Jump to content

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி

Published By: DIGITAL DESK 5

23 MAR, 2023 | 04:53 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடன் பெற்றுள்ளமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதைப் போன்று , அதனை மீள செலுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். பாரிய எரிமலையின் கீழ் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். அந்த தீயை அணைந்து சிறந்த நாட்டை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தே சிந்திக்க வேண்டியுள்ளது.

யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சியாளர்கள் தற்போதுள்ள நெருக்கடிகளிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புள்ளது. தற்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கின்றார். ஆனால் கடந்த இரு வருடங்களுக்கு முன்னரிலிருந்தே நாம் இதனை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு எம்மால் பல சந்தர்ப்பங்களில் விடுக்கப்பட்ட கோரிக்கை , பொதுஜன பெரமுனவினரின் செயற்பாடுகளால் இடை நிறுத்தப்பட்டன. எனினும் நாம் இன்னும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். எனவே தற்போதேனும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.

அதற்கமைய குடும்ப அரசியல் அற்ற தூய்மையான அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். பதவிகள் குறித்த எண்ணங்களை முற்றாகத் துறந்து ஆட்சியை பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் பின்னர் யார் ஆட்சியமைத்தாலும் மீண்டும் நாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/151268

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அடுத்த நசியல் கள்ளர். 

இவருக்கும் ஒரு ஆசை. 

அதென்னவோ, இலங்கையில் மட்டும், உச்ச பதவியை அனுபவித்தவர்கள், மீண்டும், MP ஆகி அரசியல் செய்ய பேராசை கொண்டு திரிவார்கள்

ஆக்குறைந்தது அந்த உயர் பதவிக்காவது மீண்டும் போட்டி போட்டால் கூட மரியாதையாக இருக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

 

அதென்னவோ, இலங்கையில் மட்டும், உச்ச பதவியை அனுபவித்தவர்கள், மீண்டும், MP ஆகி அரசியல் செய்ய பேராசை கொண்டு திரிவார்கள்

ஆக்குறைந்தது அந்த உயர் பதவிக்காவது மீண்டும் போட்டி போட்டால் கூட மரியாதையாக இருக்கலாம்.  

இலங்கையிலும் ஜனாதிபதியாக இருந்து விட்டு அதன் பின் அடுத்த நிலை பதவிகளுக்கு போன சில்லறைகள் மைத்திரியும், மகிந்தவும்தான்?

அடுத்து இந்த லிஸ்டில் நரியும் சேரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி

சுற்றிச் சுற்றி சுப்பர்ரை கொல்லைக்குள் நிற்கும்  குப்பன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இலங்கையிலும் ஜனாதிபதியாக இருந்து விட்டு அதன் பின் அடுத்த நிலை பதவிகளுக்கு போன சில்லறைகள் மைத்திரியும், மகிந்தவும்தான்?

அடுத்து இந்த லிஸ்டில் நரியும் சேரலாம்.

சம்பந்தன்…. எதிர்கட்சி தலைவராக இருந்து விட்டு, இப்பவும் சொந்த தொகுதிக்கு போகாமல்
எம்.பி. பதவி  வேணும் என்று ஒட்டிக் கொண்டிருக்கின்ற  வேலையும், சில்லறை வேலைதான். 😂
 

7 minutes ago, குமாரசாமி said:

சுற்றிச் சுற்றி சுப்பர்ரை கொல்லைக்குள் நிற்கும்  குப்பன்..

உலகத்திலேயே… தோசை பாட்டி வைத்து, ஜனாதிபதி ஆனதென்றால் சிங்கன் மைத்திரிதான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தன்…. எதிர்கட்சி தலைவராக இருந்து விட்டு, இப்பவும் சொந்த தொகுதிக்கு போகாமல்
எம்.பி. பதவி  வேணும் என்று ஒட்டிக் கொண்டிருக்கின்ற  வேலையும், சில்லறை வேலைதான். 😂

போகும் போது கதிரையில் போக வேணும் எண்டு ஆசையாம்🤣

20 minutes ago, தமிழ் சிறி said:

உலகத்திலேயே… தோசை பாட்டி வைத்து, ஜனாதிபதி ஆனதென்றால் சிங்கன் மைத்திரிதான். 🤣

அது அப்பம் எல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

போகும் போது கதிரையில் போக வேணும் எண்டு ஆசையாம்🤣

அது அப்பம் எல்லோ?

ஓ.. நான், தோசை என நினைத்து விட்டேன்.
ஓரு சின்ன தோசை பாட்டி… மகிந்தவின் காதில் பூ சுற்றி,
My3‘ஐ.. ஜனாதிபதி ஆக்கினது சாதனைதான்.
இந்த மூஞ்சை எல்லாம் ஜனாதிபதியாக வரும் என்று, யாரும் நினைத்திருக்கவில்லை.
போதாக் குறைக்கு… சரவணபவனின் மகளின் “பேர்த்டே” பாட்டியையும் மனுசன் விட்டு வைக்கவில்லை. 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

ஓ.. நான், தோசை என நினைத்து விட்டேன்.
ஓரு சின்ன தோசை பாட்டி… மகிந்தவின் காதில் பூ சுற்றி,
My3‘ஐ.. ஜனாதிபதி ஆக்கினது சாதனைதான்.
இந்த மூஞ்சை எல்லாம் ஜனாதிபதியாக வரும் என்று, யாரும் நினைத்திருக்கவில்லை.
போதாக் குறைக்கு… சரவணபவனின் மகளின் “பேர்த்டே” பாட்டியையும் மனுசன் விட்டு வைக்கவில்லை. 🤣

அப்பத்துக்கே இலங்கை ஜனாதிபதி எண்டா..

கேக்குக்கு அமெரிக்க ஜனாயிபதியே ஆகலாம் என போயிருப்பார்🤣

யாரு கிட்ட?  ஹோம் பினான்ஸ் எண்டு நாமம் போட்ட முதலாளி கிட்ட?

பினாட்டை நாலா மடிச்சு கேக் எண்டு கொடுத்து முடிச்சிருப்பார் சோலியை🤣.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தன்…. எதிர்கட்சி தலைவராக இருந்து விட்டு, இப்பவும் சொந்த தொகுதிக்கு போகாமல்
எம்.பி. பதவி  வேணும் என்று ஒட்டிக் கொண்டிருக்கின்ற  வேலையும், சில்லறை வேலைதான். 😂

கொஞ்சம் பொறுங்கோ இன்னுமொரு செய்தி வருமாம்.....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2023 at 09:45, goshan_che said:

 

அது அப்பம் எல்லோ?

மஹிந்தா ஒன்றும் அப்பம் சுட்டு பாட்டி வைக்கேலை. மைத்திரி செய்த துரோகத்தை வர்ணிக்க; ஒரே மேசையில், ஒரே வரிசையில், அவர்களோடு ஒன்றாக சேர்ந்து இருந்து விருந்து உண்டுவிட்டு கட்சியை விட்டு விலகி சென்றதை விளக்க அப்படி சொன்னார். அதற்காக மஹிந்தா ஒன்றும் யேசுவுமில்லை, ஒன்றும் புனிதரை காட்டிக்கொடுக்கவுமில்லை, இவர்கள் விலைக்கு வாங்கிய தமிழரை விட மைத்திரி செய்தது ஒன்றும் பெரிய குற்றமுமில்லை. போன மைத்திரி ஒழுங்காக ஆட்சி செய்யவுமில்லை ரத்தம் மணக்க மீண்டும் அதே பாதையில் தமிழரை பலி வாங்கி பழைய  குகைக்கே மீண்டார் கூழ் முட்டை மைத்திரி. இப்போ நீதிமன்றத்தோடு முட்டுறார் இருந்தும் ஆசை விடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

மஹிந்தா ஒன்றும் அப்பம் சுட்டு பாட்டி வைக்கேலை. மைத்திரி செய்த துரோகத்தை வர்ணிக்க; ஒரே மேசையில், ஒரே வரிசையில், அவர்களோடு ஒன்றாக சேர்ந்து இருந்து விருந்து உண்டுவிட்டு கட்சியை விட்டு விலகி சென்றதை விளக்க அப்படி சொன்னார்.

இல்லை இது வெறும் சொலவடை அல்ல. 

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

Incidentally, the journalists who were invited for the discussion with the former President were served hoppers, which were the same food Sirisena ate with Rajapaksa, the night before his announcement where he broke ranks from Rajapaksa and announced his candidature at the 2015 Presidential Election, which he won, defeating his former leader, Rajapaksa.

https://www.colombotelegraph.com/index.php/ill-be-back-to-rule-sri-lanka-mahinda-rajapaksa-declares-while-serving-hoppers/amp/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ! அப்போ....  இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று முன்பே மஹிந்தா அறிந்தேதான் அப்பம் பரிமாறினாரோ? சொல்லி புலம்ப ஏற்ற வசீகரமான வசனநடை, அதற்கேற்ப ஈஸ்ரர் குண்டுவெடிப்பு மைத்திரி யார் என்பதை  நிரூபித்து, அவர் தொடங்கிய அரசியல் வாழ்விற்கு முடிவுரை வைத்தது. அவர் நாண்டுகொண்டு சாகவேண்டியவர் கதையின்படி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

இல்லை இது வெறும் சொலவடை அல்ல. 

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

Incidentally, the journalists who were invited for the discussion with the former President were served hoppers, which were the same food Sirisena ate with Rajapaksa, the night before his announcement where he broke ranks from Rajapaksa and announced his candidature at the 2015 Presidential Election, which he won, defeating his former leader, Rajapaksa.

https://www.colombotelegraph.com/index.php/ill-be-back-to-rule-sri-lanka-mahinda-rajapaksa-declares-while-serving-hoppers/amp/

 

8 minutes ago, satan said:

ஓஓ! அப்போ....  இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று முன்பே மஹிந்தா அறிந்தேதான் அப்பம் பரிமாறினாரோ? சொல்லி புலம்ப ஏற்ற வசீகரமான வசனநடை, அதற்கேற்ப ஈஸ்ரர் குண்டுவெடிப்பு மைத்திரி யார் என்பதை  நிரூபித்து, அவர் தொடங்கிய அரசியல் வாழ்விற்கு முடிவுரை வைத்தது. அவர் நாண்டுகொண்டு சாகவேண்டியவர் கதையின்படி.  

"அப்ப  பார்ட்டி" நடந்தது... சந்திரிகா வீட்டில் என நினைக்கின்றேன் 
உறுதியாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

 

"அப்ப  பார்ட்டி" நடந்தது... சந்திரிகா வீட்டில் என நினைக்கின்றேன் 
உறுதியாக தெரியவில்லை.

சந்திரிக்காதான் மஹிந்தாவுக்கு எதிராக மைத்திரியை களமிறக்கியவர்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

சந்திரிக்காதான் மஹிந்தாவுக்கு எதிராக மைத்திரியை களமிறக்கியவர்!

அப்ப, கணக்கு சரிதானே சாத்தான்.
பார்ட்டி வைக்க வேண்டிய கட் டாயத்தில்... சந்திரிகாதான் இருந்தவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப  பார்ட்டி" நடந்தது... சந்திரிகா வீட்டில் என நினைக்கின்றேன் 
உறுதியாக தெரியவில்லை.

அலரிமாளிகையில்?

அந்த சமயம் சந்திரிகா, மகிந்தவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

மறைமுகமாக ரணில்+மங்கள+சந்திரிகா+மைத்திரி பேசிக்கொண்டர்கள்.

இதை எப்படியோ மோப்பம் பிடித்த கொழும்பு டெலிகிராப் - பொது வேட்பாளராக மைத்திரி என செய்தி வெளியிட்டது.

ஆனால், அந்த மைத்திரி - ரணிலில் மனைவி மைத்திரி என மங்கள கொழும்பு டெலிகிராபை நம்ப வைத்து விட்டார்.

ஆகவே சிறிசேன கடைசிவரைக்கும் சந்தேகிக்கபடாமல் இருந்து வேலையை கொடுத்தார்.

1 minute ago, தமிழ் சிறி said:

அப்ப, கணக்கு சரிதானே சாத்தான்.
பார்ட்டி வைக்க வேண்டிய கட் டாயத்தில்... சந்திரிகாதான் இருந்தவர். 

அண்ணை, பார்ட்டி கொடுத்தது மகிந்த. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

அலரிமாளிகையில்?

அந்த சமயம் சந்திரிகா, மகிந்தவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

மறைமுகமாக ரணில்+மங்கள+சந்திரிகா+மைத்திரி பேசிக்கொண்டர்கள்.

இதை எப்படியோ மோப்பம் பிடித்த கொழும்பு டெலிகிராப் - பொது வேட்பாளராக மைத்திரி என செய்தி வெளியிட்டது.

ஆனால், அந்த மைத்திரி - ரணிலில் மனைவி மைத்திரி என மங்கள கொழும்பு டெலிகிராபை நம்ப வைத்து விட்டார்.

ஆகவே சிறிசேன கடைசிவரைக்கும் சந்தேகிக்கபடாமல் இருந்து வேலையை கொடுத்தார்.

அண்ணை, பார்ட்டி கொடுத்தது மகிந்த. 

தகவலுக்கு நன்றி கோசான்.
பழைய செய்தி என்ற படியால்... பல சம்பவங்கள் நினைவில் இல்லாமல் போய் விட்டது.

இதே மாதிரி...  சிறிமாவோ உயிருடன் இருக்கும் இறுதி காலத்தில்,
சந்திரிகா, அனுராவுக்கு இடையில் ஏதோ... லடாய் ஏற்பட..
சிறிமாவோ, இருவரையும்  கூப்பிட்டு... தோசைப் பார்ட்டி வைத்த கதை ஒன்றும் வந்தது.
அதனை கேள்விப்பட்டீர்களா? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

தகவலுக்கு நன்றி கோசான்.
பழைய செய்தி என்ற படியால்... பல சம்பவங்கள் நினைவில் இல்லாமல் போய் விட்டது.

இதே மாதிரி...  சிறிமாவோ உயிருடன் இருக்கும் இறுதி காலத்தில்,
சந்திரிகா, அனுராவுக்கு இடையில் ஏதோ... லடாய் ஏற்பட..
சிறிமாவோ, இருவரையும்  கூப்பிட்டு... தோசைப் பார்ட்டி வைத்த கதை ஒன்றும் வந்தது.
அதனை கேள்விப்பட்டீர்களா? 😂

🤣உதுக்கு subject specialist @Nathamuni வந்து பதில் சொல்லுவார்🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

🤣உதுக்கு subject specialist @Nathamuni வந்து பதில் சொல்லுவார்🤣.

நீங்கள் சொல்லுறது... 100% சரி. 😛
@Nathamuni நாதத்தை... உடனடியாக மேடைக்கு அழைக்கின்றோம். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தாவிடம் அப்பம் வாங்கி உண்டவர் அவரை விட்டு விலகி  நேராக சந்திரிகாவை சந்தித்து தமிழரின் வாக்கில் அரச கதிரை ஏறி அந்த மக்களையே பலிகொடுத்து பதவியிறங்கினார். ஆனால் அவர் கணக்கு இன்னும் முடியவில்லை காத்திருக்கிறது முடிவுக்காக.

26 minutes ago, தமிழ் சிறி said:

பழைய செய்தி என்ற படியால்... பல சம்பவங்கள் நினைவில் இல்லாமல் போய் விட்டது.

எத்தனை என்று நினைவில் வைத்திருப்பது? எல்லாம் நிரம்பி வழிந்து கலந்து மண்டையே குழம்புது எனக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣உதுக்கு subject specialist @Nathamuni வந்து பதில் சொல்லுவார்🤣.

 

1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்லுறது... 100% சரி. 😛
@Nathamuni நாதத்தை... உடனடியாக மேடைக்கு அழைக்கின்றோம். 🤣

அய்யா தெரியாதைய்யா...

தோசை தமிழர்களது.... அநேகமா கிரிபத் ஆ இருக்கும்.

நான் நினைக்கிறேன், மகனுக்கு அம்மாவும், தம்பிக்கு அக்காவும் கலியாணம் கட்டி வைக்க யோசிச்சு இருக்கலாம்... 

ஏன் எண்டா, அவர்... வேற ஐடியாவில் இருந்தவர்.

என்ன ஐடியா எண்டு உடான்ச்சு சாமியார் விபரமா சொல்லுவார்... சிலவேளை ரணிலை கேட்டாலும் சொல்லுவார். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

 

அய்யா தெரியாதைய்யா...

தோசை தமிழர்களது.... அநேகமா கிரிபத் ஆ இருக்கும்.

நான் நினைக்கிறேன், மகனுக்கு அம்மாவும், தம்பிக்கு அக்காவும் கலியாணம் கட்டி வைக்க யோசிச்சு இருக்கலாம்... 

ஏன் எண்டா, அவர்... வேற ஐடியாவில் இருந்தவர்.

என்ன ஐடியா எண்டு உடான்ச்சு சாமியார் விபரமா சொல்லுவார்... சிலவேளை ரணிலை கேட்டாலும் சொல்லுவார். 😁

Sri Lanka's former minister Mangala Samaraweera passes away | Tamil Guardian

மறைந்த முன்னாள் வெளிநாட்டமைச்சர்   மங்கள சமரவீரவும் லேசுப்பட்ட ஆளில்லையாம்..
என்று மகிந்த கூறியவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி; அப்பம் சாப்பிட்டதும், விட்டுப்பிரிந்ததும் பெரிய விடயமல்ல. கடைசிமட்டும் நம்பிக்கைக்குரியவராய் இருந்து, அப்பம் சாப்பிடும்வரை பதறாமல், அந்த குற்றச்சாட்டை மறுத்து, பொறுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்ததுதான் பெரிய விடயம். அதிலொன்று சொன்னார் பாருங்கள்! தேர்தல் முடிவு வரும்வரை ஒளித்திருந்தாராம், சரத் பொன்சேகாவின் நிலை, சிறை நிழலாடியிருக்கும். தமிழரை பிரித்து மோதவிட்டு குளிர் காய்ந்தவர்கள், துரோகம், காட்டிக்கொடுப்பு பற்றி பேசுவது வேடிக்கை. உலகத்துக்கு அது என்னவோ ஈஸ்ரர் குண்டுவெடிப்பு, ஆனால் இறந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தமிழருக்கும் அது புனித வெள்ளி! தமிழரின் வாக்கில் வென்ற மஹிந்தா அழித்ததும் அவர்களை, மைத்திரி குண்டு வைப்பித்தும் அவர்ளுக்கு, தமிழரால் கதிரை ஏற இருந்த பொன்சேகாவை இழுத்து விழுத்திய மஹிந்தவின் கொள்கைகளையே அவரும் பின்பற்றி தமிழரை அழித்தார் தொடர்ந்தும் செய்கிறார். அழித்தவர்களை வாழவைக்கும் இனம் என்னினம். வாழ வைத்தவர்களை அழிக்கும் இனம் மற்ற இனம். அதனாலேயே எங்களையே எல்லோரும் குறி வைக்கிறார்கள்.  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.