Jump to content

பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து ஏமாந்த முதியவர் உயிர் மாய்ப்பு - யாழில் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து ஏமாந்த முதியவர் உயிர் மாய்ப்பு - யாழில் சம்பவம்

Published By: T. SARANYA

20 MAR, 2023 | 03:27 PM
image

மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு கொடுத்து ஏமாந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். 

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு , வெளிநாட்டில் உள்ள மகன் கட்டம் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தினை வழங்கி , யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி வீடு கட்டுமாறு கூறியுள்ளார். 

மகனின் பணத்தினை பெற்றவர் காணி வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் , எதிர்பார்த்த காணி கிடைக்காமையால் , காணி வாங்குவதனை பிற்போட்டுள்ளார். 

அந்நேரம் அவருக்கு அறிமுகமான பெண்ணொருவர் தனது தேவைக்கு என முதியவரிடம் இருந்து பணத்தினை பெற்றுள்ளார். முதியவரும் நம்பிக்கை அடிப்படையில், மகனுக்கு தெரியாமல் பணத்தினை வழங்கியுள்ளார். 

பணத்தினை பெற்றுக்கொண்ட பெண் , பணத்தினை திருப்பி கொடுக்காதமையால் , முதியவர் ஏமாந்த நிலையில் , மகனும் காணியை வாங்குமாறு வற்புறுத்தி வந்த நிலையில் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான முதியவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். 

https://www.virakesari.lk/article/150978

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு தமிழ் சனத்துக்கு தற்கொலை பண்ணுவது அல்வா சாப்பிடுவது போல் போய் விட்டது .

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • இலங்கையில் ஒவ்வொரு நாலு மணித்தியாலத்துக்கும் ஒரு தற்கொலை சாவு இடம் பெறுகின்றது!!
  • 2022 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 2,833 ஆண்களும் 574 பெண்களும் தற்கொலை செய்துள்ளார்கள். 
  • சொற்ப நொடிகளில் எடுக்கப்படும் அந்த முடிவுகளினாலேயே தற்கொலைகள் நடைபெறுகின்றன.
  • அதிலும் குறிப்பாக 18 விதமான இறப்புக்கள் கொடிய கிருமி நாசினிகளை அருந்துவதன் மூலம் ஏற்படுகின்றது.
  • பொருளாதார சிக்கல்கள்; காதல் தோல்விகள்;  மதுவுக்கு அடிமையாதல்; குடும்ப தகராறுகள்; இப்படி பல காரணங்களால் தற்கொலைகள் செய்யப்படுகின்றன. 
  • இந்த தற்கொலை முயற்சிகள் ஒன்றுக்கு 15 என்ற விகிதாசாரத்தில் இருக்கின்றது. (1:15)

இது பற்றிய பாரிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

வடகிழக்கு தமிழ் சனத்துக்கு தற்கொலை பண்ணுவது அல்வா சாப்பிடுவது போல் போய் விட்டது .

பிரச்சனையை எதிர்கொள்ள, கையாளத்தெரியாமை, தைரியமின்மை.  உறவுகளுக்கு தெரியாத கொடுக்கல் வாங்கல், தனிமை, அடுக்கிக்கொண்டே போகலாம். நம்பிக்கையில் கொடுத்திருக்கிறார் ஆதாரமில்லை, உதவுவதற்கு யாருமில்லை. அவர்களது மனநிலை, ஆற்றுப்படுத்த யாருக்கும் நேரமின்மை ஒரு நொடியில் எடுக்கும் முடிவு இப்படியான மரணங்கள் ஏற்பட காரணிகளாய் அமைந்து விடுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு நாமே ஒரு வட்டத்தை வரைந்து அதற்குள் வாழ்வதினால் ஏற்படும் விளைவு

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.