைக்கும் யோசனை. இதனால், பிட்ச் சூழல், காலநிலை போன்றவற்றால் டாஸ் வெல்லும் அணிக்குக் கிடைக்கும் சாதகம், இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்பதால் போட்டி ஒருதரப்பாக இல்லாமல், இன்னும் சுவாரசியமானதாக மாறும் என்பது அவரது கருத்து.

15வது ஓவர் முதல் 40வது ஓவர் வரையிலும் ஒருநாள் போட்டிகள் எப்படி இருக்கும் என்பது முன்கூட்டியே கணிக்கக் கூடிய ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது என்பதை சச்சின் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 2 புதிய பந்துகள் எடுக்கப்படுவதால் ரிவர்ஸ் ஸ்விங் என்ற ஆயுதமே இல்லாமல் போயிருப்பதாகவும், ஐசிசி-யின் புதிய விதிகள் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக இருப்பதால், பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியில் இருப்பதாகவும் சச்சின் கூறுகிறார்.

வீசப்படும் ஒவ்வொரு பந்தும் ஒரு கேள்வியைப் போன்றது, அவ்வாறு பந்துவீச்சாளர் முன்வைக்கும் கேள்விக்கு பேட்ஸ்மேன் அளிக்கும் பதிலே கிரிக்கெட் என்கிறார் சச்சின்.

கேள்வியே சுவாரஸ்யமில்லாமல் போனால் ஆட்டம் எப்படி ருசிக்கும் என்கிறார் சச்சின். கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, பந்தை எச்சில் கொண்டு துடைக்கக் கூடாது என்று கொண்டு வரப்பட்ட விதியைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒருநாள் போட்டி - சச்சின் யோசனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

சச்சின் யோசனை - ஐ.சி.சி. என்ன சொல்கிறது?

இரு அணிகளும் மாறி மாறி 25 ஓவர் கொண்ட இன்னிங்ஸ்களை விளையாடுவதால் ஆட்டத்தில் எங்கும் தொய்வு இருக்காது. டாஸில் வெல்லும் அணிக்கு மட்டுமே உள்ள சாதகம் குறைந்து, எதிரணியும் போட்டியில் வெல்ல சரிசமமான வாய்ப்பு கிடைக்கும் என்று சச்சின் கூறியுள்ளார்.

இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவும் ஒருநாள் போட்டிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கத் தனது யோசனைகளைப் பகிர்ந்துள்ளார். முன்பு போல, முத்தரப்பு கோப்பை, நான்கு நாடுகள் ஆடும் தொடர் போன்றவை நடத்தப்பட வேண்டும் என்பது அவரது யோசனை.

ஆனால் ஐசிசி-யோ, ஒருநாள் போட்டிகளின் முக்கியத்துவம் குறைந்து வருவதாகக் கூறப்படுவதை நிராகரித்துள்ளது. நாடுகளுக்கு இடையிலான போட்டி அட்டவணையில் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை ஆரோக்கியமாகவே இருப்பதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cg3z9lxllw0o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.