Jump to content

மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

 

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில், கரம்பகம் பகுதியில் தந்தையை வெட்டி படுகொலை செய்த குற்றத்தில் இரு மகன்களும், மேலும் ஒருவரும் என மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமது தந்தையை தாமே கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்த  பாடசாலை மாணவர்களான கொலையுண்டவரின் இரு மகன்கள் மற்றும் அவர்கள் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த அவர்களது நண்பர் ஆகிய மூவருமே  கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவர் இன்று (31) காலை கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த இவர், தனது தோட்டத்தில் குடில் ஒன்றினை அமைத்து, அங்கு தங்கி வந்துள்ளார்.

r__3_.jpg

இந்நிலையிலேயே இன்று அவர் தனது தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தவரின் இரு மகன்களும் தந்தையை கொன்ற குற்றத்தின் பேரில் கைதாகியுள்ளனர்.

அத்துடன் இந்த கொலைக்கு உதவிய மகன்களின் நண்பர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதனையடுத்து கைதான மூவரும் கொடிகாமம் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

கைதான இரு மகன்களையும் தொடர்ந்து விசாரித்தபோது தெரியவருகையில்,

இரண்டு மகன்களும் 17 மற்றும் 19 வயதுடையவர்கள் ஆவர். இருவரும் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வருகின்றனர்.

தந்தை தம்மிடம் மிக மோசமாக நடந்துகொண்டமையால் அவரை கொலை செய்ததாக இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகள் அருகில் உள்ள குளத்தினுள் வீசப்பட்டிருந்த நிலையில் விசாரணையின்போது சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கத்திகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மூவரையும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். 

மிருசுவில் கொலை சம்பவம்: தந்தையை கொன்ற இரு மகன்கள் உட்பட மூவர் கைது! | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மனிதம் ..எப்பவோ இறந்துவிட்டது....பெற்ற பிள்ளகள்  அப்பனை ...ஜீரணிக்க முடியவில்லை..

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்யப்படுமளவுக்கு தந்தை செய்ததென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது போல் உள்வீட்டு கொலைகள் யாழ் மாவட்டத்தில் பல நடந்திருக்கின்றன. அநேகமாக இரண்டு மனைவி பிரச்சனை, உடன் பிறவா சகோதரர் பிரச்சனை, சொத்து பிரிப்பு பிரச்சனை என பல அடங்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இது போல் உள்வீட்டு கொலைகள் யாழ் மாவட்டத்தில் பல நடந்திருக்கின்றன. அநேகமாக இரண்டு மனைவி பிரச்சனை, உடன் பிறவா சகோதரர் பிரச்சனை, சொத்து பிரிப்பு பிரச்சனை என பல அடங்கும்.

எங்களை போல வயசு போனதுகளுக்கு விளங்கும் அந்த கால யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு ,மற்றும் ஏனைய தமிழ் பகுதிகளில் நடந்த விடயங்கள்...வீரகேசரி,மித்திரன் பத்திரிகைகள் வாசித்த காரணத்தால்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையை சரமாரியமாக வெட்டிக் கொன்ற பிள்ளைகள் – யாழில் பயங்கரம்! 10 மணித்தியாலங்களில் கொலையாளிகள் கைது

7.jpg

யாழ் – தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவத்தின் மர்மம் துலங்கியுள்ளது.

கொல்லப்பட்டவரின் 18,19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19 வயதான மற்றொரு இளைஞனுமே கொலையை செய்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட, மிருசுவில் கரம்பகத்தில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டுக் காயங்களுடன் தோட்டக் குடிலில் கண்டெடுக்கப்பட்டது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (43) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.

வடமராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த அவர், கரம்பகத்தில் திருமணம் முடித்திருந்தார். அவரது மனைவி 2 வருடங்களின் முன்னரே பிரிந்து சென்று விட்டார். அவர்களின் பிள்ளைகள் இருவரும், அம்மம்மாவின் பராமரிப்பில் வளர்ந்தனர்.

தந்தையார் வீட்டுக்கு செல்வது குறைவு என்றும் தெரிய வருகிறது.

இன்று காலையில், கொல்லப்பட்டவரின் மூத்த மகன் கையில் வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர்களின் தந்தை கொல்லப்பட்டுள்ள நிலையில், மகனது காயம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் கொடிகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ரணசிங்க தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த தீவிர விசாரணையிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையில் எவ்வாறு வெட்டுக்காயம் ஏற்பட்டது என காவல்துறையினர் வினவியபோது, நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத சிலர் வீட்டுக்கு வந்து, தந்தை தங்கியிருக்கும் இடத்தை காட்டுமாறு தம்மை அழைத்துச் சென்றதாகவும், தந்தை தங்கியிருந்த குடிலுக்கு அண்மையாக வந்ததும், தம்மை வாளால் வெட்டியதாகவும், தாம் தப்பியோடி விட்டதாகவும், தந்தையை அவர்கள் வெட்டிக் கொன்றதாகவும் தெரிவித்திருந்தனர்.

இது பற்றி ஏன் காவல்துறையினரிடம் தெரிவிக்கவில்லையென அவர்களிடம் விசாரணை நடத்திய போது, காலையில் காவல்துறையினர் விடயத்தை அறிந்து வருவார்கள் என நம்பியதாக குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த இளைஞனுடன் இன்னொரு நண்பர் வைத்தியசாலையில் தங்கியிருந்தார்.

தம்பியாரை காவல்துறையினர் விசாரித்ததில் கொலை மர்மம் துலங்கியது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் தானும், சகோதரனும், தந்தை தங்கியிருந்த குடிலுக்கு சென்று, கத்தியால் வெட்டிக் கொன்றதை ஒப்புக் கொண்டார்.

வீட்டிலிருந்து 3 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள குடிலுக்கு நடந்து சென்று, இரகசியமாக குடிலுக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளனர்.

19 வயதான மூத்த மகனே, தந்தையை முதலாவதாக வெட்டியுள்ளாார். தந்தையின் கழுத்தில் பெரிய வெட்டுக்காயம் ஏற்பட, தந்தை படுக்கையிலிருந்து எழுந்துள்ளார். இதன்போது தம்பியும் வெட்டினார். தம்பி வெட்டும் போது, தவறுதலாக அண்ணனின் கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இருவரும் அவரை கழுத்து, முகம், நெஞ்சு, கையில் சரமாரியமாக வெட்டிக் கொன்றுள்ளனர்.

தந்தை தம்மை கொடுமைப்படுத்துவதால் அவரைக் கொன்றதாக பிள்ளைகள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதான மூத்த மகனும், அவருடன் துணையாக தங்கி நின்ற நண்பரான 19 வயதான இளைஞனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 19 வயதான இருவரும் அண்மையில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

மூவருமே மீசாலையிலுள்ள முன்னணி பாடசாலையொன்றில் கல்வி பயின்றவர்கள். கொடிகாமம் காவல்துறையினர் 4 மணித்தியாலங்களிற்குள் இந்தக் கொலை மர்மத்தை துலக்கியுள்ளனர்.

காலையில் 5 மணியளவில் இந்தச் சம்பவம் பற்றிய முறைப்பாடு செய்யப்பட்டது. காலை 9 மணியளவில் கொலை மர்மத்தை துலக்கிய காவல்துறையினர், குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

இவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய கத்திகள் இரண்டை கொலை நடந்த இடத்துக்கு அருகில் உள்ள குளத்தில் இருந்து இன்று மாலை நீண்ட தேடுதலுக்குபின் இரத்த கறைகளுடன் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

 

https://akkinikkunchu.com/?p=242306

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.