Jump to content

யாழ் இணையம் - 25 ஆவது அகவை - வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

எனக்குத் தெரிந்து யாழில் நிர்வாகம் அடிக்கடி பாவிப்பது:

ஆக்கபூர்வமான கருத்தாடல்

பண்பான கருத்தாடல்

சமூகப் பொறுப்பு

ஆனால் இப்போதும் வரும் கருத்துக்கள் சில மேலுள்ளவற்றை கிஞ்சித்தும் கருத்தில்கொள்வதில்லை. அரட்டையையும், அலம்பல்களையும்தான் அதிகம் காணமுடிகின்றது. சீரியஸான விடயங்களிலும் பக்குவம் இல்லாமல் அசட்டுத்தனமான கருத்துக்கள் வருகின்றன. அவை எந்த வகையிலும் ஆக்கபூர்வமான விவாதங்களுக்கும் வழிகோலாது. 

எனக்குத்தெரிய என்னைப்போன்ற ஒரு சிலர் மட்டும் தான் அரட்டை,அலம்பல்களை செய்கின்றனர். மிகுதி உறவுகள் ஆக்க பூர்வமாக கருத்தாடலாம் அல்லவா? ஆக்கபூர்வமான திரிக்குள் அல்லது உரையாடல்களுக்குள் என்னைப்போன்ற அலம்பல்கள் நுழைவதில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டிலிருந்து பலரும் உறுப்பினராகி கலந்துரையாடிவர்கள், இப்பொழுது யாரும் கருத்துக்களை பதிவதில்லை அல்லது ‘ஆண்டு 2009தோடு  எல்லாம் முடிந்துவிட்டது, இங்கே வருவதற்கு இனியென்ன தேவை?’ என அசிரத்தையாக இருக்கலாம். ஈழ உறவுகளும் அப்படியே ஒதுங்கிவிட்டார்கள் போலும்.

கிட்டதட்ட 2005லிருந்து ஒரே முனைப்புடன் வாசித்து வருகிறேன். நான் இங்கே உறுப்பினராகி 14 வருடமாகிவிட்டது.

களத்தில் இணைந்த புதிதில் ஒரு யாழ் கள பெரியவர் ‘இன்னாப்பா நீ.. அப்பா டக்கரா?’ என்ற மாதிரி கேட்டுவிட்டார்.  ‘அப்படியெல்லாம் விடலாமா?’ என இங்கே தொடர்ந்தேன். அப்பெரியவர் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ்க!

ஈழம் பற்றிய நுணுக்கங்களை யாழ் களமே எனக்கு கற்றுவித்தது. அவ்வகையில் யாழ் களத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

யாழ் களம் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்! 

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 யாழ் தங்கச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தறிவித்தவன் இறைவன்.. நான் கதை கவிதை கட்டுரை எழுதிப்பழகியது ஊக்கம்தந்தது இந்த யாழ்தான்.. அது ஒரு பொற்காலம் எனக்கு.. அந்த இனிய நினைவுகளைத்தந்த யாழ் இன்னும் பல்லாண்டுகாலம் நீண்டு நிலைக்கவேண்டும்.. நான் பென்சன் எடுக்கும் காலத்தில் வாழ்வின் அஸ்த்தமகாலத்தில் வரப்போகும் தனிமையையும் மரணம் குறித்த பயத்தையும் போக்க இங்கு எழுதி உறவாடி கிடக்க இந்த யாழ் நீண்டு நிலைக்கவேண்டும் என்று சுயநலத்துடன் வாழ்த்துகிறேன்.. கவிஞர் பொயட் சொன்னதுபோல் சாகிறவரைக்கும் வாழுற வயசாகட்டும் நம் யாழுக்கு..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி விழா காணும் யாழ் இணையத்திற்கும் அதன் கருத்துக்களத்திற்கும் சவால்கள் தாண்டி நீண்டு நீடித்து நிலைக்க வாழ்த்துக்கள். யாழில் ஏ ஐயில் உரையாடும் காலமும் வர வேண்டும். 

இந்த இடத்தில் யாழின் ஸ்தாபகர் மோகன் அண்ணா.. யாழில் இயக்கத்தின் ஆரம்பத்தில் அவருக்கு துணை நின்ற சுரதா யாழ்வாணன் அண்ணா.. மற்றும் மறைந்த உறவுகளான சோழியன் அண்ணா.. சோம்பு அண்ணா உள்ளிட்ட யாழின் வளர்ச்சியோடு காலத்துக்கு காலம் கூடிப் பயணித்த பயணித்துக் கொண்டிருக்கும் சக யாழ் சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

சீரியஸான விடயங்களிலும் பக்குவம் இல்லாமல் அசட்டுத்தனமான கருத்துக்கள் வருகின்றன. அவை எந்த வகையிலும் ஆக்கபூர்வமான விவாதங்களுக்கும் வழிகோலாது. 

இந்த கருத்தை வழிமொழிகிறேன். எமது தமிழ் சமுதாயத்துக்குள் சீரியஸாக எடுத்து விவாதித்து,  எம்மை நாமே புடம் போட வேண்டிய பல விடயங்களை தாங்கிய விவாத தலைப்புகள் அதில்  வந்த காமடி விமர்சனங்களால் நீர்த்துப் போகச் செய்யப்பபடிருக்கின்றன. ஒன்று மில்லாத பல விடயங்கள் பக்கம் பக்கமாக நீண்டிருக்கின்றன. இவை யாழ் இணையத்தின் நோக்கங்களைப்  பாதிக்கும்.   உலகின்  மாற்றங்களை உள்வாங்கி எம்மை அதற்கேற்ப தகவமைத்து கொள்வது தமிழரின் பலத்தை அதிகரிக்கும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, island said:

இந்த கருத்தை வழிமொழிகிறேன். எமது தமிழ் சமுதாயத்துக்குள் சீரியஸாக எடுத்து விவாதித்து,  எம்மை நாமே புடம் போட வேண்டிய பல விடயங்களை தாங்கிய விவாத தலைப்புகள் அதில்  வந்த காமடி விமர்சனங்களால் நீர்த்துப் போகச் செய்யப்பபடிருக்கின்றன. ஒன்று மில்லாத பல விடயங்கள் பக்கம் பக்கமாக நீண்டிருக்கின்றன. இவை யாழ் இணையத்தின் நோக்கங்களைப்  பாதிக்கும்.   உலகின்  மாற்றங்களை உள்வாங்கி எம்மை அதற்கேற்ப தகவமைத்து கொள்வது தமிழரின் பலத்தை அதிகரிக்கும். 

 தயவு செய்து கோபிக்க வேண்டாம்.காமெடி விமர்சனங்களால் நீர்த்து போன முக்கியமான ஒரு திரியை உதாரணத்திற்கு எடுத்து காட்டுங்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

 தயவு செய்து கோபிக்க வேண்டாம்.காமெடி விமர்சனங்களால் நீர்த்து போன முக்கியமான ஒரு திரியை உதாரணத்திற்கு எடுத்து காட்டுங்கள். 

குமாரசாமி, நீங்கள் வெகுண்டெழ அது உங்களைக் குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்து அல்ல. ஒட்டு மொத்தமான கருத்துக்களத்தை பற்றிய பார்வை.   அதையொட்டிய கிருபனின் கருத்து நியாயமென எனக்கு பட்டதால் எனது பார்வையை  தெரிவித்தேன் அந்த தவறை  நானும்  செய்திருக்கலாம்.

எந்த திரி என்று  தேடி எடுத்து அதை இணைக்க அதிலும் குதர்ககமும் சண்டையும் தான் மிஞ்சும்.  அதை விட ஒவ்வொருவரும் சமூக பொறுப்பை உணர்ந்து தம்மை தாமே சுய பரிசோதனை செய்து கருத்திடுவது யாழ் இணையத்தின் மாண்பையும் சுதந்திரமான கருத்துக்களத்தின் நோக்கத்தையும் நிறைவேற்றும் என்பது எனது கருத்து. அதை ஏற்கவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

எனக்குத்தெரிய என்னைப்போன்ற ஒரு சிலர் மட்டும் தான் அரட்டை,அலம்பல்களை செய்கின்றனர். மிகுதி உறவுகள் ஆக்க பூர்வமாக கருத்தாடலாம் அல்லவா? ஆக்கபூர்வமான திரிக்குள் அல்லது உரையாடல்களுக்குள் என்னைப்போன்ற அலம்பல்கள் நுழைவதில்லை.

நீங்கள் கூறும் கருத்துக்கள் அலம்பல்களாக இல்லை. அவை உங்கள் உள்ளக்கிடக்கை, அபிப்பிராயம். உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றீர்கள். கருத்து முரண்பாடுகள் வரும்போதுதான் உங்கள் கருத்துக்களில் குறைகள் தென்படுகின்றனவோ என்னவோ. 

கிருபன் கூறும் விடயங்கள் பற்றிய நுணுக்கமான அவதானிப்புக்கள் எனக்கு இல்லை.  அதற்கு நேரமும் இடம்கொடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்த்துக்களும் இன்னும் பல ஆண்டுகள்  பலரை இணைத்து பொலிவுடன் திகழ வாழ்த்துகிறேன் 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.