Jump to content

பிரான்ஸில் ஆர்ப்பட்டங்களால் 441 பொலிஸார் காயம், 457 பேர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் ஆர்ப்பட்டங்களால் 441 பொலிஸார் காயம், 457 பேர் கைது

Published By: SETHU

24 MAR, 2023 | 04:32 PM
image

பிரான்ஸில் ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது நேற்று நடந்த வன்முறைகளை அடுத்து, 457 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் 441 பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனவும் உள்துறை அமைச்சர் ஜெரால்;ட் டர்மனின் தெரிவித்துள்ளார்.  

அதிக எண்ணிக்கையான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அவற்றில் சில வன்முறையானவையாக மாறின' என அமைச்சர் டர்மனின் கூறியுள்ளார்.

பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு பாதுகாப்பு அளித்தமைக்காக பொலிஸாரை அவர் பாராட்டினார்.

பாரிஸ் நகரில் நடத்ப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது, தலையை மூடிய ஆடை மற்றும் முகக்கவசம் அணிந்த இளைஞர்கள் சிலர் ஜன்னல்களை அடித்து உடைத்ததுடன்,  குப்பைகளுக்கு தீவைத்துச் சென்றனர். 

ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனின் ஓய்வூதிய மறுசீரமைப்புத் திட்டம் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்டது. 

இந்த சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறு ஆர்ப்பாட்டக்கார்கள் கோருகின்றனர்.

ஆனால், வன்முறைகள் காரணமாக சட்டத்தை வாபஸ் பெற வேண்டிய தேவையில்லை என உள்துறை அமைச்சர் ஜெரால்;ட் டர்மனின் கூறியுள்ளார். 

https://www.virakesari.lk/article/151347

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

பிரான்ஸில் ஆர்ப்பட்டங்களால் 441 பொலிஸார் காயம், 457 பேர் கைது

இதே சம்பவம் ரஷ்யாவில் நடந்தால்?????   :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இதே சம்பவம் ரஷ்யாவில் நடந்தால்?????   :cool:

441 பொலிசார் காயப்பட்டால் புட்டினின் முடிவு எப்படி இருக்கும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விசுகு said:

441 பொலிசார் காயப்பட்டால் புட்டினின் முடிவு எப்படி இருக்கும்??

ரஷ்யாவில் போராட்டம் செய்த 457 பேர் கைது என்றால் மேற்குலக மனித உரிமை மற்றும் ஜனநாயகவாதிகளின் அறைகூவல் எப்படியிருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ரஷ்யாவில் போராட்டம் செய்த 457 பேர் கைது என்றால் மேற்குலக மனித உரிமை மற்றும் ஜனநாயகவாதிகளின் அறைகூவல் எப்படியிருக்கும்?

என்னுடைய கேள்வி அதுவல்லவே. நடக்கவே முடியாத ஒரு விடயத்துக்கு எதுக்கு பதில் அண்ணா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

என்னுடைய கேள்வி அதுவல்லவே. நடக்கவே முடியாத ஒரு விடயத்துக்கு எதுக்கு பதில் அண்ணா?

எது நடக்க முடியாத விடயம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எது நடக்க முடியாத விடயம்?

ரசியாவில் 441 பொலிசார் காயப்படுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை எப்படி நீங்களோ நானோ அங்கு இப்படி நடக்கவில்லை என உறுதிப்படுத்தி கூறமுடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

அதை எப்படி நீங்களோ நானோ அங்கு இப்படி நடக்கவில்லை என உறுதிப்படுத்தி கூறமுடியும்?

பிரான்சில் நடைபெறுவதை நானும் நீங்களும் பார்ப்பதும் பேசுவதும்

ரசியாவில் நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை என்பதிலுமே இருக்கிறது விடை அண்ணா.

நன்றி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

பிரான்சில் நடைபெறுவதை நானும் நீங்களும் பார்ப்பதும் பேசுவதும்

ரசியாவில் நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை என்பதிலுமே இருக்கிறது விடை அண்ணா.

நன்றி 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விசுகு said:

பிரான்சில் நடைபெறுவதை நானும் நீங்களும் பார்ப்பதும் பேசுவதும்

ரசியாவில் நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை என்பதிலுமே இருக்கிறது விடை அண்ணா.

நன்றி 

 

உலகில் எல்லா நாடுகளும் ஒரே மாதிரி  இருப்பதில்லை.சட்டங்களும் ஒரே மாதிரியானவை இல்லைத்தானே? ரஷ்யாவின் சட்டங்களும் வேறு.சீனாவின் சட்டங்களும் வேறு ஜேர்மனியின் சட்டங்களும் வேறு. பிரான்ஸ்சின் சட்டங்களும் வேறு.
புலம் பெயந்த எம்மவர்களுக்குள் கூட அதிகமானோர் ஜேர்மனியால் புகுந்து தாம்  தமக்கு பிடித்த நாடுகளுக்கு போய் சேர்ந்தார்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களின் போது நாடு முழுவதும் 80 பேர் கைது!

பிரான்ஸ் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களின் போது நாடு முழுவதும் 80 பேர் கைது!

பிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் போது இதுவரை நாடு முழுவதும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைநகரில் மட்டும் 33 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டங்களின் போது, தென்மேற்கு நகரமான போர்டோக்ஸில் உள்ள நகர மண்டபம் தீக்கிரையாக்கப்பட்டது.

எனினும், துரிதமாக செயற்பட்ட தீயணைப்பு வீரர்களால் இது விரைவாக அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கு யார் காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பரிஸில், பொதுவாக அமைதியான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும், அவ்வப்போது மோதல் நிலை காணப்பட்டது. இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள், கடை ஜன்னல்களை அடித்து நொறுக்கிய வீதி தளபாடங்களை இடித்தார்கள் மற்றும் மெக்டொனால்ட் உணவகத்தைத் தாக்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைநகரில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பதற்றத்தை தணிக்க முயன்றனர்.

பிரான்ஸ் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கினர், பரிஸில் 119,000 பேர் இருந்தனர் என்று உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2023/1328439

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரின் சர்வாதிகாரியின் ஆட்சிக்கு முடிபு வந்து ஜனநாயகவாதிகள் ரஷ்யாவில் ஆட்சி வந்தால் பிரான்சில் நடைபெறுவதை போன்று ஆர்பாட்டங்கள் நடத்தும் உரிமைகள் ரஷ்யர்களுக்கு கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பிரான்ஸ் அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களின் போது நாடு முழுவதும் 80 பேர் கைது!

இப்படியான அழிவுகள் வரும்/செய்கின்றார்கள் என்பதாலேயே ஒரு சில நாடுகளில் ஒரு சில போராட்டங்களுக்கு தடை விதிக்கின்றார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இப்படியான அழிவுகள் வரும்/செய்கின்றார்கள் என்பதாலேயே ஒரு சில நாடுகளில் ஒரு சில போராட்டங்களுக்கு தடை விதிக்கின்றார்கள்.

Russia Flag Gif GIFs | Tenor30 Great China Flag Gifs

அதனால்... ரஷ்யா, சீனா போன்ற அரச தலைவர்களின் தூர நோக்கு பார்வையை பாராட்ட 
நம்ம ஆட்களுக்கு மனம் வராது. 😂

ஏனென்றால்... அவர்களின் மூளையை, வெள்ளைக்காரன்
வாஷிங் மெசினில் போட்டு கழுவி, காயவைத்து... இஸ்திரி போட்டு வைத்துள்ளதால்..

சனநாயகம் என்று.. கிளிப்பிள்ளை மாதிரி, கீக்கீ.. என்று  பீத்திக் கொண்டு திரிய வேண்டியதுதான்.  🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

Russia Flag Gif GIFs | Tenor30 Great China Flag Gifs

அதனால்... ரஷ்யா, சீனா போன்ற அரச தலைவர்களின் தூர நோக்கு பார்வையை பாராட்ட 
நம்ம ஆட்களுக்கு மனம் வராது. 😂

ஏனென்றால்... அவர்களின் மூளையை, வெள்ளைக்காரன்
வாஷிங் மெசினில் போட்டு கழுவி, காயவைத்து... இஸ்திரி போட்டு வைத்துள்ளதால்..

சனநாயகம் என்று.. கிளிப்பிள்ளை மாதிரி, கீக்கீ.. என்று  பீத்திக் கொண்டு திரிய வேண்டியதுதான்.  🤣

நீங்கள் சொன்ன இரண்டு நாடும் நோகாமல் நொங்கு குடிக்குது. அவர்களுக்கு சர்வதேசமாவது கத்தரிக்காயாவது...... :406:
நீ சாம்பார ஊத்து பீலிங் ....:hahaha:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இதே சம்பவம் ரஷ்யாவில் நடந்தால்?????   :cool:

ஆர்ப்பாட்டம் என்பது சனநாயகத்தின் ஒரு அங்கம்தான. பிறகேன் இந்த அவலம்? 

11 hours ago, குமாரசாமி said:

உலகில் எல்லா நாடுகளும் ஒரே மாதிரி  இருப்பதில்லை.சட்டங்களும் ஒரே மாதிரியானவை இல்லைத்தானே? ரஷ்யாவின் சட்டங்களும் வேறு.சீனாவின் சட்டங்களும் வேறு ஜேர்மனியின் சட்டங்களும் வேறு. பிரான்ஸ்சின் சட்டங்களும் வேறு.
புலம் பெயந்த எம்மவர்களுக்குள் கூட அதிகமானோர் ஜேர்மனியால் புகுந்து தாம்  தமக்கு பிடித்த நாடுகளுக்கு போய் சேர்ந்தார்கள். 

இதற்கு ஒருவரிடமும் இருந்து  பதில் வராது. பதில் வருமானால்  எல்லோரினது நிறமும் வெளிவருமே ? 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

புரின் சர்வாதிகாரியின் ஆட்சிக்கு முடிபு வந்து ஜனநாயகவாதிகள் ரஷ்யாவில் ஆட்சி வந்தால் பிரான்சில் நடைபெறுவதை போன்று ஆர்பாட்டங்கள் நடத்தும் உரிமைகள் ரஷ்யர்களுக்கு கிடைக்கும்.

ரசியாவிற்கு ஏன் சனநாயகம் வேண்டும்?  அவர்கள் வேண்டுமென அழுதார்களா? நீங்கள் ஏன்  அங்கே சனநாயகம் வரவேண்டும் என அழுகிறீர்கள்? 

2 hours ago, தமிழ் சிறி said:

Russia Flag Gif GIFs | Tenor30 Great China Flag Gifs

அதனால்... ரஷ்யா, சீனா போன்ற அரச தலைவர்களின் தூர நோக்கு பார்வையை பாராட்ட 
நம்ம ஆட்களுக்கு மனம் வராது. 😂

ஏனென்றால்... அவர்களின் மூளையை, வெள்ளைக்காரன்
வாஷிங் மெசினில் போட்டு கழுவி, காயவைத்து... இஸ்திரி போட்டு வைத்துள்ளதால்..

சனநாயகம் என்று.. கிளிப்பிள்ளை மாதிரி, கீக்கீ.. என்று  பீத்திக் கொண்டு திரிய வேண்டியதுதான்.  🤣

வெள்ளை எது செய்தாலும் அது மேன்மையானதுதானே ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆர்ப்பாட்டம் என்பது சனநாயகத்தின் ஒரு அங்கம்தான. பிறகேன் இந்த அவலம்

இதற்கு ஒருவரிடமும் இருந்து  பதில் வராது. பதில் வருமானால்  எல்லோரினது நிறமும் வெளிவருமே

சரியாக சொன்னீர்கள்👍

15 hours ago, குமாரசாமி said:

இதே சம்பவம் ரஷ்யாவில் நடந்தால்?????   :cool:

இங்கு பலர் புட்டினை திட்டி தீர்த்திருப்பார்கள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.