Jump to content

இலங்கை அமைச்சர்களின் தென்னாபிரிக்க விஜயம் குறித்து தென்னாபிரிக்க மனித உரிமை அமைப்புகள் அதிருப்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அமைச்சர்களின் தென்னாபிரிக்க விஜயம் குறித்து தென்னாபிரிக்க மனித உரிமை அமைப்புகள் அதிருப்தி

Published By: RAJEEBAN

28 MAR, 2023 | 04:50 PM
image

இலங்கையின் யுத்தகுற்றத்துடன் தொடர்புடைய நபர்களை நல்லிணக்கம் மற்றும் நிலைமாற்றுக்கால நீதி அறிந்துகொள்வதற்காக  தென்னாபிரிக்க அரசாங்கம் அழைத்துள்ளமை குறித்து அந்த நாட்டின் மனித உரிமை அமைப்புகள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இதனை தெரிவித்துள்ளது.

 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைச்சர் நலெடி பன்டுரின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர் என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்கஅனுபவங்களை கற்றுக்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தெரிவிக்கப்பட்ட நோக்கங்கள் உயர்வானவை என்ற போதிலும் தொடரும் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் சிவில் சமூகம் ஒடுக்கப்படுவது மற்றும் 1983 முதல் 2009 வரையான உள்நாட்டு போரின் போது இழைக்கப்பட்ட மோசமான மனித உரிமை மீறல்களிற்கு குற்றவியல் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறியது இலங்கை அதிகாரிகளிற்கான தென்னாபிரிக்காவின் அழைப்பு கரிசனையளிக்கின்றது எனவும் தென்னாபிரிக்காவின் மனித உரிமை அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளில் சில  பாரதூரமான மனித குலத்திற்கு எதிரான மற்றும் யுத்த குற்றஙகள் போன்ற பாரிய மனித உரிமை மீறல்களாக இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது எனவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் குறுகிய பகுதிக்குள் குறுகிய காலத்தில் 40,000 முதல் 70,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என ஐநா மதிப்பிட்டுள்ளது. 

தென்னாபிரிக்காவிற்கு அழைக்கப்பட்டுள்ள இரண்டு அதிகாரிகளும் பார}தூரமான சர்வதேச குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நெருக்கமானவர்கள் என  தெரிவித்துள்ள  தென்னாபிரிக்காவின் மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் பாரதூரமான சர்வதேச குற்றங்கள் தொடர்பில்  சமீபத்தில் சிங்கப்பூரில் சர்வதேச நியாயாதிக்த்தின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளன.

2019 இல் ராஜபக்சவிற்கு எதிராக வேறு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தென்னாபிரிக்காவின் மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச தான் ஆட்சியில் இருந்த காலத்தில் தனது சகாக்கள் சிலரை உயர்பதவிகளில் நியமித்தார்.

இவர்களில் சிலருக்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக அமெரிக்கா கனடா போன்ற நாடுகள் தடைகளை விதித்துள்ளன.

வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி  கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட சட்டத்தரணி அவருக்காக பல ஊழல் வழக்குகளில்  ஆஜரானார் வெளிவிவகார அமைச்சராவதற்கு முன்னர் அவர் நீதியமைச்சராக பதவி வகித்தார் அந்த காலத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்  கோட்டாபய ராஜபக்ச எனவும் தென்னாபிரிக்க மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/151622

Link to comment
Share on other sites

24 minutes ago, ஏராளன் said:

வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி  கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட சட்டத்தரணி அவருக்காக பல ஊழல் வழக்குகளில்  ஆஜரானார் வெளிவிவகார அமைச்சராவதற்கு முன்னர் அவர் நீதியமைச்சராக பதவி வகித்தார் அந்த காலத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்  கோட்டாபய ராஜபக்ச எனவும் தென்னாபிரிக்க மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கோத்தபயவின் போர்க்குற்றத்தை காப்பாற்ற இனவாத சிறிலங்கா அரசின் பிரதிநிதியாக ஜெனிவா சென்றவர் அலி சப்ரி.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.