Jump to content

புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2


Recommended Posts

முன்குறிப்பு
பகுதி 1 இங்கே

***
 

மீள்குடியேற்றம்
நாம் ஏதோகாரணங்களுக்காகப் புலம்பெயர்ந்து விட்டாலும் எமது சரியான நோக்கம் அல்லது இலக்கு எதுவென்று தெரியாமல் வாழ்கிறோமா என்று அடிக்கடி யோசிப்பதுண்டு. வெளிநாட்டில் எனது குடும்பத்தை உருவாக்கியபோது அது தனது அடுத்த சந்ததியுடன் தமிழர் என்ற ஆலமரத்தின் விழுதுகளிலிருந்து பிரிந்து போகப்போவதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. தமிழன் என்ற பேருணர்வு என்னுடன் முற்றுப் பெறுகிறது. மேற்கூறிய நிலையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்தவோ எதிர்பார்க்கவோ முடியாது. 

வேறு என்ன செய்யலாம் ? அங்கு சென்று குடியேறுவதன் மூலம் எமது பணம் அனுபவம் ஆகியவற்றைப் பயனுள்ள முறையில் அங்கே வாழ்ந்தபடியே பயன்படுத்தலாம். அண்மைய நாட்களாக பல திரிகளிலும் இது பற்றி மேலோட்டமாகப் பேசப்படுவதுதான். அங்கு வாழலாம் வாழ முடியாது என்பது ஒவ்வொருவரினது தனிப்பட்ட முடிவு. இதில் சரி பிழை என பிரிவினை பேச வேண்டாம். எனக்கு இது அனுகூலமாக இருப்பதால் எனது பார்வையில் எனது  நிலையிலிருந்து இதன் சாத்தியங்களை விபரிக்கிறேன்.  
எல்லோராலும் மீளக் குடியேற முடியாது என்பதும் அதன் காரணங்களும் புரியும். ஒருவேளை தனிநாடு கிடைத்திருந்தாலும் எம்மில் பெரும்பான்மையானவர்கள் எமது நாட்டிற்குத் திரும்பியிருக்க மாட்டார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து மாற்று வழிகளுக்கான பதில்களை நானே தேட முயல்கிறேன்.

ஓய்வூதியத்தில் வெளிநாட்டு வாழ்க்கை எப்படி உள்ளது என்பது பற்றிய எனது அவதானிப்புதான் மீள் குடியேற்றத்துக்கான முதலவது காரணம். என்னைச் சுற்றியுள்ள வயதானவர்களின் அன்றாட வாழ்க்கை இப்படி உள்ளது .  

  • சமையல், வீட்டு வேலைகள
  • பேரப்பிள்ளையைப் பராமரித்தல்
  • உலகம் முழுவதுமுள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவது
  • பெரும் பகுதி தொலைக்காட்சிக்கு முன்னால்

இத்தனையும் நான்கு சுவருக்குள்ளேயே நடக்கும். வீட்டை விட்டு வெளியே வருவது மிகக் குறைவு. ஆனாலும் தொலைபேசி உரையாடல்களின்போது இலங்கையில் வாழ்ந்த ஏக்கம் அடிக்கடி அசைபோடப்படும்.

சிலர் விடுமுறைக்குப் போவதுபோல் அடிக்கடி இலங்கை சென்றாலும் ஆகக் கூடியது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் திரும்பி விடுவார்கள். ஏனென்றால் மேலே சொல்லப்பட்டதுதான் அவர்களது வாழ்க்கை முறையாக மாறி விட்டது. இதே வட்டத்துக்குள் நான் அடிமையாக விரும்பவில்லை.  
நான் வாழ்வதற்கு வாழ்க்கை உள்ளது. அதை அனுபவித்து வாழ விரும்புகிறேன்.

இதற்காகச் சில தடைகளைத் தாண்டி வர வேண்டும்.

 

தடைகள்

  1. துணை
    வாழ்க்கைத் துணையின் அனுகூலம் இல்லாமல் முதலாவது அடியை எடுத்து வைக்க முடியாது. இது எனது தனிப்பட்ட விடயமாதலால் விவாதத்திலிருந்து கடந்து செல்கிறேன்.
     
  2. உறவுகள்
    நாம் பிரதானமாகச் சொல்லும் காரணம், பிள்ளைகள் பேரப்பிள்ளைகளைப் பிரிந்து வாழ முடியாது. நியாயமானது.
    ஆனால் நாம் இலங்கையிலிருந்து இங்கு வரும்போது எமது தாய் தந்தை மனைவி பிள்ளைகளைப் பாதுகாப்பற்ற சூழலில் விட்டுவிட்டு வந்துள்ளோம். இப்போது அவர்களைப் பாதுகாப்பான சூழலில் அல்லவா இருக்கவிட்டுத்தான் போகப் போகிறோம். அவசியப்படும்போது திரும்பி வந்து சில நாட்கள் அவர்களுடன் இருந்து செல்லலாம். அதேபோல் அவர்களும் அடிக்கடி இலங்கை வரலாம். பிரிவு என்பது நீண்டது கிடையாது. எப்படியோ பிள்ளைகள் திருமணம் செய்தவுடன் பிரிந்துதான் வாழப் போகிறார்கள். எனது மகளிடம், உன்னைச் சின்ன வயதிலிருந்து பாட்டி தாத்தா பராமரித்ததுபோல் என்னை அதிகம எதிர்பார்க்க வேண்டாம் என்று அடிக்கடி சொல்வேன். பார்க்கலாம்.
     
  3. மருத்துவம்
    இது ஒரு பெரிய பிரச்சனை. நோய் வராமல் ஆரோக்கியத்தைப் பேணுவதே சிறந்த வழி. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நல்ல நித்திரை அவசியமாகும். நீண்டகால நோய்களை வருடத்துக்கு ஓரிரு தடவை வெளிநாட்டுக்கு வரும்போது கவனித்துக் கொள்ள வேண்டும். 
     
  4. பாதுகாப்பு
    அங்குள்ள பாதுகாப்பற்ற காரணங்களையும் தவிர்ப்பதற்கான வழிகளை அடைப்புக் குறிக்குள்ளும் தருகிறேன்
     - இராணுவ அச்சுறுத்தல் (அரசியல் - குழுக்கள் - இனவாதம போன்ற வில்லங்கங்களில் நுளையக் கூடாது)
     - உள்ளூர் சண்டித்தனம் (உள்ளூர் பிரச்சனைக்குள் தலையிடக் கூடாது கூடாது. முடிந்தவரை அயலவர்கள் எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டும்)
     - கொள்ளை (நவீன தொழில்நுட்பம் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்)
     - பாம்பு பூச்சி நுளம்பு (பாதுகாப்பு வழிகள் உள்ளன)
      
  5. வாழ்க்கை வசதி
    குடியேறுவதற்கு முன் ஆடம்பரம் இல்லாமல் அதற்குரிய வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும். இப்போது மேலத்தேய வீடுகளைப் போன்ற வசதிகளை அங்கே செய்து கொள்ளலாம்.
     
  6. வெப்ப காலநிலை
    உலக வெப்பமாதலில் இலங்கையிலும் கோடை காலத்தில் வெளியே போக முடியாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளது. இதற்கும் முன்னேற்பாடான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
     
  7. சுதந்திரம்
     உண்மையில் வெளிநாடு வந்தபின்தான் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரிந்தது. நான் மேலே குறிப்பிட்டது போல் வெளிநாட்டில் ஓய்வூதியத்தில் குறுகிய வாழ்க்கைமுறைக்குள் அடிமைப்பட வேண்டாம் என்று கருதுவதால் இதுவும் பெரிய பிரச்சனையாக இராது என்றே கருதுகிறேன்.

 

நோக்கம்
ஓய்வுபெற்ற பின் இங்கு இருக்கக் கூடாது என்று சில வருடங்களுக்கு முன்னரே யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது இருந்த மனநிலை வேறு. முதல் பகுதியில் சொன்னதுபோல் பிரான்ஸ் மட்டுமே எனது நாடு என்றிருந்தேன். Guadeloupe, Martinique போன்ற கரிபியன் தீவு அல்லது ரெயுனியன் தீவு போன்ற இடம் ஒன்றில் குடியேறலாமா என்றும் யோசித்திருந்தேன். மகிழ்ச்சியன வாழ்க்கைதான் எனது நோக்கம் என்றால் அதற்கு ஒரு அர்த்தமும் இருக்க வேண்டாமா என்ற சிந்தனையில் காலப்போக்கில் இலங்கையில் குடியேறுவதையே விரும்புகிறேன். 
சில நாட்களுக்கு முன் அங்கு சென்றிருந்தபோது வெளிநாட்டிலிருந்துவிட்டு நிரந்தரமாக மீழ் குடியேறிய இருவரைச் சந்தித்தேன். எனது ஆவல் மேலும் அதிகமானது. என்னதான் நாம் இங்கிருந்து தமிழ்த் தேசியம் பேசினாலும் அங்கிருப்போருக்கு சிங்கள அரசின் கீழிருக்கும் இலங்கைதன் அவர்களது நாடு. எமது இனம் அழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் முயற்சிப்போம். அங்கு அவர்களோடு வாழ்வதன் மூலம் என்னாலான ஒரு சிறு முன்னேற்றத்தை ஒரு கிரமத்த்திலாவது ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இயற்கையைப் பாதுகாக்கும் வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டப் போகிறேன். 

இது எனது பூமி என்ற பரந்த சிந்தனையில் பார்த்தால் எல்லாமே எனது மண்தான். அந்த மண்ணைப் பாதுகாப்பது எனது கடமை.  நான் இத்தனை காலமும் வாழ்வதற்காக பூமியிலிருந்து எடுத்ததை மறுபடி பூமியில் வைக்கப் போகிறேன்.

இறுதியாக, நான் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் கற்பனைக் கோட்டை பற்றிய சில குறிப்புகளோடு விடை பெறுகிறேன்.
எனது வீடு யாழிலோ அல்லது வேறு பெரு நகரிலோ இல்லமல் நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக பிந்தங்கிய கிராமம் ஒன்றில் இருக்கும். சீமெந்து பாவிக்காமல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்படும் வீட்டில் இயற்கையான முறையில் (மிகக் குறைந்த சூரிய ஒளி மின்சாரத்தில்) குளிரூட்டப்பட்ட தன்னிறைவானதாக இருக்கும். விசாலமான காணியில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய இயற்கை வீட்டுத் தோட்டம் இருக்கும். அருகி வரும் மருத்துவச் செடிகள், நிழல் தரும் மரங்கள் பூஞ்செடிகள் புல் வெளி என்று எல்லாமே பசுமையாக இருக்கும். காணியைச் சுற்றி குறைந்தது 500 மீற்றராவது நிழலுடன் கூடிய ஓடுபாதை, உடற்பயிற்சிக் கூடம் இருக்கும். தேனீ, கோழி வளர்ப்பு என்ற இன்னும் பல… இது எத்தனை வீதம் சாத்தியமாகுமோ தெரியாது, தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கலாம்.

இதுவே எனது தேசியம்.

நன்றி.

  • Like 14
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, இணையவன் said:

என்னதான் நாம் இங்கிருந்து தமிழ்த் தேசியம் பேசினாலும் அங்கிருப்போருக்கு சிங்கள அரசின் கீழிருக்கும் இலங்கைதன் அவர்களது நாடு. எமது இனம் அழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் முயற்சிப்போம். அங்கு அவர்களோடு வாழ்வதன் மூலம் என்னாலான ஒரு சிறு முன்னேற்றத்தை ஒரு கிரமத்த்திலாவது ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். இயற்கையைப் பாதுகாக்கும் வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்டப் போகிறேன். 

பெருமைக்குரியவர் நீங்கள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போன்ற சிந்தனை என்னிடமும் உள்ளது. ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியப் படும் என்று தெரியவில்லை.அண்மையில் கூடத் தாயகம் சென்ற போது ஒரு அன்னியனாகவே என்னை உணர்ந்தேன். எனது ஊருக்குச் செல்லும் போதும் இராணுவதினருக்கு நான் ஏன் போகின்றேன் என்று காரணம் கூற வேண்டிய நிலை எனக்கு..!மீன் வாங்கப் போனால் எனக்கு வேற விலை. வெறும் சாரத்துடன் போனாலும் அடையாளம் பிடித்து விடுகின்றார்கள். ஓட்டோக் காரனிடம் வேறு விலை எனக்கு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதற் பகுதியும் இன்றுதான் பார்த்தேன். 

இலங்கையில் பிறந்து வளர்ந்த எம்மால் மீண்டும் இலங்கையில் வாழ முடியாது என்று இல்லை. ஆனால், வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு இலங்கையில் வாழும்போது பலவிதமான மன உளைச்சல்களுக்கு ஆளாகலாம். 

குளிர்காலங்களில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஒவ்வொரு வருடமும் இலங்கையில் நிற்கலாம். 

இப்போது காசை காட்டித்தான் அலுவல் பார்க்கவேண்டி உள்ளது. நேரடியாக கேட்காவிட்டாலும் எல்லாவற்றுக்கும் மறைமுகமாக காசு/கையூட்டு கேட்கும் நிலை அங்கு உண்டு. 

பலருக்கும் உள்ள பெரியதொரு பிரச்சனை வண்டி. அங்குள்ள உணவுப்பழக்கங்கள் வேகமாக உடல் நிறையை அதிகரிக்கின்றன. 

போட்டி, பொறாமை, எரிச்சல், ஏமாற்றல் என எல்லாவற்றையும் இலங்கையில் அதிகளவு உணரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இறுதியாக, நான் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் கற்பனைக் கோட்டை பற்றிய சில குறிப்புகளோடு விடை பெறுகிறேன்.
எனது வீடு யாழிலோ அல்லது வேறு பெரு நகரிலோ இல்லமல் நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக பிந்தங்கிய கிராமம் ஒன்றில் இருக்கும். சீமெந்து பாவிக்காமல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்படும் வீட்டில் இயற்கையான முறையில் (மிகக் குறைந்த சூரிய ஒளி மின்சாரத்தில்) குளிரூட்டப்பட்ட தன்னிறைவானதாக இருக்கும். விசாலமான காணியில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய இயற்கை வீட்டுத் தோட்டம் இருக்கும். அருகி வரும் மருத்துவச் செடிகள், நிழல் தரும் மரங்கள் பூஞ்செடிகள் புல் வெளி என்று எல்லாமே பசுமையாக இருக்கும். காணியைச் சுற்றி குறைந்தது 500 மீற்றராவது நிழலுடன் கூடிய ஓடுபாதை, உடற்பயிற்சிக் கூடம் இருக்கும். தேனீ, கோழி வளர்ப்பு என்ற இன்னும் பல… இது எத்தனை வீதம் சாத்தியமாகுமோ தெரியாது, தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கலாம்.

இதுவே எனது தேசியம்.

இதே சிந்தனையுடன் ஊர் சென்று வாழ்வீர்களேயானால் அது ஒரு சொர்க்க வாழ்க்கை. ஒரு சில சிறிய தேவைகளுக்கு தவிர மின்சாரமே தேவையில்லை. இலங்கைக்கு சூரிய ஒளி மிகப்பெரிய கொடை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:


எனது வீடு யாழிலோ அல்லது வேறு பெரு நகரிலோ இல்லமல் நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக பிந்தங்கிய கிராமம் ஒன்றில் இருக்கும். சீமெந்து பாவிக்காமல் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு கட்டப்படும் வீட்டில் இயற்கையான முறையில் (மிகக் குறைந்த சூரிய ஒளி மின்சாரத்தில்) குளிரூட்டப்பட்ட தன்னிறைவானதாக இருக்கும். விசாலமான காணியில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய இயற்கை வீட்டுத் தோட்டம் இருக்கும். அருகி வரும் மருத்துவச் செடிகள், நிழல் தரும் மரங்கள் பூஞ்செடிகள் புல் வெளி என்று எல்லாமே பசுமையாக இருக்கும். காணியைச் சுற்றி குறைந்தது 500 மீற்றராவது நிழலுடன் கூடிய ஓடுபாதை, உடற்பயிற்சிக் கூடம் இருக்கும். தேனீ, கோழி வளர்ப்பு என்ற இன்னும் பல… இது எத்தனை வீதம் சாத்தியமாகுமோ தெரியாது, தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கலாம்.

இதுவே எனது தேசியம்.

நன்றி.

வாழ்த்துக்கள், ஊர் இப்ப இருக்கும் நிலை வேறு, நேரில் பார்த்த அனுபவம், இங்கிருந்தே அங்கிருக்கம் பிள்ளைகளை படிப்பித்துவிட்டால், அப்பிள்ளைகள் பலரை முன்னேற வைப்பார்கள், எங்களுக்கும் பாதுகாப்பு வருமானம் இங்கிருந்து செய்தால், இதைதான் கடைசி வரை செய்யப்போகின்றேன்,

நானும் நினைத்தேன் ஊரில் போய் பல மாணவர்களுக்கு இலவசமாக பிரத்தியோக வகுப்புகளை நடத்தி அவர்களை முன்னேற்ற, இப்ப ஊர் இருக்கும் நிலை ???  இங்கிருப்பதுதான் பாதுகாப்பு வசதி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்.

இதே எண்ணங்களுடன் தான் நானும் ஒர காலத்தில் இருந்தேன்.ஆனால் சில காரணங்களால் எண்ணத்தை மாற்றிவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய துணிகரமான எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள்........இங்கு வாழும் பெரும்பாலோர்க்கு இப்படியான எண்ணங்கள் நிறைய உண்டு. ஆனால் எல்லோராலும் செயல்படுத்த முடிவதில்லை......! 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இணையவன்.அப்ப நாங்கள் சந்திக்க நேரிடும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் இணையவன். என்னைக் கேட்டால் சரியானதொரு முடிவையே எடுத்துள்ளீர்கள். எமது நாடுபோல் எதுவும் எமக்கு மகிழ்வைத் தராது. நானும் கணவரும் எப்பவோ உந்த முடிவை எடுத்துவிட்டோம். மற்றவர்க்காக எமது வாழ்வை வாழவே கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009 வரை இது மட்டுமே கனவு. அதை தவிர வேறு எதுவும் நினைத்ததில்லை எதையும் புலத்தில் சேர்த்ததில்லை. 

இனி இரண்டு தோணியில் கால் வைக்க முடியாது வயதும் உடலும் ஒத்துழையாது. கடைசி காலத்திலாவது மனைவி பிள்ளைகள் பேரப் பிள்ளைகளுடன் மட்டுமே வாழ்வு. 

உங்கள் முடிவுக்கு தலை வணங்குகிறேன். வாழ்க வளமுடன் நலமுடன் ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன், உங்களைப் போல்தான் நானும்  வேலையில் இருந்து ஓய்வவெடுத்த பின்  தாயகத்தில்  போய் இருக்கலாம் என  எண்ணங்கள், கனவுகளுடன் இருந்தேன்.  ஓய்வு கிடைத்தும் உடன் போக முடியவில்லை. கடந்த வருட  இறுதியில்தான் அங்கு போக சாத்தியமாயிற்று.

எனது ஊரில் இருந்தவர்களில் 98 வீதமானவர்கள் இப்போது இல்லை. எனது பால்ய நண்பனை தேடிப் போனேன். அவனது நட்பு. வட்டாரத்தில் எனக்குத் தெரியாத பலர்  இருந்தார்கள். எனது நட்பைக் கூட அவனிடம் நான் புதிதாக்க வேண்டி இருந்தது.

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பணம் காய்க்கும் மரம் என்பது அங்குள்ளவர்களின் பார்வையாக இருந்தது. மரமாக நின்று கொள் அதில் உள்ள பயன்களை அவரவர்கள் வந்து தாங்களாகவே எடுத்துக் கொள்வார்கள். பயன் தருகிறது என்பதற்காக ஒருசிலர் வந்து தண்ணீர் ஊற்றிப் போன சம்பவங்களும் இருந்திருக்கிறது.

சுத்தம்,சுகாதாரம் இங்குள்ளது போல் அங்கில்லை. தீபாவளியில் பெய்த கடும் மழையில் நன்றாக நனைந்ததில் இருமல் வந்து மருத்துவரைப் போய்ப் பார்த்தேன். குளிசைகளை எழுதித் தந்து ரூபா 1400 வாங்கிக் கொண்டார். அவர் எழுதிய துண்டைக் கொண்டு போய் மருந்துக் கடையில் குளிசை வாங்கிய போதுதான் கவனித்தேன். எனக்கு முன்னால் நின்றவருக்கு என்ன கொடுக்கப் பட்டதோ அதே குளிசைகள் எனக்கும் தரப்பட்டது. அவரும் தீபாவளியில் நனைந்தாரோ என்று நினைத்துக் கொண்டேன். அறபதுகளில் மந்திகை போதனா வைத்தியசாலையில் பச்சை, சிகப்பு,ஒரேஜ் நிறங்களில் நாளுக்கு ஒரு  மருந்துக் கலவை வைத்திருப்பார்கள்.காய்ச்சல், இருமல்,தடிமன் என்று வைத்தியசாலைக்கு போகிறவர்களுக்கு அந்தக் கலவை கிடைக்கும். இந்த நினைவு எனக்கு அப்போது வந்து போனது.

இன்னும் பல அசொளகரியங்கள். விடயங்களைச் சொன்னால் நீண்டுவிடும். மொத்தத்தில் எனது பயணம் எனக்கு திருப்தி தரவில்லை. ஆக விடுமுறைக்குச் சென்று வரலாமே தவிர தங்கிவிட நினைப்பது என்பது எனக்கு சரிப்பட்டுவரவில்லை. 
0-D6-B532-E-9985-4-F02-81-AC-C0-DF168561

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த சிந்தனை/கனவு 10  வருடங்களுக்கு மேலாக இருந்தது.  இதை அப்பப்போ மனைவி, நெருங்கிய நண்பர்களுடன் பகிரும்போது அங்கை போய் எண்ணத்தை செய்ய போறாய்... நடைமுறைச்சாத்தியமானதை கதை என்ற பதில்களுடன் இப்ப கதைக்கலாம் ஆனால் அந்த நேரத்தில் கால மாற்றத்தில் எதுவும் நடக்காது என்ற பதிலும் வந்தது .
எனக்கும் உங்களைப்போலவே சிந்தனைகள் இருந்தாலும் எனது ஊரில் வசிப்பிப்பதே ஆர்வமாக இருந்தது, மற்றும்படி, அனைத்தும் நீங்கள் கூறியது போலவே அமைதியான பெரிய காணியில் சிறிய அடக்கமான வீட்டுடன் மரங்களுடன் சோலையாக வாழ்ந்து, முடிந்தால் கல்வி மேம்பாட்டுக்கு தேவையானவர்களுக்கு ஆர்வமானவர்களுக்கு உதவுதல்.
பத்து வருடங்களின் பின்னர் எனது மனைவிக்கு நான் அங்கு போய் இருப்பேன் என்ற நம்பிக்கை கூடுதலாக இருக்கிறது.  நண்பர்கள் சிலர் உறவினர்கள் சிலர் தாங்கள் அங்கு போய் அநேகமான பகுதியை வாழ்ந்து அனுபவிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டனர்.  எனக்கு என்னும் சிறிது காலம் இருப்பதால் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை.  நான் திடமாக அங்கு செல்லும் வரை அங்கு எந்த ஏற்படும் செய்வதாக நோக்கமும் இல்லை.

ஆனால் இப்போது முட்டுக்கட்டை போடுவது பிள்ளைகள்.... என்னோட இருக்க வேணும் உன்னோட இருக்க வேணும் என்று போட்டி.  அங்கை போக வேண்டாம் வேணுமானால் மூன்று மாதம் மட்டுமே போகலாம் என்பது அவர்களின் தற்போதைய கருத்து.  

அவர்களுக்கு பதின்ம வயது என்பதால் ஆழம் புரியாத வயது.  இருபதுகளுக்கு வந்ததும், எனது  தொல்லை தாங்காமல் அவர்களே துரத்தி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தோர் தாயகத்தில் வாழ நல்ல நட்பு வட்டம்/நம்பிக்கையான உறவுகள் தேவை. அவசரத்திற்கு உதவும் அயலவர்களும் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavi arunasalam said:

இணையவன், உங்களைப் போல்தான் நானும்  வேலையில் இருந்து ஓய்வவெடுத்த பின்  தாயகத்தில்  போய் இருக்கலாம் என  எண்ணங்கள், கனவுகளுடன் இருந்தேன்.  ஓய்வு கிடைத்தும் உடன் போக முடியவில்லை. கடந்த வருட  இறுதியில்தான் அங்கு போக சாத்தியமாயிற்று.

எனது ஊரில் இருந்தவர்களில் 98 வீதமானவர்கள் இப்போது இல்லை. எனது பால்ய நண்பனை தேடிப் போனேன். அவனது நட்பு. வட்டாரத்தில் எனக்குத் தெரியாத பலர்  இருந்தார்கள். எனது நட்பைக் கூட அவனிடம் நான் புதிதாக்க வேண்டி இருந்தது.

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் பணம் காய்க்கும் மரம் என்பது அங்குள்ளவர்களின் பார்வையாக இருந்தது. மரமாக நின்று கொள் அதில் உள்ள பயன்களை அவரவர்கள் வந்து தாங்களாகவே எடுத்துக் கொள்வார்கள். பயன் தருகிறது என்பதற்காக ஒருசிலர் வந்து தண்ணீர் ஊற்றிப் போன சம்பவங்களும் இருந்திருக்கிறது.

சுத்தம்,சுகாதாரம் இங்குள்ளது போல் அங்கில்லை. தீபாவளியில் பெய்த கடும் மழையில் நன்றாக நனைந்ததில் இருமல் வந்து மருத்துவரைப் போய்ப் பார்த்தேன். குளிசைகளை எழுதித் தந்து ரூபா 1400 வாங்கிக் கொண்டார். அவர் எழுதிய துண்டைக் கொண்டு போய் மருந்துக் கடையில் குளிசை வாங்கிய போதுதான் கவனித்தேன். எனக்கு முன்னால் நின்றவருக்கு என்ன கொடுக்கப் பட்டதோ அதே குளிசைகள் எனக்கும் தரப்பட்டது. அவரும் தீபாவளியில் நனைந்தாரோ என்று நினைத்துக் கொண்டேன். அறபதுகளில் மந்திகை போதனா வைத்தியசாலையில் பச்சை, சிகப்பு,ஒரேஜ் நிறங்களில் நாளுக்கு ஒரு  மருந்துக் கலவை வைத்திருப்பார்கள்.காய்ச்சல், இருமல்,தடிமன் என்று வைத்தியசாலைக்கு போகிறவர்களுக்கு அந்தக் கலவை கிடைக்கும். இந்த நினைவு எனக்கு அப்போது வந்து போனது.

இன்னும் பல அசொளகரியங்கள். விடயங்களைச் சொன்னால் நீண்டுவிடும். மொத்தத்தில் எனது பயணம் எனக்கு திருப்தி தரவில்லை. ஆக விடுமுறைக்குச் சென்று வரலாமே தவிர தங்கிவிட நினைப்பது என்பது எனக்கு சரிப்பட்டுவரவில்லை. 
0-D6-B532-E-9985-4-F02-81-AC-C0-DF168561

 

நன்றி ஐயா

எனது  நிலைப்பாடும் இது தான்

சிலவற்றை சொல்லி  இணையவனின் ஆசை  அல்லது  கனவை  கெடுக்கவிரும்பவில்லை

Link to comment
Share on other sites

நாம் ஏன் அங்கு போய் வாழ ஆசைப்படுகிறோம் எனில் எங்கள் எல்லோரினதும் சைல்ட் ஹூட்  மெமரி அங்கேயே தங்கி உள்ளது, நாம்  மீண்டும் அந்த பருவத்திற்கு சென்று வர ஆசை படுகிறோம்.ஆனால் தாயகம் அதேமாதிரி எங்களின்  காலத்துடன் நின்று விட்டதா  எனில் இல்லை . தாயகம் எங்களால் விரும்பப்படாத பல மாற்றங்களை உள்வாங்கி  அவற்றினூடே  எங்களை வரவேற்கிறது.

அப்பா அம்மா அல்லது எங்களின் சகோதர சகோதரிகள் போன்ற உறவுகள் இருக்கும் வரையிலும் எங்களால் அங்கு போய்  தங்கி இருக்க இயலுமானதாக இருக்க கூடும் . அவர்களின் பின்னான கால பகுதியில் தனிமை எங்களை அலைகளிக்க கூடும். பாதுகாப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த பிரச்சினைகள் கிராம பகுதிகளில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளில் முதன்மையானதாக இருக்க கூடும்  

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

எல்லோரது கருத்துக்களுக்கும் நன்றி. நேரம் கிடைக்கும்போது ஒவ்வொருவருக்கும் பதில் தருகிறேன்.

சென்ற பெப்ரவரி இறுதியில் இலங்கைக்கு 6 நாள் பயணம் போயிருந்தேன். இங்கிருந்து அங்கு போய்க் குடியேறிய ஒருவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. குறுகிய பயணமானாலும் பல அனுபவங்கள் கிடைத்தன. 

அதீதமான கற்பனைகளுடன் சென்றால் ஏமாற்றம்தான் உண்டாகும். ஒவ்வொரு சமுதாயமும் அதன் சூழலுக்கேற்ப மாற்றங்களை அடைந்துகொண்டே இருப்பது நியதி. எமது சமுதாயம், கலாச்சாரம் எல்லாம் இப்போது இதுதான். எப்படி இதற்குள் நுளைய வேண்டும் என்பதே முதலாவது பிரச்சனை.

இனொன்றும் உறுதியாக விளங்கியது. போதை மது விற்பனை, குழுக்கள், எமது அரசியல், இந்த மூன்றில் ஒன்றைக் கூட நெருங்காமல் கடந்து செல்ல வேண்டும். இதைப்பற்றிக் கொஞ்சம் எழுதி பின்னர் அழித்து விட்டேன். வீணான பிரச்சனை வேண்டாம் என்பதால் இத் திரியிலும் இவற்றைக் கடந்து செல்வோம்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2023 at 15:16, Sabesh said:

 

ஆனால் இப்போது முட்டுக்கட்டை போடுவது பிள்ளைகள்.... என்னோட இருக்க வேணும் உன்னோட இருக்க வேணும் என்று போட்டி.  அங்கை போக வேண்டாம் வேணுமானால் மூன்று மாதம் மட்டுமே போகலாம் என்பது அவர்களின் தற்போதைய கருத்து.  

அவர்களுக்கு பதின்ம வயது என்பதால் ஆழம் புரியாத வயது.  இருபதுகளுக்கு வந்ததும், எனது  தொல்லை தாங்காமல் அவர்களே துரத்தி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.  

உங்கள் பிள்ளைகள் உயர்கல்வியை முடித்து வேலையில் சேரும்வரை, கடைசிப் பிள்ளைக்கு 24 வந்தபின்தான் நீங்கள் அங்கு போவது நல்லது.

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.