Jump to content

இலங்கைக்கு IMF விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்


Recommended Posts

ம்... ஏன் உலகமே திரண்டு ஈழத்தமிழருக்கு எதிராக கங்கணம் கட்டி நிற்கிறது ? நடப்பது எல்லாமே எங்களுக்கு மட்டும் ஏன் பாதகமாகவே உள்ளது ?  😜

நல்ல வேளை, எங்களுக்குச் சிரித்து மகிழ உக்ரெய்ன் என்ற கோமாளி நாடும் அதற்கு முண்டு கொடுக்கும் மேற்கையும் திட்டித் தீர்க்க யாழ்களமும் உள்ளதால் ஓரளவாவது மனநிம்மதி அடைவோம். 😎

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் - ஹரி ஆனந்தசங்கரி

Published By: T. Saranya

22 Mar, 2023 | 03:31 PM
image

(நா.தனுஜா)

இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாமை தமக்கு மிகுந்த அதிருப்தியளிப்பதாக கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கடந்த திங்கட்கிழமை (20) அனுமதியளித்துள்ளது.

அதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் தமிழ்மக்கள் சார்ந்து கவனத்திற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டும் நோக்கில் செவ்வாய்கிழமை (21) கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஹரி ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையானது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஸ்திரமற்ற, வங்குரோத்து நிலையிலுள்ள நாடாக மாறியிருக்கின்றது.

சுமார் ஒருவருடகாலத்திற்கு முன்னர் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாட்டுடன் இலங்கையின் பொருளாதாரம் மிகமோசமடைந்தது. அது நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் எதிர்ப்புப்போராட்டங்களுக்கு வழிகோலியதுடன், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலகவேண்டிய நிலையைத் தோற்றுவித்தது. அதனைத்தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி சர்வதேச நாணயத்துடன் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில், இலங்கைக்கான உதவிச்செயற்திட்டத்துக்குக் கடந்த திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்துள்ளது.

அதன்படி இவ்வுதவிச்செயற்திட்ட இணக்கப்பாடு தொடர்வதற்கு இலங்கை பல்வேறு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யவேண்டியுள்ளது.

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படாமை எம்மத்தியில் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வு வழங்கப்படுவதுடன், வடக்கு - கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையும், பொருளாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்களைத் தீர்மானிப்பதற்கான அதிகாரமும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதேவேளை இச்சந்திப்பில் கருத்துவெளியிட்ட இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் (பேர்ள்) பிரதிநிதி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தொடரும் மனித உரிமை மீறல்கள், அதிகரித்த இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் முறையற்ற செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியதுடன் அவை முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். 

 

https://www.virakesari.lk/article/151155

புலம்பெயர் தமிழர்கள் Gary யின் கீழ் ஒரு அமைப்பாக திரெண்டால் என்ன?

நமக்கு நாமே தேர்தல் வைக்கும் கோமாளித்தனத்தை எல்லாம் நம்பமாட்டார்கள்.

ஆனால் மேற்கு நாட்டு முறைகளில் தேர்வாகிவருபவர்களுக்கு ஒரு கனம் இருக்கும்.

குறைந்தபட்சம்,

உலகளாவிய தமிழின மரபு வழி, தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள் அமைப்பு (Elected Officials of Tamil Origin, from across the globe) ஒன்றைவாது ஸ்தாபித்து முன் நகரலாம்.

அதில் சாதாரண ஹரோ நகரசபை உறுப்பினர் முதல், கனேடிய பெடரல் பாராளுமன்ற உறுப்பினர் வரை சேர்ந்து கொண்டு ஒரு பொது வேலைத்திட்டத்தை முன்னெடுக்கலாம்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, இணையவன் said:

ம்... ஏன் உலகமே திரண்டு ஈழத்தமிழருக்கு எதிராக கங்கணம் கட்டி நிற்கிறது ? நடப்பது எல்லாமே எங்களுக்கு மட்டும் ஏன் பாதகமாகவே உள்ளது ?  😜

நல்ல வேளை, எங்களுக்குச் சிரித்து மகிழ உக்ரெய்ன் என்ற கோமாளி நாடும் அதற்கு முண்டு கொடுக்கும் மேற்கையும் திட்டித் தீர்க்க யாழ்களமும் உள்ளதால் ஓரளவாவது மனநிம்மதி அடைவோம். 😎

உக்ரேன் போருக்கு முதல் யாழ்களத்தில் யாராவது மேற்குலகை திட்டி தீர்த்துக்கொண்டிருந்தார்களா?
அப்படியேதும் எழுதியிருந்தால் இங்கே இணைத்து விடுங்கள்.

மற்றவர்களை பார்த்து திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்கிறீர்கள் என குற்றம் சாட்டும் நீங்களும் அதையே செய்கின்றீர்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

உக்ரேன் போருக்கு முதல் யாழ்களத்தில் யாராவது மேற்குலகை திட்டி தீர்த்துக்கொண்டிருந்தார்களா?
அப்படியேதும் எழுதியிருந்தால் இங்கே இணைத்து விடுங்கள்.

மற்றவர்களை பார்த்து திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்கிறீர்கள் என குற்றம் சாட்டும் நீங்களும் அதையே செய்கின்றீர்கள்.
 

அவருக்கு எட்டியது அவ்வளவுதான்🤔

1 hour ago, இணையவன் said:

உக்ரெய்ன் என்ற கோமாளி நாடும் அதற்கு முண்டு கொடுக்கும் மேற்கையும் திட்டித் தீர்க்க யாழ்களமும் உள்ளதால் ஓரளவாவது மனநிம்மதி அடைவோம். 😎

ஆகா பொன்னான வார்த்தைகள், கோமாளி என்ற உக்ரைனும் அதனை முட்டுக்கொடுக்கும் மேற்குலகும், இப்படி வெளிப்பட்டையாக ஒரு மட்டுத்தினரே ஒப்பு கொள்ளும் போது, நம் பதிந்தால் மட்டும் நீக்குவது ஏனோ மட்டுறுத்தினரே, எனக்கு தெரியிம் இதையும் நீக்கி விடுவீர்களென்று😎😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

யாழ்களமும் உள்ளதால் ஓரளவாவது மனநிம்மதி அடைவோம்

இது 100% உண்மை யாழ்களமிருப்பதால் எனக்கு நிம்மதி🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

நான் தயார். 

என்னை ஒரு உதாரணமாகத்தான் சொன்னேன். இதே கேள்விக்கு அனைவரின் பதிலும் தயார் என்றே இருக்கும் என நினைக்கிறேன்.

பார்த்தீர்களா 

சிரித்து விட்டு போகிறார்கள்

அப்புறம் ஆயுதயுத்தம் இனி இல்லை அறிவு யுத்தம் என்கிறார்கள்

சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசத்தை யாழ் களம் அறியணும் என்பதற்காகவே இதை எழுதினேன். உங்கள் பெயரை களங்கப்படுத்தி இருந்தால் மன்னித்தருள்க.🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

பார்த்தீர்களா 

சிரித்து விட்டு போகிறார்கள்

அப்புறம் ஆயுதயுத்தம் இனி இல்லை அறிவு யுத்தம் என்கிறார்கள்

சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசத்தை யாழ் களம் அறியணும் என்பதற்காகவே இதை எழுதினேன். உங்கள் பெயரை களங்கப்படுத்தி இருந்தால் மன்னித்தருள்க.🙏

நிச்சயமாக இல்லை.

70, 80 ஆண்டின் பதின்ம வயதினர் ஒற்றுமை படாமையால் வந்த அழிவை விமர்சிக்கும் 90களின் பதின்ம வயதினாகிய நான்….

ஒரு கருத்துகளத்தில் கூட ஈகோ, சில்லறை சண்டையை விட்டு கொடுக்க முடியாதவனாக இருப்பின்…

அவர்களை பற்றி கதைக்கும் அருகதையை முற்றாக இழந்தவனாவேன்.

உங்கள் கேள்வி மிக நியாமானதும், காலத்தின் தேவை கருதி அவசியமானதும் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இல்லை.

70, 80 ஆண்டின் பதின்ம வயதினர் ஒற்றுமை படாமையால் வந்த அழிவை விமர்சிக்கும் 90களின் பதின்ம வயதினாகிய நான்….

ஒரு கருத்துகளத்தில் கூட ஈகோ, சில்லறை சண்டையை விட்டு கொடுக்க முடியாதவனாக இருப்பின்…

அவர்களை பற்றி கதைக்கும் அருகதையை முற்றாக இழந்தவனாவேன்.

உங்கள் கேள்வி மிக நியாமானதும், காலத்தின் தேவை கருதி அவசியமானதும் ஆகும்.

அதே

நன்றி தம்பி. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.