Jump to content

எதிர்கால போருக்காக 886 பில்லியன் டொலர்களை ஒதுக்கிய அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நமக்கு இடையான வயது இடை வெளி 15 க்கு கிட்ட வரும் என நினைக்கிறேன். நீங்கள் நிச்சயம் எனக்கு அறிவுரை கூறலாம். நானும் ஏற்றுக்கொள்வேன்.

திரி திசைமாறும் என்பதை ஏற்று கொள்கிறேன். சில சமயங்களில் சில இரெட்டை நிலைப்பாடுகளை அப்படியே போட்டுடைத்து விடுவது - தவிர்க்க கூடிய அசெளகரியம்தான்.

ஆனால் இப்படி போட்டுடைப்பது என் இயல்பிலேயே அமைந்த சுவாபம்.  நான் மேலே சொன்னது போல் “ நான் சும்மா இருந்தாலும், வாய் சும்மா இராது 🤣”.

உங்கள் அறிவுரையை கவனத்தில் கொள்கிறேன்🙏🏾.

அப்படியென்றால் நல்லதுகளை கிரகித்துக்கொள்கின்ற வயதுதான் Goshan. கவனத்தில் கொண்டமைக்கு நன்றி. எப்போதும் வாதிடவோ, நியாயம் கதைக்கவோ, நாம் வாழும் சமூகம் ஒரு நீதிமன்றம் இல்லை.ஒவ்வொருவரும் தாம் செய்வது சரி என்று நினைத்துதான் செய்கிறோம். சிலர் தாம் செய்தது சில பிழை என்பதை பின்பு உணர்ந்து திருத்திக்கொள்ளவாரக்ள். மற்றும் சிலர் திருந்தாமலேயே போய்சேர்ந்துவிடுவார்கள்.

4 hours ago, goshan_che said:

நிச்சயமாக,

உண்மையில் பிரித்தானியா தனது காலனித்துவத்தை விலக்கி கொண்டதில் அமெரிக்காவின் பங்கு மிகப்பெரியது.

2ம் உலக யுத்த முடிவில், 1ம் உலக யுத்தத்தை முடிவை போல் மீண்டும் காலனிய ஆட்சி முறையை தொடரலாம் என்பதே பிரித்தானியாவின் நப்பாசையக இருந்தது. ஆனால் மறைமுகமான அழுத்தம் மூலம் படிபடியாக பிரித்தானிய காலனிய வலையமைப்பை dismantle பண்ணி, பல நாடுகள் இன்று சுதந்திர நாடுகளாக இருக்கவும், ஆளுடன் ஆள் அடிபடுவதையே வரலாறாக கொண்ட ஐரோப்பியர் 2ம் உலக யுத்தத்தின் பின் அமைதியாக இருக்கவும் அமெரிக்காவே காரணம்.

எந்த ஒரு முதன்மை நாட்டின் தலைமையும் 100% சரியானதல்ல. அமெரிக்கா பல பிழைகளை விட்டு உள்ளது.

ஈராக்கின் 2ம் யுத்தம் ஒரு யுத்த குற்றமே.

ஆனாலும் அமெரிக்காவல் விளைந்த பல நல்லதும் உண்டு.

நிச்சயம் எழுதுங்கள்.

அமெரிக்க மக்களின் சுதந்திர வேட்கையையும், அந்த சுதந்திரத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பபட்ட, American Dream ஐ பற்றியும் தமிழில் அதிகம் யாரும் எழுதுவதில்லை.

எமது விடயத்தில் அமெரிக்கா எடுத்த மோசமான முடிவு என்ற ஒன்றை மட்டும் வைத்து - 200 வருட வரலாற்றை எடை போடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

அமெரிக்கர்களின் ஒற்றுமை மாறக்கூடாது என்பதுதான் எனது விருப்பும். ஆனால் MAGA பேர்வழிகள் அதை சிறுக, சிறுக துண்டாடி விடக்கூடும் என அஞ்சுகிறேன்.

கட்டாயம் எழுதுகிறேன் Goshan.

Edited by nilmini
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உங்களிடத்தில் இலங்கை விடயத்தில், இந்தியா விடயத்தில்  ஏற்பட்ட நிலை மாற்றம் எனக்கு மகிழ்ச்சி அல்ல.

அப்படி என்ன மாற்றத்தை கண்டு பிடித்தீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அப்படி என்ன மாற்றத்தை கண்டு பிடித்தீர்கள்? 

மேலே நில்மினி அக்கா சொன்னதன் படி இதை தொடரமல் விடுவது நல்லம் என நினைக்கிறென்.

இருந்தாலும் நீங்கள் கேட்டபடியால்.

சுருக்கமாக -

1. தனது பிராந்திய நலனுக்காக, தனக்கு கீழ்படியாத உக்ரேனை ரஸ்யா தாக்கியதும், கீழ்படியாத புலிகளை இந்தியா அழித்ததும் நியாயம்தான் என்ற உங்கள் அண்மைய மாற்றம்.

2. மேற்கையை வேறு எவரையும்மோ நம்பாமல் தமிழர் சிங்களவரோடு நேரடியாக பேசி முடிவுக்கு வரவேண்டும் என்ற உங்கள் அண்மைய மாற்றம்.

ஒரு வருடம் முதல் கூட இதற்கு 180 பாகை எதிர் நிலை எடுத்து எழுதியோரில் முதன்மையானவர் நீங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

1. தனது பிராந்திய நலனுக்காக, தனக்கு கீழ்படியாத உக்ரேனை ரஸ்யா தாக்கியதும், கீழ்படியாத புலிகளை இந்தியா அழித்ததும் நியாயம்தான் என்ற உங்கள் அண்மைய மாற்றம்.

நான் எழுதியது பிராந்திய அரசியலை மட்டும். புலிகளை அழித்தது  நியாயம் என நான் எங்கும் எழுதவில்லை. உங்கள் மேற்கத்திய புத்தியை என்னிடம் காட்டாதீர்கள். 😡

கோசான் கவனமாக கருத்தாடுங்கள். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

நான் எழுதியது பிராந்திய அரசியலை மட்டும். புலிகளை அழித்தது  நியாயம் என நான் எங்கும் எழுதவில்லை. உங்கள் மேற்கத்திய புத்தியை என்னிடம் காட்டாதீர்கள். 😡

கோசான் கவனமாக கருத்தாடுங்கள். 😡

நீங்கள் அப்படி எழுதியதாக நான் சொல்லவில்லை.

ஆனால் உங்கள் “பிராந்திய நலன்” லாஜிக்கை இந்தியாவுக்கு பிரயோகித்து பார்த்தால் - அதன் முடிவு மேற்கண்டவாறே அமையும்.

இதை நான் மட்டும் அல்ல, இன்னும் பலரும் உங்களுக்கு எடுத்து சொல்லி உள்ளார்கள். கருத்து களத்திலும், திண்ணையிலும்.

ஒன்றில் ரஸ்யா உக்ரேனுக்கு செய்வதும், இந்தியா புலிகளுக்கு செய்ததும் சரி. 

அல்லது இரண்டும் பிழை.

ஏனென்றால் இரண்டுமே அடங்க மறுத்து, தன் விதியை தானே எழுத விழைந்த இரு தேசிய இனங்களை அருகில் இருக்கும் பிராந்திய சக்தி அடக்கி ஒடுக்கியதே.

ஒரே வித்தியாசம் உக்ரேனுக்கு, ஏனைய பெரிய நாடுகள் உதவி இருக்கிறது. நமக்கு யாரும் இருக்கவில்லை. 

தயவு செய்து கோவப்படவேண்டாம் அண்ணை. 

நான் மேலே எழுதியதன் தர்க்க நியாயத்தை யோசித்துப்பாருங்கள்.

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.