Jump to content

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை கிழக்கு ஆளுனரோ, சாணக்கியனோ, எந்த கொம்பனாலோ மாற்ற முடியாது ; அமைச்சர் ஹாபிஸ் நசீர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1680218247864.jpg

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாத்திரம் அல்ல பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனாளோ எந்த கொம்பனாலோ மாற்ற முடியாது...
 
அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்
 
கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்கள் ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயரை மாற்ற எடுத்த நடவடிக்கையில் மூக்குடைபட்டார்.
 
ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் தொடர்பில் இன்று வெளிவந்த வீடியோ காட்சியில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் என்னை விமர்சிக்கும் துணியில் பேயாட்டம் ஆடி இருந்தார்.
 
 
கௌரவ சாணக்கியன் அவர்கள் முடியுமானால் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் திட்டமிடப்பட்டு சூறையாடபட்டு இன்னும் கள்வர்களுடைய கையில் இருப்பதை வாய் திறந்து பேச முடியுமா??
 
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களுக்கு தைரியம் இருந்தால் சிறுபான்மை சமூகத்திற்காக பேசவேண்டும் என்றால். உங்களுடைய நடிப்பை மூட்டை கட்டி விட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு இருந்து 240 சதுர கிலோமீட்டர் காணியையும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் இருந்த 176 சதுர கிலோமீட்டர் காணியையும் முஸ்லிம் பிரதேச செயலகத்திற்கு கொடுக்க பேச முடியுமா ??அதேபோல் காத்தான்குடி பூநொச்சிமுனையினை மட்டக்களப்பு மண்முனை பிரதேச சபைக்கு இணைத்து வைப்பதனை காத்தான்குடி பிரதேசசபைக்கு இணைக்க வேண்டும் என்று பேச முடியுமா?? காத்தான்குடி அண்டிய பகுதியில் முஸ்லிம்கள் பெருமபான்மையாக வாழும் காணிகளையும் ஏப்பமிட்ட நிலையில் இருக்கின்ற நிலையை சாணக்கியன் வாய் திறந்து பேச முடியுமா?? தளவாய் முஸ்லிம் எல்லைக் காணிகளை பிரித்ததை மீண்டும் முஸ்லிம்களுக்கு கொடுக்க வேண்டும் என பேச முடியுமா??
 
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடமா ?முடிந்தால் திட்டமிட்டு களவாடிய இக்காணிகளையும் முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்க உங்களால் பேசமுடியுமா??
 
கௌரவ சாணக்கியன் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் முடிந்தால் முஸ்லிம்களிடம் இருந்து களவாடிய அத்தனை காணியையும் முஸ்லிம்களுக்கு கொடுப்பதுதான் நியாயம் என்று உண்மையையும் சத்தியத்தை உரத்து இந்த நாட்டுக்கு சொல்லுங்கள்..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரி இந்த காக்காவை நுள்ளிவிட்டுட்டுது....இனி கலர் போட்டோக் கொப்பி மன்னர் .இழுத்து விடப்போகிறார்...இவருடைய ஏக்கர் , கிலோமீற்றர் கணக்கை பார்த்தால்  கிழக்கில் தமிழனுக்கு காணியே கிடையாது போல கிடக்கு..பெற்றோல் வாங்க சவூதிக்கு பிரண்டிடம் போனவர் ..இப்பதான்கலனிலை வாங்கி கானில் கொண்டுவந்து வைத்துவிட்டு திரும்ப ..சாணக்கியம் மாட்டுப்பட்டுப்போச்சு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிஸ்புல்லா தமிழர் காணிகள் எப்படி மடக்கினார் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரே.

சம்பந்தரின் நல்லிணக்க அரசியலில், பியசேன எம்பியானதும், இந்தாள் கிழக்கு முதல்வரானதும் தான் கண்ட மிச்சம்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சம்பந்தனின் ராஜதந்திரம் அப்போது. கட்டியிருக்கும்  துண்டையும் உருவும் தந்திரம் பேசுது இப்போது. இடம் கண்டால் மடம் காட்டாமல் விடுவார்களா யாரும்? அவரே; இதோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று விட்டுக்கொடுக்கும்போது யார் விடுவார்? கேள்வி கேட்க்கும் அப்பாவிகள் மீது மட்டும் எரிந்து விழுவார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கிஸ்புல்லா தமிழர் காணிகள் எப்படி மடக்கினார் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரே.

சம்பந்தரின் நல்லிணக்க அரசியலில், பியசேன எம்பியானதும், இந்தாள் கிழக்கு முதல்வரானதும் தான் கண்ட மிச்சம்.

யாழ் களத்தில் ஒருபடம் கனகாலமாக இருந்தது..சம்பந்தரின் வண்டியைத்தடவியபடியே மைத்திரியுடன் கதைப்பதுபோல்...  சம்பந்தரின் நன்றிக்கு கைமாறுதான் இந்ததடவல்...சம்பந்தர் அய்யா இன்றுவரைக்கும் மறவாமல் நசீருவை கண்டிப்பதே இல்லை...இப்ப நசீரு அய்யாவைவிட ..மேலாகப் பாய்ந்து ..அய்யாவின் சாணக்கியனை கடிக்குது...இதுதான் அந்த பிரட்டல் அரசியல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

ஏறாவூர் புன்னைக்குடா வீதியின் பெயர் மாற்றம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாத்திரம் அல்ல பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனாளோ எந்த கொம்பனாலோ மாற்ற முடியாது...

இதே தினா வெட்டை சிங்களவனிடம் காட்ட தெரியாது அங்கு பம்மி கொண்டு இருப்பினம் .

வரலாறு எப்பவும் ஒரே மாதிரி இருக்கும் என்று நினைத்து சவுண்டு விடுகினம் சமிபத்தில் வங்குரோத்தாகிய பாகிஸ்தானே இவர்களுக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு  ஸ்கொலர்சிப் என்று பாரிய நிதி உதவிகளை செய்கிறது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.