Jump to content

'மீண்டும்'- முழுநீளத் திரைப்பட ம்


Recommended Posts

உலகெங்கும் உள்ள புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களின் சினிமா உலகைப் பொறுத்தவரை இப்போது பல திரைப்பட தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் ஒஸ்லோவிலும் நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக மீண்டும் எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூiஐயுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது.

வன்முறை வாழ்க்கையை விரும்பும் இளைஞன் ஓருவன் தன் வாழ்க்கைப் பாதையில் காதல் வயப்படுகின்றான். வன்முறை வாழ்வை விட்டு நல்வனாக வாழ முயற்சிக்கின்றான். ஆனால் அவனால் நல்வனாக வாழ முடிகின்றதா? இல்லையா என்பதை பல புதிய திருப்பங்களுடன் சொல்வதே கதையாகும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் வாழ்வனுபவங்களைப் பதிவுசெய்யும் ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்பட முயற்சி இதுவாகும்.

இந்த முயற்சிக்கு தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் வி.எஸ்.உதயாவும், இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை சுவேதா அவர்களும் நோர்வே நாட்டிற்கு வருகை தந்திருக்கின்றனர்.

இத் திரைப்படத்தில் நடிப்பதற்காக அறுவதுக்கும் மேற்பட்ட எம் தமிழ் உறவுகள் இணைந்திருக்கின்றார்கள். ஐPவன், தனா எனும் இரு இளைஞர்கள் துடிப்புடன் நடிக்க அவர்களின் நாடித்துடிப்பறிந்து நடிக்கின்றார் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் நடிகை சுவேதா அவர்கள்.

நோர்வே தமிழ்த் திரைப்பட(Norway Tamil Picture) நிறுவனம் சார்பாக எஸ்.துருபன் அவர்கள் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் திரைப்படத் தயாரிப்புகளில் அனுபவமிக்க பல தொழிநுட்பக் கலைஞர்கள் இணைந்திருக்கின்றார்கள். இவர்களுக்குப் பக்கபலமாகவும், திரைப்படத் தயாரிப்பு மேலாளாராகவும்; வி.எஸ்.உதயா (இசையமைப்பாளர்) அவர்கள் பணியாற்றுகின்றார்.

ஏற்கனவே தொப்புள்கொடி, நிஐங்கள் போன்ற திரைப்படங்களை இயக்கி பல அனுபவங்களைப் பெற்ற இயக்குனர் ஸ்ரீபன் அவர்கள் இத்திரைப்படத்தை கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகின்றார். இவருடைய மேடை நாடகங்கள் ஓஸ்லோ வாழ் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபல்யமானது. இவரோடு உதவி இயக்குனராகப் பணியாற்றுகின்றார் நவசுதன் அவர்கள். ஆகவே இந்த மீண்டும் எனும் முழுநீளத் திரைப்படத்தை ஒரு தரமான படைப்பாக்குவதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டுக்கொண்டிருக்கிறது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பு ஆரோக்கியமான பாதையில் செல்லவேண்டும் என்ற ஆதங்கத்துடன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு ஆகிய முக்கிய பொறுப்புகளை ஏற்றிருக்கின்றார் துருபன் அவர்கள்.

காதல் கடிதம், காதல் மொழி போன்ற இறுவட்டுக்களில் பாடல்களை எழுதியிருக்கும் வசீகரன், இயக்குனர் ஸ்ரீபனும் பாடல்களை எழுத திருவின் இசையில் பாடல் பதிவு பணிகள் திறம்பட நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒலிப்பதிவை வீக்கோ விஐய் கவனிக்க, ஓளியமைப்பை சாங் அவர்கள் கவனிக்கின்றார். ஒப்பனையாளராக சசி கிரிதரனும், சண்டைப்பயிற்சியாளராக சிவா அவர்களும் பணியாற்றுகின்றார். வரைகலை விக்கி. நிழற்படங்கள் மனோ. மக்கள் தொடர்பு செழியன். வசீகரன் ஊடகத் தொடர்புகளை மேற்கொள்ளுகின்றார்.

http://www.ntpicture.com/ for more informations.

Link to comment
Share on other sites

வணக்கம் வசீகரன்,

நீங்கள் வழங்கிய தகவல்களுக்கு நன்றி! அந்த இணைப்பை சொடுக்கும்போது ஒளிப்படங்களையும் பார்க்கக்கூடியதாக இருந்தது. உங்கள் மீண்டும் படம் வெற்றிபெற்று நீங்கள் மீண்டும், மீண்டும் பல புதிய திரைப்படங்களை உருவாக்க, பல திரைப்படங்களில் பாடல்கள் எழுத வாழ்த்துக்கள்!

நன்றி!

Link to comment
Share on other sites

கலைஞன், அயீவன் அண்ணா இருவருக்கும் எனது நன்றிகள்.

கலைஞன் நீங்கள் சமீபகாலமாக மிக நல்ல கருத்துக்கள் செறிந்த தலைப்புகளில் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுகின்றீர்கள் வாழ்த்துக்கள்.

அயீவன் அண்ணா உங்கள் வானொலி ஒலிபரப்பில் எனது பாடல்களை ஒலிபரபுவதாக அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் வானொலிச் சேவை சிறக்கவும் என்னுடைய வாழ்த்துக்கள்.

என்னுடைய நண்பர்கள் தயாரித்து இயக்கும் மீண்டும் திரைப்படச் செய்திகளைத் தொடர்ந்து யாழ்களத்திலும் வழங்க முயற்சிக்கின்றேன். இந்தச் செய்திகளைப் பார்வையிட்டு இச்செய்திகளை உங்கள் உறவுகளுக்கும் பரவும் வகை செய்திடல் வேண்டும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் எனும் புதிய திரைப்படம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றிகள்.

"மீண்டும்" என்ற முழுநீள திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வணக்கம் வசீகரன் அண்ணா,

பல தகவல்களை எங்களுக்காக தங்களுடைய வேலைபளுவிற்கும் மத்தியிலும் வழங்கியதிற்கு மிக்க நன்றிகள்,"மீண்டும்" என்ற திரைபடத்தை பற்றி நீங்க சொன்ன கதையே மிகவும் கவர்ந்து விட்டது படம் மிகவும் நன்றாக தான் வரும் என்று நினைக்கிறேன்,படம் நன்றாக வர வாழ்த்துகள்,இன்னும் பல பாடல்களை ஈழதமிழர்களுக்காக நீங்கள் தர வேண்டும் எம்மவர்களும் எமது படைபாளிகளுக்கு இயன்றதை செய்ய வேண்டும் என்பது தான் என் சிறிய விண்ணப்பம்.நிச்சயமாக பல உறவுகளும் இதை பார்க்கும்படி செய்கிறேன் நீங்கள் உங்கள் பணியில் வெற்றி பெற்று மீண்டும் வருக என வாழ்த்துகிறேன். :huh:

நன்றி

Link to comment
Share on other sites

கறுப்பி, ஈழப்பிரியன், வெண்ணிலா, ஐமுனா அனைவருக்கும் எனது இனிப்பான நன்றிகள். அதுக்காக இனிப்புக் கேட்காதையுங்கோ. இனிப்பான பாடல்களை இத் திரைப்படத்தின் மூலமும் தர முயற்சிக்கின்றோம். இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் பிரமாதமாக வந்து கொண்டிருக்கின்றது. உங்கள் ஒத்துழைப்புக்கு எங்கள் திரைப்படக் குழுவினரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மிக்க நன்றி ஐமுனா:lol:

Link to comment
Share on other sites

நன்றி வசிகரன் அண்ணா தகவல்களுக்கு உங்கள் முயற்சி வெற்றி அடைய மனதார வாழ்த்துகின்றேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.