Jump to content

வெள்ளித் தேரோட்டி...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறுக ஓர் தேர் கட்டி

ஊர் கூடி இழுக்க

ஆசை வைச்சு..

தமிழ் தேசியம்

சில்லாய் வைச்சு

கருத்துக்கள் எனும்

தடம் பதித்து

ஆண்டுகள் 25 தானிழுக்க

வெள்ளித் தேராய் ஓடுகிறது

அதுவே யாழ் களம்..!

 

களத்தின் நாயகனே

மோகன் எனும் முதல்வரே

தேரோட்டியாய் தாங்கள்

என்றும் அமைய வேண்டும்...!

 

விலகி நின்றாலும்

நீங்கள் வழிநடத்த

வெள்ளித் தேரது

பொன்னாக வேண்டும்

அதன் காலக் கண்ணாடியில்...!

 

வம்புகள் தும்புகள் 

வந்தாலும் போனாலும்

சம்பவங்கள் நொடி மறந்து

கருத்தால் வேறுண்டாலும்

தமிழால் இணைந்து

நவீனத்துவம் உள்வாங்க

தொடரட்டும் யாழ் எனும்

வெள்ளித் தேர் இழுப்பு...!!

 

இன்று போல் என்றும்

ஊர்கூடி இழுக்கட்டும்

பொழுதுகள் இனிதே

பயனடைய..

மொழியும் மக்களும்

தெளிவடைய...!!

 

ஆக்கம்: நெ.போ (31-03-2023)

 

Edited by nedukkalapoovan
  • Like 7
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணை, 100% ஒதுங்கி, ஓய்வெடுக்காது, வேண்டாப்பிள்ளையை தத்துக் கொடுத்து விட்டுப் போன அப்பா போல இராமல், அப்பப்ப, குறைந்தது மாதம் ஒரு முறையாவது வந்து, குரல் விட வேண்டும்.

என்னப்பா, எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா என்றாவது விசாரித்துப் போகவேணும். 🙏

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

களத்தின் நாயகனே

மோகன் எனும் முதல்வரே

தேரோட்டியாய் தாங்கள்

என்றும் அமைய வேண்டும்...!

அருமை...
பலர் வேண்டுவதும் அஃதே.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான கவிதை நெடுக்ஸ் ..........பாராட்டுக்கள்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை👍, மோகண்ணா இல்லாத யாழை நினைத்து பார்க்க முடியவில்லை, அவரின் முடிவை மாற்றி யாழுடன் பயணித்தால் நன்று, 24வயதில் பிள்ளையுடன் கோவித்து விலகலாமா???

On 1/4/2023 at 04:30, nedukkalapoovan said:

களத்தின் நாயகனே

மோகன் எனும் முதல்வரே

தேரோட்டியாய் தாங்கள்

என்றும் அமைய வேண்டும்...!

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளித் தேரது

பொன்னாக வேண்டும்

ஆகுமென்ற நம்பிக்கையுடன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2023 at 22:30, nedukkalapoovan said:

களத்தின் நாயகனே

மோகன் எனும் முதல்வரே

தேரோட்டியாய் தாங்கள்

என்றும் அமைய வேண்டும்...!

 

விலகி நின்றாலும்

நீங்கள் வழிநடத்த

வெள்ளித் தேரது

பொன்னாக வேண்டும்

அதன் காலக் கண்ணாடியில்...!

நன்றி, யாழினது கம்பீரத்தைப் பாடும் அழகான கவிப்படையல். பல உறவுகளது உள்ளக்கிடக்கையும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை சிறப்பு

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.