Jump to content

யாழ் இணையம் - 25 ஆவது அகவை - வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 30 மார்ச் 2023 தனது 25 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள்.

spacer.png

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்..💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 animiertes-geburtstag-bild-0213.gif

இன்று 25´வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் யாழ். இணையத்துக்கு
மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழிய பல்லாண்டு. animiertes-geburtstag-bild-0218.gif

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Happy Birthday GIFs | Tenor

அன்பான யாழ் இணையமே உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சீரும் சிறப்புமாய் தமிழன்னைபோல் காலம் கடந்தும் வாழி ......!  💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 30 மார்ச் 2023 தனது 25 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த மோகனுக்கு யாழ் இணைய நிர்வாகத்தினரினதும், உறுப்பினர்களினதும் நன்றிகள் என்றென்றும் இருக்கும்."

யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்


 "நாமார்க்கும் குடியல்லோம்"

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று 30 மார்ச் 2023 தனது 25 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துகள்

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.களத்தின் 16´வது ஆண்டு நிறைவின் போது.. 
யாழ்.கள உறவுகளான...  
@வல்வை சகாறா கனடா, @தமிழ்சூரியன் (சேகர்) ஒல்லாந்து, @Inuvaijur Mayuran சுவிற்சலாந்து, நாதன் ஒல்லாந்து ஆகியோரின்  கூட்டு  முயற்சியின் பயனாக உருவான பாடல்.

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழிணையத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கடந்த 18 வருடங்களாக யாழுடன் நானும் பயணித்ததை நினைக்க சந்தோசமாகவும் பிரமிப்பாகவும் உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழுக்கு வணக்கமுங்கோ

Yarl.JPG

-wiki

 

 

யாழ் கருத்துக்கதளத்திடம் உள்ள காணொளிகளைத் தந்தால் அவற்றை வெளியிட்டு அதிலுள்ள தகவல்களை இளைய தலைமுறைகளை அறியச்செய்யலாம் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்து ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.
 

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அகவை  இருபத்தைந்து காணும் என் இனிய ஆலமரமாம் யாழ்களமே  வாழ்க நீடூழி . எத்தனையோ தடங்கல்கள் சோதனைகள் பிரச்சினைகள் வந்த போதும்  கட்டிக்க காத்த நிர்வாகிக்கும்  மட்டுறுத்தினருக்கும்  சக யாழ் உறவுகளுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நான் முதலில் கண்ட தமிழ் உரையாடும்  பொழுது போக்குத் தளம். எததனையோ  பறவைகளாக  வந்தவர்களும் இடையில்பறந்தவர்களும் கருத்து மோதலும்  சண்டை சமா தானங்களும் கண்ட களம்.  இன்னும் காலூன்றி நிற்கும் உறவுகளுக்கும்  வாழ்த்துக்கள். புதிய உறவுகள் வருவது தற்போது குறைவு. வந்தாலும் தரித்து நிற்பதில்லை .சிலரின் வேடிக்கைகளும்  சிரிப்புக் கருத்துக்களும்  உயிரோடடமாய் வைத்திருக்கின்றன. ஆனாலும் சில அலடடல்களுக்கும் குறைவில்லை. எந்த புயலடித்தாலும் சந்ததி சந்தியாக யாழ் களம் வாழ வேண்டும். நானும் பதினைந்து வருடங்களாக இணைந்து இருப்பதில் பெருமை படுகிறேன்  . வாழ்க தமிழ். வாழ்க யாழிணையம்  . 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, தமிழ் சிறி said:

யாழ்.களத்தின் 16´வது ஆண்டு நிறைவின் போது.. 
யாழ்.கள உறவுகளான...  
@வல்வை சகாறா கனடா, @தமிழ்சூரியன் (சேகர்) ஒல்லாந்து, @Inuvaijur Mayuran சுவிற்சலாந்து, நாதன் ஒல்லாந்து ஆகியோரின்  கூட்டு  முயற்சியின் பயனாக உருவான பாடல்.

நல்ல பாடல்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழிணையத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். யாழை நிர்வாகிக்கும் நிர்வாகிகளுக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழிணையத்தின் இருபத்தைந்தாவது அகவை தினம் யாழை தினமும் ஆராதிக்கும் உறவுகளுக்கும் யாழுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழகளத்திற்கு மகிழ்ச்சிகரமான 25 ஆவது ஆண்டுகள் நிறைவு வாழ்த்துக்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.


நானும் இந்த இணையத்துடன் சேர்ந்து பயணித்தவன் என்ற வகையில் பெருமிதம் அடைகின்றேன். பல பற்பல சிரமங்களின் மத்தியிலும் இந்த களத்தை நடத்தி வந்த மோகனுக்கு பல்லாயிரம் கோடி நன்றிகள். யாருமே சிந்தித்து பார்க்க முடியாத அளவிற்கு தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றியுள்ளீர்கள். அதாவது  இன்றைய இணைய உலகில் தமிழ் படிக்க,எழுத என ஒரு மேடையை அமைத்து கொடுத்த ஆசான் நீங்கள் மட்டுமே.அதற்கு என்னைப்போன்றோர் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். அதிலும் போர்க்காலங்கள் முதல் அனைத்து கருத்துக்களையும் உள்ளவாங்கி நீதி நேர்மை  என நடு நிலமை காத்த பெரியவான் நீங்கள் என நான் நினைக்கின்றேன். நான் உங்களை மட்டும் வாழ்த்தி பாராட்டுவதற்கான முக்கிய காரணம் 25 வருடம் உடல்,உளரீதியாகவும் நிதி ரீதியாகவும் சுமைதாங்கி போல் இருந்துள்ளீர்கள்.

நன்றி 🙏🏼

இன்றைய நிர்வாகத்தின் கவனத்திற்கு!

யாழ்களம் ஆரம்பித்த காலம் தொடக்கம் பல்வேறு சர்ச்சைகளையும்,வேண்டத்தகாத விவாதங்களையும் தாண்டியே வெள்ளி விழா கொண்டாடுகின்றது. அதிலும் ஈழ போர்க்காலங்களில் விடுதலைக்கு எதிரான கருத்துக்களும் மாவீரர்களுக்கு எதிரான கருத்துக்களும் கொச்சைப்படுத்திய கருத்துக்களும் எண்ணில் அடங்காதவை. அவை அனைத்தையும் எதிர்த்து கருத்து போர் நடந்ததும் அனைவருக்கும் தெரியும். இதனால் பல உறவுகளின் தன்னிச்சையான விலகலும் கட்டுப்படுத்தல் மூலம் விலகியதும் சம்பவங்களாகவே இன்றும் இருக்கின்றது.விலகியவர்கள் கூட  ஒரு துளியேனும் யாழ்களத்தை விமர்ச்சித்தது கிடையாது.அவர்கள் யாழ்களம் மீது வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் மெச்ச வைக்கின்றது.

வெள்ளி விழா காணும் யாழ்களத்தை பற்றி சொல்ல பல்லாயிரம் விடயங்கள் இருந்தும் யாழ்கள நிர்வாகத்தின் வெள்ளிவிழா அறிக்கையில் உக்ரேன் விவாதத்தை முன்னிலைப்படுத்தி "ஓரிருவர்" என விளித்து கூறி நம்பகத்தன்மையற்ற தகவல்களை பரப்புவதாகவும் அதை நீங்கள் முறியடித்தது போல் வெற்றிவாகை சூடுவதைப்போலவும் அறிக்கை விடுத்துள்ளீர்கள். ஆனால் இந்த உக்ரேன் செய்தியில் வரும் விவாதங்களுக்கு யார் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை இன்றைய நிர்வாகம் கவனிக்க தவறியதையிட்டு மிக மனவருத்தமடைகின்றேன். இருப்பினும் 25 வருட யாழ்கள வரலாற்றில்  ஈழப்போர் கருத்துக்களில் ஆறா வடுக்கள் இருக்கும் போது உக்ரேன் வடுக்கள் உயரமாக தெரிவதன் காரணம் யாமறியேன் பராபரமே.

முதற்கண் இத்திரியிலிருந்து ஓய்வெடுக்கின்றேன்.🙏🏼

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

advertisement_alt

இணையவலை உலகில் தமிழில் உரையாடல் வெளிக்கான கருத்தாடல்களைச் செய்வதற்கான களமாகவும், கருத்துமோதல்களையும் தெளிவுகளையும் ஏற்படுத்தும் களமாகவும், சிந்திக்க, சிரிக்க, படிக்க, எழுத, படைக்க எனப் பல்வகைமைகளிலும் ஒட்டி உறவாடிச் செல்லும் உறவாகப் பயணிக்கும் உனக்கு அகவை 25.

                 உறவுகள் வருவதும் போவதுமானபோதும் நீ மட்டும் நிமிர்வோடும் தெளிவோடும் தமிழுக்கு ஆற்றிவரும் பணி ஒப்பிடமுடியாதது. உனது பணி இன்னும் பல்லாண்டு தொடர வாழ்த்துகின்றேன். வாழிய வாழிய வாழியவே!

                            இதனைப் பல சிரமங்களுக்கு மத்தியில் நகர்த்திவந்த மோகன் அவர்களதும் மற்றும் அனைத்து நிர்வாகத்தினரதும் கரங்களை நன்றியோடு பற்றிக்கொள்கின்றேன். தொடரட்டும் உங்கள் பணி. 
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல்" என்ற வள்ளுவப்பெருந்தகையின் ஈரடிகள் யாழுக்குச் சமர்ப்பணம்.
அன்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நல்ல நாளில் இங்கிருந்து அற்ப காரணம்களுக்கு பிரிந்து போனவர்களை மீண்டும் உள் கொண்டுவருவதால் மிக நல்லது யார் பூனைக்கு மணி கட்டுவது @தமிழ் சிறி இதில் திறமையானவர் நம்மை இன்னும் யாழுடன் இணைத்து வைத்து இருப்பவர் .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழிணையத்துக்கு இனிய 25 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தமிழரின் பெருமை சேர்க்க  அறிவியல், வணிகம், இலக்கியம் போன்ற இன்னாரென்ன துறைகளில் மக்களின் அறிவை பெருக்க யாழ் இணையம் செய்த சேவைகளை நினைவில் கொள்வோம். 

நன்றி யாழ் இணைய நிர்வாகத்தினரே. தங்கள் பணி சிறப்பானது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.களத்தின் 25’வது அகவையை முன்னிட்டு, @Paanch அண்ணை அவர்கள்
தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன்…
அதனை ஆரம்பித்த @மோகன் அண்ணாவுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வெள்ளி விழா காணும் யாழ்களத்தை பற்றி சொல்ல பல்லாயிரம் விடயங்கள் இருந்தும் யாழ்கள நிர்வாகத்தின் வெள்ளிவிழா அறிக்கையில் உக்ரேன் விவாதத்தை முன்னிலைப்படுத்தி "ஓரிருவர்" என விளித்து கூறி நம்பகத்தன்மையற்ற தகவல்களை பரப்புவதாகவும் அதை நீங்கள் முறியடித்தது போல் வெற்றிவாகை சூடுவதைப்போலவும் அறிக்கை விடுத்துள்ளீர்கள். ஆனால் இந்த உக்ரேன் செய்தியில் வரும் விவாதங்களுக்கு யார் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை இன்றைய நிர்வாகம் கவனிக்க தவறியதையிட்டு மிக மனவருத்தமடைகின்றேன். இருப்பினும் 25 வருட யாழ்கள வரலாற்றில்  ஈழப்போர் கருத்துக்களில் ஆறா வடுக்கள் இருக்கும் போது உக்ரேன் வடுக்கள் உயரமாக தெரிவதன் காரணம் யாமறியேன் பராபரமே.

 

இது ஒரு தவறான கட்டுடைப்பு! @Kapithan மகாராஜா RT இல் இருந்து பிரச்சாரங்களை ஓயாமல் செய்துகொண்டுதானே இருக்கின்றார்😂

 

நான் அந்த பதிவை ஆறுதலாக வாசித்துப் பார்த்தேன்.

கடந்த சில வருடங்களாக உலகம் கோவிட்-19, உக்கிரேன் மீதான ரஷ்யாவின் யுத்தம், பாரிய பொருளாதார வீழ்ச்சி எனப் பல நெருக்குவாரங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நெருக்கடி மிகுந்த உலகில், போலிச் செய்திகளும், சதிக்கோட்பாட்டை பரப்பும் தகவல்களும் பரவலாகவே பரவி சாதாரண மக்களை குழப்பத்திற்குள் உள்ளாக்குகின்றன. தவறான கருத்தியல்களைத் திணிக்கின்றன. யாழ் கருத்துக்களம் மூலமாகவும் நம்பகத்தன்மையற்ற தகவல்களை இடையிடையே ஒரு சிலர் தெரிந்தோ தெரியாமலோ பரப்ப முயற்சிக்கின்றபோதிலும், அவை அவதானிக்கப்பட்டு நீக்கப்படுகின்றன. யாழ் களம் தொடர்ந்தும் நம்பகத்தன்மையான செய்திகளையும், தகவல்களையும் பகிரும் இடமாகவே இருக்கும் என்பதில் உறுதியாக உள்ளது.”

 

மேலேயுள்ளதை கடந்த வருடம் பெப்ரவரியில் ஆரம்பித்த ரஷ்யாவின் உக்கிரேனின் ஆக்கிரமிப்போடு மட்டும் குறுக்கி, அதற்கு முன்னர் கொரோனா பற்றிய தவறான தகவல்களும், தடுப்பூசி பற்றிய பீதியூட்டும் தகவல்களும், ஏன் தடுப்பூசி போடவே கூடாது என்ற விளக்கங்களும் யாழில் வந்து நீக்கப்பட்டிருந்தன. அவையெல்லாம் மறந்துவிட்டதா?

 

எனக்குத் தெரிந்து யாழில் நிர்வாகம் அடிக்கடி பாவிப்பது:

ஆக்கபூர்வமான கருத்தாடல்

பண்பான கருத்தாடல்

சமூகப் பொறுப்பு

 

ஆனால் இப்போதும் வரும் கருத்துக்கள் சில மேலுள்ளவற்றை கிஞ்சித்தும் கருத்தில்கொள்வதில்லை. அரட்டையையும், அலம்பல்களையும்தான் அதிகம் காணமுடிகின்றது. சீரியஸான விடயங்களிலும் பக்குவம் இல்லாமல் அசட்டுத்தனமான கருத்துக்கள் வருகின்றன. அவை எந்த வகையிலும் ஆக்கபூர்வமான விவாதங்களுக்கும் வழிகோலாது. 

  • Like 4
  • Thanks 3
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.