Jump to content

Recommended Posts

 


நாள்தோறும் நான் வாழ 
கண்ணா நீ‌ காரணம் 
அன்போடு நின்றாடும் 
உன் நினைவு தோரணம்

நாள்தோறும் நான் வாழ 
கண்ணா நீ‌ காரணம் 
அன்போடு நின்றாடும் 
உன் நினைவு தோரணம்

நான் வாழ நீயின்றி வேறேது
காரணம் 
புதிய தாகம் இதுவோ
காதல் பானம் பருக வருமோ
நமது காதல் விளைய
இது புதுமையான களமோ

நாள்தோறும் நான் வாழ 
கண்ணா நீ‌ காரணம் 
அன்போடு நின்றாடும் 
உன் நினைவு தோரணம்

காற்றுப் போலவே நெஞ்சம் சூழலுதே
உன் கண்ணைக் கண்டதாலே
பேதை என்னையே வாழ
வைத்ததே
நேசம் கொள்ளைக் கொண்டதாலே

உன்னைப் பார்க்கையில் 
அன்னைப் பார்க்கிறேன் 
உந்தன் ஜீவக்கண்ணில்
என்னைப் பார்க்கையில்
உன்னைப் பார்க்கிறேன்
உந்தன் வடிவந்தன்னில்

அன்பைச் சொல்லியே என்னைச்
சேர்க்கிறேன்
இன்று உந்தன் வாழ்வில் 
அன்பே! எண்ணம் கூடுமோ
இந்த மாய வாழ்வினில்....
அன்பே! நேசம் கூடுமோ
உந்தன் ஞான வாழ்வினில்....

அன்னை நீ! தந்தை நீ!
விண்ணும் நீ! மண்ணும் நீ!
கீதை போலே உந்தன் பேரை
ஓதும் பேதை நான்....

நாள்தோறும் நான் வாழ 
கண்ணா நீ‌ காரணம் 
அன்போடு நின்றாடும் 
உன் நினைவு தோரணம்

கல்வி செல்வமும் அன்பு செல்வமும்
வாரித் தந்தவன் நீயே!
நாளும் என்னையே
வாழவைத்திடும்
பேசும் தெய்வம் நீயே!

என்னை வணங்கிடும்
என்னை ஏந்திடும்
மோனவல்லியே
வெள்ளை மனத்தில்
அன்பை மேவியே என்னை ஆளும்  கோதையே
என் மன மேடையில் 
நீ தான் ராதையே
என் நினைவில் வாழ்ந்திடும் 
என் சுவாச பாதையே

என்னுயிர் நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீதான் மனைவி  நீதான் காதலி
நீதான் என் வசந்தம்

நாள்தோறும் நான் வாழ 
கண்ணா நீ‌ காரணம் 
அன்போடு நின்றாடும் 
உன் நினைவு தோரணம்

சரவிபி ரோசிசந்திரா 

 

  • Like 9
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணனை நேசிக்கும் ஒருவராக, அவன் அன்பை யாசிக்கும் ஒருவராக நல்ல கவிதை .......பாராட்டுக்கள்......!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எழுதுங்கள்  ரோசி சந்திரா 👍🏼

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கண்ணன் கவிதை, பாராட்டுக்கள்👏, நானும் முன்னால் தீவிர கண்ணன் பக்தன், பொன்னாலை பெருமாள்தான் அடைக்கலம் அப்போது, இப்ப???

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

இப்ப???

இப்போது யார் பக்தன்? :beaming_face_with_smiling_eyes:

  • Thanks 1
Link to comment
Share on other sites

On 1/4/2023 at 22:35, suvy said:

கண்ணனை நேசிக்கும் ஒருவராக, அவன் அன்பை யாசிக்கும் ஒருவராக நல்ல கவிதை .......பாராட்டுக்கள்......!  👍

நன்றியும் மகிழ்வும் 

On 1/4/2023 at 23:41, nunavilan said:

சரவிபி ரோசிசந்திரா   கவிதைக்கு நன்றி.

நன்றியும் மகிழ்வும் 

On 2/4/2023 at 02:12, குமாரசாமி said:

இன்னும் எழுதுங்கள்  ரோசி சந்திரா 👍🏼

நன்றியும் மகிழ்வும் 

On 2/4/2023 at 17:22, உடையார் said:

நல்ல கண்ணன் கவிதை, பாராட்டுக்கள்👏, நானும் முன்னால் தீவிர கண்ணன் பக்தன், பொன்னாலை பெருமாள்தான் அடைக்கலம் அப்போது, இப்ப???

நன்றியும் மகிழ்வும் 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 1/4/2023 at 22:35, suvy said:

கண்ணனை நேசிக்கும் ஒருவராக, அவன் அன்பை யாசிக்கும் ஒருவராக நல்ல கவிதை .......பாராட்டுக்கள்......!  👍

நன்றியும் மகிழ்வும் 

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 20/4/2023 at 09:10, Kavi arunasalam said:

8440-B9-CB-AB63-4-C8-F-AFCD-E5-EAD21-BDD

நன்றியும் மகிழ்வும் 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.