Jump to content

'வேங்கையன் பூங்கொடி"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அங்கம் 23

வேங்கையன் பூங்கொடி

சிறிது நேரம் பெரிதாய் கழிய,

வாசிகசாலை வாசற்புறத்திலே

ஓசையில்லா அசைவுகள் தெரிந்தன.

வெளியே செல்ல விரைந்த மங்கையர்

விழிகளில் வியப்பு விரிந்தது.

அவர் மனதிடை மகிழ்ச்சி மலர்ந்தது.

காத்திட வந்த அக்காவலர் கூட்டம்

களப் புலி அணியெனத் தெரிந்ததும்

பேதமையின்றி அவ்வயங்களை நோக்கி

வாமையர் துள்ளி ஓடினர்.

வேட்டுகள் ஒலிக்கும், வீரர்கள் வழிக்கும்

பூட்டுகள் போட்டுப் பார்த்தால்

புரியாத கதையும் புரியும்.

மங்கையர் அனைவரும் மகிழ்ச்சியில்;

துளிர்க்கக் குழலி மட்டும் குமைந்தாள்.

மென்மகள் செல்வியின் புன்னகை உதட்டிலும்,

பொன்னிறக் கழுத்திலும் செவ்வரி கண்டு விசித்தாள்.

அக்கணம்

நோட்டமிட்டிட நூலகம் நுழைந்தான் ஓர் காளை - அங்கு

பாட்டம் கிடந்த பசுங்கிளி பார்த்து -அவனது

நுண்ணிய இழைகளும் அதிர்ந்தன.

அந்த மயங்கிய மலர்க்கொடியின் சுருங்கிய கோலம்

இம்மறவன் உயிரை கிழிக்க

அனலிடை வீழ்ந்ததாய்த் துடித்தான்.

காடையர் கையில் கன்னி மலரா?

கண்களில் கோபம் கொழித்தது.

அவள் கன்னத்தில் பதிந்த கைத்தடங்கள் - இவன்

எண்ணத்தில் வீழ்ந்து வதைத்தன.

செவ்விள மேனியின் நகமுனைக் கீறல்கள்

பெருஞ்சீற்றத்தைப் புலிக்குள் வார்த்தது.

அந்த மெல்லியள் மயக்கமும், மனதிடை உருக்கமும்

மறமன்னவன் மனதை அசைத்தது.

தோழரை அழைத்துத் தண்ணீர் கேட்ட

தளபதி சேதுவை நோக்கி

கொள்கலன் ஒன்றைக் கொடுக்க வந்த

இனியவன் இதயம் பதைத்தான்.

முகத்தில் செவ்வரி ஓடிய

சின்னவள் பார்த்து

சிந்தை நொந்து கசிந்தான்.

மயங்கிய நிலவின் அருகே மறவன்

தயங்கித் தயங்கி வந்தே

கொள்கலன் கவிழ்த்து, குவளை நீரை

அவ்வெழில் நிலா முகத்தில் தெளித்தான்.

நீரது பட்டுத் தெளிந்த குலமகள்

வேல்விழி திறக்கா வாமையாய் நலிந்தாள்.

ஆவி துடித்திட, அழுகை உள்ளிட -அவள்

மூடிய இமைக்குள் கயல்கள் நீந்தின.

ஓரவிழிகளில் ஈர அருவிகள்

இருபுறமாய் தம்மைக் கசித்தன.

செல்வியை அழைத்துத் தேற்ற நினைத்தாள்

சுந்தரப் பூங்குழலி.

பாங்கியைத் தேடிப் பயத்தில் நலிந்தாள்

இக்காவியப் பொன்னலரி.

வீணரை நினைத்துப் பதைத்தாள்

அவள் விழிகளைத் திறக்கப் பயந்தாள்.

கோர நினைவினில் நடுங்கும்

கொள்ளை எழில்மகளிவளின்

மெல்லிய கைகளைப் பற்றி

இந்த வீரத்திருமகன் சிரித்தான்.

ஆண் கரம் பட்டதும் அணங்கவள் கனன்றாள்.

ஆவேசத்தில் ஆர்த்து விழித்தாள்.

கூரியவிழியில் வீரியம் வெளிக்க

பாரைப் பிளக்கும் பூகம்பம் ஆனாள்.

சுற்றிலும் நின்ற விடுதலைத் தோழர்கள்

விழிகளினாலே வியந்து நகைத்தர்.

உற்ற மறுகணம் ஓர்மம் ஒடுங்கிட,

வேங்கையன் பூங்கொடி வெட்கத்தில் சிவந்தாள்.

காண்பது கனவா? சுந்தர நனவா?

கரமதைப் பற்றிய காளையைப் பார்த்தாள்.

கடமையால் அவன் முகம் இறுகவுமில்லை

நாணத்தால் இவள் தலை சாயவுமில்லை.

ஒருவர் விழியில் ஒருவரைப் பார்த்து

இருமனம் கூடி ஒரு கணம் களித்து

உள்ளங்கள் அங்கே உரையாடின.

பார்த்த தோழி பரவசத்தோடு

பார்வையை நகர்த்தி சங்கடம் கொண்டாள்.

'உறுதியும், அறிவும் வாராத வரைக்கும்

உன்நிலை செல்லரிக்கும்"

உழு உரைத்த உலைக்கள மொழியில்

உரம் மிகப்பெற்றாள் அவன் உள்ளக்காவேரி.

பெண்களை மீட்கும் உன்னத பணியது

வெற்றியைத் தந்திடவே இனி அவ்விடம் நிற்பது

ஆபத்தை தருமென இனியவன் செப்பி நின்றான்.

காத்த நங்கைகள் எண்ணிரு மங்கையரை

கண்ணாய் நகர்த்திக் காப்பிடம் சேர்த்தபின்னர்

சேது தோளில் துவக்குடன், தோழர் அணியுடன்

செல்வியைப் பிரிந்து சென்றான்.

எழில்மகள் விழிகளில் ஈரருவிகள் அரும்பின.

வலிகளைச் சுமந்தும் வதனங்கள் மலர்ந்தன.

மண்மீட்பு நோக்கிய பயணங்கள் தொடர்ந்தன.

ஈழமண் மீதிலே இக்காவியகதையின் அங்கங்கள் வளர்ந்தன.

பாகம் 1

முற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேங்கையன் பூங்கொடியைப் பலர் வாசித்துள்ளீர்கள் இந்த ஆக்கம் என்னுடைய கன்னி முயற்சி. இவ்வாக்கத்தில் பல குறைகள் இருக்கலாம் வாசித்த உங்களுக்கு அக்குறைகள் இலகுவாக தெரியக்கூடும். அவற்றை எனக்கு அறியத் தருவீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.