Jump to content

"வேங்கையன் பூங்கொடி" விமர்சனப்பகுதி


Recommended Posts

பாகம் இரண்டை இன்று தான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் நன்றாக இருந்தது பல தமிழ் வார்த்தைகளை நானும் அறிய கூடியதாக இருந்தது வாழ்த்துகள் எல்லாவற்றையும் விட காவியதிற்குள் எங்களை அழைத்து சென்ற விதம் அருமை......... :lol:

கவனமாக வாருங்கள்!

குண்டுகளும், எறிகணையும்

உயிர் உரசி உலவும்

காவலரன் மத்திக்கே

இக்காவியத்தால் நுழைய

வேண்டும்!

உயிர் காப்புப் பயிற்சி

உங்களுக்கு அவசியம்.

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யமுனா.

எப்படி உங்களால் மட்டும் எல்லாவிடத்திலும் நுழைந்து அனைவரையும் பாராட்டித் தட்டிக் கொடுக்க முடிகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஹாராவுக்கு நிகர் சஹாரா என்பது முக்கியமாக கனடாவில் வசிப்பவர்களுக்கு பலவருடங்களாக தெரிந்த விடயம்.

சஹாராவை பாராட்டுவதிற்கோ, வாழ்த்துவதிற்கோ எனக்கு தகுதியில்லை என்பதை ஒத்துக்கொண்டாலும் நான் தமிழை நேசிப்பவன் என்ற ரீதியில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

10,15 வருடங்களாக தமிழ்த்தேசியம் என்ற குறிக்கோளுடன் தனது ஆக்கங்களை நகர்த்தி வருகின்ற ஒரு தமிழ் ஆர்வளர்தான் சஹாரா.

சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இலக்கியவாதி சஹாரா இன்று யாழில் இதைப்போன்ற படைப்புக்களை தொடர்ந்து வழங்கவேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.

வணக்கம் வல்வை மைந்தன்,

தமிழ்த்தேசியம் நோக்கி இயங்குகின்றேன் என்ற சொல் எனக்கு மகுடம் சூட்டுகிறது. இருப்பினும் முழுமையான தேசியத்திற்காகச் செயற்படுகிறேனா? என்று எனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகள்..... பல கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் வேர் பிரித்த சிறுதளிராக புலம்பெயர் தேசத்தில் என்வாழ்வை எழுதிச் செல்கிறது விதி.

பேச்சாளர், இலக்கியவாதி என்றெல்லாம் என்னை நோக்கி வார்த்தைகளை அடுக்கிச் செல்லாதீர்கள் இலக்கற்ற பேச்சாளராகவும், இலக்கியவாதியாகவும் இருப்பதைக் காட்டிலும் இலக்குள்ள எழுதுகோலுக்குச் சொந்தக்காரியாக இருக்கவே விரும்புகிறேன். தொடர்ந்தும் யாழின் எனது வருகையும், பங்களிப்பும் இருக்கும். வல்வை மைந்தன் உங்கள் கருத்தினைக் கொஞ்சம் மாற்றுங்கள். தாயகத்தை நேசிக்கும் வல்வை நண்பி என்பதே எனக்கான சரியான பதமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேங்கையன் பூங்கொடி

பாகம் 1, அங்கம் - 3

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry348269

Link to comment
Share on other sites

அங்கம் 3 தலைப்பு "பிரியசகி"

அழகாக காலைப்பொழுதை வர்ணித்து இரு நங்கைகளது அங்கங்களை வர்ணித்து பாடசாலைக்கு அனுப்பி அங்கு மாணவியருக்கு முதலுதவி படிப்பிக்க முதலுதவியின் அவசியத்தை அழகாக சொல்லி அங்கம் 3 ஐ முடித்திருக்கிறீங்க கவிதைக்குரிய பாணியில். பாராட்டுக்கள் அக்கா

செய்திடும் பணியிலே சோர்ந்ததும் இல்லை

இவர்கள்

சிகப்புத் துளி கண்டு தேம்பியதும் இல்லை.

பிடிச்சிருக்கு இருதோழிகளது பணியும் பிடிச்சிருக்கு

Link to comment
Share on other sites

நன்றி யமுனா.

எப்படி உங்களால் மட்டும் எல்லாவிடத்திலும் நுழைந்து அனைவரையும் பாராட்டித் தட்டிக் கொடுக்க முடிகிறது?

அக்கா ஒருவரை பாராட்டுவதால் நாம் எந்த வகையிலும் குறைய போவதில்லை மாறாக பல விசயங்களை அவர்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும் :( ,உதாரணதிற்கு வெள்ளையர்களை கவனித்து இருந்தா யார் நல்லது செய்தாலும் நேராக பாராட்டுவார்கள் அவர்கள் வயதில் குறைவா இருந்தா என்ன உடனடியாக பாராட்டி ஒரு நல்ல நட்பு வட்டதை உருவாக்கி!!அவர்களை முன்னேற்றுவதோடு தாங்களும் பல விசயங்களை அறிந்து கொள்வார்கள் :icon_mrgreen: ...........எங்கள் சமூகத்தில் இது கொஞ்சம் கஷ்டம் தான் அக்கா...!! :(

செய்திடும் பணியிலே சோர்ந்ததும் இல்லை

இவர்கள்

சிகப்புத் துளி கண்டு தேம்பியதும் இல்லை.

பாகம் 3 யை சுவைக்கு சந்தப்பம் தற்போது தான் கிடைத்தது "பிரியசகி" மிகவும் அழகாக உணர்வுடனும் தொகுத்து அளித்திருந்தீர்கள் மிகவும் நன்றாக இருந்தது,அதிலும் முடிவில் வந்த இரு வரிகள் அருமை வாழ்த்துகள் அக்கா!! :wub:

Link to comment
Share on other sites

வெள்ளையர்களை கவனித்து இருந்தா யார் நல்லது செய்தாலும் நேராக பாராட்டுவார்கள் அவர்கள் வயதில் குறைவா இருந்தா என்ன உடனடியாக பாராட்டி ஒரு நல்ல நட்பு வட்டதை உருவாக்கி!!அவர்களை முன்னேற்றுவதோடு தாங்களும் பல விசயங்களை அறிந்து கொள்வார்கள் ...........எங்கள் சமூகத்தில் இது கொஞ்சம் கஷ்டம் தான் அக்கா...!!

நல்லாக சொல்லி இருக்கிறீங்க ஜம்மு. எபப்டி உங்களால் இப்படி

Link to comment
Share on other sites

நல்லாக சொல்லி இருக்கிறீங்க ஜம்மு. எபப்டி உங்களால் இப்படி

எல்லாம் அவுஸ்ரெலியா கற்று தந்த பாடம் தான் நிலா அக்கா......... :( !!ஆனா எல்லாரும் அவுஸ்ரெலியர்கள் தலைகணம் பிடித்தவர்கள் என்று சொல்லுவார்கள் எல்லாம் காலம் தான் நிலா அக்கா!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! இப்போதுதான் 'உங்களது வேங்கையன் பூங்கொடி" வாசித்தேன். மிகவும் நயமாக நகர்கிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் காவியம். :wub::lol:

பி.கு: முன் பக்கத்தில் ஜமுனாவும், வெண்ணிலாவும் ஆம்பல் பற்றிக் கேட்டிருந்தனர். ஆம்பல் என்றால் அல்லி மலரைக் குறிக்கும்.

தாமரை மலரை முகத்துக்கும், கைகளுக்கும் ஒப்பிடுவார்கள்.

அல்லி மலரை அதரத்துக்கும்(உதடு), கண் இமைக்கும் ஒப்பிடுவார்கள். 'அல்லி விழி மூடம்மா."

ஆண்டாளின் பாசுரத்திலும் இதைக் காணலாம்.

'செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்"

திருப்பாவை: 14ம் பாடல்.

பிழையிருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனந்திறந்து கேள்விகள் கேட்ட யமுனா, வெண்ணிலா இருவருக்கும் நன்றிகள்.

'மண்டலியை விழிக்கச் சொல்லி மயில்கள் அகவும்."

'மண்டலி" என்பதற்கு 'மண்" என்றும் ஒரு பொருள் உள்ளது. அந்த வகையில் மண்ணவளான பூமாதேவியை விழிக்கச் சொல்லி மயில்கள் அகவும் என்பதே அதன் பொருள்.

'ஆம்பல் பூத்த அதரங்கள் நெகிழ அன்றைய கடமைகள் ஆற்ற வந்தாள்"

ஆம்பல் என்பது தாமரை மலரைப்போன்றது அதில் வெள்ளாம்பல், செவ்வாம்பல் என்று இரண்டு வகைகள் உள்ளன. இங்கு இடம்பெற்ற இக்கவிதைத்துளியில் வெள்ளாம்பலை எடுத்துக் கொள்வதே பொருந்தும். அதாவது தூக்கம் கலைந்து காலையில் எழுந்து வரும் ஒருவரிடம் சிவந்த அதரங்களைக் காணமுடியாது. சற்று சாம்பல் படர்ந்து வெளிரிய உதடுகளைத்தான் காணலாம். அதைத்தான் இவ்வரி புலப்படுத்துகிறது. யமுனாவிற்கும் வெண்ணிலாவுக்கும் இந்த விளக்கங்கள் புரியக்கூடியதாக உள்ளனவா?

சுவி, நீங்கள் இவ்விளக்கத்தினைப் பார்க்கவில்லைப்போல் இருக்கிறது. உங்கள் முயற்சியும் மகிழ்வளிக்கிறது. எங்களை அறியாமலே பழைய பாசுரங்களில் உள்ளவை எங்களை ஆளும் என்பதற்கு நல்ல சான்றை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள், நன்றி சுவி.

யமுனா நல்ல சில விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள் நானும் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன்

Link to comment
Share on other sites

பாகம் 4 '"கூற்றுவன் கேட்டால்" நீங்கள் எழுதிய விதம் வாசிக்க தூண்டுகிறது மிகவும் நன்றாக இருகிறது :unsure: ஆனால் தலைப்பு "கூற்றுவன் கேட்டால்" என்பதன் பொருள் தான் விளங்கவில்லை எனக்கு கொஞ்சம் விளங்கபடுத்தமுடியுமா!!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வணக்கம்

வல்வை சகாரா

அருமையாக அழகு தமிழை உங்கள் கவிநடையால் இன்னும் அழகுற செய்திருக்கின்றீர்கள். அங்கம் 4 இணைத் தொட்டாலும் நான் இன்னும் ஒன்றிலிருந்து மீளவில்லை. வெளிவர மறுக்கின்றது மனது. . . .

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 4 '"கூற்றுவன் கேட்டால்" நீங்கள் எழுதிய விதம் வாசிக்க தூண்டுகிறது மிகவும் நன்றாக இருகிறது :o ஆனால் தலைப்பு "கூற்றுவன் கேட்டால்" என்பதன் பொருள் தான் விளங்கவில்லை எனக்கு கொஞ்சம் விளங்கபடுத்தமுடியுமா!!! :o

அப்ப நான் வரட்டா!!

ஊற்றெடுத்த உதிர ஆற்றில்

உருக்குலையும் இச்சகாவை

கூற்றுவன் கேட்பதற்காய்

காற்றாக விடுவானா?

எத்தனையோ தோழரினை

எமன் பிடுங்கத் தோற்றவன்தான்

இன்னவனை மட்டுமென்ன

எளிதாகக் கொடுப்பானா?

நன்றி யமுனா.

உண்மையிலேயே புரியவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

வல்வை சகாரா

அருமையாக அழகு தமிழை உங்கள் கவிநடையால் இன்னும் அழகுற செய்திருக்கின்றீர்கள். அங்கம் 4 இணைத் தொட்டாலும் நான் இன்னும் ஒன்றிலிருந்து மீளவில்லை. வெளிவர மறுக்கின்றது மனது. . . .

வாழ்த்துக்கள்.

நன்றி பரணி, அங்கம் 1 எனக்கும் கூட இன்னும் கிறக்கம் கொடுக்கும் பகுதியாகவே இருக்கிறது.

விடுபடமுடியவில்லை என்று தொடர்ந்து வாசிக்காமல் விட்டுவிடாதீர்கள். வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் வல்வை சகாரா அக்கா முதலில் "கூற்றுவன்" என்பதில் ஒரு சிறிய மயக்கம் தற்போது மயக்கத்தில் ஒரு தெளிவு!! :lol:

இந்த வாரம் "மனபுதிர்" என்று நீங்கள் எழுதிய விதம் பல மனபுதிர்களை கண்களிற்கு முன் கொண்டு வந்து நிறுத்துகிறது வாழ்த்துகள்....... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா உங்களுக்கு பல மனப்புதிர்கள் புரிகிறதா?

விடை காண முடியாத பலகேள்விகள் மனதிற்குள் முடிச்சுப் போட்டுக் கொண்டு மல்லாக்கக் கிடக்கும். காலம் ஆக ஆக முடிச்சுகள் அவிழாவிடின் புதிராகிப் போய்விடும்.

உங்களுக்குப் புரிந்த மனப்புதிர்கள் எப்படி?

சந்தேகத்துடன் கேட்கிறேன் என்று குறை விளங்க வேண்டாம் நீங்க பேபி என்று கொண்டு பம்பர்ஸ் கட்டித் திரிவதாகக் கேள்விப்பட்டேன் ஆதலால்த்தான் இக்கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வேங்கையன் பூங்கொடி"

பாகம் 1,

அங்கம் 6

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry353883

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகாரா.உங்கள் வேங்கையன் பூங்கொடி வாசிக்க மிகவும் பெருமையாக இருக்கிறது.தொடருங்கள்.

Link to comment
Share on other sites

பல அங்கங்களாஇ இன்றுதான் வாசித்தேன். உங்கள் எழுத்தாற்றலை நினைத்து பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழப்பிரியன், வெண்ணிலா தொடர்ந்தும் வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

யமுனா உங்களுக்கு பல மனப்புதிர்கள் புரிகிறதா?

விடை காண முடியாத பலகேள்விகள் மனதிற்குள் முடிச்சுப் போட்டுக் கொண்டு மல்லாக்கக் கிடக்கும். காலம் ஆக ஆக முடிச்சுகள் அவிழாவிடின் புதிராகிப் போய்விடும்.

உங்களுக்குப் புரிந்த மனப்புதிர்கள் எப்படி?

சந்தேகத்துடன் கேட்கிறேன் என்று குறை விளங்க வேண்டாம் நீங்க பேபி என்று கொண்டு பம்பர்ஸ் கட்டித் திரிவதாகக் கேள்விப்பட்டேன் ஆதலால்த்தான் இக்கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

பல மனபுதிர்களிற்கு விடையை தேடி செல்லாம பேபியாக இருந்துவிட்டால் பிரச்சினை ஏதும் இல்லை அக்கா சில புதிர்களை ஆராய்ச்சி பண்ண வெளிகிட்டால் உலகில் நிம்மதியாக வாழமுடியாது!! :) ஆகவே பம்பர்ஸ் கட்டு பேபியாக திரிந்துவிட்டால் புரிந்தும் புரியாத மாதிரி இருந்துவிடலாம் பல குழப்பங்களிள் இருந்தும் விலகிகொள்ளளாம்!! :)

சகரா அக்கா தங்களின் காவியத்தில் பாகம் 6 "அண்டத்தை கடந்தவள்" மற்றும் பாகம் 7 "மெளனவலிகள் இவை யாவற்றையும் சுவைக்க தற்போது தான் நேரம் கிடைத்தது மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துகள்!! :)

எல்லாவற்றையும் விட "மெளனவலிகள்" ஏதோ தெரியாது ரொம்பவே பிடித்திருந்தது! :( !

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வல்வை சகீரா பாராட்டுக்கள் சத்தியமா சொல்லுறன் இப்பிடியெல்லாம் எழுத எனக்கும் ஆசை ஆனால் எப்பிடி எழுத தொடங்கினாலும்வருதில்லை அதனாலை வயிறுபூர்வமான வாழ்த்துகள் (நெடுக மனப்ப+ர்வமா வாழ்த்தி அலுத்து போச்சுது) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யமுனா உங்கள் கருத்திற்கு... மௌன வலிகள் உங்களுக்கும் இருக்கிறது போல் ஆதலால் தான் அப்பகுதி உங்களுக்கு மிகவும் பிடிக்கிறது என நினைக்கிறேன். அத்தோடு யமுனா வேங்கையன் பூங்கொடி இப்போதுதான் முதலாம் பாகத்து எழாவது அங்கத்தில் நடைபோடுகிறது. நீங்கள் அங்கங்களை பாகங்களாக்கி விமர்சித்திருக்கிறீர்கள் ஒவ்வொரு அங்கத்தையும் ஒவ்வொரு பாகமாக விரிவுபடுத்தி எழுத வைத்துவிடுவீர்கள் போல் இருக்கிறது.

நன்றி சாத்திரியார்,

'தாய்மை மனதிற்குள் தவிப்பு

நஞ்சணிந்த நெஞ்சம் காணக் காண

கருவறை கலங்கியது"

உங்களின் வயிறுபூர்வமாக வாழ்த்து தாய்மாரை நினைவூட்டுகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry355516

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வினாடிப் பொழுதுகளில்

தன் நிலை தேற்றி முறுவல் பூத்தவன்

அகன்று செல்ல அகங்கள் துடித்தன.

சென்றவன் திக்கை நின்று பார்த்தவள்

நெஞ்சம் அவன் பின்னோட

நலன்புரி சங்கம் ஏகினாள்.

இந்த நாடகம்

இருவருக்குள்ளா?

இன்னிரு சோடிக் கண்கள் மறுத்தன

ஜதார்த்தமான வரிகள் சில சமயம் நெஞ்சைக் கனக்க வைக்கும்.

உங்கள் கவிநடை அழகு தொடருங்கள்......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.