Jump to content

முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல்


%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%

“இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பௌத்த மதத்துக்கும் – சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத் தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இது பௌத்த சிங்கள நாடு. இப்படி இருக்கும் போது நாட்டின் எந்தப் பகுதியும் தமிழருக்குச் சொந்தமானவை அல்ல. இன, மத, பண்பாட்டு, கலாசார ரீதியில் எதையும் உரிமை கோரத் தமிழருக்குத் எந்த தகுதியும் இல்லை.

தமிழர் வாழும் பகுதிகளை பௌத்தர்கள் – சிங்களவர்கள் அபகரிக்கின்றார்கள் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பௌத்த மதத்துக்கும் – சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.


https://vanakkamlondon.com/news/2023/03/189042/

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் விமல், ஜின்னா இல்லாமல் போயிருந்தா டெல்லிக்காரன், பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும் வாழும் முஸ்லீக்களுக்கு இப்படித்தான் துண்ணூறு அடிச்சிருப்பான், என்ன? 🤔

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுவரை மகிந்தரோடு நின்று நாட்டைக் கொள்ளையடிச்சதும் இதே இனவாதி தான். இவருக்கு நாடு என்ற ஒன்றிருந்தால் தானே. அது இப்ப சீனாவுக்கும்.. ஹிந்தியாவுக்கும்.. ஐ எம் எவ்வுக்கும் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது தெரியாது போலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு கொஞ்சம் வந்திட்டுது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

காசு கொஞ்சம் வந்திட்டுது.

எழுத வந்தது நன்றி .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வாற வருசம்.

இப்பவே தொடங்கினாத்தான் சரி.

இவனும், சரத் வீரசேரவும் இன வாதத்தில் முதலீடு செய்கிறார்கள். கோத்தாவுக்கு 69% போட்டு கை கொடுத்த சிங்களவர் மீது பெரும் நம்பிக்கை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வாற வருசம்.

இப்பவே தொடங்கினாத்தான் சரி.

இவனும், சரத் வீரசேரவும் இன வாதத்தில் முதலீடு செய்கிறார்கள். கோத்தாவுக்கு 69% போட்டு கை கொடுத்த சிங்களவர் மீது பெரும் நம்பிக்கை!

இனவாதிகள் தான் வரணும் அதிலும் சைனாவுக்கு  சார்பானவன் வரணும் .சிங்களவர்கள் இனவாதிகளை  வளர்த்து விட்ட  பலனை இனித்தான் அனுபவிக்க போகிறார்கள் கண்டதுகளுக்கும்  வரி கொடுத்து வாழனும் எனும் நிலை இலங்கையில் உருவாகும் .

Edited by பெருமாள்
பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்போது கருணா மாதிரி ஒரு கோடீஸ்வரர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்த நாட்டில் தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பௌத்த மதத்துக்கும் – சிங்கள இனத்துக்கும் உரியவை என்பதைத் தமிழர்களும் அவர்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ள உறுப்பினர்களும் கவனத்தில்கொள்ள வேண்டும்.”

இதே அரசியலைத்தான் தமிழர்விடுதலைக்கூட்டணியில் இருந்தவர்கள் தம் பதவிக்காக செய்தார்கள்.

என்னைப்பொறுத்தவரைக்கும் கேடு கெட்டவர்கள்.

என்ன ஒன்று.......அவர்களில்  பலர் துரோகத்தின் பெயரால் கொலை செய்யப்பட்டதால் மட்டும் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவர்களாகி விட்டனர்.

இல்லையேல் இன்றும் சம்பந்தனைப்போல் சேடம் இழுத்துக் கொண்டிருப்பார்கள்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இதே அரசியலைத்தான் தமிழர்விடுதலைக்கூட்டணியில் இருந்தவர்கள் தம் பதவிக்காக செய்தார்கள்.

என்னைப்பொறுத்தவரைக்கும் கேடு கெட்டவர்கள்.

என்ன ஒன்று.......அவர்களில்  பலர் துரோகத்தின் பெயரால் கொலை செய்யப்பட்டதால் மட்டும் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவர்களாகி விட்டனர்.

இல்லையேல் இன்றும் சம்பந்தனைப்போல் சேடம் இழுத்துக் கொண்டிருப்பார்கள்.:cool:

நீலனை போடும்போதே சம்பந்தனையும் போட்டு இருக்கணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சச்சியர் எங்கே? 

😀

அவர் கிறிஸ்தவர்களை விரட்டியடிப்பதில் பிஷி. அவரை விட்டுவிடுங்கள்  தொந்தரவு செய்யாதீர்கள். இவரோ  இது சிங்கள பவுத்த நாடு என நம்மை விரட்டியடிக்கிறார், அவரோ கிறிஸ்தவர்களை விரட்டுறார். பக்குவப்படாத, நடந்தவற்றில் இருந்து பாடம் படிக்காத இளம் குருத்து அவர். வயத்துக்குத் தக்க அறிவு இல்லாவிட்டாலும் வாழ்ந்த அனுபவமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முழு நாடும் சிங்களவர்களுக்கே சொந்தம்! - விமல்

ஜேஆர் தொடக்கி வைத்ததை இன்றுவரை வந்த தலைவர்கள் சத்தமில்லாமல் செய்து கொண்டே வருகிறார்கள்.

எனவே விமல் தான் துவேசம் பிடித்தவர் மற்றையோர் எல்லாம் நல்லவர்கள் என்ற மாதிரி யாரும் எண்ண வேண்டாம்.

1 hour ago, பெருமாள் said:

நீலனை போடும்போதே சம்பந்தனையும் போட்டு இருக்கணும் .

ஏன் பெருமாள்

சம்பந்தரைப் போட்டால் அடுத்து ஒரு சுமந்திரன் ஒரு சாணக்கியன் இப்படி வரிசையில் வந்து கொண்டு தானே இருப்பார்கள்.

வரிசையில் நின்று வாக்கு போட்டுவிட்டு எப்படி இப்படி கதைப்பது?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.