Jump to content

மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரியால் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டப்பட்டார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                 டொனால்ட் டிரம்ப் மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரியால் குற்றம் சாட்டப்பட்டார், இந்த விஷயத்தை நன்கு அறிந்த பல ஆதாரங்களின்படி - அமெரிக்க வரலாற்றில் தற்போதைய அல்லது முன்னாள் ஜனாதிபதி கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. முத்திரையுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

இந்த நேரத்தில் குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக அறியப்படவில்லை, ஒரு ஆதாரம் CNN இடம் கூறினார். மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் பிராக்கின் அலுவலகம் டிரம்பின் வழக்கறிஞர்களை அணுகி, அவர் சரணடைவதைப் பற்றி விவாதிக்கும்.

https://www.cnn.com/2023/03/30/politics/donald-trump-indictment/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடியோவ்! என்ர வாயில அமிலத்தை ஊத்த!😂

நடக்காதென்று சொல்லியிருந்தேன், நடந்து விட்டது! (மகிழ்ச்சி தான்!)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

அம்மாடியோவ்! என்ர வாயில அமிலத்தை ஊத்த!😂

நடக்காதென்று சொல்லியிருந்தேன், நடந்து விட்டது! (மகிழ்ச்சி தான்!)

என்ன ரம்புக்கு இன்னும் பல லட்சம் வாக்குகளை அள்ளிக் குவிக்கும்.

Link to comment
Share on other sites

ஆகக்கூடியது ஒரு வருடம் சிறையில் போடப்படுவார் என ஒரு வழக்கறிஞர் கூறுகிறார். Michael Cohenன் வழக்கறிஞர் Lanny Davis கூறும் போது  குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத வரை ரம்ப் குற்றமற்றவர் என்கிறார். 

மற்றுமொரு வழக்கறிஞர் கூறும் போது ட்ரம்ப் அடுத்த கிழமையளவில் கைதாவர் என்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்: டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு

1-143.jpg

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். 10 அதிகமான பெண்கள், டொனால்டு டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர்.

இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்ப்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.

இந்த நிலையில், கடந்த 2016 பிரச்சாரத்தின் போது ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்ததாக டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் நடுவர் மன்றம் குற்றம் சாட்டியது. இது குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாக அவரை மாற்றியது.

டிரம்ப் இந்த குற்றச்சாட்டை “அரசியல் துன்புறுத்தல் மற்றும் தேர்தல் தலையீடு” என்று சாடினார், வழக்கறிஞர்கள் மற்றும் அவரது ஜனநாயக எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பொங்கி எழுகிறது. மேலும், இது ஜனாதிபதி ஜோ பிடனுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சபதம் செய்தார்.
 

https://akkinikkunchu.com/?p=242197

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது - நீதிமன்ற விசாரணை எப்போது?

ட்ரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

31 மார்ச் 2023, 04:45 GMT
புதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர்

ஆபாசப்பட நடிகை தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட இருக்கிறது.

இதற்கான குற்றப்பத்திரிகையில் குறைந்தது ஒரு டஜன் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆபாசப்பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக டிரம்ப் மீது 30க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக "வழக்கு குறித்து நன்கு அறிந்த" இரண்டு நபர்கள் தெரிவித்ததாக அமெரிக்கா செய்தி தொலைக்காட்சியான சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் ட்ரம்ப் மீது இரண்டு டஜனுக்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, மேலும் இரண்டு பெயரை குறிப்பிட விரும்பாத நபர்களை மேற்கோள் காட்டியுள்ளது.

 

ட்ரம்ப் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் பொதுவெளியில் வெளியாக நிலையில், மன்ஹாட்டன் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆல்வின் பிராக் ட்ரம்ப் மீது என்ன குற்றச்சாட்டுகளை முன்வைக்கவுள்ளார் என்ற விவரம் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுவதால், "தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று நியூயார்க் காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணை எப்போது?

ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தன் மீதான புகார் குறித்து வெளியில் பேசாமல் இருப்பதற்காக முன்னாள் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸூக்கு ட்ரம்ப் பணம் கொடுத்ததாக, ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும் இந்த பணம் சட்டத்திற்கு புறம்பாக ட்ரம்பின் அதிபர் பிரச்சார கணக்கில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

வரும் செவ்வாய்க்கிழமை அன்று ட்ரம்ப் மீது விசாரணை நடக்கும் என டிரம்பின் வழக்கறிஞர் உறுதிப்படுத்தினார்.

"செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று டிரம்பின் வழக்கறிஞர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறினார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அது குடியரசு கட்சிக்கு பின்னடைவாக அமைபும் என்று பிபிசியின் வாஷிங்டன் செய்தியாளர் காரி குறிப்பிடுகிறார்.

ட்ரம்ப் மீது ஏன் விசாரணை?

ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுடன் ட்ரம்ப் தொடர்பில் இருந்தார் என்பது சர்ச்சை. 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ட்ரம்ப், அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.

ஆனால், நடிகையுடனான தனது தொடர்பை மறைக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக ட்ரம்ப் ரூ.1.07 கோடி பணம் கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு. மைக்கேல் கோஹனுக்கு அந்த பணத்தை ட்ரம்ப் எவ்வாறு கொடுத்தார் என்பதும் தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறது.

மைக்கேல் கோஹனுக்கு ட்ரம்ப் அளித்த பணம் 'வழக்கறிஞர் கட்டணம்' என்று ஆவணங்கள் கூறுகின்றன.

ஆனால், அரசு வழக்கறிஞர்களோ, டிரம்ப் தனது பணப்பரிவர்த்தனை ஆவணங்களில் பொய்யாக பதிவு செய்திருப்பதாக வாதிடக் கூடும். நியூயார்க்கைப் பொருத்தவரை இது ஒரு தவறான நடத்தைதான். ஆனாலும், தீவிரமான வழக்காக மாற வழிவகுக்கும் வகையில், இது ஒரு குற்றமாக மாற்றப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஸ்டார்மி டேனியல்ஸ் யார்?

ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்டார்மி டேனியல்ஸின் இயற்பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட்.

2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தயாராகி வந்த டொனால்ட் டிரம்ப் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 2006-ம் ஆண்டு ஜூலையில் கோல்ப் காட்சிப் போட்டி ஒன்றில் டிரம்பை அவர் சந்தித்தாக ஊடக நேர்காணல்களில் அவர் கூறினார்.

கலிபோர்னியா - நெவேடா மாகாணங்களுககு இடையே லேக் டாஹோவில் உள்ள தனது ஓட்டல் அறையில் இருவரும் உடலுறவு கொண்டதாக அவர் கூறினார். அந்த வேளையில் அவரது குற்றச்சாட்டுகளை டிரம்பின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார்.

தனது குற்றச்சாட்டுகள் குறித்து மவுனம் காக்குமாறு டிரம்ப் கேட்டுக் கொண்டாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "இதற்காக டிரம்ப் வருத்தப்படுவதாக தெரியவில்லை. அவர் கர்வமிக்கவர்" என்று ஸ்டார்மி டேனியல்ஸ் பதிலளித்தார்.

ட்ரம்ப் - ஸ்டார்மி டேனியல்ஸ் பாலுறவு நடந்ததாகக் கூறப்படும் கால கட்டத்தில் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப்-இன் குழந்தையை பெற்றெடுத்திருந்தார்.

இதுதவிர, இந்த குற்றச்சாட்டில் ட்ரம்ப் கைது செய்யப்பட்டதாக கடந்த வாரம் போலிப் புகைப்படங்கள் இணையத்தில் பரவின. அதில் போலீசாரிடம் இருந்து டிரம்ப் தப்பிச் செல்வது போலவும், அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து அழைத்து செல்வது போன்ற படங்கள் இணையத்தில் பகிரப்பட்டன.

இந்த புகைப்படங்கள் 'போலியானவை' செய்து செய்தி வெளியிட்டு இருந்தது.

https://www.bbc.com/tamil/articles/crgjlelk2exo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா, எங்கண்ட அமேரிக்கன் எல்லாரும் வந்திட்டினம். 

இவர் ஆள் அப்படி இப்படி தான்.

ஆனால், புட்டினை ராசதந்திரத்தால வெட்டியாட தன்னை விட்டா யாருமில்லையாமே! 

Link to comment
Share on other sites

ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு - டிரம்ப் கைது செய்யப்படுவாரா?

1680325671-7994.jpg&w=&h=&outtype=webp
ஆபாசப்பட நடிகை தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ரூ.1.07 கோடி கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவை சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுடன் டிரம்ப் தொடர்பில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.
 
ஆனால், நடிகையுடனான தனது தொடர்பை மறைக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக டிரம்ப் ரூ.1.07 கோடி பணம் கொ
டுத்தார் என்பது குற்றச்சாட்டு. மைக்கேல் கோஹனுக்கு அந்த பணத்தை டிரம்ப் எவ்வாறு கொடுத்தார் என்பதும் தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறது.
டொனால்ட் டிரம்ப் மீது மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதாவது அவர் மீது எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்கு இது வழிவகுக்கும். இதனால் அவர் கைதாகும் சூழல் எழுந்துள்ளது. இருப்பினும் கைதாவதைத் தவிர்க்க டிரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அமெரிக்காவில் இதற்கு முன்பு பதவியில் இருக்கும் அல்லது முன்னாள் அதிபர்கள் யாரும் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொண்டது இல்லை. அந்த வகையில் டிரம்ப் தான் முதல் நபர்.
 
டிரம்ப் தரப்பு கூறுவது என்ன?
ட்ரம்பின் வழக்கறிஞர் ஜோ டகோபினா, முன்னாள் அதிபர் ட்ரம்பால் "அரசியல் துன்புறுத்தல்" என்று அழைப்படுவதின் ஒரு பகுதியாக இந்தக் குற்றச்சாட்டு உள்ளது என்று கூறுகிறார்.
 
டொனால்ட் ட்ரம்பை தவிர வேறு யாராவது இருந்தால் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்காது என்று சிபிஎஸ் ஊடகத்திடம் டகோபினா கூறியுள்ளார்.
 
டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து மாறுபட்ட அரசியல் கருத்துகளைக் கொண்ட ஒரு வழக்கறிஞர் மூலம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் சிக்கலான வழக்கு என்றும் இந்த வழக்கைப் பொறுத்தவரை குற்றம் என்று எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
 
"தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை. ஆனால், அவர் வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறார். அவர் அரசியல்ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் என்பது பலருக்கும் தெளிவாகத் தெரிகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
ஜோ பைடன் கருத்து என்ன?
வெள்ளை மாளிகையில் கூடியிருந்த நிருபர்கள் அதிபர் ஜோ பைடனிடம் டொனால்ட் டிரம்ப் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு அவர், `டிரம்ப் தொடர்பாக என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை` என்று பதிலளித்துச் சென்றார்.
 
2016ஆம் ஆண்டில், ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் சில ஊடகங்களைத் தொடர்புகொண்டு, 2006ஆம் ஆண்டில் ட்ரம்புடன் தனக்கு திருமண பந்தத்தைக் கடந்த தொடர்பு இருந்ததாகக் கூற முன்வந்தார்.
 
ஆனால், ட்ரம்பின் வழக்கறிஞர் மிச்செல் கோஹென் இந்த விவகாரம் தொடர்பாக வெளியே கூறாமல் இருக்க ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல. ஆனால், மைக்கேல் கோஹனுக்கு டிரம்ப் அளித்த பணம் 'வழக்கறிஞர் கட்டணம்' என்று ஆவணங்கள் கூறுகின்றன.
 
மேலும் இது ட்ரம்பின் பொய்யான வணிகப் பதிவுகளுக்குச் சமம் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர், இது சிறிய குற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் மற்றொரு குற்றத்திற்கான கருவியாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அது கிரிமினல் குற்றமாக மாறும்.
 
இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்றும் வழக்கறிஞர்கள் வாதிடலாம். ஏனென்றால், டேனியல்ஸுக்கு அவர் பணத்தை கொடுத்ததாகக் கூறப்படுவது மற்றொரு பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருக்கிறது என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியாகக் கருதப்படும்.
 
டிரம்ப் மீதான பதவி நீக்கத்தை ஆதரிப்பவர்கள் கூட இது ஒரு தெளிவான வழக்கு அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
 
டிரம்ப் கைதாகிறாரா?
டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. விசாரணையை மேற்கொண்டு வரும் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் அலுவலகம், குறிப்பிடப்படாத குற்றச்சாட்டுகளில், டிரம்ப்பின் சரணடைதல் தொடர்பாக அவரது வழக்கறிஞரைத் தொடர்புகொண்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஃப்லோரிடாவில் உள்ள டிரம்ப் திங்களன்று நியூயார்க் சென்று செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று இந்த சம்பவம் குறித்து நன்கு அறிந்தவர்கள் குறிப்பிட்டதாக சிபிஎஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
 
இந்த விவகாரத்தில் டிரம்ப் ஒத்துழைப்பை வழங்குவார் என்று அவரது வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளதால், அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்படாது.
 
டிரம்ப்பின் கைரேகை எடுக்கப்படுமா? கைகளில் விலங்கிடப்படுவாரா?
மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, ஊடகங்களை தவிர்க்கும் விதமாக தனிப்பட்ட நுழைவாயில் வழியாக டிரம்ப் அனுமதிக்கப்படலாம்.
 
உள்ளே நுழைந்ததும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற நபர்களுக்கு செய்வதுபோன்றே டிரம்ப்பின் கை ரேகையும் எடுக்கப்படலாம்.
 
பொதுவாக இதுபோன்ற சூழலில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் கைவிலங்கிப்படுவது வழக்கம். ஆனால், ட்ரம்பிற்கு அவ்வாறு நடக்காமல் இருக்க அவரது வழக்கறிஞர்கள் குழு முயற்சிகளை மேற்கொள்ளும்.
 
விசாரணை எப்போது?
டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அடுத்த வாரம் செவ்வாயன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு முதன்முதலாக நீதிமன்றத்தில் வாசிக்கப்படும். இதைத் தொடர்ந்து டிரம்ப் குற்றம் செய்தாரா இல்லையா என்று கேட்கப்படும்.
 
நீதிபதி அனுமதிக்கும் பட்சத்தில் விசாரணை நடைபெறும் பகுதிகளில் கேமராக்கள் இடம்பெறலாம்.
 
விசாரணைக்குப் பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்படலாம்.
 
பொதுவாக Felony(பெருங்குற்றம்), Misdemeanor(சிறிய குற்றம்) என இரண்டு வகையாக குற்றங்கள் பிரிக்கப்படுகின்றன. சிறிய குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்படும்.
 
ஒருவேளை, டிரம்ப் பெருங்குற்றத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
 
அதிபர் தேர்தலில் போட்டியிடலாமா?
தற்போதைய குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல, தண்டனையே விதிக்கப்பட்டாலும், அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடர்வதைத் தடுக்க முடியாது.
 
என்ன நடந்தாலும், தான் பின் வாங்கப்போவதில்ல என்பதற்கான சமிக்ஞைகளை ட்ரம்பே கொடுத்துள்ளார். எனவே, அவர் தொடர்ந்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
உண்மையில், அமெரிக்க சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வேட்பாளரை பிரசாரம் செய்வதில் இருந்தும், அதிபராகப் பணியாற்றுவதில் இருந்தும், ஏன் கைதாவதில் இருந்தும் கூட தடுக்க முடியாது.
 
1920இல் யூஜின் டெப்ஸ் என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு 9 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். எனவே சிறை தண்டனை பெற்றாலும் அவர் போட்டியிட முடியும்.
 
எனினும், டிரம்ப் கைது செய்யப்பட்டால், அதிபர் தேர்தலுக்கான அவரது பிரசாரத்தில் அது சிக்கலை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க அரசியல் அமைப்பிற்குள் ஏற்கெனவே உள்ள அப்பட்டமான பிளவுகளை இது ஆழமாக்கும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2023 at 08:42, Nathamuni said:

ஆனால், புட்டினை ராசதந்திரத்தால வெட்டியாட தன்னை விட்டா யாருமில்லையாமே! 

🤣 ஆள் மாஸ்கோ போன நேரம்….இவர் மேல் பெண் பாலியல் தொழிலார்கள் பொன் மழை பொழிந்த சம்பவம் ஒண்டு நடந்ததாம். அதை அப்படியே வீடியோ எடுத்து வைத்துள்ளார்களாம்🤣.

அதனால் புட்டின் எள் எண்டால் சிங்கம் எண்ணை போத்தலே ஆகிவிடுவாராம்.

பேசிகிறாங்க…பொய் செய்தி என்றே நான் நினைக்கிறேன். 

டிரம்பாவது பெண்களை தப்பாக நடத்துவதாவது.

Link to comment
Share on other sites

 

 

 

LS-tatler-4oct17-getty.jpg

On 31/3/2023 at 03:42, Nathamuni said:

என்னப்பா, எங்கண்ட அமேரிக்கன் எல்லாரும் வந்திட்டினம். 

இவர் ஆள் அப்படி இப்படி தான்.

ஆனால், புட்டினை ராசதந்திரத்தால வெட்டியாட தன்னை விட்டா யாருமில்லையாமே! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக அபிமானிகள் சேர் டொனால்ட் ரம்ப் அவர்களை வெறுக்க என்ன காரணம்? அவர் தனது ஆட்சிக்காலத்தில் பெருவாரியான வேலைவாய்ப்புக்களை அமெரிக்க மக்களுக்கு உருவாக்கியிருக்கிறாராமே? குறிப்பாக உருக்கு தொழிற்சாலைகள் சம்பந்தமாக......
மற்றும் படி உலக பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படவில்லை என்றும் கூறுகின்றார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை கோர்ட்டில் சரணடையும் வண்ணம் - புளோரிடாவில் இருந்து புறப்பட்டு நியூயார்க் வந்தடைந்தார் டிரம்ப்.

இதன் மூலம் புளோரிடா கவர்னர் டிசாண்டிஸ் நியூயோர்க் நகர பொலிசார் டிரம்பை கைது செய்வதை தடுப்பார்கள் என்ற ஊகங்கள் அடிபட்டு போயுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

நாளை கோர்ட்டில் சரணடையும் வண்ணம் - புளோரிடாவில் இருந்து புறப்பட்டு நியூயார்க் வந்தடைந்தார் டிரம்ப்.

இதன் மூலம் புளோரிடா கவர்னர் டிசாண்டிஸ் நியூயோர்க் நகர பொலிசார் டிரம்பை கைது செய்வதை தடுப்பார்கள் என்ற ஊகங்கள் அடிபட்டு போயுள்ளன.

ட்ரம்பின் கைதை ஏன் டிசான்ரிஸ் தடுக்க முடியாது என்ற விளக்கம் கீழுள்ள கட்டுரையில் இருக்கிறது. இது அவசரப் பட்டுக் கருத்துரைத்த டிசான்ரிசுக்குக் கூட முதலில் தெரிந்திருக்காது.

https://www.newsweek.com/no-ron-desantis-cant-stop-donald-trump-being-extradited-1791746

சுருக்கமாக, அமெரிக்க மாநிலங்களிடையேயான கடத்தல் (extradition) என்பது மிகவும் இலகுவான ஒரு நடைமுறை. தப்பிப் போய் ஒளிந்திருக்கும் கிரிமினல்களை மாநிலங்கள் கைது செய்து வழக்கு நடக்கும் இடத்திற்கு அனுப்பி வைப்பது நாளாந்தம் நடக்கிறது. இதை இது வரை ஒரு மாநில ஆளுனரோ, மாநில மக்களவையோ தடுத்ததாக வரலாறு இல்லை! 

ஆனால், நியூயோர்க்கிலும், நியூ ஜேர்சியிலும் (பக்கத்து மாநிலம், நீல ஆட்சி) தங்குமிடங்கள் வைத்திருக்கும் ட்ரம்ப், 2019 இல் புளோரிடாவில் போய் தங்கியமைக்கு சட்டத்தில் இருந்து தப்பும் நோக்கமே முக்கிய காரணம். சமஷ்டி மட்டத்தில் ட்ரம்ப் மீது வழக்குத் தொடர்ந்தால், ட்ரம்ப் அணி படிப்படியாக அதனை மேல் முறையீடு செய்து உச்ச நீதி மன்றம் (US Supreme Court) வரை கொண்டு செல்வர். ஆனால், நேராக உச்ச நீதிமன்றம் செல்ல முடியாது. முதலில், மேன்முறையீட்டு சுற்றயல் (US Appellate Circuit Court) நீதிமன்றமொன்றிற்குச் செல்ல வேண்டியிருக்கும். புளோரிடாவுக்கான 11 வது சுற்றயல் (11th Circuit) நீதி மன்றம் சிவப்பு சார்பு கொண்டது, எனவே கேஸ் ஏதும் அப்பீல் செய்யப் பட்டால், ட்ரம்ப் சார்பான தீர்ப்பைக் கொஞ்சம் எதிர்பார்க்கலாம்.  நியூ யோர்க், நியூ ஜெர்சி 3 வது சுற்றயல் (3rd Circuit) நீதிமன்றம் - அங்கே ட்ரம்ப் பருப்பு அவ்வளவு வேகாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

 

நான் அப்பீல் நீதிமன்றங்கள் பற்றி எழுதியிருக்கிறேன், நீங்கள் ட்ரம்பின் பிரச்சாரக் கூட்டத்தைப் பதிலாகப் போட்டிருக்கிறீர்கள், இரண்டிற்கும் இடையிலான "தொலைவு" புரிகிறதா?

Link to comment
Share on other sites

3 hours ago, Justin said:

நான் அப்பீல் நீதிமன்றங்கள் பற்றி எழுதியிருக்கிறேன், நீங்கள் ட்ரம்பின் பிரச்சாரக் கூட்டத்தைப் பதிலாகப் போட்டிருக்கிறீர்கள், இரண்டிற்கும் இடையிலான "தொலைவு" புரிகிறதா?

அடுத்த காணொளி உங்களுக்கு பதிலாக அமையலாம். 
உங்கள் கூற்று பொய்த்தது என்பது  உண்மையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

அடுத்த காணொளி உங்களுக்கு பதிலாக அமையலாம். 
உங்கள் கூற்று பொய்த்தது என்பது  உண்மையே.

எப்படிப் பொய்த்தது?

Link to comment
Share on other sites

On 4/4/2023 at 11:55, Justin said:

யோர்க், நியூ ஜெர்சி 3 வது சுற்றயல் (3rd Circuit) நீதிமன்றம் - அங்கே ட்ரம்ப் பருப்பு அவ்வளவு வேகாது!

இதன் அர்த்தம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

இதன் அர்த்தம் என்ன?

இதன் அர்த்தம்: அமெரிக்க உச்ச நீதிமன்றிற்குச் செல்லும் முதல் படியாக இருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றமாக கிழக்கில் இருக்கும் 3rd circuit சமஷ்டி நீதிமன்றிற்குப் போனால், புளோரிடாவில் இருக்கும் 11th circuit நீதி மன்றை விட ட்ரம்பிற்கு பாதகமாக தீர்ப்பு வரலாம் என்பது தான்! இது  இன்னும் நடக்கவேயில்லை, பின்னர் எப்படி பொய்த்தது?😂

நேற்று ட்ரம்ப் போனது நியூயோர்க் கேசுக்காக நியூயோர்க் மாநில நீதிமன்றம்! நடந்தது குற்றம் சாட்டல் (arraignment) , தீர்ப்போ விசாரணையோ அல்ல!

வாசிப்பு?, நுணா?😎

Link to comment
Share on other sites

Just now, Justin said:

இதன் அர்த்தம்: அமெரிக்க உச்ச நீதிமன்றிற்குச் செல்லும் முதல் படியாக இருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றமாக கிழக்கில் இருக்கும் 3rd circuit சமஷ்டி நீதிமன்றிற்குப் போனால், புளோரிடாவில் இருக்கும் 11th circuit நீதி மன்றை விட ட்ரம்பிற்கு பாதகமாக தீர்ப்பு வரலாம் என்பது தான்! இது  இன்னும் நடக்கவேயில்லை, பின்னர் எப்படி பொய்த்தது?😂

நேற்று ட்ரம்ப் போனது நியூயோர்க் கேசுக்காக நியூயோர்க் மாநில நீதிமன்றம்! நடந்தது குற்றம் சாட்டல் (arraignment) , தீர்ப்போ விசாரணையோ அல்ல!

வாசிப்பு

2 minutes ago, Justin said:

வாசிப்பு?, நுணா?😎

?, நுணா?😎

நியூயோர்க் 3ர்ட் சேர்கிற் கோட் என விளங்கி கொண்டேன். My bad.

3 minutes ago, Justin said:

வாசிப்பு?, நுணா?😎

ஒமோம் இப்பதான் எழுத்து கூட்டுகிறோம்.🙃😉

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.