Jump to content

காலில் ரத்தம் சொட்டச் சொட்ட சாதனை படைத்த மெஸ்ஸி - ஆர்ப்பரித்த அர்ஜென்டினா ரசிகர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலில் ரத்தம் சொட்டச் சொட்ட சாதனை படைத்த மெஸ்ஸி - ஆர்ப்பரித்த அர்ஜென்டினா ரசிகர்கள்

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

24 மார்ச் 2023, 05:04 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அர்ஜென்டினாவின் தலைநகரமான பியூனஸ் ஐரிஸ் நகரத்தின் 'எல் மானுமெண்டல்' மைதானம் முழுவதும் நேற்று இரவு ஒரே ஒரு பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தது.

மைதானத்தில் கூடியிருந்த 80 ஆயிரம் பேரின் வாயிலிருந்தும் வந்த அந்த ஒற்றைச் சொல் 'மெஸ்ஸி'.

கால்பந்து உலகக்கோப்பை அர்ஜெண்டினாவுக்கு பெற்றுத் தந்த அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி, கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டிக்குஜ பிறகு மீண்டும் ஒருமுறை அந்த அணிக்காக நேற்று களமிறங்கினார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அர்ஜெண்டினா vs பனாமா

கத்தாரில் நடந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் வென்று, தாயகம் திரும்பிய மெஸ்ஸி மற்றும் அவரது அணியினருக்கு தலைநகர் பியூனஸ் ஐரிஸில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

கூட்டத்திற்கு நடுவே திறந்த பேருந்தில் கோப்பையுடன் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி வீரர்கள் வலம் வரும்போது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், மெஸ்ஸி உட்பட அனைத்து வீரர்களும் ஹெலிகாப்டர் உதவியுடன் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.

மெஸ்ஸியால் உலகக்கோப்பையை அர்ஜென்டினா மக்கள் மத்தியில் கொண்டு சென்று கொண்டாட முடியாமல் போனது. இந்தக் குறையை நீக்கும் வகையில் அமைந்தது, நேற்றைய அர்ஜெண்டினா, பனாமா அணிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி.

இரு நாடுகளுக்கு இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடத்த திட்டமிடப்பட்டு, அர்ஜென்டினாவின் தலைநகரத்தில் இருக்கும் மிகப்பெரிய மைதானமான எல் மானுமெண்டல் மைதானத்தில் இந்தப் போட்டி நடந்தது.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக்கோப்பையை வென்ற பிறகு 'சாம்பியன்' என்ற அந்தஸ்துடன் அர்ஜென்டினா அணி முதல்முறையாக நேற்றைய போட்டியில் களம் இறங்கியது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் 'சாம்பியன்ஸ்' என்று பொறிக்கப்பட்ட அர்ஜென்டினா அணியின் பிரமாண்ட ஜெர்ஸி மைதானத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

உலககோப்பையை மைதானத்திற்கு கொண்டு வந்த அந்தத் தருணத்தில், அர்ஜென்டினா ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி கொண்டாடித் தீர்த்தனர்.

ஆட்டத்திற்கு முன்பு மைதானத்தில் அர்ஜென்டினாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியின் வீரர்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டனர். குறிப்பாக பயிற்சியாளர் லியோனெல் ஸ்கலோனி, கண்ணீர் மல்க தேசிய கீதத்தைப் பாடினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

'ரத்தக் காயம்'

நட்பு ரீதியான ஆட்டம் என்றாலும், சர்வதேச அரங்கில் இந்தப் போட்டி குறித்து பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவியது.

உலகக்கோப்பையை வென்ற பிறகு, முதல் முறையாக அர்ஜென்டினா அணி விளையாடும் சர்வதேச போட்டி என்பதாலும், சொந்த நாட்டில் நடப்பதாலும் அர்ஜென்டினா ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை அதிகமாகக் கொண்டிருந்தனர்.

ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா அணியும் பனாமா அணியும் ஆக்ரோஷமாக மோதினர்.

முக்கியமான சாதனை ஒன்றைப் படைக்க கோல் போஸ்டை தொடர்ந்து முற்றுகையிட முயன்றார் லியோனெல் மெஸ்ஸி.

ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் பனாமா அணி வீரர் கல்வான், மெஸ்ஸியை தடுக்க முயன்று மஞ்சள் அட்டை பெற்றார். கோல் போஸ்டை முற்றுகையிட மெஸ்ஸி முன்னேறியபோது அவரைத் தடுக்க அவரது காலில் மோதி மெஸ்ஸியை கீழே விழச் செய்தார் பனாமா வீரர்.

கீழே விழுந்த மெஸ்ஸிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டியது. அதைப் பொருட்படுத்தாமல் விளையாடிய மெஸ்ஸி, மஞ்சள் அட்டைக்கு எதிராக கிடைத்த ஃபீரிகிக்கை கோலாக்க தவறினார்.

லியோனெல் மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

நட்பு ரீதியிலான போட்டி என்ற போதிலும், காயம் ஏற்படும் அளவுக்கு போட்டி விறுவிறுப்பாக நடந்தது.

தொடர்ந்து, அர்ஜென்டினா அணி கோல் போஸ்டை முற்றுகையிட்டு வந்தது. அந்த அணியின் மெஸ்ஸி, டி மரியா, என்சோ பெர்னாண்டஸ், ஜூலியன் அல்வாரெஸ் என பலரும் கோலடிக்க முயற்சி செய்தனர்.

ஆனால் முதல் பாதி வரை பல முயற்சி செய்தும், அர்ஜென்டினா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

சாதனை படைத்த மெஸ்ஸி

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

இரண்டாவது பாதியிலும், அர்ஜெண்டினா அணி தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்தது. உலக சாம்பியன் அணியை தடுக்க பனாமா அணியும் பதில் தாக்குதலைத் தொடுத்து வந்தது. இதனால் பல முறை பனாமா அணி ஃபவுல் செய்தது.

75 நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், மெஸ்ஸி அடிக்கும் கோலை காண மைதானத்திற்கு வந்திருந்த 80 ஆயிரம் பேரும் அந்த ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தனர்.

பனாமா அணி செய்த தவறின் காரணமாக, அர்ஜெண்டினா அணிக்கு 4 முறை ஃபீரி கிக் வாய்ப்பு கிடைத்தது. முதல் மூன்று வாய்ப்பையும் கோலாக மாற்றத் தவறிய அர்ஜென்டினா, 77வது நிமிடத்தில் கிடைத்த ஃபீரிகிக் வாய்ப்பை கோலாக மாற்றியது.

மெஸ்ஸி அடித்த ஃபீரிகிக் கோல் கம்பத்தில் பட்டு திரும்பி வந்த போது, அதை மீண்டும் வலைக்குள் திணித்து கோலாக்கினார் அல்மாடா.

1-0 என முன்னிலை பெற்ற அர்ஜெண்டினா அணி, மற்றுமொரு சாதனையைப் படைக்க தன்முனைப்புடன் ஆடியது.

மெஸ்ஸி கோல் அடிக்க எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிரணி முழு திறன் கொண்டு தடுத்தது.

அத்தனை பேரையும் தாண்டி 88வது நிமிடத்தில் மெஸ்ஸி கோலடித்த போது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

தனது இடதுகாலால் மெஸ்ஸி அடித்த ஃபீரி கிக், கோல் கீப்பரை தாண்டி வலைக்குள் தஞ்சம் புகுந்தது.

மெஸ்ஸி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த கோல் மூலம் சர்வதேச அரங்கில், 800 கோல்கள் அடித்து சாதனை படைத்தார் மெஸ்ஸி. சர்வதேச அளவில், ரொனால்டோவுக்கு பிறகு இந்த பட்டியலில் அதிக கோலடித்து மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச போட்டிகளின் மூலம் 828 கோல்கள் அடித்திருக்கிறார்.

ஆட்ட நேர முடிவில், 2-0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது அர்ஜென்டினா அணி.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

போட்டி முடிந்த பிறகு, உலகக்கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி மைதானத்தைச் சுற்றி கோப்பையுடன் வலம் வந்தது. ஒவ்வொரு வீரரும் உலகக்கோப்பையின் மாதிரியை கையில் வைத்து ரசிகர்களை நோக்கி கையசைத்தனர்.

https://www.bbc.com/tamil/articles/cv2rqe10vpdo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.......காலையில் நல்ல செய்தி, நன்றி ஏராளன் ........!  👍  😂

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.