Jump to content

​ புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣 ​


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2023 at 02:37, nilmini said:

இடியப்பத்தைக்கூட ஒவ்வொரு நாளும் சாப்பிட முடியாது. ஆனால் புட்டு ஒருநாளும் அலுக்காது. நான் இன்று கூப்பன் மா புட்டு சாப்பிட்டேன். பாரை மீன் குழம்புடன். கனடாவில் இருந்து ஆட்டக்காரி அரிசி மா பார்சலில் வர பிந்தி விட்டது.

 

19 hours ago, குமாரசாமி said:

சரியாச்சொன்னியள் தங்கச்சி! புட்டு விதம் விதமாய் தயாரிச்சு அலுக்காமல் சாப்பிடலாம்? :467:
அதுசரி ஆட்டக்காரி மா எப்பிடி?:rolling_on_the_floor_laughing:

Clicker - For all your needs  Others Archives - Santhai  ABIRAMY - AS

நில்மினி,   ஆட்டக்காறி  மா... என்று குறிப்பிட்ட  போது,
"ஆட்டா  மா"வைத்ததான், எழுத்துப் பிழை விட்டு "ஆட்டக்காறி மா" என்று எழுதிவிட்டா என நினைத்தேன்.
ஆனால்... இணையத்தில் தேடிய போது அப்படி ஓரு வகை அரிசி இருப்பதாக அறிந்தேன்.
இது தமிழக அரிசியா, நம்ம ஊர் அரிசியா என்று தெரியவில்லை.
நான் ஊரில் இருக்கும் போது இதனைப்பற்றி கேள்விப் படவில்லை.
புதிதாக கண்டு பிடித்த, அரிசி ரகம் போலுள்ளது.

  @வல்வை சகாறா மேடைக்கு வரவும். ஆட்டக்காறி  மாவா... ஆட்டக்காரி மாவா என்பதை தெளிவு படுத்தவும்.  😂

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமி

புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣 குழல் புட்டின் மகிமை தெரியுமா சின்னத்தங்கமே... நீற்று பெட்டி புட்டின் பக்குவம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... கோதுமை மா புட்டின் சுவை தெரியுமா ஞானத்

நிலாமதி

குரக்கன் பு ட்டையும் மீன் புட்டையும் கீரைப்பிட்டும்  காணவில்லை .  குரக்கன் பிட்டு சுடச் சுட சீனி (சக்கரை) தேங்காய் சேர்த்து குழைத்து   .சாப்பிட சொர்க்கம் தெரியும் ச்சா சொல்லிவேலையில்லை.  மீன்பிடடுக்கு

Kandiah57

சுவையான புட்டினை   அவிப்பதற்க்க.....சமைப்பதற்க்கு. நிறைய முன்வேலைகள். செய்ய வேண்டும்    1...மா. நன்றாக வட்ட வேண்டும்  2...வட்டிய. மா. அரிக்க   வேண்டும்  3. ...நன்கு கொதித்த நீரில்   குழ

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

கோதுமையில் செய்வதென்றால் எல்லா இடமும் அவித்துத்தான்.

இல்லையே. வறுத்தும் செய்வார்களே.

மேல கந்தையர் செய்முறை போட்டிருக்கிறார். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

  @வல்வை சகாறா மேடைக்கு வரவும். ஆட்டக்காறி  மாவா... ஆட்டக்காரி மாவா என்பதை தெளிவு படுத்தவும்.  😂

நானும் முதல் தரம் கேள்விப்படும்போது அப்படிதான் யோசித்தேன் சிறி. முந்திகேள்விப்படாத பெயர். ஆனால் நல்ல தரமான மா. 

https://www.tamilkadai.ca/addakari-roasted-red-raw-rice-flour-8Lb-KalappadamRoasted-Red-Raw-Rice-Flour-8-Lb-Attakari

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, nilmini said:

நானும் முதல் தரம் கேள்விப்படும்போது அப்படிதான் யோசித்தேன் சிறி. முந்திகேள்விப்படாத பெயர். ஆனால் நல்ல தரமான மா. 

https://www.tamilkadai.ca/addakari-roasted-red-raw-rice-flour-8Lb-KalappadamRoasted-Red-Raw-Rice-Flour-8-Lb-Attakari

நில்மினி,  ஜேர்மனியில் உள்ள தமிழ்க் கடைகளில் இந்த மா இருக்குதோ தெரியவில்லை

அடுத்தமுறை போகும் போது… விசாரித்து பார்க்க வேண்டும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நில்மினி,  ஜேர்மனியில் உள்ள தமிழ்க் கடைகளில் இந்த மா இருக்குதோ தெரியவில்லை

அடுத்தமுறை போகும் போது… விசாரித்து பார்க்க வேண்டும். 

அவர்களிடம் இல்லாட்டி ஒருமுறை முயன்று பார்க்கும்படி கேட்கலாம் சிறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nilmini said:

அவர்களிடம் இல்லாட்டி ஒருமுறை முயன்று பார்க்கும்படி கேட்கலாம் சிறி.

நில்மினி… இங்கத்தையான் கடைக்காரர் சரியான சோம்பேறிகள். 😁

நான் பத்து வருசமாய்… தாமரைக் கிழங்கு, கோகிலா தண்டு போன்ற மரக்கறிகளை எடுத்து தர சொல்ல…
ஓம் அண்ணை… அடுத்த முறை வரேக்கை எல்லாம் இருக்கும் எண்டு சொல்லுவாங்கள். 😂
ஆனால்… அறணை மாதிரி, மறந்து போவாங்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2023 at 09:47, vasee said:

புட்டின் என்பதற்கு பதில் பிட்டு என்று பதிந்திருந்தால் இந்த பக்கம் வந்திருக்க மாட்டேன்.

புட்டின் அருமை தெரிந்தவர்கள் நிச்சயம் வருவார்கள் :beaming_face_with_smiling_eyes:  :408:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நில்மினி,  ஜேர்மனியில் உள்ள தமிழ்க் கடைகளில் இந்த மா இருக்குதோ தெரியவில்லை

அடுத்தமுறை போகும் போது… விசாரித்து பார்க்க வேண்டும். 

ஆட்டக்காரி என்பது புதிய ரகமல்ல. அந்த நெற்பயிர் வீசும் காத்துக்கு நெளிந்து ஆடுவது, ஒரு தேர்ந்த ஆட்டக்காரி போல இருந்ததால், அப்படி பெயர் வந்து என்று ஒரு விவசாயி சொன்னார். IR8 போன்ற புரியாத பெயர்களுக்கு,இது பரவாயில்லை என்றார். 

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2023 at 02:37, nilmini said:

ஆட்டக்காரி

 என்ரை ஊரிலை ஆட்டக்காரி எண்டு சொன்னால் கதை கந்தல் :beaming_face_with_smiling_eyes:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

ஆட்டக்காரி என்பது புதிய ரகமல்ல. அந்த நெற்பயிர் வீசும் காத்துக்கு நெளிந்து ஆடுவது, ஒரு தேர்ந்த ஆட்டக்காரி போல இருந்ததால், அப்படி பெயர் வந்து என்று ஒரு விவசாயி சொன்னார். IR8 போன்ற புரியாத பெயர்களுக்கு,இது பரவாயில்லை என்றார். 

 

தகவலுக்கு நன்றி நாதம்ஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

புட்டின் அருமை தெரிந்தவர்கள் நிச்சயம் வருவார்கள் :beaming_face_with_smiling_eyes:  :408:

குமாரசாமி அண்ணே…. “பெற்றோல் 🔥 கானுடன்” திரியுறவரும் வந்து போயிருக்கிறார். 😂
அவரும் புட்டின்  அருமை தெரிந்தவரா. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

...இந்த திரியை பார்த்து @ராசவன்னியன் சார் டென்சன் ஆக போறார் 🤣

இந்த உலகத்திலேயே பிடிக்காத உணவு எதுவெனில், இந்த "புட்டு" or "பிட்டு" தான். 🤬

கண்ணிலே கண்டால், காத தூரம் ஓடி விடுவேன்..! 😷

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ராசவன்னியன் said:

இந்த உலகத்திலேயே பிடிக்காத உணவு எதுவெனில், இந்த "புட்டு" or "பிட்டு" தான். 🤬

கண்ணிலே கண்டால், காத தூரம் ஓடி விடுவேன்..! 😷

 

நானும் தமிழ்நாட்டில், கேரளாவில் பிட்டு துன்னு இருக்கிறேன் வன்னியர்.... காததூரம் ஓடித்தான் இருக்கிறேன்.

நீங்கள் யாழ்ப்பாணம் வந்தால், தேங்காய் பூ சேர்த்த மூங்கில் குழலில் அவித்த பிட்டும், இடிச்ச சம்பலும், முட்டை பொரியலும் சாப்பிட்டு பார்த்தால், அடிமையாகி விடுவீர்கள்.

ஊருக்கு, ஊரு ஒரு விசேட சாப்பாடு.... யாழ்ப்பாணத்தில் இது ஒரு ஸ்பெஷல். 👍

இன்னோரு விதமாக, குழல் பிட்டு முக்கனிகளுடன் சாப்பிட அருமையோ, அருமை.

அட, நீங்கள் மதுரைக்காரர் தானே. நம்ம சொக்கரே, பிட்டடித்து, கிரங்கிப் போய், பெண்டாண்டி, பிள்ளைகளை மறந்து, வைகை ஆத்தம் கரையில் மரத்தடியில் படுத்து தூங்கினாரே....

Multi grain latered puttu from the bamboo funnel - Picture of Ente Keralam,  Chennai (Madras) - Tripadvisor

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ராசவன்னியன் said:

இந்த உலகத்திலேயே பிடிக்காத உணவு எதுவெனில், இந்த "புட்டு" or "பிட்டு" தான். 🤬

கண்ணிலே கண்டால், காத தூரம் ஓடி விடுவேன்..! 😷

 

கேரளா புட்டும் கடலைகறியையும் சாப்பிட்டால் ஓட்டம் பிடிக்க வேண்டியதுதான். அது செய்யும் முறை வித்தியாசமானது. ஒருமுறை சாப்பிட்டதோடு சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இல்லையே. வறுத்தும் செய்வார்களே.

மேல கந்தையர் செய்முறை போட்டிருக்கிறார். 😁

ஓம் வறுத்து வைத்தால் நல்ல ஒரு வாசம் வரும். கலரும் மண்ணிறமாக இருக்கும். கோதுமை மாவில் பார்க்க தாய்லாந்து, வியட்நாம் சீனா கடைகளில் விற்கும் மாவை 2 நிமிடம் வறுத்து எமது அரிசிமாவுடன் கலந்து அவித்தால் புட்டு பஞ்சு போல வரும். அவர்கள் dumplings செய்ய பாவிக்கிறார்கள். ஊரில் இருந்து வரும் சில மா க்கள் சரியில்லாதபோது இதை கலந்தால் நல்ல வாசமாகவும் இருக்கும்.

5 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி… இங்கத்தையான் கடைக்காரர் சரியான சோம்பேறிகள். 😁

நான் பத்து வருசமாய்… தாமரைக் கிழங்கு, கோகிலா தண்டு போன்ற மரக்கறிகளை எடுத்து தர சொல்ல…
ஓம் அண்ணை… அடுத்த முறை வரேக்கை எல்லாம் இருக்கும் எண்டு சொல்லுவாங்கள். 😂
ஆனால்… அறணை மாதிரி, மறந்து போவாங்கள். 🤣

சரியான அறணை வியாபாரிகள் போல இருக்கு சிறி 😁. தாமரைக் கிழங்கு, கோகிலா தண்டு இந்தியன் கடைகளை frozen section இல் இருக்குமே. Oriental ( Thailand, Vietnaam, China, Japan)  ஆக்கலும் விட்ப்பார்கள்

3 hours ago, Nathamuni said:

ஆட்டக்காரி என்பது புதிய ரகமல்ல. அந்த நெற்பயிர் வீசும் காத்துக்கு நெளிந்து ஆடுவது, ஒரு தேர்ந்த ஆட்டக்காரி போல இருந்ததால், அப்படி பெயர் வந்து என்று ஒரு விவசாயி சொன்னார். IR8 போன்ற புரியாத பெயர்களுக்கு,இது பரவாயில்லை என்றார். 

 

தகவலுக்கு நன்றி நாதமுனி.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

நானும் தமிழ்நாட்டில், கேரளாவில் பிட்டு துன்னு இருக்கிறேன் வன்னியர்.... காததூரம் ஓடித்தான் இருக்கிறேன்.

நீங்கள் யாழ்ப்பாணம் வந்தால், தேங்காய் பூ சேர்த்த மூங்கில் குழலில் அவித்த பிட்டும், இடிச்ச சம்பலும், முட்டை பொரியலும் சாப்பிட்டு பார்த்தால், அடிமையாகி விடுவீர்கள்.

ஊருக்கு, ஊரு ஒரு விசேட சாப்பாடு.... யாழ்ப்பாணத்தில் இது ஒரு ஸ்பெஷல். 👍

இன்னோரு விதமாக, குழல் பிட்டு முக்கனிகளுடன் சாப்பிட அருமையோ, அருமை.

அட, நீங்கள் மதுரைக்காரர் தானே. நம்ம சொக்கரே, பிட்டடித்து, கிரங்கிப் போய், பெண்டாண்டி, பிள்ளைகளை மறந்து, வைகை ஆத்தம் கரையில் மரத்தடியில் படுத்து தூங்கினாரே....

Multi grain latered puttu from the bamboo funnel - Picture of Ente Keralam,  Chennai (Madras) - Tripadvisor

 

6 minutes ago, nilmini said:

கேரளா புட்டும் கடலைகறியையும் சாப்பிட்டால் ஓட்டம் பிடிக்க வேண்டியதுதான். அது செய்யும் முறை வித்தியாசமானது. ஒருமுறை சாப்பிட்டதோடு சரி.

நீங்கள் இருவரும் சொல்வது உண்மைதான். இங்கு மத்திய கிழக்கு நாடு வந்தவுடன் எந்த மல்லு கடைக்கு போனாலும் இந்த பிட்டு தான். அதுவும் வாழைப்பழம், அப்பளம் போன்றவற்றை பிட்டுவோடு பிசைந்து அடிப்பார்கள்.. ‘வ்வ்வேவே’ என வாந்திதான் வரும். 

ஆனால் ஊரில் கிராமத்தில் எப்பொழுதாவது அம்மா பச்சரிசி மாவை இடித்து குழைத்து அவித்து அதனுடன்  தேங்காய் துருவல் மற்றும் சீனியை கலந்து அம்மா செய்து கொடுப்பார்கள். அம்மா செய்த அவ்வகை புட்டு பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 என்ரை ஊரிலை ஆட்டக்காரி எண்டு சொன்னால் கதை கந்தல் :beaming_face_with_smiling_eyes:

சண்டை பிடிக்கும்போதும், மற்றவர்களை குறை சொல்லும்போதும் பாவிக்கும் சொல்😂இப்ப நினைத்துப்பார்த்தால் சிரிப்பாக இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

ஓம் வறுத்து வைத்தால் நல்ல ஒரு வாசம் வரும். கலரும் மண்ணிறமாக இருக்கும். கோதுமை மாவில் பார்க்க தாய்லாந்து, வியட்நாம் சீனா கடைகளில் விற்கும் மாவை 2 நிமிடம் வறுத்து எமது அரிசிமாவுடன் கலந்து அவித்தால் புட்டு பஞ்சு போல வரும். அவர்கள் dumplings செய்ய பாவிக்கிறார்கள். ஊரில் இருந்து வரும் சில மா க்கள் சரியில்லாதபோது இதை கலந்தால் நல்ல வாசமாகவும் இருக்கும்.

மா, மிளகாய்த்தூள் போன்றவைகளை நமது பிராண்ட் சொந்தக்காரர்கள், தமிழக, ஆந்திர, கேரள வியாபாரிகளுக்கு சப் - காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். அதனால் தரம் நன்றாக இராது. முக்கியமாக, மிளகாய், அரசி, கழுவி, காயவைத்து அரைத்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது.

London Times பத்திரிக்கையில், ஆந்திர மாநிலத்தில் கடல் போல பரவி காய வைத்திருக்கும் மிளகாய் படம் போட்டிருந்தார்கள். மிளகாய் செடியை புடுங்கி, அதிலிருக்கும், மிளகாயை அப்படியே பரவி விடப்பட்ட அதே நிலத்தில் போட்டு காய விடுகிறார்கள். அதனை கழுவி சுத்தம் செய்வார்கள் என்று தோன்றவில்லை. வாங்குவோர் தான் செய்ய வேண்டும். வாங்குபவர்கள் இந்த சப் - காண்ட்ராக்ட் காரர்கள் என்றால், காசை மிச்சம் பிடிக்கத்தானே செய்வார்கள்.

இப்போது, ஊரில் இருந்து, நேரடியாக உறவினர்களுக்கு சொல்லி, dhl மூலம் எடுக்கிறார்கள். காசு அவ்வளவு இல்லை. காரணம். 10kg வரை ஒரு நிர்ணய கட்டணம் என்று வைத்துள்ளார்கள்.

ஒருமுறை முயன்று பாருங்கள்.

photo_images5-1000x1000.jpg

Edited by Nathamuni
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nilmini said:

நானும் முதல் தரம் கேள்விப்படும்போது அப்படிதான் யோசித்தேன் சிறி. முந்திகேள்விப்படாத பெயர். ஆனால் நல்ல தரமான மா. 

https://www.tamilkadai.ca/addakari-roasted-red-raw-rice-flour-8Lb-KalappadamRoasted-Red-Raw-Rice-Flour-8-Lb-Attakari

இந்த மா ஸ்காபாரோவில்  எங்கு எடுக்கலாம்.? நில்மினி உங்களுக்கு எங்கு இருந்து தருவிக்கிறார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணே…. “பெற்றோல் 🔥 கானுடன்” திரியுறவரும் வந்து போயிருக்கிறார். 😂
அவரும் புட்டின்  அருமை தெரிந்தவரா. 🤣

சிறித்தம்பி!  நல்ல வடிவாய் பாருங்கோ அவர் மண்ணெண்ணை தகரத்தோட எல்லோ திரியிறவர்?:rolling_on_the_floor_laughing:

என்ன விசர்க்கதை கதைக்கிறியள் ? புட்டின்  அருமை தெரியாதவர் யாரிருக்கிறார்கள்? :face_with_tears_of_joy:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:
On 20/3/2023 at 04:56, குமாரசாமி said:

சரியாச்சொன்னியள் தங்கச்சி! புட்டு விதம் விதமாய் தயாரிச்சு அலுக்காமல் சாப்பிடலாம்? :467:
அதுசரி ஆட்டக்காரி மா எப்பிடி?:rolling_on_the_floor_laughing:

உண்மையிலேயே நல்ல மா. பொய்க்கு கலர் எல்லாம் போடாம நல்ல வாசமும் கூட

அது தான் பெயரைப் பார்த்தாலே அதிருதில்ல.

6 hours ago, தமிழ் சிறி said:

நான் பத்து வருசமாய்… தாமரைக் கிழங்கு, கோகிலா தண்டு போன்ற மரக்கறிகளை எடுத்து தர சொல்ல

சீனர்களின் கடைகளில் தாமரைக்கிழங்கு கிடைக்குமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிலாமதி said:

இந்த மா ஸ்காபாரோவில்  எங்கு எடுக்கலாம்.? நில்மினி உங்களுக்கு எங்கு இருந்து தருவிக்கிறார்கள்.  

https://www.tamilkadai.ca/ இந்தக்கடையில்தான் ஓடர் பண்ணி எடுப்பிக்கிறானான் நிலாமதி. டொரோண்டோ டெலிவரி என்றால் தூரத்தை பொறுத்து இலவசம் அல்லது மிகவும் குறைந்த ஒரு கட்டணம். இலங்கையில் இருந்து வரும் பொருட்கள் என்று வரும் முக்காவாசி பொருள்களும் இந்திய, தாய்லாந்து, வியட்நாம், கரிபியன் போன்ற நாடுகளில் இருந்துதான் வருகுது. விலை, தரம் ருசி சரியாக இருந்தால் எங்கிருந்து வந்தால் என்ன என்று அவ்வளவு மினக்கடவில்லை. 

இரண்டு வருடுடங்களுக்கு முன்புவரை சென்னையில் தான் பொருட்கள் வேண்டி கப்பலில் மாளிகாவத்தைக்கு அனுப்பி அங்கு ரம்பை போன்றவற்றை போட்டு மிளகாய் தூள் செய்து 30 நாட்களுக்குள் திரும்ப சென்னை கொண்டுவந்து பக் பண்ணி புலம் பெயர் தேசங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். 30 நாட்கள் என்றால் கட்டின வரியை கொழும்பு துறைமுகத்தில் திரும்ப பெறலாமாம். இப்பவும் தொடருதா என்று தெரியவில்லை. யாழில் இருந்து நியாயமான பொருள்கள் வருக்குதுதான். ஆனால் ஒப்பீட்டளவில் அது மிகவும் குறைந்த விகிதம்தான்.

On 19/3/2023 at 22:27, தமிழ் சிறி said:

நான்…. ரஷ்ய அதிபரின், அருமை பெருமைகளைப் பற்றி சொல்லப் போகிறீர்களாக்கும் என நினைத்து விட்டேன். 😂
 

நானும் அப்படி நினைத்து புட்டினை பற்றி வாசித்து எனக்கென்ன பிரயோசனம் (நான் ரசியாய் போரை பற்றி வாசிப்பதில்லை. எனது அனுபவத்தில் ரசியர்களோ, உக்கிரேனியர்களோ மிகவும் பொல்லாதவர்கள். அதனால் இந்த போர் செய்திகளில் நாட்டம் இல்லை. முந்தி பிரெஸ்னேர்வ் இருந்த காலத்தில் விருப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2023 at 22:44, ஈழப்பிரியன் said:

இதென்ன கோதாரி கண்ணும் தெரியுதில்லை.

புட்டின் பெருமையா பூட்டினின் பெருமையா?

நானும் கண்ணாடியை மாட்டிக்கொண்டு கு சா அண்ணாவுக்கு ரசிய புட்டினில் ஏன் இவ்வளவு அக்கறை என்று பார்த்தேன் 🤣

On 20/3/2023 at 05:34, குமாரசாமி said:

 புட்டு மருவி புட்டினாக மாறியது என்பது இங்கு எத்தனை பேருக்குத்தெரியும்? :379:

அப்படியா புட்டு என்ற பெயர் வந்தது😂

Edited by nilmini
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

சரியான அறணை வியாபாரிகள் போல இருக்கு சிறி 😁. தாமரைக் கிழங்கு, கோகிலா தண்டு இந்தியன் கடைகளை frozen section இல் இருக்குமே. Oriental ( Thailand, Vietnaam, China, Japan)  ஆக்கலும் விட்ப்பார்கள்

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

சீனர்களின் கடைகளில் தாமரைக்கிழங்கு கிடைக்குமே.

Aapkidukan Dried Lotus Stems / Kamal Dandi / Kakdi (Thamarai Thandu), 100  GM : Amazon.in: Grocery & Gourmet Foods

சீனா,  தாய்லாந்து கடைகளில் இருப்பவை பெரிய மொத்த தாமரை கிழங்காக இருக்கும்.
சுவையும் குறைவு. 
நம்மூர் கிழங்குகள் ஆக மெல்லியது நல்ல நீளமாக இருக்கும்.
சுவையோ சுவை. அந்த மாதிரி இருக்கும். வேறை லெவல். 😂

கோகிலா தண்டை அந்தக் கடைகளில் நான் கவனிக்கவில்லை.
அடுத்தமுறை நிச்சயம்  கேட்டுப் பார்க்க வேண்டும். அதன் ஆங்கிலப் பெயர் என்ன?

மற்றும்படி...  இங்கிலாந்துக்கு  நண்பர்கள், உறவினர்கள்  யாரும் போய் வரும் போது..
சொல்லி விட்டால் வாங்கிக் கொண்டு வந்து தருவார்கள்.

ஒரு முறை...  @விசுகு பிரான்சில் இருந்து தாமரை கிழங்கு கொண்டு வந்து தந்தவர். 🙂

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.