Jump to content

எதிர்கால போருக்காக 886 பில்லியன் டொலர்களை ஒதுக்கிய அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்கால போருக்காக 886 பில்லியன் டொலர்களை ஒதுக்கிய அமெரிக்கா

March 19, 2023
 

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் மற்றும் எதிர்காலத்தில் சீனாவுடன் ஏற்படப்போகும் போர் ஆகியவற்றை எதிர்கொள்ளும் முகமாக அமெரிக்கா தனது பாதுகாப்பு செலவீனத்தை இந்த வருடம் 886 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்பில் படையினருக்கான ஊதியத்தையும் 5.2 விகிதம் அதிகரித்துள்ளதுடன், புதிய ஆயுதங்களின் உற்பத்திக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு நிதி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 28 பில்லியன் அதிகமாகும். புதிய ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை வேறு நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவு செய்யவும் முதல் தடவையாக அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.

உக்ரைன் சமரில் அமெரிக்கா தன்னிடம் உள்ள அதிகளவான ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும், சீனாவுடன் மோதல் ஒன்று ஏற்பட்டால் அதிகளவு ஆயுதங்கள் தேவைப்படும் என்பதாலும் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

ஜவலின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், பல்குழல் உந்துகளை செலுத்திகள், ஸ்ரிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் என 36 பில்லியன் டொலர்கள் பெறுமதியான தனது ஆயுதங்களை 2022 ஆம் ஆண்டு அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியிருந்தது.

 

https://www.ilakku.org/us-earmarked-886-billion-for-future-war/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

எதிர்கால போருக்காக 886 பில்லியன் டொலர்களை ஒதுக்கிய அமெரிக்கா

Got the below explanation from a quora: 

உலகின் வர்த்தகம் எல்லாமே அமெரிக்கா நாணயத்தில் தான் நடை பெறுகிறது. அதன் மதிப்பு சரிந்துவிடாமல் பார்த்துக்கொள்வது அமெரிக்கா அரசாங்கத்தின் கடமை. அதனால் அனைத்து நாட்டு பிரச்சன்னையிலும் தலையிட்டு கொண்டே இருக்கிறது. அமெரிக்காவை பொறுத்தவரை அதற்க்கு அதன் எதிர்காலம் மற்றும் பொருளாதார நலன்கள் தான் முக்கியம் அதற்காக என்ன விலையை வேண்டுமானாலும் கொடுக்கின்றது.

1970களில் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதியை தடை செய்தது "அரபு மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான யுத்தத்தில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தது அதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் (OPEC- Organization of the Petroleum Exporting Countries )அமெரிக்காவுக்கு எதிராக எண்ணெய் ஆயுதத்தை எடுத்தது ".

அதன் பிறகு அதே மாதரி ஒரு ஆயுதம் தமக்கு எதிராக பயன்படுத்தப்படாமல் இருக்க அமெரிக்கா எல்லா வழிகளையும் கையாண்டது. இந்த ஒபெக் நாடுகள் ஒன்று அமெரிக்காவுக்கு கீழ் இருக்கணும் இல்லையென்றால் அழிந்துவிடனும். சௌதிஅரேபியா , குவைத், கத்தார், ஐக்கிய அரபு நாடுகள் அமெரிக்காவின் நட்பு வட்டத்தில் வந்தது அதன் நலன்களையெல்லாம் அமெரிக்கா பாதுகாத்துகொண்டு இருக்கிறது

ஈராக் , ஈரான் , வெனிசுலா, லிபியா , சிரியா, ஓமன் நாடுகள் அமெரிக்காவின் எதிரணியில் இருந்தது அதனால் அழிக்கப்பட்டது. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பில் 2வது பெரிய நாடு உக்ரைனுக்கு நடந்த நிலைமை, ரஷ்யா சீனாவின் போக்குகளால் பலநாடுகள் தங்கள் பாதுகாப்பில் கவனம் எடுக்க தொடங்கியுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nilmini said:

ஈராக் , ஈரான் , வெனிசுலா, லிபியா , சிரியா, ஓமன் நாடுகள் அமெரிக்காவின் எதிரணியில் இருந்தது அதனால் அழிக்கப்பட்டது. 

தொடர் வெற்றிவாகை நிலைக்கும் என்று சொல்ல முடியாது தானே. :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதியும் கடந்த 2 வருடங்களாக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவும் குறிப்பாக பிரான்சும் ஆயுத ஏற்றுமதியையும் இராணுவச் செலவுகளையும் அதிகரித்துள்ளது. அமெரிக்க அவுஸ்திரேலிய நீர்மூழ்க்கிக் கப்பல் ஒப்பந்தத்தின் பின் சீனாவும் தன் பங்குக்கு காய்களை நகர்த்தி வருகிறது. பொருளாதார மோதல்களை மீறி வல்லரசுகள் நேரடியாகவே உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கிடைத்த

  1. நல்ல தலைவர்கள்
  2. முக்கிய முடிவுகள்
  3. செயல் திட்டங்கள்
  4. முன்கூட்டியே அமையப்பெற்ற சுதந்திரம்

இப்படி இவை அனைத்தும்,  நேர்த்தியான நிர்வாக அணுகுமுறைகளும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணங்களாக அமைந்து அந்நாட்டை வல்லரசு என்னும் நிலைக்கு உயர்த்தியுள்ளன.

அமெரிக்காவின் ஆளுமை அவர்களது அரசியல் இஸ்திரத்தன்மையில் தான் தங்கியிருக்கிறது. இந்த அரசியல் நிலைப்பாடு தொடரும் வரை அமெரிக்காவை யாரும் வீழ்த்த முடியாது.

 

1 hour ago, குமாரசாமி said:

தொடர் வெற்றிவாகை நிலைக்கும் என்று சொல்ல முடியாது தானே. :rolling_on_the_floor_laughing:

America is the land of opportunity

'அமெரிக்கா வாய்ப்புக்களின் தேசம்' என்று மொழி பெயர்க்கலாம்.

அடுத்து உச்ச கட்ட சுதந்திரம் கொண்ட நாடு. 50 மாகாணங்கள் அங்கு உண்டு. என்றாலும் ஒவ்வொரு மாகாணத்திலும் சட்ட திட்டங்கள் வெவ்வேறு.

திராவிட மொழியில் சொல்வதானால் அமெரிக்கா ஒரு 'வந்தேறிகளின்' நாடு.

மற்ற நாடுகளில் அரசியல் காரணங்களுக்காக வஞ்சிக்கப்பட்டவர்களின் சொர்க்கம் அமெரிக்கா. ஹிட்லரின் யூத வெறுப்பால் பல யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இந்தியாவின் பிராமண இன அழிப்பு அரசியலால் பெருவாரியான பிராமணர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் அடக்கு முறையால் பல சீனர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆஸ்திரியாவில் பிறந்த அர்னால்டு ஷிவாஸ்நேகர் முதல், ஜெர்மனியில் பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை அமெரிக்காவை தாயகமாகிக்கொண்டு தமக்கும் பெருமை சேர்த்து, பிறந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்து சேர்ந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். யாரும் யாரையும் வந்தேறி என்று திட்டுவதில்லை. திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம். திறமை இல்லை என்றால் குப்பையில் போடவும் தயங்கமாட்டார்கள்.

அடுத்து இவ்வாறு குடியேறியவர்கள் நம்ப முடியாத அளவுக்கு சுதந்திரத்தை அனுபவித்தார்கள். பாதுகாப்பாக உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் 100% உழைப்பை அந்நாட்டுக்கு தருகிறார்கள்.பரந்து விரிந்த நாடு. எல்லா வித வளங்களையும் கொண்ட நாடு.

மனித வளம் மற்றும் இயற்கை வளம் மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்களை கொண்ட நாடு பலமாக தான் இருக்கும். ஆனால் ஒரே நாளிலோ அல்லது 100 வருடத்திலோ இது நிகழ்ந்துவிடவில்லை. அங்கும் உள்நாட்டு போர் நடந்து.. நாடே துண்டு துண்டாகும் நிலமை வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் இன்றைய நவீன மற்றும் வலிமை வாய்ந்த அமெரிக்கா நிற்கிறது.

  • Like 6
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nilmini said:

 கிடைத்த

  1. நல்ல தலைவர்கள்
  2. முக்கிய முடிவுகள்
  3. செயல் திட்டங்கள்
  4. முன்கூட்டியே அமையப்பெற்ற சுதந்திரம்

இப்படி இவை அனைத்தும்,  நேர்த்தியான நிர்வாக அணுகுமுறைகளும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணங்களாக அமைந்து அந்நாட்டை வல்லரசு என்னும் நிலைக்கு உயர்த்தியுள்ளன.

அமெரிக்காவின் ஆளுமை அவர்களது அரசியல் இஸ்திரத்தன்மையில் தான் தங்கியிருக்கிறது. இந்த அரசியல் நிலைப்பாடு தொடரும் வரை அமெரிக்காவை யாரும் வீழ்த்த முடியாது.

 

America is the land of opportunity

'அமெரிக்கா வாய்ப்புக்களின் தேசம்' என்று மொழி பெயர்க்கலாம்.

அடுத்து உச்ச கட்ட சுதந்திரம் கொண்ட நாடு. 50 மாகாணங்கள் அங்கு உண்டு. என்றாலும் ஒவ்வொரு மாகாணத்திலும் சட்ட திட்டங்கள் வெவ்வேறு.

திராவிட மொழியில் சொல்வதானால் அமெரிக்கா ஒரு 'வந்தேறிகளின்' நாடு.

மற்ற நாடுகளில் அரசியல் காரணங்களுக்காக வஞ்சிக்கப்பட்டவர்களின் சொர்க்கம் அமெரிக்கா. ஹிட்லரின் யூத வெறுப்பால் பல யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இந்தியாவின் பிராமண இன அழிப்பு அரசியலால் பெருவாரியான பிராமணர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் அடக்கு முறையால் பல சீனர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆஸ்திரியாவில் பிறந்த அர்னால்டு ஷிவாஸ்நேகர் முதல், ஜெர்மனியில் பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை அமெரிக்காவை தாயகமாகிக்கொண்டு தமக்கும் பெருமை சேர்த்து, பிறந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்து சேர்ந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். யாரும் யாரையும் வந்தேறி என்று திட்டுவதில்லை. திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம். திறமை இல்லை என்றால் குப்பையில் போடவும் தயங்கமாட்டார்கள்.

அடுத்து இவ்வாறு குடியேறியவர்கள் நம்ப முடியாத அளவுக்கு சுதந்திரத்தை அனுபவித்தார்கள். பாதுகாப்பாக உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் 100% உழைப்பை அந்நாட்டுக்கு தருகிறார்கள்.பரந்து விரிந்த நாடு. எல்லா வித வளங்களையும் கொண்ட நாடு.

மனித வளம் மற்றும் இயற்கை வளம் மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்களை கொண்ட நாடு பலமாக தான் இருக்கும். ஆனால் ஒரே நாளிலோ அல்லது 100 வருடத்திலோ இது நிகழ்ந்துவிடவில்லை. அங்கும் உள்நாட்டு போர் நடந்து.. நாடே துண்டு துண்டாகும் நிலமை வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் இன்றைய நவீன மற்றும் வலிமை வாய்ந்த அமெரிக்கா நிற்கிறது.

 

ஆர்ப்பாட்டம்,அகங்காரம்,அதிகப் பிரசங்கித்தனம் இல்லாத அமைதியான நறுக்கென சொல்லும் கருத்துக்கள்.

உங்கள் கருத்தை மனதார முற்று முழுதாக ஏற்றுக்கொள்கின்றேன்.

இப்படியான கருத்துக்கள் தான் யாழ்களத்திற்கு தேவை.
தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிராமண இன அழிப்பு எப்போது நடந்தது? 

அமெரிக்காவில் அண்மையில் இந்தியர்களிடையிலான ஜாதி  ரீதியான ஒடுக்குமுறை ஏற்பட்டு அதற்கெதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அறிந்தேன். 

அப்படியானால் பிராமணர்கள் அதிகம் அங்கு குடியேறி உள்ளார்கள் என்பது சரியாக தான் இருக்கும்.  

 

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

 

ஆர்ப்பாட்டம்,அகங்காரம்,அதிகப் பிரசங்கித்தனம் இல்லாத அமைதியான நறுக்கென சொல்லும் கருத்துக்கள்.

உங்கள் கருத்தை மனதார முற்று முழுதாக ஏற்றுக்கொள்கின்றேன்.

இப்படியான கருத்துக்கள் தான் யாழ்களத்திற்கு தேவை.
தொடருங்கள்.

நன்றி அண்ணா. தொடர்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

பிராமண இன அழிப்பு எப்போது நடந்தது? 

அமெரிக்காவில் அண்மையில் இந்தியர்களிடையிலான ஜாதி  ரீதியான ஒடுக்குமுறை ஏற்பட்டு அதற்கெதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அறிந்தேன். 

அப்படியானால் பிராமணர்கள் அதிகம் அங்கு குடியேறி உள்ளார்கள் என்பது சரியாக தான் இருக்கும்.  

 

இப்பவும் நடந்து கொண்டுதான் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

பிராமண இன அழிப்பு எப்போது நடந்தது? 

அமெரிக்காவில் அண்மையில் இந்தியர்களிடையிலான ஜாதி  ரீதியான ஒடுக்குமுறை ஏற்பட்டு அதற்கெதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அறிந்தேன். 

அப்படியானால் பிராமணர்கள் அதிகம் அங்கு குடியேறி உள்ளார்கள் என்பது சரியாக தான் இருக்கும்.  

 

காலம் காலமான வெளிநாடுகளில் படித்தவர்கள் என்றால் ஐயர்மாரே.

இப்போ ஐரி துறை வந்தது தான் அவர்களுக்கு பிரச்சனை.

கண்டவன் நின்றவன் என்று சகலரும் படித்து சரிசமமாக முன்னேறுகிறார்கள்.

இந்திய ரத்தமல்லோ சும்மா அடங்கியிருக்குமே.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nilmini said:

 கிடைத்த

  1. நல்ல தலைவர்கள்
  2. முக்கிய முடிவுகள்
  3. செயல் திட்டங்கள்
  4. முன்கூட்டியே அமையப்பெற்ற சுதந்திரம்

இப்படி இவை அனைத்தும்,  நேர்த்தியான நிர்வாக அணுகுமுறைகளும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணங்களாக அமைந்து அந்நாட்டை வல்லரசு என்னும் நிலைக்கு உயர்த்தியுள்ளன.

அமெரிக்காவின் ஆளுமை அவர்களது அரசியல் இஸ்திரத்தன்மையில் தான் தங்கியிருக்கிறது. இந்த அரசியல் நிலைப்பாடு தொடரும் வரை அமெரிக்காவை யாரும் வீழ்த்த முடியாது.

 

America is the land of opportunity

'அமெரிக்கா வாய்ப்புக்களின் தேசம்' என்று மொழி பெயர்க்கலாம்.

அடுத்து உச்ச கட்ட சுதந்திரம் கொண்ட நாடு. 50 மாகாணங்கள் அங்கு உண்டு. என்றாலும் ஒவ்வொரு மாகாணத்திலும் சட்ட திட்டங்கள் வெவ்வேறு.

திராவிட மொழியில் சொல்வதானால் அமெரிக்கா ஒரு 'வந்தேறிகளின்' நாடு.

மற்ற நாடுகளில் அரசியல் காரணங்களுக்காக வஞ்சிக்கப்பட்டவர்களின் சொர்க்கம் அமெரிக்கா. ஹிட்லரின் யூத வெறுப்பால் பல யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இந்தியாவின் பிராமண இன அழிப்பு அரசியலால் பெருவாரியான பிராமணர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் அடக்கு முறையால் பல சீனர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆஸ்திரியாவில் பிறந்த அர்னால்டு ஷிவாஸ்நேகர் முதல், ஜெர்மனியில் பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை அமெரிக்காவை தாயகமாகிக்கொண்டு தமக்கும் பெருமை சேர்த்து, பிறந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்து சேர்ந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். யாரும் யாரையும் வந்தேறி என்று திட்டுவதில்லை. திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம். திறமை இல்லை என்றால் குப்பையில் போடவும் தயங்கமாட்டார்கள்.

அடுத்து இவ்வாறு குடியேறியவர்கள் நம்ப முடியாத அளவுக்கு சுதந்திரத்தை அனுபவித்தார்கள். பாதுகாப்பாக உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் 100% உழைப்பை அந்நாட்டுக்கு தருகிறார்கள்.பரந்து விரிந்த நாடு. எல்லா வித வளங்களையும் கொண்ட நாடு.

மனித வளம் மற்றும் இயற்கை வளம் மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்களை கொண்ட நாடு பலமாக தான் இருக்கும். ஆனால் ஒரே நாளிலோ அல்லது 100 வருடத்திலோ இது நிகழ்ந்துவிடவில்லை. அங்கும் உள்நாட்டு போர் நடந்து.. நாடே துண்டு துண்டாகும் நிலமை வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் இன்றைய நவீன மற்றும் வலிமை வாய்ந்த அமெரிக்கா நிற்கிறது.

உலகிலேயே அதிக வளம் கொண்ட நாடுகள் எனறால் ஆபிரிக்க நாடுகள்தான், ஆனால் மிகவும் வறிய நாடுகள் என்றால் அந்த ஆபிரிக்க நாடுகள்தான் முன்னிற்கின்றன.

பெரும்பாலும் செல்வந்த நாடுகளாக உள்ள மேற்கு அடிப்படையில் காலனித்துவ நாடுகளாக உள்ளன, தற்காலத்தில் நேரடியாக ஆக்கிரப்பு என்றில்லாமால் ஏதோ ஒரு வகையில் சுரண்டல்களில் ஈடுபடுகிறார்கள்.

அதற்கு பலம் வேண்டும், அதற்காக பாதுகாப்பு செலவீனத்தினை அதிகரித்து செல்கிறார்கள், மறுவளமாக அந்த நாடுகளின் சுரண்டல்களுக்கு ஆளாகும்  நாட்டில் உணவில்லாமல் மக்கள் உயிரிழக்கிறார்கள்.

உணவுச்சங்கிலியில் பலமானது பலமற்றத்தினை கொன்று சாப்பிட்டுவிடும்.

9 hours ago, nilmini said:

 கிடைத்த

  1. நல்ல தலைவர்கள்
  2. முக்கிய முடிவுகள்
  3. செயல் திட்டங்கள்
  4. முன்கூட்டியே அமையப்பெற்ற சுதந்திரம்

இப்படி இவை அனைத்தும்,  நேர்த்தியான நிர்வாக அணுகுமுறைகளும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணங்களாக அமைந்து அந்நாட்டை வல்லரசு என்னும் நிலைக்கு உயர்த்தியுள்ளன.

அமெரிக்காவின் ஆளுமை அவர்களது அரசியல் இஸ்திரத்தன்மையில் தான் தங்கியிருக்கிறது. இந்த அரசியல் நிலைப்பாடு தொடரும் வரை அமெரிக்காவை யாரும் வீழ்த்த முடியாது.

 

America is the land of opportunity

'அமெரிக்கா வாய்ப்புக்களின் தேசம்' என்று மொழி பெயர்க்கலாம்.

அடுத்து உச்ச கட்ட சுதந்திரம் கொண்ட நாடு. 50 மாகாணங்கள் அங்கு உண்டு. என்றாலும் ஒவ்வொரு மாகாணத்திலும் சட்ட திட்டங்கள் வெவ்வேறு.

திராவிட மொழியில் சொல்வதானால் அமெரிக்கா ஒரு 'வந்தேறிகளின்' நாடு.

மற்ற நாடுகளில் அரசியல் காரணங்களுக்காக வஞ்சிக்கப்பட்டவர்களின் சொர்க்கம் அமெரிக்கா. ஹிட்லரின் யூத வெறுப்பால் பல யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இந்தியாவின் பிராமண இன அழிப்பு அரசியலால் பெருவாரியான பிராமணர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் அடக்கு முறையால் பல சீனர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆஸ்திரியாவில் பிறந்த அர்னால்டு ஷிவாஸ்நேகர் முதல், ஜெர்மனியில் பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை அமெரிக்காவை தாயகமாகிக்கொண்டு தமக்கும் பெருமை சேர்த்து, பிறந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்து சேர்ந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். யாரும் யாரையும் வந்தேறி என்று திட்டுவதில்லை. திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம். திறமை இல்லை என்றால் குப்பையில் போடவும் தயங்கமாட்டார்கள்.

அடுத்து இவ்வாறு குடியேறியவர்கள் நம்ப முடியாத அளவுக்கு சுதந்திரத்தை அனுபவித்தார்கள். பாதுகாப்பாக உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் 100% உழைப்பை அந்நாட்டுக்கு தருகிறார்கள்.பரந்து விரிந்த நாடு. எல்லா வித வளங்களையும் கொண்ட நாடு.

மனித வளம் மற்றும் இயற்கை வளம் மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்களை கொண்ட நாடு பலமாக தான் இருக்கும். ஆனால் ஒரே நாளிலோ அல்லது 100 வருடத்திலோ இது நிகழ்ந்துவிடவில்லை. அங்கும் உள்நாட்டு போர் நடந்து.. நாடே துண்டு துண்டாகும் நிலமை வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் இன்றைய நவீன மற்றும் வலிமை வாய்ந்த அமெரிக்கா நிற்கிறது.

நீங்கள் கூறிய கருத்து 100% சரியானதாகவே  என்னளவில் உணருகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nilmini said:

 கிடைத்த

  1. நல்ல தலைவர்கள்
  2. முக்கிய முடிவுகள்
  3. செயல் திட்டங்கள்
  4. முன்கூட்டியே அமையப்பெற்ற சுதந்திரம்

இப்படி இவை அனைத்தும்,  நேர்த்தியான நிர்வாக அணுகுமுறைகளும் அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணங்களாக அமைந்து அந்நாட்டை வல்லரசு என்னும் நிலைக்கு உயர்த்தியுள்ளன.

அமெரிக்காவின் ஆளுமை அவர்களது அரசியல் இஸ்திரத்தன்மையில் தான் தங்கியிருக்கிறது. இந்த அரசியல் நிலைப்பாடு தொடரும் வரை அமெரிக்காவை யாரும் வீழ்த்த முடியாது.

 

America is the land of opportunity

'அமெரிக்கா வாய்ப்புக்களின் தேசம்' என்று மொழி பெயர்க்கலாம்.

அடுத்து உச்ச கட்ட சுதந்திரம் கொண்ட நாடு. 50 மாகாணங்கள் அங்கு உண்டு. என்றாலும் ஒவ்வொரு மாகாணத்திலும் சட்ட திட்டங்கள் வெவ்வேறு.

திராவிட மொழியில் சொல்வதானால் அமெரிக்கா ஒரு 'வந்தேறிகளின்' நாடு.

மற்ற நாடுகளில் அரசியல் காரணங்களுக்காக வஞ்சிக்கப்பட்டவர்களின் சொர்க்கம் அமெரிக்கா. ஹிட்லரின் யூத வெறுப்பால் பல யூதர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இந்தியாவின் பிராமண இன அழிப்பு அரசியலால் பெருவாரியான பிராமணர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் அடக்கு முறையால் பல சீனர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆஸ்திரியாவில் பிறந்த அர்னால்டு ஷிவாஸ்நேகர் முதல், ஜெர்மனியில் பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை அமெரிக்காவை தாயகமாகிக்கொண்டு தமக்கும் பெருமை சேர்த்து, பிறந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்து சேர்ந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். யாரும் யாரையும் வந்தேறி என்று திட்டுவதில்லை. திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னுக்கு வரலாம். திறமை இல்லை என்றால் குப்பையில் போடவும் தயங்கமாட்டார்கள்.

அடுத்து இவ்வாறு குடியேறியவர்கள் நம்ப முடியாத அளவுக்கு சுதந்திரத்தை அனுபவித்தார்கள். பாதுகாப்பாக உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் 100% உழைப்பை அந்நாட்டுக்கு தருகிறார்கள்.பரந்து விரிந்த நாடு. எல்லா வித வளங்களையும் கொண்ட நாடு.

மனித வளம் மற்றும் இயற்கை வளம் மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்களை கொண்ட நாடு பலமாக தான் இருக்கும். ஆனால் ஒரே நாளிலோ அல்லது 100 வருடத்திலோ இது நிகழ்ந்துவிடவில்லை. அங்கும் உள்நாட்டு போர் நடந்து.. நாடே துண்டு துண்டாகும் நிலமை வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் இன்றைய நவீன மற்றும் வலிமை வாய்ந்த அமெரிக்கா நிற்கிறது.

நல்ல கருத்துக்கள்.

அமெரிக்கா வந்தாரை வாழவைத்த வந்தேறிகள் தேசம் என்பதும், ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதார குடியேறிகளின் கனவு தேசம் மட்டும் அல்ல, ஒடுக்குமுறைக்கு ஆளானவர்களின் (லூதரன் ஜேர்மானியர் உட்பட) தஞ்ச தேசம் என்பதும் கூட உண்மையே.

ஆனால் இவை எல்லாவறுக்கும் அடிப்படை - அமெரிக்காவின் மக்களாட்சி அரசும், அரசியலமைப்பும், சட்டத்தின் ஆளுமையும், கிட்டதட்ட confederal அளவில் பகிரப்பட்டுள்ள மாநில அதிகார கட்டமைப்புமே.

இதனால்தான் ஒரு உள்ளக ஸ்திரத்தன்மையை அமெரிக்காவால் உருவாக்கி பேண முடிகிறது.

ஆனால் அமெரிக்காவின் உள்ளே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளும், சுரண்டல் முதலாளித்துவமும், சுதேசிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், right to bear arms, abortion போன்ற விடயங்களும், தற்போது அமெரிக்காவில் ஒரு உள் பிளவை ஏற்படுத்தி வருகிறது.

இது நகர், கிராமம். வெள்ளை காலர், நீலக்காலர், வெள்ளை, லத்தினோ, கறுப்பு, சிவப்பு மாநிலங்கள், நீல மாநிலங்கள் என பல மட்டங்களில் பிளவாக தெரிகிறது.

இந்த வேற்றுமைகள் ஜனநாயக நாட்டில் சகஜம்தான் என்பது உண்மையே,

கெட்டிஸ்பேர்க் உரை நிகழும் போது நாடு இதைவிட துருவப்பட்டிருந்தது என்பதும் உண்மையே,

அதேபோல் இதை சிலர் இலகுவாக culture wars என கடந்து போனாலும், இது அமெரிக்காவின் அடித்தளத்தை அசைத்துப்பார்க்கும் ஒரு பிளவாக அமைய வாய்ப்புகள் உண்டு என்பதை மறுக்க முடியாது.

சோழ, கிரேக்க, ரோம, மொகலாய என பல பேரரசுகள் அழிந்தது உள்நாட்டில் ஸ்த்திரத்தன்மை குலைந்தமையாலே.

எனது கணிப்பில் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் உடையுமாயின், அது உள்ளே இருந்தே ஆரம்பிக்கும்.

 

9 hours ago, island said:

பிராமண இன அழிப்பு எப்போது நடந்தது? 

இன அழிப்பு என்பது மிகவும் பெரிய வார்த்தை.

ஆனால் இந்தியாவின் இட ஒதுக்கீடு, பல்லாயிரம் வருடமாக பிராமணர் அனுபவித்த unfair advantage ஐ இல்லாமல் செய்தது (ஓரளவு). அதனால் பலர், IT போன்ற இட ஒதுக்கீட்டை bypass பண்ணி படிக்க கூடிய துறைகளில் புகுந்து, அதன் மூலம் அமெரிக்கா/மேற்கிக்கு இடம்பெயர்ந்து - தம் மேலாண்மையை தக்க வைக்கிறார்கள்.

இதே போல் தென்னாபிரிகா வெள்ளை இனத்தவரும் கூட செய்கிறார்கள். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

 

ஆர்ப்பாட்டம்,அகங்காரம்,அதிகப் பிரசங்கித்தனம் இல்லாத அமைதியான நறுக்கென சொல்லும் கருத்துக்கள்.

உங்கள் கருத்தை மனதார முற்று முழுதாக ஏற்றுக்கொள்கின்றேன்.

இப்படியான கருத்துக்கள் தான் யாழ்களத்திற்கு தேவை.
தொடருங்கள்.

🤣

ஒரே விடயத்தை விரும்பியவர் எழுதும் போது தேனாக இனிப்பதும், வெறுப்பவர் எழுதும் போது வேம்பாக கசப்பதும்……

இந்த அணுகுமுறை கிட்டதட்ட உங்களின் டிரேட் மார்க் அண்ணை🤣.

இதை விட குறைவாக அமேரிக்காவின் நல்ல பக்கத்தையும் எழுதிய பல உறவுகளுக்கு நீங்கள், வெள்ளையின விசுவாசி, மேற்கின் அடிமை, அமெரிக்கன் அடிமை என பல இளமானி, முதுமானி, ஏன் முனைவர் பட்டங்கள் கூட வழங்கி உள்ளீர்கள்🤣

பலர் நமுட்டு சிரிப்போடு கடந்து போயிருப்பார்கள். 

எனக்கு வாய் சும்மா இராதே🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

ஒரே விடயத்தை விரும்பியவர் எழுதும் போது தேனாக இனிப்பதும், வெறுப்பவர் எழுதும் போது வேம்பாக கசப்பதும்……

இந்த அணுகுமுறை கிட்டதட்ட உங்களின் டிரேட் மார்க் அண்ணை🤣.

அப்படியல்ல.
இங்கே பல இடங்களில் நகைச்சுவைகளை தவிர்த்து உண்மையாக விவாதிக்கும் போது எதிர்க்கருத்து வைப்பவர்களை அடி முட்டாள்களாக சித்தரித்து கருத்து எழுதுவதாலேயே பல பிரச்சனைகள் வருகின்றது. நீங்கள் கூட மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்ற பாணியிலேயே கருத்தெழுதுபவர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

அப்படியல்ல.
இங்கே பல இடங்களில் நகைச்சுவைகளை தவிர்த்து உண்மையாக விவாதிக்கும் போது எதிர்க்கருத்து வைப்பவர்களை அடி முட்டாள்களாக சித்தரித்து கருத்து எழுதுவதாலேயே பல பிரச்சனைகள் வருகின்றது. நீங்கள் கூட மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்ற பாணியிலேயே கருத்தெழுதுபவர்.

சரி நான் அப்படியே மற்றவருக்கு எதுவும் தெரியாது என்ற பாணியில் எழுதுகிறேன் என்றே வைப்போம் (இதை பற்றி கீழே எழுதுகிறேன்), அதற்காக நான் சூரியன் கிழக்கில் எழும், சூரிய சக்தியால் பயிர் வளரும் என எழுதினால்….இல்லவே இல்லை, அது சூரியனே இல்லை, 60 வாட்ஸ் பல்பு, அது எழுவது மேற்கில், அதனால் பயிர் அழியும் என்று எழுதி, எனக்கு சூரிய அடிமை, என பட்டம் தருவது முறையான செயலா?

 

பிறகு அதையே உங்கள் அபிமான கருத்தாளர் சொன்னால்…ஓமோம் அது சரிதான்…நீங்கள் தன்மையாக சொல்கிறீர்கள் என்றால்?

அப்போ நீங்கள் ஒரு கருத்தை ஏற்பதும், ஆதரிப்பதும் யார் சொல்கிறார்கள்? அவரின் அணுகுமுறையையில்தான் தங்கியுள்ளது? கருத்தில் அல்ல?

—————

நான் எடுத்தவுடன் எனக்கு எல்லாம் தெரியும், உனக்கு எதுவும் தெரியாது என எழுதுவதில்லை. ஆனால் சிலதை நக்கல், மற்றும் அழுத்தம் திருத்தமாக, ஆதாரபூர்வமாக எழுதுவேன்.

அது பின்வரும் வகையில் கருத்து எழுதுவோர்க்கு.

1. தரவு பிழைகளை தரவு என எழுந்தமானமாக அடித்து விடுவோர், தம் மனதில் உதித்த கற்பனைகளை வரலாறு என பதிய விளைவோர்.

2. சதி கோட்பாட்டை காவுவோர்

3. குறித்த ஒரு கட்சிக்கு வாழ்க்கைபட்டு விட்டு, அதன் அஜெண்டாவை யாழில் நகர்த்த முனைவோர்

4. அப்பட்டமான இந்திய கையாட்கள்

5. மேலே சொன்னது போல் கோஷான் (அல்லது அவர் போல இன்னொருவர்) வடக்கே இழுத்தால், நாம் தெற்கே இழுத்தே ஆக வேண்டும் என விஷமம் செய்யும் குதர்கவாதிகள்.

 

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இன அழிப்பு என்பது மிகவும் பெரிய வார்த்தை.

ஆனால் இந்தியாவின் இட ஒதுக்கீடு, பல்லாயிரம் வருடமாக பிராமணர் அனுபவித்த unfair advantage ஐ இல்லாமல் செய்தது (ஓரளவு). அதனால் பலர், IT போன்ற இட ஒதுக்கீட்டை bypass பண்ணி படிக்க கூடிய துறைகளில் புகுந்து, அதன் மூலம் அமெரிக்கா/மேற்கிக்கு இடம்பெயர்ந்து - தம் மேலாண்மையை தக்க வைக்கிறார்கள்.

இதே போல் தென்னாபிரிகா வெள்ளை இனத்தவரும் கூட செய்கிறார்கள். 

அதாவது காலம் காலமாக தம்மை தாமே உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்களை தீண்ட தகாதவர்கள் என்று தாழ்ததி அவர்களின் கல்வியை மறுத்த பிராமண வர்ககத்தினர் காலப்போக்கில் மற்றவர்களும் படித்து முன்னேறுவதை பொறுக்கமாட்டாமல் மனம் புழுங்குவறகு பெயர் இன அழிப்பா?  அமெரிக்கா சென்று அங்கும் நமது கேவலமான ஜாதி  ஒடுக்கு முறைகளை கட்டவிழ்தது விடும் செயலை என்னவென்பது? 

நான் அறிந்த வரையில்,  ஈழத்தில் நடந்த தமிழ் இன அழிப்பிற்கு நீண்ட காலமாக உறுதுணையாக இருந்தவர்கள் இந்திய பார்பனர்களே!

 ஈழத்தில் யுத்தம் நடந்த 30 வருடங்களிலும் ஐரோப்பிய பத்திரிகைகளில் தமிழர் போராட்டத்தையும் அதன்ன் தலைமையான விடுதலைப்புலிகளையும் பயங்கரவாதமாக சித்தரித்து  வெளிவந்த அத்தனை கட்டுரைகளுக்குமான  செய்தி மூலம் யார் என்று கட்டுரையின் இறுதியில் பார்ததால் அங்கு சிங்களவர்களின் பெயரை விட அதிகமாகவே சர்மா, ஜோஷி, ராவ், பட்டேல், ஷ்ஷ்ரி, செளத்ரி என்று பார்ப்பனப் பெயர்களாகவே இருந்ததை பலரும் அவதானித்திருப்போம். எமது  இனத்தின் அழிவுக்கு முக்கிய கால் கோளாக இருந்தவர்களுக்கு, இன்றும் எமக்கான நியாயத்தினை அடைவதற்கு தடையாக இருக்கும் ஒரு வர்ககத்தினருக்கு   இனவழிப்பு நடந்ததாக நீலிக் கண்ணீருடன் ஒரு வரலாற்று பொய்யை யாழில் கருத்தோடு கருத்தாக தூவி விட்டு செல்வது முற்றிலும் நியாயமற்ற அறமற்ற செயல். அதையே சுட்டிக்காட்டினேன். 

ஈழத்தமிழர்களின் மாபெரும் பலவீனம் என்ன என்பதை இந்திய பார்பபனவர்ககமும் அதன் அடிமைகளும் சிங்கள பௌத்த பேரினவாதிகளும் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். அது பலவீனம் என்று கூட உணராது அதை பலமாக நினைத்து விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளாக பலியாகிறது எமது தமிழ்இனம். 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

சரி நான் அப்படியே மற்றவருக்கு எதுவும் தெரியாது என்ற பாணியில் எழுதுகிறேன் என்றே வைப்போம் (இதை பற்றி கீழே எழுதுகிறேன்), அதற்காக நான் சூரியன் கிழக்கில் எழும், சூரிய சக்தியால் பயிர் வளரும் என எழுதினால்….இல்லவே இல்லை, அது சூரியனே இல்லை, 60 வாட்ஸ் பல்பு, அது எழுவது மேற்கில், அதனால் பயிர் அழியும் என்று எழுதி, எனக்கு சூரிய அடிமை, என பட்டம் தருவது முறையான செயலா?

நான் என்ன நினைத்தேனோ அது சரியாகவே நடக்கின்றது.....:face_with_tears_of_joy:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நான் என்ன நினைத்தேனோ அது சரியாகவே நடக்கின்றது.....:face_with_tears_of_joy:

 

பதில் இல்லை என்றால் வெறும் வாயை மெல்லுவதற்கு ஒரு சிகரெட்ட பத்த வைக்கலாம்?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

 

உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி Goshen.

அமெரிக்கா சுதேசிகளுக்கு இழைத்த கொடுமைகள், ஆபிரிக்கர்களை மிருகங்கள் போல நடத்தியமை இன்று பெரும்பாலான அமெரிக்கர்களினால் வெறுக்கப்பட்டு வருகிறது. தாம் செய்தது, செய்வதில் நிறைய தவறுகள், அநீதிகள் இருப்பதை உணராமல் இருக்கும் அளவுக்கு அவர்கள் இல்லை.

ஆனால் இன்று உலகத்தில் பல நாடுகளும் காலனித்துவம் அற்று, கொடுங்கோல் ஆட்சி இல்லாமல் சுதந்திரம் பெற்ற நாடுகளாக இருப்பதற்கும் பொருளாதாரமற்றும் பொதுவான ஸ்தரநிலைமை நிலவுவதற்கு அமெரிக்காவின் சீரான அரசியல், ஆளுமை மற்றும் இருப்பும் தான் காரணம்.

இதை பற்றி விரிவாக ஒரு பதிவை இன்னொருமுறை போடுகிறேன். எவ்வளவுதான் உள்ளக பிரச்சனைகள் இருந்தாலும், நாட்டின் ஒருமைப்பாடு, வளர்ச்சி என்று வரும்போது எல்லா மாநில ஆட்சியாளர்களும் ஒன்று கூடி ஒன்றையே செய்வார்கள். எதிர்காலம் எப்படியோ தெரியவில்லை. ஆனால் இந்த ஒற்றுமை மாறுவது கடினம்.

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

🤣

ஒரே விடயத்தை விரும்பியவர் எழுதும் போது தேனாக இனிப்பதும், வெறுப்பவர் எழுதும் போது வேம்பாக கசப்பதும்……

இந்த அணுகுமுறை கிட்டதட்ட உங்களின் டிரேட் மார்க் அண்ணை🤣.

இதை விட குறைவாக அமேரிக்காவின் நல்ல பக்கத்தையும் எழுதிய பல உறவுகளுக்கு நீங்கள், வெள்ளையின விசுவாசி, மேற்கின் அடிமை, அமெரிக்கன் அடிமை என பல இளமானி, முதுமானி, ஏன் முனைவர் பட்டங்கள் கூட வழங்கி உள்ளீர்கள்🤣

பலர் நமுட்டு சிரிப்போடு கடந்து போயிருப்பார்கள். 

எனக்கு வாய் சும்மா இராதே🤣

Goshen னுக்கு எத்தனை வயது நான் அறிவுரை சொல்லலாமா என்று தெரியவில்லை. எந்த ஒரு களத்திலும் எம்மோடு நேராக விவாதிப்பர்வர்களுடன் நாமும் விட்டுக்கொடுக்காமல் சுவாரசியமாகவும் வாதிடலாம், தவறுகளை சுட்டிக்காட்டலாம்.

ஆனால் ஒருவர் இன்னொருவர் கருத்தை ஆமோதிக்கும்போது, அவரை மற்ற கருத்துப்பரிமாற்றங்களில் எப்படி இருந்தார், இருப்பார் என்று எமது கணிப்புகளை தெரிவிப்பது, அந்த திரியின் பாதையில் இருந்து, பார்வையாளர்கள், பங்காளர்களை திசை திருப்பவதாகவும், சந்தர்ப்பத்தை பாவித்து இன்னொருவரை குறை கூறுவதாகவும் இருக்கும்.

பொதுவாக, எமக்கு யாருடனும் நேரடி பிரச்சனை பிரச்னை இருந்தாலே ஒழிய மற்ற விடயங்களை பார்த்தும் பார்க்காமலும் கடந்து போவதே நல்லது.

Edited by nilmini
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nilmini said:

உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி Goshen.

 

ஆனால் இன்று உலகத்தில் பல நாடுகளும் காலனித்துவம் அற்று, கொடுங்கோல் ஆட்சி இல்லாமல் சுதந்திரம் பெற்ற நாடுகளாக இருப்பதற்கும் பொருளாதாரமற்றும் பொதுவான ஸ்தரநிலைமை நிலவுவதற்கு அமெரிக்காவின் சீரான அரசியல், ஆளுமை மற்றும் இருப்பும் தான் காரணம்.

 

நிச்சயமாக,

உண்மையில் பிரித்தானியா தனது காலனித்துவத்தை விலக்கி கொண்டதில் அமெரிக்காவின் பங்கு மிகப்பெரியது.

2ம் உலக யுத்த முடிவில், 1ம் உலக யுத்தத்தை முடிவை போல் மீண்டும் காலனிய ஆட்சி முறையை தொடரலாம் என்பதே பிரித்தானியாவின் நப்பாசையக இருந்தது. ஆனால் மறைமுகமான அழுத்தம் மூலம் படிபடியாக பிரித்தானிய காலனிய வலையமைப்பை dismantle பண்ணி, பல நாடுகள் இன்று சுதந்திர நாடுகளாக இருக்கவும், ஆளுடன் ஆள் அடிபடுவதையே வரலாறாக கொண்ட ஐரோப்பியர் 2ம் உலக யுத்தத்தின் பின் அமைதியாக இருக்கவும் அமெரிக்காவே காரணம்.

எந்த ஒரு முதன்மை நாட்டின் தலைமையும் 100% சரியானதல்ல. அமெரிக்கா பல பிழைகளை விட்டு உள்ளது.

ஈராக்கின் 2ம் யுத்தம் ஒரு யுத்த குற்றமே.

ஆனாலும் அமெரிக்காவல் விளைந்த பல நல்லதும் உண்டு.

37 minutes ago, nilmini said:

இதை பற்றி விரிவாக ஒரு பதிவை இன்னொருமுறை போடுகிறேன். எவ்வளவுதான் உள்ளக பிரச்சனைகள் இருந்தாலும், நாட்டின் ஒருமைப்பாடு, வளர்ச்சி என்று வரும்போது எல்லா மாநில ஆட்சியாளர்களும் ஒன்று கூடி ஒன்றையே செய்வார்கள். எதிர்காலம் எப்படியோ தெரியவில்லை. ஆனால் இந்த ஒற்றுமை மாறுவது கடினம்.

நிச்சயம் எழுதுங்கள்.

அமெரிக்க மக்களின் சுதந்திர வேட்கையையும், அந்த சுதந்திரத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பபட்ட, American Dream ஐ பற்றியும் தமிழில் அதிகம் யாரும் எழுதுவதில்லை.

எமது விடயத்தில் அமெரிக்கா எடுத்த மோசமான முடிவு என்ற ஒன்றை மட்டும் வைத்து - 200 வருட வரலாற்றை எடை போடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

அமெரிக்கர்களின் ஒற்றுமை மாறக்கூடாது என்பதுதான் எனது விருப்பும். ஆனால் MAGA பேர்வழிகள் அதை சிறுக, சிறுக துண்டாடி விடக்கூடும் என அஞ்சுகிறேன்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nilmini said:

Goshen னுக்கு எத்தனை வயது நான் அறிவுரை சொல்லலாமா என்று தெரியவில்லை. எந்த ஒரு களத்திலும் எம்மோடு நேராக விவாதிப்பர்வர்களுடன் நாமும் விட்டுக்கொடுக்காமல் சுவாரசியமாகவும் வாதிடலாம், தவறுகளை சுட்டிக்காட்டலாம்.

ஆனால் ஒருவர் இன்னொருவர் கருத்தை ஆமோதிக்கும்போது, அவரை மற்ற கருத்துப்பரிமாற்றங்களில் எப்படி இருந்தார், இருப்பார் என்று எமது கணிப்புகளை தெரிவிப்பது, அந்த திரியின் பாதையில் இருந்து, பார்வையாளர்கள், பங்காளர்களை திசை திருப்பவதாகவும், சந்தர்ப்பத்தை பாவித்து இன்னொருவரை குறை கூறுவதாகவும் இருக்கும்.

பொதுவாக, எமக்கு யாருடனும் நேரடி பிரச்சனை பிரச்னை இருந்தாலே ஒழிய மற்ற விடயங்களை பார்த்தும் பார்க்காமலும் கடந்து போவதே நல்லது.

நமக்கு இடையான வயது இடை வெளி 15 க்கு கிட்ட வரும் என நினைக்கிறேன். நீங்கள் நிச்சயம் எனக்கு அறிவுரை கூறலாம். நானும் ஏற்றுக்கொள்வேன்.

திரி திசைமாறும் என்பதை ஏற்று கொள்கிறேன். சில சமயங்களில் சில இரெட்டை நிலைப்பாடுகளை அப்படியே போட்டுடைத்து விடுவது - தவிர்க்க கூடிய அசெளகரியம்தான்.

ஆனால் இப்படி போட்டுடைப்பது என் இயல்பிலேயே அமைந்த சுவாபம்.  நான் மேலே சொன்னது போல் “ நான் சும்மா இருந்தாலும், வாய் சும்மா இராது 🤣”.

உங்கள் அறிவுரையை கவனத்தில் கொள்கிறேன்🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பதில் இல்லை என்றால் வெறும் வாயை மெல்லுவதற்கு ஒரு சிகரெட்ட பத்த வைக்கலாம்?🤣

பற்ற வைத்த தீ ஒரு வருடமாக  பற்றி எரிவதில் எனக்கு பெரிய சந்தோசம். உங்களைப்போன்றோரின் அருமை பெருமை,திறமைகளை வெளிக்காட்டும் தளமாகவும் அமைந்ததையிட்டும் மகா சந்தோசம். :rolling_on_the_floor_laughing:

வாழ்க வளர்க :tatsch: :grinning_squinting_face:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பற்ற வைத்த தீ ஒரு வருடமாக  பற்றி எரிவதில் எனக்கு பெரிய சந்தோசம். உங்களைப்போன்றோரின் அருமை பெருமை,திறமைகளை வெளிக்காட்டும் தளமாகவும் அமைந்ததையிட்டும் மகா சந்தோசம். :rolling_on_the_floor_laughing:

வாழ்க வளர்க :tatsch: :grinning_squinting_face:

ஒரு வருடத்தில்தான் எத்தனை மாற்றம் இல்லையா அண்ணை?

உங்களிடத்தில் இலங்கை விடயத்தில், இந்தியா விடயத்தில்  ஏற்பட்ட நிலை மாற்றம் எனக்கு மகிழ்ச்சி அல்ல.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.