Jump to content

கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

              கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

               இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும்.

                கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம்.

                இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம்.

                  அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன்.

a05a0d03-0eaa-456e-9d27-f6cdb9eb423e-Ori

                     இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம்.

                      மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன்.

                     இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன்.

பனி பொழியும்.

          

  • Like 16
Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்தி

ஈழப்பிரியன்

மலைப் பகுதியில் 6-7 மைல் போனதும் பெரிய மலையின் உச்சிக்கு ஏற்றிப் போவதற்கு கேபிள் கார்கள் ஓடிக் கொண்டே இருந்தது.மருமகன் சொந்தமாகவே சினோபோட் என்று சொல்லும் காலில் பூட்டி சறுக்கி விளையாடும் பலகை வைத்திரு

ஈழப்பிரியன்

பனிப் பொழிவு 2                          காலை 8 மணிக்கு இறங்க வேண்டும் என்று சொன்னாலும் 10 மணிக்குத் தான் இறங்க முடிந்தது. ஏறத்தாள 3 மணிநேர பயணம்.பிள்ளைகளுடன் போவதால் நின்றுநின்று போக வேண்டும்.மதி

தொடருங்கள் அண்ணா.  வெயில் காலத்தில் Lake Tahoe ஐ ரசித்த படியே நாள் முழுக்க இருக்கலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி  .தொடருங்கள் நனையக் காத்திருக்கிறோம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப் பார்க்க எங்கட fire brigade போல கிடக்குது..!

தொடருங்கோ…!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

தொடருங்கள் அண்ணா.  வெயில் காலத்தில் Lake Tahoe ஐ ரசித்த படியே நாள் முழுக்க இருக்கலாம்.

குளிர் காலங்களில் இந்த இடத்து மலைகளில் படிந்திருக்கும் பனிகள் தான் போடை காலத்தில் கரைந்து காய்ந்து போயிருக்கும் இடங்களுக்கு உயிரூட்டுவதாக சொல்கிறார்கள்.

கோடை காலத்தில் பனிகள் கரைந்த பின்பு மலை ஏறுவதற்கென்றே பலர் வருவதாக சொல்கிறார்கள்.

மொத்தத்தில் 365 நாளும் இந்தப் பகுதி ஒரே கொண்டாட்டம் தான்.

நுணா நீங்களும் இங்கு கும்மாளம் அடித்திருக்கிறீங்க போல.

3 hours ago, நிலாமதி said:

மிக்க மகிழ்ச்சி  .தொடருங்கள் நனையக் காத்திருக்கிறோம்.

அக்கா காய்ச்சல் தடிமன் வரப்போகுது.

2 hours ago, புங்கையூரன் said:

படத்தைப் பார்க்க எங்கட fire brigade போல கிடக்குது..!

தொடருங்கோ…!

புங்கை இந்த படத்தைப் பார்த்த மகன்

என்ன ஜெயிலில் இருந்து தப்பி வந்த மாதிரி இருக்கு என்றான்.

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

              கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

               இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும்.

                கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம்.

                இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம்.

                  அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன்.

a05a0d03-0eaa-456e-9d27-f6cdb9eb423e-Ori

                     இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம்.

                      மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன்.

                     இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன்.

பனி பொழியும்.

          

சென்ற இடத்தில்,   குளிருக்குள்   அவதிப் படுவது போல் நரக வேதனை கிடையாது.
அதைப் போன்ற அனுபவத்தை பகிரப் போகின்றீர்கள் என நினைக்கின்றேன்.
ஆரம்பமே தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டுகின்றது. 
தொடருங்கள் ஈழப்பிரியன். 👍🏽

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சென்ற இடத்தில்,   குளிருக்குள்   அவதிப் படுவது போல் நரக வேதனை கிடையாது.
அதைப் போன்ற அனுபவத்தை பகிரப் போகின்றீர்கள் என நினைக்கின்றேன்.
ஆரம்பமே தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டுகின்றது. 
தொடருங்கள் ஈழப்பிரியன். 👍🏽

பாம்பின் கால் பாம்பறியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

                இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம்.

செல்லம்!  உந்த உடுப்பு போட்ட நேரம் பேசாமல் அந்ததேரரை மாதிரி போர்த்து மூடிக்கொண்டு நிண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.:face_with_tears_of_joy:

a05a0d03-0eaa-456e-9d27-f6cdb9eb423e-Ori

 

Our Power Of People Party has won one seat from the national list in the 2020 General Election. Galagoda Aththe Gnanasara Thero could go to the parliament from their national list.

 

  • Thanks 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.....நல்லதொரு குளிர்மையான தொடர்......தொடருங்கள்......கொஞ்சம் படங்களையும் பகிருங்கள் பிரியன்.........👍  😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

 

பனி பொழியும்.

          

நானும் -20 குளிரை அனுபவிக்காத விளைவை Mongolia இல் அனுபவித்தேன்😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனிப் பொழிவு 2

                         காலை 8 மணிக்கு இறங்க வேண்டும் என்று சொன்னாலும் 10 மணிக்குத் தான் இறங்க முடிந்தது. ஏறத்தாள 3 மணிநேர பயணம்.பிள்ளைகளுடன் போவதால் நின்றுநின்று போக வேண்டும்.மதியம் சாப்பாட்டுக்கு வேறு நிற்க வேண்டும்.

                          புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே பேத்திக்கு பம்பஸ் மாற்ற வேண்டும் என்று ஒரு கோப்பிக் கடையில் நிற்பாட்டினார்கள்.கோப்பிக் கடையில் பிள்ளைகளுக்கு டோநட்டும் கோப்பியும் வாங்கினார்கள்.எனக்கு எப்போதும் கோன்மபின் சாப்பிடவே விருப்பம்.எந்தநாளும் என்றில்லை இப்படி எங்காவது போனால் விரும்பி சாப்பிடுவது இதைத் தான்.

                           அங்கிருந்து புறப்பட்டு சக்கரமன்ரோ பகுதியில் மதியம் சாப்பாடு.நிறைய கூட்டமாக இருந்தது.இவர்கள் கொஞ்சம் முதலே முன்பதிவு செய்தபடியால் சுலபமாக உள்ளே போய்விட்டோம்.சாப்பாடு கொண்டுவர தாமதமாகி விட்டது. கூட்டத்தைப் பார்த்து இதை எதிர்பார்த்தது தான்.சாப்பாடு திறமாக இருந்தது.

                           சக்கரமன்ரோவில் காலநிலையும் நன்றாகவே இருந்தது.இன்னும் ஒன்றரை மணிநேரம் ஓடினால் கொட்டேலுக்கு போய்விடலாம் என்றார்கள்.போகப் போக வழி நெடுகலும் ஏற்கனவே பனி கொட்டிக் கிடக்கிறது.இரு பக்கங்களிலும் பெரிய மலைகள்.அனேகமானவை பனி படிந்து போயிருந்தது.

                           ஒருசில இடங்களில் மக்கள் பனியில் சறுக்கி விளையாடுவதையும் கேபிள் கார்கள் மக்களை சுமந்து மேலே கூட்டிச் செல்வதையும் தூரத்தே காண முடிந்தது.இப்படி தான் நாங்களும் நாளைக்கு போகப் போகிறோம் என்று சொன்னார்கள்.நாளை நடக்க போவதை தெரியாமல் ரசித்துக் கொண்டே வந்தோம்.

                          நாங்கள் போனநேரம் ஏற்கனவே விளையாடி முடிந்து மூட்டை முடிச்சுக்களுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.எமக்காக ஒதுக்கப்பட்ட அறையில் எமது சாமான்களை வைத்துவிட்டு மகளும் மருமகனும் வெளியே போய் சுற்றி பார்க்க போனார்கள்.பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களுடன் நாமும் படுத்து தூங்கவிட்டோம்.

                           பிற்பகல் 5 மணி போல் இரவு சாப்பாட்டுக்காக நடந்தே போனோம்.சாப்பாடு மதிய சாப்பாடு போல இருக்கவில்லை.மனைவியும் நானும் வேளைக்கே சாப்பாட்டை முடித்து பக்கத்தில் இருந்த கடையில் நொறுக்குத்தீனி என்று சிப்ஸ் பிஸ்கட் என்று கூடுலாகவே வாங்கி வந்தோம்.அடுத்த நாள் இது தான் சாப்பாடு என்று யாருக்கு தெரியும்.

                           மீண்டும் கொட்டேலுக்கு வர 8 மணி ஆகிவிட்டது.நாளைக்கு நிறைய பனி பொழியப் போகுது.அதற்கு முதல் போய் விளையாடிப் போட்டு வர வேண்டும்.7 மணிக்காவது இறங்க வேண்டும் என்று அடுத்த நாள் போடுற உடுப்புகள் எல்லாம் இப்பவே எடுத்து வையுங்கோ என்று அவரவர் உடுப்புகளை எடுத்து வைத்துவிட்டு 9 மணிக்கே படுக்கைக்கு போய்விட்டோம்.

பனி பொழியும்.

8 hours ago, குமாரசாமி said:

செல்லம்!  உந்த உடுப்பு போட்ட நேரம் பேசாமல் அந்ததேரரை மாதிரி போர்த்து மூடிக்கொண்டு நிண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.:face_with_tears_of_joy:

a05a0d03-0eaa-456e-9d27-f6cdb9eb423e-Ori

 

Our Power Of People Party has won one seat from the national list in the 2020 General Election. Galagoda Aththe Gnanasara Thero could go to the parliament from their national list.

 

இப்ப இந்த உடைக்காரருக்கும் இடைஇடை அடி விழுகுது.
இது தேவையா?

8 hours ago, suvy said:

ஆஹா.....நல்லதொரு குளிர்மையான தொடர்......தொடருங்கள்......கொஞ்சம் படங்களையும் பகிருங்கள் பிரியன்.........👍  😂

பனியில் நனைய தயாராகுங்கள்.

5 hours ago, உடையார் said:

நானும் -20 குளிரை அனுபவிக்காத விளைவை Mongolia இல் அனுபவித்தேன்😂

இதுவும் ஒரு அனுபவம் தான்.

  • Like 5
Link to comment
Share on other sites

12 hours ago, ஈழப்பிரியன் said:

நுணா நீங்களும் இங்கு கும்மாளம் அடித்திருக்கிறீங்க போல.

என்னுடைய சில நண்பர்கள்  Folsom  ல் இருக்கிறார்கள். அங்கே வந்து தங்கி விட்டு பிறகு  லேக்குக்கு போறது சமரிலே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப இந்த உடைக்காரருக்கும் இடைஇடை அடி விழுகுது.
இது தேவையா?

 

சும்மா கலாய்ப்புக்குத்தானே எழுதினது.:beaming_face_with_smiling_eyes:

குடும்ப அங்கத்தவர்களையும் சேர்த்து சுவாரசியமாக எழுதுகின்றீர்கள். தொடருங்கள் வாசிப்போம்.:gutenmorgen:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே பனி பொழியக் காணொம்  ? பிசி போல ...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

எங்கே பனி பொழியக் காணொம்  ? பிசி போல ...

ஓம் அக்கா.மகள் இடம் மாறுகிறா.புதிய இடத்தில் இணைய வசதிகள் இன்னும் இல்லை.இப்ப தான் வேலை நடக்குது.சிலவேளை இன்று சரிவரலாம்.

தொடர்ந்து பனிக்குள் நின்றால் விறைத்துப் போவீர்கள் தானே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                   அடுத்த நாள் காலை 6 மணிக்கே எழும்பி ஆளாளுக்கு அதை எடு இதை எடு என்று ஒருமாதிரி தயாராகிவிட்டோம்.இறங்க முதல் வயிறு முட்ட ஒரு பிடிபிடித்தால்த் தானே போற இடங்களில் நிமிர்ந்து நிற்கலாம்.ஆனாலும் 7 மணிக்குத் தான் திறப்போம் என்று அறிவித்தல் வேறு தொங்குது.ஒரு மாதிரி காலைச் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு லேசான பனிப் பொழிவுக்குள் புறப்பட்டோம்.

                    நேரம் போகபோக பனி கொஞ்சம் கூடுதலாக கொட்டத் தொடங்கியது.ஒரு 15-20 நிமிட ஓடிய பின்பு ஒரு சிகப்பு வெளிச்சத்தில் நின்றோம்.அதில் வலது பக்கம் திரும்ப வேண்டும். கொஞ்சம் ஏற்றமாகவும் இருந்தது.

                      பச்சை விளக்கு வந்தவுடன் வலது பக்கம் திருப்பி 25 யார் போகவில்லை சில்லு சுத்த தொடங்கிவிட்டது.மருமகன் தான் சாரதி.நான் இறங்கி பின்னால் நின்ற வாகனங்களை சுற்றிப் போகுமாறு கையைக் காட்டினேன்.பின்னுக்கு நின்ற வாகனங்கள் 4 சில்லும் பிடித்தமான வாகனங்கள் அல்லது சக்கரங்களுக்கு சங்கிலி போட்டிருந்தனர்.எங்களை பரிதாபமாக பார்த்துக் கொண்டு போனார்கள்.

                     இயன்றளவு முயற்சிகள் செய்தும் ஒரு சாண் கூட முன்னேற முடியவில்லை.சரி பின்பக்கம் எடுத்தால் சுலபமாக போகும் எனவே முதலில் கொஞ்சம் கரைக்கு எடுத்து விடுவோம் என்று நான் சைகை காட்ட மருமகன் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கெடுத்தார்.

                     இப்படி எவ்வளவு நேரம் தான் நிற்பது வானுக்குள் சங்கிலி இருக்கிறது எடுத்து போடுவோமா என்று மருமகன் கேட்டு பதிலுக்கு காத்திராமல் தானே இறங்கி சங்கிலியை எடுத்துவந்தார்.ஆனால் இதுவரை அவரோ நானோ வாகனத்துக்கு சங்கிலி போட்ட அனுபவம் இல்லை.

                        அரை மணிநேரமாக சங்கிலியை போட முயன்றும் போட முடியவில்லை.எனது கால் பகுதி முழுவதும் பனிக்குள் நனைந்து விறைக்கத் தொடங்கிவிட்டது.சங்கிலி இந்த வானோடு வந்ததா என்று கேட்க இல்லை இது எமது காருக்கு வாங்கியது என்றார்.அதோடு கதை கந்தல்.

34a7fd98-7a28-4bab-8a8a-adc35463513e-Ori
பனி பொழியும்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

                   அடுத்த நாள் காலை 6 மணிக்கே எழும்பி ஆளாளுக்கு அதை எடு இதை எடு என்று ஒருமாதிரி தயாராகிவிட்டோம்.இறங்க முதல் வயிறு முட்ட ஒரு பிடிபிடித்தால்த் தானே போற இடங்களில் நிமிர்ந்து நிற்கலாம்.ஆனாலும் 7 மணிக்குத் தான் திறப்போம் என்று அறிவித்தல் வேறு தொங்குது.ஒரு மாதிரி காலைச் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு லேசான பனிப் பொழிவுக்குள் புறப்பட்டோம்.

                    நேரம் போகபோக பனி கொஞ்சம் கூடுதலாக கொட்டத் தொடங்கியது.ஒரு 15-20 நிமிட ஓடிய பின்பு ஒரு சிகப்பு வெளிச்சத்தில் நின்றோம்.அதில் வலது பக்கம் திரும்ப வேண்டும். கொஞ்சம் ஏற்றமாகவும் இருந்தது.

                      பச்சை விளக்கு வந்தவுடன் வலது பக்கம் திருப்பி 25 யார் போகவில்லை சில்லு சுத்த தொடங்கிவிட்டது.மருமகன் தான் சாரதி.நான் இறங்கி பின்னால் நின்ற வாகனங்களை சுற்றிப் போகுமாறு கையைக் காட்டினேன்.பின்னுக்கு நின்ற வாகனங்கள் 4 சில்லும் பிடித்தமான வாகனங்கள் அல்லது சக்கரங்களுக்கு சங்கிலி போட்டிருந்தனர்.எங்களை பரிதாபமாக பார்த்துக் கொண்டு போனார்கள்.

                     இயன்றளவு முயற்சிகள் செய்தும் ஒரு சாண் கூட முன்னேற முடியவில்லை.சரி பின்பக்கம் எடுத்தால் சுலபமாக போகும் எனவே முதலில் கொஞ்சம் கரைக்கு எடுத்து விடுவோம் என்று நான் சைகை காட்ட மருமகன் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கெடுத்தார்.

                     இப்படி எவ்வளவு நேரம் தான் நிற்பது வானுக்குள் சங்கிலி இருக்கிறது எடுத்து போடுவோமா என்று மருமகன் கேட்டு பதிலுக்கு காத்திராமல் தானே இறங்கி சங்கிலியை எடுத்துவந்தார்.ஆனால் இதுவரை அவரோ நானோ வாகனத்துக்கு சங்கிலி போட்ட அனுபவம் இல்லை.

                        அரை மணிநேரமாக சங்கிலியை போட முயன்றும் போட முடியவில்லை.எனது கால் பகுதி முழுவதும் பனிக்குள் நனைந்து விறைக்கத் தொடங்கிவிட்டது.சங்கிலி இந்த வானோடு வந்ததா என்று கேட்க இல்லை இது எமது காருக்கு வாங்கியது என்றார்.அதோடு கதை கந்தல்.

34a7fd98-7a28-4bab-8a8a-adc35463513e-Ori
பனி பொழியும்.

படங்களுடன்… நடந்த சம்பவத்தை விபரித்த விதம் சிறப்பு.
படத்தில் தெரியும் அந்தச் சுற்றாடலை பார்க்கவே… நமக்கு கையும், காலும் விறைக்கின்றது. 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

படங்களுடன்… நடந்த சம்பவத்தை விபரித்த விதம் சிறப்பு.
படத்தில் தெரியும் அந்தச் சுற்றாடலை பார்க்கவே… நமக்கு கையும், காலும் விறைக்கின்றது. 😂

மகள் திரும்ப திரும்ப தண்ணீர் போகாத சப்பாத்து வாங்குவம் என்று சொன்னா.

நான் தான் பனிக்குள் போக மாட்டேனே ஏன் வீணாக செலவு செய்வான் என்று மறுத்துவிட்டேன்.

நியூயோர்க்கில் தண்ணீர் போகாத சப்பாத்து வைத்திருக்கிறேன்.

மனைவி மகள் பேரப்பிள்ளைகளை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக விறைத்து விழுந்தாலும் பரவாயில்லை என்று சமாளித்து நின்றேன்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்த நாள் காலை 6 மணிக்கே எழும்பி ஆளாளுக்கு அதை எடு இதை எடு என்று ஒருமாதிரி தயாராகிவிட்டோம்.இறங்க முதல் வயிறு முட்ட ஒரு பிடிபிடித்தால்த் தானே போற இடங்களில் நிமிர்ந்து நிற்கலாம்.

1980களில் நாங்கள் இடம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்த போது,   எங்களுக்கு வசிக்க கிடைத்தது அநேகமாகக் மாடிக் கட்டிடங்கள்தான். அப்பொழுது நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது  பாவித்த வார்த்தைதான்  இறங்கிறன்”. இப்பொழுது வீடுகளில்  வாழ்ந்தாலும் அந்த வார்ததை கூடவே வருகிறது.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kavi arunasalam said:

1980களில் நாங்கள் இடம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்த போது,   எங்களுக்கு வசிக்க கிடைத்தது அநேகமாகக் மாடிக் கட்டிடங்கள்தான். அப்பொழுது நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது  பாவித்த வார்த்தைதான்  இறங்கிறன்”. இப்பொழுது வீடுகளில்  வாழ்ந்தாலும் அந்த வார்ததை கூடவே வருகிறது.

 

உண்மை தான்.ஆனாலும் எமது சந்ததியோட நின்றுவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்பொழிவும் அழகு ஆளும் அழகுதான் வயசானாலும் அழகன் தான் அண்ண

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பனிப்பொழிவைப் பார்க்கவே வேர்த்துக் கொட்டுது (பயத்தில்). ஆனால் இதெல்லாம் நல்ல அனுபவங்கள்.....பின்னாளில் நினைத்து சிரிக்க நல்லா இருக்கும்......எனக்கும் சில அனுபவங்கள் உண்டு.......தொடருங்கள்......!  👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அந்தப் பனிப்பொழிவைப் பார்க்கவே வேர்த்துக் கொட்டுது (பயத்தில்). ஆனால் இதெல்லாம் நல்ல அனுபவங்கள்.....பின்னாளில் நினைத்து சிரிக்க நல்லா இருக்கும்......எனக்கும் சில அனுபவங்கள் உண்டு.......தொடருங்கள்......!  👍

உங்களுடைய அனுபவத்தையும் சொல்லுங்கள் சுவியர்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பனிக்குள்ள தான் நம் இனம்  30 , 40    வருடங்களாக வாழ்கிறார்கள். (  வெளி நாட்டுக்கு வர ஆசைப்படுபவர்களுக்கு ) "வீடடை விட்டு வெளியில் வந்தால் எதுவும் நடக்கலாம் ...நாலும் தெரிந்து நடந்து கொண்டால் நல்ல இருக்கலாம்.  ". உன்னைக் கேட்டு  என்னைக் கேட்டு எதுவம் நடக்குமா ? என்று கவிஞ்சன்   பாடி வைத்தான். 
 வாழ்க்கையே ஒரு அனுபவம் தானே. பயணத்தில் இவ்வாறான அனுபவங்களை   எதிர்   கொள்ளத்தான் வேண்டும்.   பெரியவர்கள் சமாளித்து கொள்வார்கள்  குழந்தைகளுடன் மிகவும் சிரமம் .தொடருங்கள். ........

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பனிப்பொழிவும் அழகு ஆளும் அழகுதான் வயசானாலும் அழகன் தான் அண்ண

அடபாவி நீங்க மருமகனைப் பார்த்து நான் என்று ஏமாந்திட்டீங்க.

7 hours ago, suvy said:

அந்தப் பனிப்பொழிவைப் பார்க்கவே வேர்த்துக் கொட்டுது (பயத்தில்). ஆனால் இதெல்லாம் நல்ல அனுபவங்கள்.....பின்னாளில் நினைத்து சிரிக்க நல்லா இருக்கும்......எனக்கும் சில அனுபவங்கள் உண்டு.......தொடருங்கள்......!  👍

சுவி சுகமா வீடு வந்து சேர்ந்தால் அனுபவம்.

இவைகளே ஆபத்தாகவும் முடியலாம்.

உங்கள் அனுபவத்தையும் எழுதலாமே.

5 hours ago, தமிழ் சிறி said:

உங்களுடைய அனுபவத்தையும் சொல்லுங்கள் சுவியர்.

எழுதுவார் என நம்புவோம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.