Jump to content

"வேங்கையன் பூங்கொடி" விமர்சனப்பகுதி


Recommended Posts

பாகம் இரண்டை இன்று தான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் நன்றாக இருந்தது பல தமிழ் வார்த்தைகளை நானும் அறிய கூடியதாக இருந்தது வாழ்த்துகள் எல்லாவற்றையும் விட காவியதிற்குள் எங்களை அழைத்து சென்ற விதம் அருமை......... :lol:

கவனமாக வாருங்கள்!

குண்டுகளும், எறிகணையும்

உயிர் உரசி உலவும்

காவலரன் மத்திக்கே

இக்காவியத்தால் நுழைய

வேண்டும்!

உயிர் காப்புப் பயிற்சி

உங்களுக்கு அவசியம்.

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யமுனா.

எப்படி உங்களால் மட்டும் எல்லாவிடத்திலும் நுழைந்து அனைவரையும் பாராட்டித் தட்டிக் கொடுக்க முடிகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஹாராவுக்கு நிகர் சஹாரா என்பது முக்கியமாக கனடாவில் வசிப்பவர்களுக்கு பலவருடங்களாக தெரிந்த விடயம்.

சஹாராவை பாராட்டுவதிற்கோ, வாழ்த்துவதிற்கோ எனக்கு தகுதியில்லை என்பதை ஒத்துக்கொண்டாலும் நான் தமிழை நேசிப்பவன் என்ற ரீதியில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

10,15 வருடங்களாக தமிழ்த்தேசியம் என்ற குறிக்கோளுடன் தனது ஆக்கங்களை நகர்த்தி வருகின்ற ஒரு தமிழ் ஆர்வளர்தான் சஹாரா.

சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இலக்கியவாதி சஹாரா இன்று யாழில் இதைப்போன்ற படைப்புக்களை தொடர்ந்து வழங்கவேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.

வணக்கம் வல்வை மைந்தன்,

தமிழ்த்தேசியம் நோக்கி இயங்குகின்றேன் என்ற சொல் எனக்கு மகுடம் சூட்டுகிறது. இருப்பினும் முழுமையான தேசியத்திற்காகச் செயற்படுகிறேனா? என்று எனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகள்..... பல கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் வேர் பிரித்த சிறுதளிராக புலம்பெயர் தேசத்தில் என்வாழ்வை எழுதிச் செல்கிறது விதி.

பேச்சாளர், இலக்கியவாதி என்றெல்லாம் என்னை நோக்கி வார்த்தைகளை அடுக்கிச் செல்லாதீர்கள் இலக்கற்ற பேச்சாளராகவும், இலக்கியவாதியாகவும் இருப்பதைக் காட்டிலும் இலக்குள்ள எழுதுகோலுக்குச் சொந்தக்காரியாக இருக்கவே விரும்புகிறேன். தொடர்ந்தும் யாழின் எனது வருகையும், பங்களிப்பும் இருக்கும். வல்வை மைந்தன் உங்கள் கருத்தினைக் கொஞ்சம் மாற்றுங்கள். தாயகத்தை நேசிக்கும் வல்வை நண்பி என்பதே எனக்கான சரியான பதமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேங்கையன் பூங்கொடி

பாகம் 1, அங்கம் - 3

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry348269

Link to comment
Share on other sites

அங்கம் 3 தலைப்பு "பிரியசகி"

அழகாக காலைப்பொழுதை வர்ணித்து இரு நங்கைகளது அங்கங்களை வர்ணித்து பாடசாலைக்கு அனுப்பி அங்கு மாணவியருக்கு முதலுதவி படிப்பிக்க முதலுதவியின் அவசியத்தை அழகாக சொல்லி அங்கம் 3 ஐ முடித்திருக்கிறீங்க கவிதைக்குரிய பாணியில். பாராட்டுக்கள் அக்கா

செய்திடும் பணியிலே சோர்ந்ததும் இல்லை

இவர்கள்

சிகப்புத் துளி கண்டு தேம்பியதும் இல்லை.

பிடிச்சிருக்கு இருதோழிகளது பணியும் பிடிச்சிருக்கு

Link to comment
Share on other sites

நன்றி யமுனா.

எப்படி உங்களால் மட்டும் எல்லாவிடத்திலும் நுழைந்து அனைவரையும் பாராட்டித் தட்டிக் கொடுக்க முடிகிறது?

அக்கா ஒருவரை பாராட்டுவதால் நாம் எந்த வகையிலும் குறைய போவதில்லை மாறாக பல விசயங்களை அவர்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும் :( ,உதாரணதிற்கு வெள்ளையர்களை கவனித்து இருந்தா யார் நல்லது செய்தாலும் நேராக பாராட்டுவார்கள் அவர்கள் வயதில் குறைவா இருந்தா என்ன உடனடியாக பாராட்டி ஒரு நல்ல நட்பு வட்டதை உருவாக்கி!!அவர்களை முன்னேற்றுவதோடு தாங்களும் பல விசயங்களை அறிந்து கொள்வார்கள் :icon_mrgreen: ...........எங்கள் சமூகத்தில் இது கொஞ்சம் கஷ்டம் தான் அக்கா...!! :(

செய்திடும் பணியிலே சோர்ந்ததும் இல்லை

இவர்கள்

சிகப்புத் துளி கண்டு தேம்பியதும் இல்லை.

பாகம் 3 யை சுவைக்கு சந்தப்பம் தற்போது தான் கிடைத்தது "பிரியசகி" மிகவும் அழகாக உணர்வுடனும் தொகுத்து அளித்திருந்தீர்கள் மிகவும் நன்றாக இருந்தது,அதிலும் முடிவில் வந்த இரு வரிகள் அருமை வாழ்த்துகள் அக்கா!! :wub:

Link to comment
Share on other sites

வெள்ளையர்களை கவனித்து இருந்தா யார் நல்லது செய்தாலும் நேராக பாராட்டுவார்கள் அவர்கள் வயதில் குறைவா இருந்தா என்ன உடனடியாக பாராட்டி ஒரு நல்ல நட்பு வட்டதை உருவாக்கி!!அவர்களை முன்னேற்றுவதோடு தாங்களும் பல விசயங்களை அறிந்து கொள்வார்கள் ...........எங்கள் சமூகத்தில் இது கொஞ்சம் கஷ்டம் தான் அக்கா...!!

நல்லாக சொல்லி இருக்கிறீங்க ஜம்மு. எபப்டி உங்களால் இப்படி

Link to comment
Share on other sites

நல்லாக சொல்லி இருக்கிறீங்க ஜம்மு. எபப்டி உங்களால் இப்படி

எல்லாம் அவுஸ்ரெலியா கற்று தந்த பாடம் தான் நிலா அக்கா......... :( !!ஆனா எல்லாரும் அவுஸ்ரெலியர்கள் தலைகணம் பிடித்தவர்கள் என்று சொல்லுவார்கள் எல்லாம் காலம் தான் நிலா அக்கா!! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி! இப்போதுதான் 'உங்களது வேங்கையன் பூங்கொடி" வாசித்தேன். மிகவும் நயமாக நகர்கிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் காவியம். :wub::lol:

பி.கு: முன் பக்கத்தில் ஜமுனாவும், வெண்ணிலாவும் ஆம்பல் பற்றிக் கேட்டிருந்தனர். ஆம்பல் என்றால் அல்லி மலரைக் குறிக்கும்.

தாமரை மலரை முகத்துக்கும், கைகளுக்கும் ஒப்பிடுவார்கள்.

அல்லி மலரை அதரத்துக்கும்(உதடு), கண் இமைக்கும் ஒப்பிடுவார்கள். 'அல்லி விழி மூடம்மா."

ஆண்டாளின் பாசுரத்திலும் இதைக் காணலாம்.

'செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்"

திருப்பாவை: 14ம் பாடல்.

பிழையிருந்தால் பொறுத்துக் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனந்திறந்து கேள்விகள் கேட்ட யமுனா, வெண்ணிலா இருவருக்கும் நன்றிகள்.

'மண்டலியை விழிக்கச் சொல்லி மயில்கள் அகவும்."

'மண்டலி" என்பதற்கு 'மண்" என்றும் ஒரு பொருள் உள்ளது. அந்த வகையில் மண்ணவளான பூமாதேவியை விழிக்கச் சொல்லி மயில்கள் அகவும் என்பதே அதன் பொருள்.

'ஆம்பல் பூத்த அதரங்கள் நெகிழ அன்றைய கடமைகள் ஆற்ற வந்தாள்"

ஆம்பல் என்பது தாமரை மலரைப்போன்றது அதில் வெள்ளாம்பல், செவ்வாம்பல் என்று இரண்டு வகைகள் உள்ளன. இங்கு இடம்பெற்ற இக்கவிதைத்துளியில் வெள்ளாம்பலை எடுத்துக் கொள்வதே பொருந்தும். அதாவது தூக்கம் கலைந்து காலையில் எழுந்து வரும் ஒருவரிடம் சிவந்த அதரங்களைக் காணமுடியாது. சற்று சாம்பல் படர்ந்து வெளிரிய உதடுகளைத்தான் காணலாம். அதைத்தான் இவ்வரி புலப்படுத்துகிறது. யமுனாவிற்கும் வெண்ணிலாவுக்கும் இந்த விளக்கங்கள் புரியக்கூடியதாக உள்ளனவா?

சுவி, நீங்கள் இவ்விளக்கத்தினைப் பார்க்கவில்லைப்போல் இருக்கிறது. உங்கள் முயற்சியும் மகிழ்வளிக்கிறது. எங்களை அறியாமலே பழைய பாசுரங்களில் உள்ளவை எங்களை ஆளும் என்பதற்கு நல்ல சான்றை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள், நன்றி சுவி.

யமுனா நல்ல சில விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள் நானும் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன்

Link to comment
Share on other sites

பாகம் 4 '"கூற்றுவன் கேட்டால்" நீங்கள் எழுதிய விதம் வாசிக்க தூண்டுகிறது மிகவும் நன்றாக இருகிறது :unsure: ஆனால் தலைப்பு "கூற்றுவன் கேட்டால்" என்பதன் பொருள் தான் விளங்கவில்லை எனக்கு கொஞ்சம் விளங்கபடுத்தமுடியுமா!!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வணக்கம்

வல்வை சகாரா

அருமையாக அழகு தமிழை உங்கள் கவிநடையால் இன்னும் அழகுற செய்திருக்கின்றீர்கள். அங்கம் 4 இணைத் தொட்டாலும் நான் இன்னும் ஒன்றிலிருந்து மீளவில்லை. வெளிவர மறுக்கின்றது மனது. . . .

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 4 '"கூற்றுவன் கேட்டால்" நீங்கள் எழுதிய விதம் வாசிக்க தூண்டுகிறது மிகவும் நன்றாக இருகிறது :o ஆனால் தலைப்பு "கூற்றுவன் கேட்டால்" என்பதன் பொருள் தான் விளங்கவில்லை எனக்கு கொஞ்சம் விளங்கபடுத்தமுடியுமா!!! :o

அப்ப நான் வரட்டா!!

ஊற்றெடுத்த உதிர ஆற்றில்

உருக்குலையும் இச்சகாவை

கூற்றுவன் கேட்பதற்காய்

காற்றாக விடுவானா?

எத்தனையோ தோழரினை

எமன் பிடுங்கத் தோற்றவன்தான்

இன்னவனை மட்டுமென்ன

எளிதாகக் கொடுப்பானா?

நன்றி யமுனா.

உண்மையிலேயே புரியவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

வல்வை சகாரா

அருமையாக அழகு தமிழை உங்கள் கவிநடையால் இன்னும் அழகுற செய்திருக்கின்றீர்கள். அங்கம் 4 இணைத் தொட்டாலும் நான் இன்னும் ஒன்றிலிருந்து மீளவில்லை. வெளிவர மறுக்கின்றது மனது. . . .

வாழ்த்துக்கள்.

நன்றி பரணி, அங்கம் 1 எனக்கும் கூட இன்னும் கிறக்கம் கொடுக்கும் பகுதியாகவே இருக்கிறது.

விடுபடமுடியவில்லை என்று தொடர்ந்து வாசிக்காமல் விட்டுவிடாதீர்கள். வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் வல்வை சகாரா அக்கா முதலில் "கூற்றுவன்" என்பதில் ஒரு சிறிய மயக்கம் தற்போது மயக்கத்தில் ஒரு தெளிவு!! :lol:

இந்த வாரம் "மனபுதிர்" என்று நீங்கள் எழுதிய விதம் பல மனபுதிர்களை கண்களிற்கு முன் கொண்டு வந்து நிறுத்துகிறது வாழ்த்துகள்....... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா உங்களுக்கு பல மனப்புதிர்கள் புரிகிறதா?

விடை காண முடியாத பலகேள்விகள் மனதிற்குள் முடிச்சுப் போட்டுக் கொண்டு மல்லாக்கக் கிடக்கும். காலம் ஆக ஆக முடிச்சுகள் அவிழாவிடின் புதிராகிப் போய்விடும்.

உங்களுக்குப் புரிந்த மனப்புதிர்கள் எப்படி?

சந்தேகத்துடன் கேட்கிறேன் என்று குறை விளங்க வேண்டாம் நீங்க பேபி என்று கொண்டு பம்பர்ஸ் கட்டித் திரிவதாகக் கேள்விப்பட்டேன் ஆதலால்த்தான் இக்கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வேங்கையன் பூங்கொடி"

பாகம் 1,

அங்கம் 6

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry353883

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகாரா.உங்கள் வேங்கையன் பூங்கொடி வாசிக்க மிகவும் பெருமையாக இருக்கிறது.தொடருங்கள்.

Link to comment
Share on other sites

பல அங்கங்களாஇ இன்றுதான் வாசித்தேன். உங்கள் எழுத்தாற்றலை நினைத்து பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழப்பிரியன், வெண்ணிலா தொடர்ந்தும் வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

யமுனா உங்களுக்கு பல மனப்புதிர்கள் புரிகிறதா?

விடை காண முடியாத பலகேள்விகள் மனதிற்குள் முடிச்சுப் போட்டுக் கொண்டு மல்லாக்கக் கிடக்கும். காலம் ஆக ஆக முடிச்சுகள் அவிழாவிடின் புதிராகிப் போய்விடும்.

உங்களுக்குப் புரிந்த மனப்புதிர்கள் எப்படி?

சந்தேகத்துடன் கேட்கிறேன் என்று குறை விளங்க வேண்டாம் நீங்க பேபி என்று கொண்டு பம்பர்ஸ் கட்டித் திரிவதாகக் கேள்விப்பட்டேன் ஆதலால்த்தான் இக்கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

பல மனபுதிர்களிற்கு விடையை தேடி செல்லாம பேபியாக இருந்துவிட்டால் பிரச்சினை ஏதும் இல்லை அக்கா சில புதிர்களை ஆராய்ச்சி பண்ண வெளிகிட்டால் உலகில் நிம்மதியாக வாழமுடியாது!! :) ஆகவே பம்பர்ஸ் கட்டு பேபியாக திரிந்துவிட்டால் புரிந்தும் புரியாத மாதிரி இருந்துவிடலாம் பல குழப்பங்களிள் இருந்தும் விலகிகொள்ளளாம்!! :)

சகரா அக்கா தங்களின் காவியத்தில் பாகம் 6 "அண்டத்தை கடந்தவள்" மற்றும் பாகம் 7 "மெளனவலிகள் இவை யாவற்றையும் சுவைக்க தற்போது தான் நேரம் கிடைத்தது மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துகள்!! :)

எல்லாவற்றையும் விட "மெளனவலிகள்" ஏதோ தெரியாது ரொம்பவே பிடித்திருந்தது! :( !

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வல்வை சகீரா பாராட்டுக்கள் சத்தியமா சொல்லுறன் இப்பிடியெல்லாம் எழுத எனக்கும் ஆசை ஆனால் எப்பிடி எழுத தொடங்கினாலும்வருதில்லை அதனாலை வயிறுபூர்வமான வாழ்த்துகள் (நெடுக மனப்ப+ர்வமா வாழ்த்தி அலுத்து போச்சுது) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யமுனா உங்கள் கருத்திற்கு... மௌன வலிகள் உங்களுக்கும் இருக்கிறது போல் ஆதலால் தான் அப்பகுதி உங்களுக்கு மிகவும் பிடிக்கிறது என நினைக்கிறேன். அத்தோடு யமுனா வேங்கையன் பூங்கொடி இப்போதுதான் முதலாம் பாகத்து எழாவது அங்கத்தில் நடைபோடுகிறது. நீங்கள் அங்கங்களை பாகங்களாக்கி விமர்சித்திருக்கிறீர்கள் ஒவ்வொரு அங்கத்தையும் ஒவ்வொரு பாகமாக விரிவுபடுத்தி எழுத வைத்துவிடுவீர்கள் போல் இருக்கிறது.

நன்றி சாத்திரியார்,

'தாய்மை மனதிற்குள் தவிப்பு

நஞ்சணிந்த நெஞ்சம் காணக் காண

கருவறை கலங்கியது"

உங்களின் வயிறுபூர்வமாக வாழ்த்து தாய்மாரை நினைவூட்டுகிறது.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry355516

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வினாடிப் பொழுதுகளில்

தன் நிலை தேற்றி முறுவல் பூத்தவன்

அகன்று செல்ல அகங்கள் துடித்தன.

சென்றவன் திக்கை நின்று பார்த்தவள்

நெஞ்சம் அவன் பின்னோட

நலன்புரி சங்கம் ஏகினாள்.

இந்த நாடகம்

இருவருக்குள்ளா?

இன்னிரு சோடிக் கண்கள் மறுத்தன

ஜதார்த்தமான வரிகள் சில சமயம் நெஞ்சைக் கனக்க வைக்கும்.

உங்கள் கவிநடை அழகு தொடருங்கள்......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.