Jump to content

பகுத்தறிவால் பகுத்தரிய வேண்டிய பகுத்தறிவு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈ வெ ராமசாமியை தமிழ் தேசியவாதியாக எவர் இனங்காட்டினாலும் அது காட்டுபவர்களின் சொந்த அணுகுமுறையின் வெளிப்பாடே அன்றி.. ஈ வெ ராமசாமி தமிழ் இனத்தின் அடையாளங்களையே அழிக்க முற்பட்டு திராவிடத்தை திட்டமிட்டு திணிக்க முனைந்த தமிழ் தேசிய விரோதி என்பது கண்கூடு. அதற்கான ஆதாரங்கள் பல வகைகளிலும் முன்வைக்கப்படுகின்றன.

பேராசிரியர் சிவத்தம்பியின் நிலைப்பாடுகளில் பலர் முரண்பட்டிருக்கிறார்கள். அவர் ஈழத்தில் தமிழ் தேசிய ஆதரவாளர் என்று இனங்காட்டிக் கொண்டிருப்பதால் விமர்சனங்களுக்கு அப்பாலானவராக அவர் இருந்து கொண்டிருக்கலாம். ஆனால் ஈழத்தில் திராவிடத்தை அடிப்படையாகக் கொண்ட திராவிடவாத போராட்டமல்ல நடப்பது. அதன் பரிமானம் தமிழர் தமிழர் தேசம்.. தேசியம் என்ற பரிமானத்துக்குள் அடங்கியுள்ளது. தனித் தமிழ்நாடும் அந்த வகையினதுதான். திராவிட நாடு என்பது தமிழ்நாடு என்றாகிட முடியாது. திராவிடம் என்பதே ஒரு மாயைப் பதம். அந்த வகையில் பழைய வரலாற்றாசிரியர்களின் திராவிடவாத அணுகுமுறை என்பது மீள்பார்வைக்குரியதாக்கப்பட வேண்டியதுடன்.. ஈ வெ ராமசாமி நாயக்கர் என்ற கன்னடரை.. தமிழ் தேசிய வாதத்தின் தந்தை என்று வரையறுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதுடன் உண்மையான தமிழ் தேசிய உணர்வை தட்டியெழுப்பிய தமிழறிஞர்கள் மா பொ சி போன்ற தலைவர்கள் வரலாற்றில் ஓரங்கட்டப்படுவது தமிழனத் துரோகம் என்றே நோக்கப்பட வேண்டும்.

ஈ வெ ராமசாமி போன்ற திராவிட மாயைக்குள் தமிழர்களின் அடையாளம் தேசம் பாரம்பரியம் மொழி கலாசாரம் அனைத்தையும் பகுத்தறிவு என்ற கவர்ச்சிக்குள் போட்டு அழித்தொழிக்க முற்பட்டதன் விளைவே இன்றைய தமிழ்நாட்டுத்தமிழர்களின் நாட்டால் இந்தியர்.. இனத்தால் திராவிடர்.. மொழியால் தமிழர் என்ற வேடிக்கையான இனத்துவ நிலை. இப்படி ஒரு இனத்துவ நிலை ஐநாவில் கூட வரையறுக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் திராவிட வாதத்தை முன்னுறுத்துபவர்கள் வரையறுத்து வைத்துள்ளனர். இது தமிழ் இனத்தின் தொன்மை.. இருப்பு.. அனைத்தையும் இந்திய மண்ணில் அடையாளமிழக்கச் செய்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்சிக்காகவே.. ஈ வெ ராமசாமியும்..காவித் திரியப்படுகிறார்.

பேராசிரியர் சிவத்தம்பியின் சில நிலைப்பாடுகளில் இருந்து பல வரலாற்றாசிரியர்கள் முரண்பட்டிருக்கின்றனர். படுகின்றனர். அதனால் அவரின் ஆக்கங்களை ஒருதலைப்பட்சமாக முன் வைத்து.. ஈ வெ ராவின் தமிழ் தேசிய துரோகத்தனத்தை மூடி மறைக்க முற்படுவது.. தமிழருக்கு எதிரான செயலாகவே நோக்கப்பட வேண்டும். ஈ வெ ராவை தமிழர்கள் மத்தியில் முன்னிறுத்துவது தமிழ் தேசியக் குற்றமாகவே நோக்க வேண்டும். ஈ வெ ராவின் இருப்பை தமிழர்கள் மத்தியில் நிலைநிறுத்த சோடிக்கப்படும் ஆக்கங்கள் உண்மைக்குப் புறம்பானவை என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் அவரால் வெளியிடப்பட்ட அவரின் நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவரோடு கூட வாழ்ந்தவர்கள் அறிந்ததவை விட இன்றையவர்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே ஈ வெ ராமசாமி ஒரு தமிழ் தேசிய இனத்தின் இருப்பை விரும்பாத *** தணிக்கை என்பதை பிரகடனப்படுத்த போதிய ஆதாரங்கள் உள்ளன என்பது உறுதியாகி இருக்கிறது இங்கு.

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு " தமிழர்களுக்கு " தமிழ் நாட்டாருக்கு - இந்திய அரசாங்கம் வேண்டாம். தமிழ்நாடு - தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு ஆட்சியில் - இந்திய யூனியனில் இருக்க விரும்ப வில்லை. நாங்கள் எங்களை, நாட்டை, தனிப்பட்ட பூர்ண சுயேச்சையுள்ள தனியரசு நாடாக ஆக்க விரும்புகிறோம். ...மத்திய கூட்டாட்சியிலிருந்து பிரிந்து கொள்ள ஆசைப்படு கிறோம். ...ஆகவே இந்திய தேசியக் கொடியை கொளுத்துவது " இந்தியக் கூட்டாட்சி என்பதில், தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் பிரஜைகளாக இருக்க சம்மதப்பட வில்லை " என்கின்ற எங்களுடைய இஷ்டமின்மையைக் காட்டுவதே யாகும்.

- "விடுதலை' (20.7.1955)

11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது:

'தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர்ஆட்சி, தமிழ் மாகாணம் என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். '

1947 இல் வெளியிடப்பட்ட கருத்திற்கும் இதற்கும் இடையில் சில பதங்கள் மட்டுமே மாற்றமடைந்திருக்கிறது. அடிப்படை நிலைப்பாடுகளில் மாற்றம் உள்ளதாக உணரவோ காட்டவோ முடியவில்லை. இந்த மாற்றத்துக்கும் காரணம்.. தமிழ்நாட்டுக் கோரிக்கிக்கையை முன்னிறுத்தியவர்களின் செயற்பாடு ஈ வெ ராவின் எதிர்ப்புக்குரலையும் தாண்டி.. வீறுகொண்டதுதான்.

இந்த இடத்தில் கூட ஈ வெ ராமசாமி தனித் தமிழ்நாடு.. தமிழரசு.. தமிழர் ஆட்சி என்பதைச் சொல்லாமல்.. தனக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான முரண்பாட்டால் எழுந்த நிலைக்கு காங்கிரஸைப் பழிவாங்க எழுத்த இந்த தற்காலிக அரசியல் உள்நோக்கமுள்ள நிலைப்பாடுகளை தமிழ் தேசிய ஆதரவு நிலை என்று தவறாக இனங்காட்டி.. ஈ வெ ராமசாமியை தமிழ் தேசிய வாதியாக்க முனைந்து உண்மையான தமிழ் தேசியவாதிகளான மா பொ சி போன்ற அறிஞர்களை ஓரங்கட்டுவது.. கண்டிக்கத்தக்கது. வரலாற்றை ராமசாமிக்காக திரிப்பது தமிழ் தேசியத் துரோகமும் ஆகும்.

Link to comment
Share on other sites

எங்களுக்கு " தமிழர்களுக்கு " தமிழ் நாட்டாருக்கு - இந்திய அரசாங்கம் வேண்டாம். தமிழ்நாடு - தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு ஆட்சியில் - இந்திய யூனியனில் இருக்க விரும்ப வில்லை. நாங்கள் எங்களை, நாட்டை, தனிப்பட்ட பூர்ண சுயேச்சையுள்ள தனியரசு நாடாக ஆக்க விரும்புகிறோம். ...மத்திய கூட்டாட்சியிலிருந்து பிரிந்து கொள்ள ஆசைப்படு கிறோம். ...ஆகவே இந்திய தேசியக் கொடியை கொளுத்துவது " இந்தியக் கூட்டாட்சி என்பதில், தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் பிரஜைகளாக இருக்க சம்மதப்பட வில்லை " என்கின்ற எங்களுடைய இஷ்டமின்மையைக் காட்டுவதே யாகும்.

- "விடுதலை' (20.7.1955)

ஆதாரம் தந்த நெடுக்காலபோவனுக்கு நன்றி

பெரியார் தமிழர்களுக்கு நாடு கேட்ட போது, மபொசி மாநிலம்தான் கேட்டார்.இன்றைக்கு நாம் தமிழீழம் கேட்கின்ற போது, சில தமிழர்கள் மகாணசபை கேட்பது போன்றுதான் மபொசியின் கோரிக்கை இருந்தது.

Link to comment
Share on other sites

தந்தை பெரியார் தமிழீழத்தை ஆதரித்தவர். மாபொசி தமிழீழத்தை ஆதரிக்காதவர். எமது போராட்டத்தைப் பற்றி நம்பிக்கையீனத்தை உருவாக்குவது போன்று பேசித் திரிந்தவர்.

பெரியார் தமிழ்நாட்டுத் தமிழர்களும் சுதந்திரம் பெற வேண்டும் என்று விரும்பினார். தமிழீழத் தமிழர்களும் சுதந்திரம் பெற வேண்டும் என்று விரும்பினார்.

மாபொசி தமிழ் மொழியின் பெருமை பேசிக் கொண்டு, தமிழர் ஒரு மாநிலம் மட்டும் பெற்று தொடர்ந்தும் அடிமையாய் வாழ்வதற்கு வழிகாட்டினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை பெரியார் தமிழீழத்தை ஆதரித்தவர். மாபொசி தமிழீழத்தை ஆதரிக்காதவர். எமது போராட்டத்தைப் பற்றி நம்பிக்கையீனத்தை உருவாக்குவது போன்று பேசித் திரிந்தவர்.

பெரியார் தமிழ்நாட்டுத் தமிழர்களும் சுதந்திரம் பெற வேண்டும் என்று விரும்பினார். தமிழீழத் தமிழர்களும் சுதந்திரம் பெற வேண்டும் என்று விரும்பினார்.

மாபொசி தமிழ் மொழியின் பெருமை பேசிக் கொண்டு, தமிழர் ஒரு மாநிலம் மட்டும் பெற்று தொடர்ந்தும் அடிமையாய் வாழ்வதற்கு வழிகாட்டினார்.

உங்கள் கற்பனைல.. ஈ வெ ராமசாமி வந்து தமிழீழத்தை ஆதரிச்சவர். ஈ வெ ராமசாமி ஒரு காலத்திற்குரிய அரசியல் பிரமுகராக.. தந்தை செல்வாவை சந்தித்தது என்பது தமிழீழத்தை ஆதரிச்சதோ.. இல்ல தமிழ் தேசியத்தை உச்சரித்ததோ என்பதாக அல்ல அர்த்தம். அப்படின்னா சம்பந்தன் ஐயாவும் கூடத்தான்.. பி ஜே பி பிரமுகர்களைச் சந்திச்சவர். அதற்காக அவை தமிழீழத்தை ஆதரிக்கினம் என்றதல்ல அர்த்தம்.

ஈ வெ ராமசாமி தமிழீழம்.. ஈழத்தமிழர் தமிழ் தேசியம்.. விடுதலை... என்று உச்சரித்த ஒரு வரலாற்றுப் பதிவை என்றாலும் காட்டுங்கள் பார்க்கலாம்...??! :unsure:

மா பொ சி.. தமிழீழத்தை உச்சரிச்சவரல்ல. தமிழ்நாடு.. தமிழரசு.. தமிழர் ஆட்சி.. இவற்றை வலியுறுத்திய தமிழறிஞர். ஈ வெ ராமசாமி... தமிழர்களின் இருப்பை திராவிட மாயைக்குள் அடக்கி.. சிதைக்க நினைத்த *** தணிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு " தமிழர்களுக்கு " தமிழ் நாட்டாருக்கு - இந்திய அரசாங்கம் வேண்டாம். தமிழ்நாடு - தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு ஆட்சியில் - இந்திய யூனியனில் இருக்க விரும்ப வில்லை. நாங்கள் எங்களை, நாட்டை, தனிப்பட்ட பூர்ண சுயேச்சையுள்ள தனியரசு நாடாக ஆக்க விரும்புகிறோம். ...மத்திய கூட்டாட்சியிலிருந்து பிரிந்து கொள்ள ஆசைப்படு கிறோம். ...ஆகவே இந்திய தேசியக் கொடியை கொளுத்துவது " இந்தியக் கூட்டாட்சி என்பதில், தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய நாங்கள் பிரஜைகளாக இருக்க சம்மதப்பட வில்லை " என்கின்ற எங்களுடைய இஷ்டமின்மையைக் காட்டுவதே யாகும்.

- "விடுதலை' (20.7.1955)

ஆதாரம் தந்த நெடுக்காலபோவனுக்கு நன்றி

பெரியார் தமிழர்களுக்கு நாடு கேட்ட போது, மபொசி மாநிலம்தான் கேட்டார்.இன்றைக்கு நாம் தமிழீழம் கேட்கின்ற போது, சில தமிழர்கள் மகாணசபை கேட்பது போன்றுதான் மபொசியின் கோரிக்கை இருந்தது.

ஈ வெ தமிழ்நாடு என்றதை உச்சரிக்கல்ல.. மாறாக கருங்காலித்தமிழர்களின் கோரிக்கை என்று கோபத்தை அள்ளித் தெளிச்சவர். மாநிலம் மட்டுமல்ல.. தமிழ்நாடு.. தமிழ் அரசு.. தமிழர் ஆட்சி என்று உச்சரித்ததே மா பொ சி போன்ற தலைவர்கள் தான். அண்ணா கூட திராவிடநாடு என்றுதான் புலம்பினவர். இன்று வரை திராவிடம் என்ற மாயையை வைச்சிருப்பது.. இவைதான். கன்னடனோ.. தெலுங்கனோ.. மலையாளியோ அல்ல. அவர்களுக்கு தெரிந்துவிட்டது.. திராவிடம் என்ற மாயை தமது தனித்துவத்தை அழிக்கும் என்று. ஆனால்.. தமிழர்கள் மட்டும்.. இன்னும் ஈ வெ ராமசாமியின் சூழ்ச்சிக்குள் சிக்குப்பட்டுக் கிடந்து கொண்டு பகுத்தறிவு பேசுவது வேடிக்கையோ வேடிக்கை.

Link to comment
Share on other sites

நெடுக்கு அண்ணை, "பகுத்தறிவால் பகுத்தரிய வேண்டிய பகுத்தறிவு.." இப்படி தலைப்பு சொல்லிது. இதில பகுத்தரிய என்று வருமா அல்லது பகுத்தறிய என்று வருமா. சும்மா ஒரு சந்தேகம். (இதுவும் ஒரு பகுத்தறிவின் வெளிப்பாடு, எனவே கோவிக்ககூடாது :unsure: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணை, "பகுத்தறிவால் பகுத்தரிய வேண்டிய பகுத்தறிவு.." இப்படி தலைப்பு சொல்லிது. இதில பகுத்தரிய என்று வருமா அல்லது பகுத்தறிய என்று வருமா. சும்மா ஒரு சந்தேகம். (இதுவும் ஒரு பகுத்தறிவின் வெளிப்பாடு, எனவே கோவிக்ககூடாது :unsure: )

உங்களின் சுயமான பகுத்தறிவால் பகுத்தரிய வேண்டிய "காட்டப்பட்ட பகுத்தறிவு". அந்த இடத்தில் பகுத்தரிதல்.. என்பதாக வரும். :lol:

----------------------------

சாதி ஒடுக்குமுறைகள்.. பெண் உரிமை என்றெல்லாம்.. அரசியலுக்கு வெளியில் நின்று சமூகத்துக்கு வழிகாட்டிய பலர் தமிழர்களாக இருக்கையில்.. ஈ வெ ரா என்ற தமிழ் பழிப்பு தமிழின அடையாள அழிப்பு.. திராவிட மாயைப் பக்தர்.. தமிழர்களுக்கு அவசியமில்லை. நம்ம பாரதி ஒருவன் போதுமே.. அனைத்தையும் சொல்ல...! பாரதி போன்றவர்கள்.. தமிழை நேசித்தவர்கள். தமிழ் என்ற மொழியடையாளமின்றி தமிழர்கள் இருக்க வாய்ப்பில்லை உலகில்..! ஈ வெ ரா அதை உணராதவர் என்றில்லை உணர்ந்தும் தமிழர்களின் அடையாளங்களை சிதைக்க நினைத்திருக்கிறார் என்பதுதான் யதார்த்தம். அதுவும் தமிழகம் சார்ந்து தனது அரசியலை தற்காத்துக் கொள்ள.

Link to comment
Share on other sites

பெரியார் செய்தது அரசியல் அல்ல. அவர் தான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று உறுதியாக நின்றவர். அவருக்கு வந்த பெரும் பொறுப்புக்களை தட்டிக் கழித்து விட்டு தொண்டு செய்தவர். அவருக்கு அரசியலில் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

தந்தை பெரியார் தமிழீழத்தை ஆதரித்து விடுதலையில் கட்டுரை வெளியிட்டவர். வெறுமனே சந்தித்தவர் அல்ல. தன்னை சந்தித்தி அன்றைய தமிழீழப் போராளிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தவர்.

இதைப் பற்றி சத்தியசீலன் அவர்களுடைய பேட்டி ஒன்று கூட யாழ் களத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. அதிலே மாபொசி ஆதரவு தரவில்லை என்பதும் இருக்கிறது.

உங்களின் கடவுளை காப்பற்றுவதற்கு ஒரு மனிதரை தூற்ற வேண்டிய பரிதாப நிலையில் இருப்பவர்கள், தற்பொழுது தமிழீழத்தை ஆதரிக்காதவர்களையும் முன்னிறுத்த வேண்டிய பரிதாப நிலைக்கு வந்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் செய்தது அரசியல் அல்ல. அவர் தான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று உறுதியாக நின்றவர். அவருக்கு வந்த பெரும் பொறுப்புக்களை தட்டிக் கழித்து விட்டு தொண்டு செய்தவர். அவருக்கு அரசியலில் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

தந்தை பெரியார் தமிழீழத்தை ஆதரித்து விடுதலையில் கட்டுரை வெளியிட்டவர். வெறுமனே சந்தித்தவர் அல்ல. தன்னை சந்தித்தி அன்றைய தமிழீழப் போராளிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்தவர்.

இதைப் பற்றி சத்தியசீலன் அவர்களுடைய பேட்டி ஒன்று கூட யாழ் களத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. அதிலே மாபொசி ஆதரவு தரவில்லை என்பதும் இருக்கிறது.

உங்களின் கடவுளை காப்பற்றுவதற்கு ஒரு மனிதரை தூற்ற வேண்டிய பரிதாப நிலையில் இருப்பவர்கள், தற்பொழுது தமிழீழத்தை ஆதரிக்காதவர்களையும் முன்னிறுத்த வேண்டிய பரிதாப நிலைக்கு வந்து விட்டார்கள்.

தமிழீழம்.. தமிழ்நாட்டு தமிழ்மக்களுக்குரியதல்ல. தமிழ் நாட்டில் உள்ள அரசியல் புறநிலை என்பது வேறு. சிறீலங்காவில் உள்ள அரசியல் புறநிலை என்பது வேறு.

தமிழீழத்தை உச்சரிக்கும் தமிழ்நாட்டினர் எல்லாம்.. தமிழீழ ஆதரவாளர்களாக இனங்காணப்பட முடியாதவர்கள். தமிழீழத்தை உச்சரிக்கும் கலைஞர் கூட தமிழீழ ஆதரவாளரா இன்று...???!

மா பொ சி.. தமிழீழ ஆதரவாளரா இல்லை என்பதல்ல இங்கு அவரைக் கொண்டு வரக் காரணம். அவர் இந்திய அரசியல் சூழலில்.. தமிழ் நாடு.. தமிழ் அரசு.. தமிழர் ஆட்சி.. என்பவற்றை திராவிட மாயை கொண்டிருந்த மேலாதிக்கத்துக்குள் இருந்து வெளியில் கொணர்ந்தவர். அதாவது தமிழர்கள் என்பவர்கள் தனி ஒரு இனமாகவும் அவர்களுக்கு என்றோரு பிரதேசம் இந்திய மண்ணில் இருப்பதாகவும் இனங்காட்டியவர். அவர் தமிழீழத்தை உச்சரிக்கல்ல.. தமிழீழ ஆதரவாளர் அல்ல என்பதெல்லாம் எமக்கு தேவையில்ல. ஈ வெ ரா மட்டும் என்ன தமிழீழத்தை மீட்க போராட்டம் நடத்தினவரா. அதையும் திராவிட திரைக்குள் வேண்டும் என்றால் மறைச்சிருப்பார்.

ஈ வெ ரா அரசியல் களத்தில் நின்று அது தனக்கு சாதகமாக இல்லை என்ற காரணத்தினால் தன்னை தமிழகத்தில் நிலைநிறுத்த பேசிக் கொண்டவை எல்லாம்.. சமூக சேவை என்றாகிடாது. அவர் தமிழர் என்பவர்களின் அடையாளங்களை அனைத்தையும் எப்படியாவது அழிச்சு.. திராவிட மாயைக்குள் இவர்களை வாழ வைச்சிட்டால்.. தனது அரசியலை தென்னிந்தியாவில் விரிவுபடுத்தி காங்கிரஸுக்கு தான் ஒரு பலமான சக்தி என்று காட்டிடலாம் என்று கனவு கண்டவர். அது இறுதிவரை நிறைவேறவும் இல்ல. அதற்கு திராவிடம் என்ற மாயைப் போர்வையின் கீழ் தமிழர்களைத் தவிர அவர் சவாரி செய்ய வேறு எவரும் இடமளிக்கல்ல. :P

Link to comment
Share on other sites

பெரியார்தான் தமிழர்களுக்கு தனிநாடு கேட்டவர்.

மற்றவர்கள் தமிழர்களை இந்தியாவிற்குள்ளே இருக்கச் செய்து, தமிழர்கள் அடிமைகளாக வாழ வழி வகுத்த *** தணிக்கை.

பெரியார் விரும்பியபடி திராவிட நாடோ, தமிழ் நாடோ அமைந்திருந்தால், தமிழீழம் என்றைக்கோ கிடைத்திருக்கும்.

அதைத் தடுத்து, தனி மாநிலம் கேட்டு, பெரியாரின் விடுதலை முழக்கத்தை பலவீனப்படுத்தியவர்கள் துரோகிகள். இந்திய தேசியத்தை உயர்த்திப் பிடித்தவர்கள் *** தணிக்கை.

இன்றைக்கு தமிழ்நாடு தன்னுடைய மாநிலத்திற்கு பயன்படக்கூடிய ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை, குஜராத்தில் இருப்பவனும், பீகாரில் இருப்பவனும் தடுக்கிறான்.

தமிழர் தனிநாடு பெற்றிருந்தால் இப்படியெல்லாம் இவர்கள் நடப்பார்களா?

தமிழீழத்தில் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பார்களா?

தமிழர்களுக்கு தனிநாடு கேட்ட பெரியாருக்கு எதிராக நின்றவர்கள், நிற்பவர்கள் எல்லோரும் *** தணிக்கை.

தமிழ் என்பதையும் தாண்டி, தமிழில் பேசப்பட்ட வட்டார மொழிகள் பின்பு தனி மொழிகள் ஆன போதும், அவைகளையும் இணைத்து மிகப் பெரிய தமிழ்பேரரசு அமைக்கப் பாடுபட்ட மிகப் பெரும் தலைவர் தந்தை பெரியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈ வெ ரா தனித்தமிழ் நாடு கேட்டதன் இலட்சனத்தைத்தானே இங்கு ஆதாரத்தோடு தந்திருக்கினம். அதுக்குப் பின்னரும் ஈ வெ ரா தமிழர்களுக்கு நாடு கேட்டுப் போராட்டம் நடத்தினார் என்பது சுத்த போலித்தனமான பரப்புரை.

தமிழர்கள்.. தமிழர் தேசம்.. தமிழர் ஆட்சி என்று எல்லாத்தையும் நிராகரிச்சிட்டு.. தமிழர்களுக்கு தனிநாடு கேட்டாராம்.. நல்ல வேடிக்கையாக இருக்கிறது.. ஈ வெ ரா முன்னிலைப்படுத்தல்.. கும்பலில் கோவிந்தாவாகி இருக்கிறது.

ஈ வெ ரா உச்சரித்ததெல்லாம்.. திராவிடம். வடநாட்டான்.. இவைதான். தமிழர்கள்.. தமிழ் என்பதெல்லாம் அவர் அடியோடு வெறுத்த சொற்கள்.

தமிழர்கள்..தமிழ்நாடு.. தமிழ் அரசு.. தமிழர் ஆட்சி என்பதையெல்லாம் முன் மொழிந்தவர்கள் மா பொ சி போன்ற தமிழறிஞர்கள். மா பொ சி.. எம் ஜி ஆர் போன்ற தலைவர்களின் கொள்கை வகுப்பாளராகக் கூட இருந்துள்ளார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மா பொ சி போன்றவர்களே.. தமிழர்.. தமிழினம்.. தமிழ்நாடு.. தமிழர் ஆட்சி என்பவற்றிற்கான தோற்றுவாய்களாக இருந்துள்ளனர். தமிழர்களை ஈ வெ ரா போன்றவர்கள் கட்டி வைக்கப் பாவித்த திராவிட மாயைத் திரையைக் கிழித்தெறிந்துள்ளனர்.

ஈ வெ ரா.. திராவிட நாட்டை சொல்லளவில் கூட தெளிவாக வரையறுக்கல்ல. அதுமட்டுமன்றி... அது காங்கிரஸ் மீதான வெறுப்பை உமிழ மற்றும் மா பொ சி போன்றவர்களின் குரலுக்கு அஞ்சி.. எடுக்கப்பட்ட சில சொல்லாடகளே. அன்று ஈ வெ ராவின் முதன்மை நோக்கம் தமிழின அடையாள அழிப்பும்.. தமிழ் தேசியத்தின் இருப்பை திராவிட மாயையால் திராவிட மயமாக்கி அழித்தலுமாகும். அதன் மூலம் தான் சார்ந்த கன்னடத்தை முதன்மைப்படுத்தலும் என்றால் மிகையல்ல..! இப்ப ரஜனிகாந் என்ன செய்கிறாரோ.. அதையேதான் பிறிதொரு வடிவில் ஈ வெ ரா செய்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் என்ற தென்னிந்திய மொழிகள் சார்ந்த அகண்ட மாயைத் திரையை பயன்படுத்த நேரு போட்ட திட்டங்கள். அதற்கு திராவிடம் காக்க முற்பட்ட ஈ வெ ரா மறைமுகமாக வழங்கிய ஒத்துழைப்பு. நேருவின் திட்டம் அன்று செயற்ப்பட்டிருந்தால் தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் இருப்பே கேள்விக் குறியாக்கி இருக்கும் தமிழகத்தில்...! மொழிவாரி மாநிலம்... அல்லது நாடு இருப்பதை மறுப்பதே திராவிடத்தின் அடிப்படை நோக்கம். அதனால் தான் அதை இந்தி பேசுபவர்கள் தென்னிந்தியாவில் உயிர்வாழ விட்டு வைத்துள்ளனர். இதை நிறுவுகிறது.. நெடுமாறன் ஐயாவின் கீழ் கண்ட உரை..!

நெடுமாறன் ஐயாவின் கீழ் கண்ட பேச்சில்.. திராவிடம்.. ஆரியம் போன்ற மொழிவாரி மாயைப் பதங்கள் பாவிக்கப்படவில்லை என்பதும்.. வடமொழி பேசுபவர்கள் என்று வட இந்தியர்களை அவர் இனங்காட்டி இருப்பதும் கூர்ந்து நோக்க வேண்டியது.

--------------

பெரியாறுக்காக டெல்லியை மிரட்டாதது ஏன்?-பழ. நெடுமாறன்

மத்திய அமைச்சரவையில் இந்த இந்தத் துறைகள் தந்தால் தான் ஏற்போம் இல்லாவிட்டால் என டெல்லியை மிரட்டியவர்கள் பெரியாறு அணைப் பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்பை நடைமுறைப்டத்தாவிட்டால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று ஏன் சொல்லவில்லை? என்று கேட்டுள்ளார் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன்.

சென்னையில் நடைபெற்ற தமிழகப் பொன்விழாவில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரை:

இந்த நாள் ஒரு சிறந்த நாள். ஒவ்வொரு தமிழனும் எண்ணிப் பார்த்துப் பெருமைப்படுகின்ற நாள். 50 ஆண்டு காலமாக இந்தத் தமிழகம் உருவாகி வளர்ந்து வந்து இருக்கின்ற நாளை கொண்டாடி மகிழ நாம் இங்கே கூடி இருக்கிறோம். இதிலே கட்சிகளுக்கு இடம் இல்லை, மதங்களுக்கு இடம் இல்லை, சாதிகளுக்கு இடம் இல்லை. எல்லோரும் தமிழர் என்ற உணர்வோடு நாம் இங்கே கூடி இருக்கிறோம்.

புறநானூறு தரும் செய்தி:

50 ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழகம் எப்படி இருந்தது? எங்கே இருந்தது? நம்முடைய வரலாற்றை, நம்முடைய அறிஞர்கள் எல்லாம் தொகுத்து இருக்கிறார்கள். குறைந்தபட்சம் 5,000 ஆண்டுகள் என வைத்துக் கொண்டால் கூட இந்த 5,000 ஆண்டுக் காலத்திலே நம்முடைய தமிழகம் ஒன்றாக இருந்ததே இல்லை.

சங்காலத்திலே சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நாடுகளாக பிரிவுபட்டுக் கிடந்தது. அதற்குப் பின்னாலே பல்லவர்களும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஒரு பகுதியை ஆண்டார்கள். ஏராளமான குறுநில மன்னர்கள் வேளிர்கள் என்ற பெயரிலே ஆங்காங்கு ஆண்டார்கள்.

நம்முடைய புறநானூற்று இலங்கியத்தில் சேரனுக்கும், சோழனுக்கும் நடந்த போரை, சோழனுக்கும், பாண்டியனுக்கும் இடையே நடந்த போரை, ஆக தமிழர்கள் மோதிக் கொண்ட அந்தக் காட்சிகளை, அதிலே அவர்கள் காட்டிய வீரத்தைத்தான் புறநானூறு நமக்கு எடுத்துச் சொல்கிறது.

நம்மை இணைப்பது தமிழ்:

5,000 ஆண்டுக்காலமாக நம்முடைய தமிழகம் ஒன்றுபட்டு இருந்தது இல்லை. ஆனாலும் கூட அடிப்படையான ஒன்று அனைத்து தமிழர்களையும் ஒன்றுபடுத்தியது. அதுதான் மொழி. அதன் அடிப்படையில் அமைந்தது நம்முடைய பண்பாடு. இந்த இரண்டும் இணைந்து தமிழர்களை ஒன்றுபடுத்தி இருந்தது.

சேர, சோழ, பாண்டிய நாட்டிலே வாழ்ந்த தமிழர்களுக்குச் சேரப் பண்பாடு, சோழப் பண்பாடு, பாண்டிய பண்பாடு என்று உருவாகிவிடவில்லை. அடிப்படையில் நம்முடைய பண்பாடு ஒன்றாகவே இருந்தது. எந்த நாட்டுக் தமிழனாக இருந்தாலும், அவன் மொழியால் இணைக்கப்பட்டான். அந்த மொழி தான் 5,000 ஆண்டுக்கலாமாக நம்மை இணைத்து வைத்து இருக்கிறது.

பிற்காலத்திலே விஜயநகர மன்னர்கள், முஸ்லிம் மன்னர்கள், மராட்டியர்கள் அதற்குப் பின்னாலே ஆங்கிலேயர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர் என்று எத்தனையோ பேர் இந்தத் தமிழகத்தின் மீது படையெடுத்து ஒவ்வொரு பகுதியைப் பிடித்து ஆண்ட காலத்திலும் நாம் பிளவுபட்டுத்தான் கிடந்தோம்.

ஆங்கிலேயர் உருவாக்கிய சென்னை மாகாணம்:

ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் இந்தியா முழுவதையும் அடிமைப்படுத்தி ஆண்ட போது கூட நம்முடைய தமிழகத்தோடு, ஆந்திரத்தின் சில பகுதிகள், தென் கன்னட மாவட்டம், மலபார் மாவட்டம் போன்றவற்றை எல்லாம் இணைத்து சென்னை மாகாணம் என்று சிறைக்கு உள்ளே தமிழகத்தை அடக்கி வைத்தார்கள். ஆக நம்முடைய தமிழகம் ஒருபோதும் தமிழ் பேசும் மக்களின் நாடாக விளங்கியதே இல்லை. இது ஒரு பெரிய சோகச் சித்திரம்.

பண்பாட்டுப் படையெடுப்பு:

எத்தனையே படை எடுப்புகள் நடந்தன. வடமொழியின் பண்பாட்டுப் படையெடுப்பு, அதுவும் கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடந்தது. நம்முடைய மொழியை, பண்பாட்டை, கலைகளை எல்லாவற்றையும் அது ஆக்கிரமிக்க முயற்சி செய்தது. ஆனாலும், அதற்கு நடுவேயும், நம்முடைய முன்னோர்கள் ஓரளவுக்குப் பாதுகாத்தார்கள். நம்முடைய தமிழின் தனித்தன்மையை ஓரளவுக்கு நிலை நிறுத்தினார்கள்.

வெள்ளைக்காரன் போய் இந்தியத் துணைக்கண்டம் விடுதலைப் பெற்றதற்குப் பிற்பாடு, நம்முடைய தமிழகம் மொழிவழி மாநிலமாக ஆக வேண்டும் என்ற கோரிக்கை இங்கேயும் எழுந்தது. இந்தியா முழுவதும் எழுந்தது.

காந்தியடிகள் உணர்ந்த உண்மை:

விடுதலைப் போராட்டக் காலத்திலே 1920 ஆம் ஆண்டு காந்தி அடிகள் இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது அவர் ஒரு உண்மையை உணர்ந்தார். இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. வெவ்வெறு மொழி பேசுகின்ற நாடுகளைக் கொண்ட ஒரு பெரிய துணைக்கண்டம் என்பதை உணர்ந்தார்.

அந்தந்தப் பகுதியிலே அந்தந்த மொழி மக்கள் நடுவே, அந்தந்த மொழி பேசித்தான் அவர்களை ஒன்று திரட்ட முடியுமே தவிர, வேறு வழியிலே அவர்களை ஒன்று திட்ட முடியாது என உணர்ந்தபோது, மொழிவழி மாநிலம் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சியை முதலில் மொழிவழியாகப் பிரித்தார்.

அன்றைக்கு ஒன்றுபட்டு இருந்த சென்னை மாகாணத்திலே தமிழ்நாடு காங்கிரஸ் தனி, ஆந்திர காங்கிரஸ் தனி, மலபார் காங்கிரஸ் தனியாகத்தான் இயக்கியது. இப்படி இந்தியா முழுவதும் மொழிவழியாக காங்கிரஸ் கட்சி பிரிக்கப்பட்டது.

இந்தியா விடுதலை பெற்றபின், மொழியின் அடிப்படையில் இந்த நாடு பிரித்துச் சீரமைக்கப்படும் என்று வாக்குறிதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டது. 1946ம் ஆண்டு மெளலானா அப்துல் கலாம் ஆசாத் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த போது, பிரிட்டிஷ் அமைச்சரவைத் தூதுக்குழுவிடம் காங்கிரஸ் சார்பிலே அளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான விண்ணப்பதில் அதைக் குறிப்பிட்டார்கள்.

மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்படும். மத்தியில் சில அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். எஞ்சிய அதிகாங்கள் மாநிலங்களைச் சார்ந்து இருக்கும் மாநிலங்கள் தன்னாட்சி உரிமையுடன் இயங்கும் என்று காங்கிரஸ் கட்சியே ஏற்றுக்கொண்டு அதிகாரப்பூர்வமாக பிரிட்டிஷ் தூதுக்குழுவிடம் அதை அளித்தனர்.

காந்தி கூட இதை வரவேற்று பேசும் பொழுது, தன்னால் இதுவரை தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்ததற்கு ஆசாத் திட்டம் உறுதியான தீர்வை அளித்துவிட்டது. இதை நான் வரவேற்கிறேன். இதை எல்லோரும் இதை ஏற்றுக்கொண்டால் இந்தியா பிரிவினையாகாது என்று அவர் சொன்னார்.

ஜின்னா அவர்களும் இதை ஏற்றுக் கொண்டார். அவர் மறுக்கவில்லை. ஆனால் பின்னால் காங்கிரஸ் தன்னுடை நிலைப்பாட்டிலே இருந்து பின்வாங்கியபோது ஜின்னாவும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அது ஒரு பெரிய கதை. இந்தியா விடுதலை பெற்ற பின்னால் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையில் இருந்து காங்கிரஸ் தலைமை பின் வாங்கியது.

நேரு, படேலின் தவறான கண்ணேட்டம்:

நேரு பிரதமராக இருந்த போது துணைப் பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேலும், அவர்களைப் போன்ற முக்கியமான தலைவர்களும் மொழி வழியாக நாட்டைப் பிரித்தால் நாட்டின் ஒருமைப்பாடு சிதறிப்போகும் என்று அஞ்சினார்கள். இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாகப் பிரிந்து போன பிறகு மிகப்பெரிய கலவரங்கள் நடைபெற்று, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இந்த சூழ்நிலையில் பலமான மத்திய அரசு அமைக்கப்பட்டால்தான் இந்த நாட்டை ஒற்றுமையாக வைக்க முடியும் என்று அவர்கள் ஒரு தவறான கண்ணோட்டத்தில் பிரச்சனையை அணுகத் தொடங்கினார்கள். மொழி வழியாக மாநிலங்களைப் பிரிக்க முடியாது என்று மறுத்தனர். அதற்கு உரிய நேரம் இதுவல்ல. நேரம் வரும் போது அதைப் பிரிக்கலாம் என்று பிரச்சனையை ஆறப்போட்டார்கள். ஆனால், மக்கள் அதை ஏற்கவில்லை.

ஆந்திராவிலே பொட்டி ராமுலு அவர்கள் சாகும்வரை உண்ணாவிரத்தை மேற்கொண்டு உயிர் தியாகம் செய்த பின் ஆந்திர மக்கள் பெரும் போராட்டங்கள் நடத்தினர். வேறு வழி இல்லாமல் ஆந்திர மாநிலத்தைப் பிரித்து கொடுக்க வேண்டிய அவசியம் நேரு அவர்களுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் மொழிவாரியாகப் பிரித்துக் கொடுக்ககூடிய ஒரு கட்டாயம் வந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் மொழி வழி மாநிலத்திற்கு எதிரான எண்ணம் இருந்தது என்பது அல்ல. ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கும் அந்த எண்ணம் இருந்தது. இன்றைக்கும் இருக்கிறது. அப்போது ஆர்எஸ்எஸ் சார்பில் ஒரு யோசனை சொன்னார்கள்.

மொழி வழியாக மட்டும் அல்ல, எந்த வழியிலும் மாநிலப் பிரிவினையே கூடாது. இந்தியா முழுவதும் ஒரே வடிவமாக, ஒரே ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் தேசிய ஒற்றுமை என்பது நிலைக்கும். இந்தியாவை 100 ஜனபாதங்களாகப் பிரித்துவிட வேண்டும். மத்திய அரசு நேரடியாக இவற்றை ஆளவேண்டும். மாநில சட்டசபையோ, மாநில அரசாங்கமோ எதுவுமே தேவையில்லை என்று ஆர்எஸ்எஸ் உறுதியாகச் சொன்னது.

தமிழகத்தில் விழுந்த சம்மட்டி அடி:

இதற்கு பதில் நேரு அவர்கள் ஒரு யோசனை சொன்னார். மொழிவாரியாக பிரிப்பதை விட இந்தியாவை 5 பெரிய மாநிலங்களாக ஆக்கிவிடலாம் அதற்கு தட்சிணப் பிரேதேசம் என்று கூறலாம் என்றார். இதனால் மொழி உணர்வே இருக்காது என்று நேரு நினைத்தார்கள். இதற்காக தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய மூன்று முதல் அமைச்சர்களையும் அழைத்தார்.

அப்போது முதல்வராக இருந்த காமராசர், தட்சிணப் பிரதேசம் என்பது தமிழர்கள் கழுத்தில் மாட்டப்படுகின்ற சுருக்கு என்று சொன்னார். இந்திட்டத்திற்கு பெரியார் அவர்களும், பெருத்தலைவர் காமராசர் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும், சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களும், ஜீவா அவர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.

குப்பைக்குப் போன திட்டம்:

அதனால் அன்று முதல் அமைச்சராக இருந்த காமராசர், நேரு அவர்களிடம் சொன்னார்கள். நீங்கள் எனக்கு தலைவர், நீங்கள் சொன்னபடி நான் கேட்க வேண்டியது தான். ஆனால் இந்த முதல்வர் நாற்காலியிலே உட்கார்ந்து கொண்டு நான் அதை செய்ய முடியாது.

நான் பதவி விலகுகிறேன். வேறொரு முதல்வர் வைத்துகொண்டு இந்திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்றார். இதன் விளைவாக அந்த திட்டம் குப்பைக் கூடைக்குப் போயிற்று. இதனால் மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்து விடாமல் செல்வதற்கான அந்த சதி அன்றைக்கு முறியடிக்கப்பட்டது.

மாநில அரசுகள் அமைந்ததற்குப் பின்னால், யாருக்கு எந்த பகுதி சொந்தம் என்பது பற்றி எல்லாம் உரிமைப் போராட்டங்கள் தொடங்கின. சென்னை நகரம் ஆந்திராவைச் சேர்ந்தது, மதராஸ் மனதே என்று ஆந்திரங்கள் போராடினார்கள். 1920 ஆம் ஆண்டிலேயே ஆந்திர மாநிலம் அமைக்கப்படவேண்டும் என்பதற்காக ஆந்திர மகாசபை என்ற பெயரில் ஒரு அமைப்பு உருவாகி ஒன்று பட்டு ஆந்திர மாநிலம் வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள்.

திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானங்களாகவும், மலபார் மாவட்டம், சென்னை மாகாணத்திலேயும் ஆக முன்று பகுதிகளாகப் பிரிந்து கிடந்த மலையாளிகள் கேரள சமாஜம் என்ற பெயரிலே ஒரு அமைப்பை நிறுவி, எந்தக் கட்சியை சேர்ந்த மலையாளியாக இருந்தாலும் அதிலே ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு நின்றார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக நம்முடைய தமிழ்நாட்டில் அப்படி ஒரே அமைப்பின் கீழ் தமிழர்கள் ஒன்று பட்டு நிற்கவில்லை.

இராஜாஜியின் உறுதி:

சென்னை மாகாணத்தில் முதல்வராக இருந்த ராஜாஜி அவர்கள் சென்னை தமிழர்களுக்கு தான் சொந்தம் அதை ஆந்திரவுக்கு விட்டு கொடுக்க முடியாது. அப்படி சென்னையை மாகாணத்தை ஆந்திர தலைநகரமாக மாற்றினால் இந்த கடிதத்தை என்னுடைய ராஜினாமா கடிதமாக வைத்துக் கொள்ளலாம் என்று நேருவுக்கு கடிதம் எழுதினர் ராஜாஜி.

பெரியாரும், ராஜாஜியும் இருவரும் இரு துருவங்களாக அரசியல் நடத்தினார்கள். ஆனால் சென்னை நகரம் தமிழர்களுக்கு சொந்தம் என்ற வகையிலே இரண்டு பேரும் ஒன்றுபட்டு செயல் பட்டார்கள். (இது ஒன்றைக் காட்டுகிறது.. ஈ வெ ரா தனது இருப்பை தமிழகத்தில் தக்க வைக்க இப்படி தனது கொள்கை மீறி மற்றவர்கள் எடுக்கும் தமிழர் தமிழ் என்பதை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பது என்பதன் மூலம்.. தன்னை தமிழர் சந்தேகிக்கக் கூடாது என்ற வகையிலான வேசம் போட்டுதல்) அன்றைக்கு மாபொசி அவர்கள் தலைமையில் அண்ணா, ஜீவா அவர்கள் இணைந்து தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என போராடினார்கள்.

நெருக்கடியான நேரத்தில் சென்னை நமக்கா, ஆந்திராவுக்கா என்று வந்தபோது அனைத்து தலைவர்களும் ஒன்று கூடி போராடியதால் சென்னை நகரம் நமக்கு மிஞ்சியது.

ம.பொ.சி.போராட்டம்:

வடக்கு எல்லையில் வடவேங்கடத்தையும், அதோடு திருத்தணியும் நாம் பறிகொடுத்தோம். அப்போது மபொசி, பெரும் போராட்டம் நடத்தி திருத்தணியை மீட்டார். இந்தியாவிலேயே எல்லை காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று உயிர் இழந்தவர்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம். அத்தனை தியாகிகளையும் நினைவு கூர்ந்து நின்று செலுத்த வேண்டிய நாள் தான் இந்த நாள்.

என்னுடைய நண்பர் காந்தி அவர்கள் ரொம்ப வருத்துடன் சொன்னார். எவ்வளவு மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய ஒரு நாள் இது. எவ்வளவு ஒற்றுமையுடன் தமிழர்கள் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டு நன்னாள் இது. இதில் கூட வேறுபட்டு நிற்கக்கூடிய நிலை வந்து இருக்கிறதே என்று வருத்தப்பட்டார்.

அன்றைக்கு இருந்த தலைவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்துவதற்கு இன்று இல்லை. அவர்களின் பெயர்களை சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் தான் இன்று பிளவுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்திய விடுதலையின் பொன்விழாக் கொண்டாட்டங்கள், குடியரசுக் கொண்டாட்டங்கள் எல்லாம் நடந்தன. அந்த விழாவிற்கு இந்திய அரசு அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒரண்டுக்கு முன்பே அழைத்து பேச்சு நடத்தி, விழாவிற்கான திட்டம் வகுத்து பொன்விழாக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. அதைப் போல வைகோ அவர்கள் சொல்லி நண்பர் ராதாகிருஷ்ணன் விழா நடத்துகிறார் என்று அறிவிப்பு வந்தவுடன், அரசும் அவசர அவசரமாக விழா நடத்துவது சரியல்ல.

இப்படியா அரசு விழா?

அனைத்து கட்சிகளையும் கூட்டி நடத்த வேண்டிய அரசு விழா. இப்படி கூட்டணிக் கட்சிகளை வைத்துக் கொண்டு நட்ததுவதா என்ன? இதை நான் குற்றம் சாட்டுவதற்காக சொல்லவில்லை. ஆதங்கத்தோடு சொல்கிறேன். இந்த விழா நடத்துவதில் கூட நம்மால் ஒன்றுபட முடியவில்லை என்ற காரணத்தினாலே தான் ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்த விழா நடத்துவதற்கு முன் வந்தார்.

5,000 ஆண்டுகாலமாக இல்லாத ஒரு நாடு, இந்த 50 ஆண்டுகாலமாகத்தான் உருவாகி இருப்பதை எண்ணிப்பார்த்தாவது ஒன்றுபடுகின்ற மனப்பக்குவத்தை நாம் இன்னும் பெறவில்லை. இதைப்போல 50 ஆண்டுகளுக்கு முன்னால் இப்போதிருக்கும் நம்முடைய தலைவர்கள் இருந்திருப்பார்களேயானால், தமிழகமே உருவாகி இருக்காது.

ஆனால் தமிழகத்திற்கு பிரச்சனை என்று வந்தபோது அந்தப் பிரச்சனைகளுக்கு அப்பால் எழுந்து நிற்கக்கூடிய அந்த தொலைநோக்குக் கொண்டவர்களாக மறைந்த தலைவர்கள் இருந்த காரணத்தினாலே ஓன்றுபட்டுப் போராடி இந்த தமிழகத்தை நமக்கு பெற்று கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். இந்த தமிழக்ததைக் கட்டி காக்க வேண்டிய மகத்தான கடமை நமக்கு உண்டு?

இன்றைக்கு என்ன நிலை?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக நாம் உரிமை கொண்டாடின காவிரி இப்போது நமக்கு இல்லை. கேரளா பெரியாறு நீர் வீணாக கடலில் போனால் போகட்டும். தமிழகத்திற்கு கொடுக்க மாட்டோம் என்று சொல்கிறது. ஆந்திரா, வறண்டுகிடக்கின்ற பாலாற்றலே ஏதோ மழைக்காலத்திலே வருகின்ற நீரைக்கூட அணைப்போட்டு தடுக்கிறது. இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை.

பிரிவினையை விதைப்பது யார்?

இலங்கையில் இருந்து தமிழ் ஈழம் பிரிவது எப்போது என்பதை நம்மால் சொல்லமுடியாது. அது வருகின்றபோது வரட்டும். ஆனால் தமிழகத்தில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். தேசிய ஒருமைப்பாடு பேசிக்கொண்டு இருக்கிற கர்நாடக, கேரளக் கட்சிகள் இன்றைக்கு தமிழத்திலே பிரிவினை விதை விதைக்கிறார்கள்.

இன்றைக்கு நம்முடைய தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்று சொல்லுகின்ற அண்டை மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு டெல்லி தயாராக இல்லை. வேட்டி கட்டிக் கொண்டவர்கள் தான் இன்று டெல்லியை இன்று ஆளுகிறார்கள் என்று பெருமை பேசியவர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள்? என்ன செய்கிறீர்கள் நீங்கள்? எத்தனை நாளைக்கு இந்த நாடகம் நடத்தப்படும்?

பதவிக்காக மிரட்டல்:

அமைச்சரவை அமைக்கும் பொழுது எங்களுக்கு இந்த துறை கொடுத்தால்தான் அமைச்சர் பதவி ஏற்போம். இல்லாவிட்டால் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்கு வரமாட்டார்கள் என்று மிரட்டி யார் யாருக்கோ அமைச்சர் பதவிகள் வாங்குவதற்கு காட்டிய துணிவு, வீரம் ஏன் பெரியாறு அணையை உயர்த்துவதிலே இல்லாமல் போனது?

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தவில்லை என்றால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று சொல்ல முடியவில்லை உங்களால்? சொல்லமாட்டீர்கள். சொல்ல முடியாது. அதற்கான காரணம் டெல்லியில் நீண்ட காலம் நாடாளுமான்ற உறுப்பினர்களாக இருக்கும் வைகோ அவர்களுக்கு தான் தெரியும்.

காமராசர் முதல்வராக இருந்தபோது பெரியாரால் முன்று பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

1. அரசியல் சட்டத்தை எரித்தார்.

2. இந்திய தேசியக் கொடியை எரித்தார்.

3. தமிழ்நாடு இல்லாத இந்திய தேசிய படத்தை எரித்தார்.

ஒரு பக்கம் காமராசர் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தார். ஆனால் தமிழ்நாட்டிற்கு பாதகம் வரும் போது அதை எதிர்த்தார். இது நம்முடைய காமராசர் ஆட்சியாயிற்றே, பச்சைத் தமிழர் ஆயிற்றே என்று அவர் தயங்கவில்லை.

மூச்சுக்கு மூச்சு பெரியாரால் உருவாக்கப்பட்டவன் என்று சொல்கிறவர்களுக்கு அந்த தைரியம் இல்லை. இதை விட நமக்கு என்ன இழப்பு எதிர்காலத்தில் வரப்போகிறது?

தமிழ்நாட்டில் ஆற்று நீர் பாசன நிலங்களில் 65% நிலங்கள் காவிரி ஆற்றை நம்பி மட்டுமே பாசனம் செய்யப்படுகிறது. அந்த காவிரி வறண்டு போனால் தமிழகத்தின் நிலை என்ன? பெரியாறு அணையை உயர்ந்த விட்டால் மதுரையை சுற்றியுள்ள மாநிலங்கள் பாலைவனமாக மாறிவிடும்.

இந்த நெருக்கடி நிலையில் கூட ஒன்று பட்டு போராடும் மனம் இல்லை. அனைவரையும் அரவணைத்து நம்முடைய தமிழர் பிரச்சனைகளிலே ஒன்றுபடுத்தகூடிய ஒரு தலைமை தான் நமக்கு தேவையே தவிர, வெறும் ஆட்சித் தலைமையில் இருந்து எந்தப் பயனும் இல்லை. நம் கடமை: இந்த தலைமுறையினைச் சேர்ந்த நாம், நம்முடைய காலத்திலேயே நம்முடைய தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, அடுத்த தலைமுறைக்கு இந்த தமிழ்நாட்டை ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும். நம்முடைய கடமை அது. நாம் செய்த தவறியன் விளைவாகத்தான் இந்த பிரச்சனைகளை முழுமையாகத் தீர்க்க வேண்டிய கடமை இந்தத் தலைமுறையைச் சேர்ந்த தமிழர்களுக்கு உண்டு. அந்த வகையில் இந்த நன் நாளில், அந்த உறுதியை நாம் எடுப்போம்.

http://thatstamil.oneindia.in/art-culture/...ran_061129.html

Link to comment
Share on other sites

பெரியார் தமிழர்களுக்காக போரடியதற்கு மீண்டும் மீண்டும் ஆதரங்களை இணைத்துக் கொண்டிருக்கிற நெடுக்காலபோவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்

தட்சிணப் பிரதேசம் என்பது தமிழர்கள் கழுத்தில் மாட்டப்படுகின்ற சுருக்கு என்று சொன்னார். இந்திட்டத்திற்கு பெரியார் அவர்களும், பெருத்தலைவர் காமராசர் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும், சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களும், ஜீவா அவர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.

காமராசர் முதல்வராக இருந்தபோது பெரியாரால் முன்று பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

1. அரசியல் சட்டத்தை எரித்தார்.

2. இந்திய தேசியக் கொடியை எரித்தார்.

3. தமிழ்நாடு இல்லாத இந்திய தேசிய படத்தை எரித்தார்.

ஒரு பக்கம் காமராசர் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தார். ஆனால் தமிழ்நாட்டிற்கு பாதகம் வரும் போது அதை எதிர்த்தார். இது நம்முடைய காமராசர் ஆட்சியாயிற்றே, பச்சைத் தமிழர் ஆயிற்றே என்று அவர் தயங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் தமிழர்களுக்காக போரடியதற்கு மீண்டும் மீண்டும் ஆதரங்களை இணைத்துக் கொண்டிருக்கிற நெடுக்காலபோவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்

தட்சிணப் பிரதேசம் என்பது தமிழர்கள் கழுத்தில் மாட்டப்படுகின்ற சுருக்கு என்று சொன்னார். இந்திட்டத்திற்கு பெரியார் அவர்களும், பெருத்தலைவர் காமராசர் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும், சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களும், ஜீவா அவர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.

காமராசர் முதல்வராக இருந்தபோது பெரியாரால் முன்று பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

1. அரசியல் சட்டத்தை எரித்தார்.

2. இந்திய தேசியக் கொடியை எரித்தார்.

3. தமிழ்நாடு இல்லாத இந்திய தேசிய படத்தை எரித்தார்.

ஒரு பக்கம் காமராசர் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தார். ஆனால் தமிழ்நாட்டிற்கு பாதகம் வரும் போது அதை எதிர்த்தார். இது நம்முடைய காமராசர் ஆட்சியாயிற்றே, பச்சைத் தமிழர் ஆயிற்றே என்று அவர் தயங்கவில்லை.

ஈ வெ ராவாக இந்தப் போராட்டங்களை தமிழர்களுக்கு என்று நடத்தவில்லை. டக்கிளஸ் தேவானந்தாவும் தான் தமிழ் மக்களுக்காக போராடுவதாகச் சொல்கிறார். அதன் வடிவமும் புலிகளின் போராட்ட வடிவமும் ஒன்றா. புலிகள் இல்லாத ஒரு சூழலில்.. டக்ளஸ் எப்படிப் போராடி இருப்பார் என்பதை நினைத்துப் பாருங்கள். டக்ளஸின் தமிழ் மக்கள் அக்கறை என்பது கொள்கை ரீதியானதல்ல.. புலி எதிர்ப்பு ரீதியானது. மற்றும்படி.. ஐக்கிய இலங்கை தான் டக்கிளசினதும்.. சிங்களப் பேரினவாதத்தினதும் நிலைப்பாடு.

இதேதான் ஈ வெ ராவின் நிலையும். தன்னை தமிழகத்தில் தக்க வைக்க வேண்டும்.. மற்றைய தலைவர்களின் போராட்டத்துக்கு தானும் ஆதரவு என்று காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். மற்றும்படி கொள்கை அளவில் ஈ வெ ரா தமிழ் மொழி.. தமிழர் ஆட்சி... தமிழர் நாடு என்பதை அறவே வெறுத்தவர். அவரின் போராட்டங்கள் கூட.. வட இந்திய ஆதிக்கமுள்ள காங்கிரஸின் செல்வாக்கை தென்னிந்தியாவில் தடுப்பது குறித்துத்தானே தவிர.. ஆந்திரா போல தமிழகமும்.. தமிழ் மொழியின்.. தாயகம் என்று சொல்லமுனையல்ல.

இங்குதான் மா பொ சி போன்ற தலைவர்களில் இருந்து ஈ வெ ரா வேறுபடுகிறார். ஈ வெ ரா.. இயலாக்கட்டத்தில் ஒத்துழைத்தமை என்பது அவரின் கொள்கையாகவோ.. தமிழர்களுக்காகப் போராடினார் என்றோ கொள்ள முடியாது. இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கை வேண்டி காந்தியும் தான் தமிழகத்தலைவர்களோடு நெருங்கினார். அதற்காக அவர் தமிழ்நாட்டை தனிநாடாக்கி கொடுத்திருப்பார் என்பதாக அர்த்தப்பட முடியாது. ஈ வெ ராவுக்கு தன்னை தமிழகத்தில் தக்க வைக்க வேண்டின் இவ்வகைப் போராட்டங்களில் இருந்து தன்னைத் தவிர்க்க முடியாத சூழல் எழுத்ததால்.. இவற்றில் பங்கு கொண்டுள்ளார் என்பது தெளிவாகிறது. அது மட்டுமன்றி அவரின் போராட்டம்.. மா பொ சி போன்றவர்களது போன்று தமிழ் தமிழர்நாடு தமிழர் ஆட்சி என்று உரைத்துச் சொல்லாமல்.. வட இந்திய ஆதிக்கமுள்ள காங்கிரஸை அதன் செயற்பாடுகளையும் எதிர்ப்பது என்ற வகையில் நிற்பதை தெளிவாகக் காணக் கூடியதாக இருக்கிறது. இது தமிழ் மற்றும் தமிழர்களின் தாயகம் என்பதற்கான ஆதரவு நிலையாக எடுத்துக் கொள்ள முடியாதது. அடிப்படையில் ஈ வெ ரா.. ஒரு திராவிடவாதி. தமிழர்வாதியல்ல.

வடக்குக் கிழக்கு இணைப்பை உச்சரிப்பதற்காக புலிகள் = டக்கிளஸ் என்பது போலவே இருக்கிறது மா பொ சி போன்றவர்கள் = ஈ வெ ரா என்பது. இதில் மா பொ சி போன்றவர்களுக்கும் ஈ வெ ரா போன்றவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை மக்கள் தெளிவாக உணர வேண்டும் :P

Link to comment
Share on other sites

தேசியத் தலைவர் போல் தமிழர்களுக்கு தனிநாடு கேட்டவர் பெரியார்.

கருணா தனி மாகாணம் கேட்பது போல் தனி மாநிலம் கேட்டவர் மபொசி

இப்படியும் வேண்டுமென்றால் சொல்லிக் கொள்ளலாம்

பெரியார் வாக்குப் பொறுக்கும் அரசியலில் ஈடுபடவில்லை. மற்றைய தலைவர்களோ, மக்களோ விரும்புகிறார்கள் என்பதற்காக தன்னுடைய கொள்கைகளை மாற்றிக் கொண்டவர் அல்ல பெரியார்.

எல்லோரும் இந்திய சுதந்திரம் கொண்டாடிய போது, அதைத் துக்க தினம் என்று சொன்னவர் பெரியார். தன்னை மக்கள் வெறுத்துவிடுவார்களே என்று அவர் கவலைப் படவில்லை.

பிள்ளையார் சிலையை போட்டு உடைத்த பெரியார், மக்கள் தன்னை வெறுத்துவிடுவர்கள் என்று அஞ்சி கொள்கைகளை விட்டுக் கொடுத்தார் என்று சொல்வது நகைப்புக்கு இடமானது.

பெரியார் பற்றி இவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது.

எந்த ஒரு சமரசமும் செய்யாது கொள்கையில் உறுதியாக நின்று, தனக்கு சரி என்று பட்டதை அச்சமின்றி வெளிப்படையாகச் சொல்லி போராடியவர் பெரியார்.

தமிழர்கள் விடிவு பெற வேண்டும் என்று பாடுபட்டவர் பெரியார்.

பெரியார் சிந்தனை அகலமானது. அவர் தமிழர்கள் மட்டும் விடிவு பெற்றால் போதும் என்று நினைக்கவில்லை.

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என்று அனைவரும் விடிவு பெற வேண்டும் என்று பாடுபட்டார்.

பெரியார் ஒரு உலகப் பெரும் தலைவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈ வெ ரா உலகப் பெரும் தலைவர் அல்ல *** தணிக்கை.

தமிழர்களுக்கு தனிநாடு கேட்டுப் போராட்டம் நடத்தல்ல ஈ வெ ரா. மா பொ சி போன்றவர்கள் தமிழ்நாடு.. தமிழர் ஆட்சி.. தமிழ் மொழி என்று உரக்க உச்சரிக்க ஆரம்பித்ததன் பின்னர் தனது இருப்புப் போயிடுமோ என்ற பயத்தில் அடுத்தவர்கள் முன்மொழிந்த தனிநாடு என்ற கோரிக்கைக்கு தூரத்தில நின்று..அடுத்தவைக்கு கேட்காமல் கோசம் போட்டது தான் ஈ வெ ராவின் செயல். அதுவும் தனிநாடு.. தமிழர்களுக்கு என்றும் சொல்ல மனசில்லாம.. திராவிடம் என்ற மாயைத் திரைக்கு தனிநாடு என்று அதற்கு ஒரு புதிய தோற்றம் காட்டி.. அது சாத்தியப்படாது என்று தெரிஞ்சு கொண்டு... போட்ட கூச்சல் தான் அது.

மா பொ சி போன்றவர்கள்.. தமிழ்நாடு.. தமிழர் ஆட்சி என்ற தமிழர்களுக்கான தனி நாட்டுக்குரிய சகல அடிப்படைகளையும் கொண்ட கருத்தியலை விதைத்தனர். செயல்வடிவமாக மாநிலம் கிடைத்தது அது வேறு விடயம். ஈ வெ ரா போட்ட கூச்சலால்.. கிடைத்தது என்ன...???! காரணம் அது தனது இருப்பை காக்கப் போட்ட வெற்றுக் கூச்சல் என்பதால் கிடைக்க எதுவும் இருந்திருக்காது. இறுதியில் அண்ணாவை காசுக்காக கட்சி அமைத்தவன் என்று திட்டினதுதான் கண்ட மிச்சம்...! :unsure:

இன்று தமிழ்நாடு நாளை தனிநாடு ஆகின் அதற்கான அத்திவாரமிட்டவர்கள்.. மா பொ சி போன்ற தமிழறிஞ்சர்கள் என்றால் அது மிகையல்ல. அவர்கள் தமிழ் தேசிய உணர்வோடு இருந்தவர்கள். ஈ வெ ரா.. திராவிட வெறியோடு.. கன்னட உணர்வோடு இருந்தவர்.

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு தனிநாடு கேட்டவர் பெரியார். மற்றவர்கள் தனி மாநிலம்தான் கேட்டார்கள்.

இந்தியாவோடு இணைந்து இருக்க அவர்கள் வழி செய்தார்கள். பெரியார்தான் முதன்முதலில் தமிழர்களுக்கு தனிநாடு கேட்டார்.

மற்றவர்களைப் பார்த்து அவர் தனிநாடு கேட்கவில்லை. மற்றவர்கள்தான் பெரியாரின் தனிநாட்டுக்கு கோரிக்கைக்கு எதிராக தனிமாநிலம் என்று சொல்லி தமிழர்களுக்கு துரோகம் செய்தார்கள்.

பெரியாரின் திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம். அது தமிழர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல.

ஒரு முறை பெரியாரிடம் "திராவிடர்கள் என்றால் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் "யார் பார்ப்பான் இல்லையோ, அவர்கள் எல்லாம் திராவிடர்கள்"

திராவிடம் என்பதை பெரியார் இனரீதியாகப் பார்க்கவில்லை. "பார்ப்பனியத்திற்கு எதிரான சித்தாந்தமாகத்தான் பெரியார் திராவிடத்தை நோக்கினார். (திராவிடர் என்று ஒரு இனம் இருப்பது வேறு விடயம்) முதலாளித்துவத்திற்கு எதிராக பொதுவுடமைத் தத்துவத்தை முன்வைத்தது போன்று, பெரியார் பார்ப்பனியத்திற்கு எதிராக திராவிடத்தை முன்வைத்தார்.

பார்ப்பனியத்தால் தமிழர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஆகவே அவர் அகலமாகச் சிந்தித்தார். முடிந்தளவு அதிகமான மக்களை பார்ப்பனியத்தில் இருந்து மீட்கப் போராடினார்.

அதன் வடிவம்தான் திராவிட நாடு. இது ஒரு இனரீதியான நாடு அல்ல. சித்தாந்தரீதியான நாடு.

பெரியாரின் முயற்சி வெற்றி பெறவில்லை என்பதற்காக, அதற்கான தேவை இல்லை என்று சொல்ல முடியாது.

தமிழன் தனிநாடு கண்ட பிறகும் தான் தாய் மொழியில் வழிபடவும், கோயிலுக்குள் செல்லவும், குடியிருப்புக்களால் நடக்கவும், விரும்பிய தொழிலை செய்யவும் உரிமை அற்று இருந்தால், அந்த தனிநாட்டால் என்ன பயன்?

;இதுவா விடுதலை?

பெரியார் சொன்னதே உண்மையான விடுதலை. தமிழர்களின் மானம் காத்த பெரும் தலைவர் பெரியார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் புகழ் பாடுகின்றதே உங்களுக்கு வேலையாகப் போச்சு தம்பி. அதற்காக நீங்கள் என்னத்தை வேண்டுமானாலும் திரிப்பீயள் என்றதை நான் கண்டு கொண்ட உண்மை. பெரியார் நல்லவரா, கெட்டவரா இருக்கட்டும். ஆனால் அதற்காகத் தேசியத் தலைவரோட ஒப்பிடுறதும், மனம் காத்த தலைவர் எண்டு பீலா விடுறதும் பொய்யாக இல்லையா?

*** தணிக்கை

Link to comment
Share on other sites

உண்மையில் பெரியார் புகழ் பாடுவது எனது வேலை அல்ல. பெரியாரைப் புகழ்வது பெரியாருக்கே பிடிக்காது.

ஆனால் இங்கே வரலாற்றை தவறாக சிலர் திரிக்கின்ற போது, உண்மையான வரலாற்றை சொல்ல வேண்டியது எமது கடமை அல்லவா?

தமிழர்களுக்கு பாடுபட்ட ஒரு தலைவர் மீது அவதூறுகளை வீசுகின்ற போது, அங்கு உண்மைகளை கூற வேண்டியது ஒரு தமிழனின் கடமை அல்லவா?

தேசியத் தலைவரோ, பெரியாரோ யாருமே விமர்சனத்திற்கோ, மறுவாசிப்பிற்கோ அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால் அவைகள் நேர்மையான முறையில் இருக்க வேண்டும்.

சிங்கள அரசும் ஒட்டுக் குழுக்களும் செய்கின்ற பரப்புரை போன்று இருக்கக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னட ஈ வெ ரா "திராவிடம்" என்ற மாயைப் போர்வை மூலம் தமிழர்களின் இருப்பை நிராகரிக்க முற்பட்ட நபர். தலைவர் தமிழ் தேசியம் மூலம் தமிழர்களின் இருப்பை நிறுவ முற்பட்டவர். இந்த வேறுபாட்டைக் கூட உணராமல்.. ஈ வெ ரா.. தத்துவார்த்தம் பேசுபவர்கள்.. உண்மையான.. தமிழர்களா என்ற வினா எழுகிறது..??!

தமிழகத்தில் கூட தமிழ் தேசிய உணர்வு என்ற ஒன்று இன்றும் வெளிப்பட்டு வருகின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம்.. ஈழமும் தலைவரும் போராட்டமுமே..! இன்றேல் தமிழகம் கூட திராவிட மாயைக்குள் சிக்கி.. தமிழ் என்பதற்கான தனித்தன்மை இழந்திருக்கும். அந்தளவுக்கு தமிழகத்தில் திராவிடம் என்பது தமிழர்களினது என்பது போன்றதான மாயை வளர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை கேரளாவிலோ.. கர்நாடகாவிலோ.. ஆந்திராவிலோ இல்லை. அவர்கள் திராவிடத்தை தூக்கி எறிஞ்சு பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

இன்றும் தமிழகத்தில் திராவிடம் என்ற மாயை இருக்கிறது என்றால்.. அதற்குக் காரணம்.. ஈ வெ ரா போன்ற திராவிட வெறியர்கள் தான். தமிழ் உணர்வை தமிழ் தேசியத்தை அழிக்கப் பிறந்த இந்தத் திராவிடம் அழிக்கப்பட வேண்டும் தமிழகத்தில் இருந்து.அதற்கு முன்னோடியாக ஈ வெ ரா வைத் தூக்கி எறிய வேண்டும் தமிழக மக்கள். ஈ வெ ராவை கேரளன் மதிப்பதில்லை.. கர்நாடகன் மதிப்பதில்லை.. ஆந்திரன் மதிப்பதில்லை.. ஏன் தமிழர்கள் மட்டும் மதிக்க வேண்டும்...????!

Link to comment
Share on other sites

தமிழகத்தில் வெளிப்படும் தமிழுணர்விற்கு காரணம் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரால்தான் இன்றைக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் துணிவாகக் எமக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள்.

தமிழீழத்திற்கு ஆதரவாக இருக்கின்ற அனைவரும் பெரியார் மீது பற்றுள்ளவர்கள்.

தமிழீழத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் ஒரு நேரத்தில் அச்சத்தில் அமைதியாகி விட யாருக்கும் அஞ்சாது தொடர்ந் தமிழீழத்திற்கு குரல் கொடுப்பவர்கள் பெரியார் தொண்டர்கள்.

இவர்களும் இல்லையென்றால் தமிழ்நாட்டில் எங்களை திரும்பிப் பார்க்க யாருமே இருக்க மாட்டார்கள்.

பெரியார் இல்லையென்றால் இன்றைக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கும். தமிழன் என்ற உணர்வே இருக்காது.

இந்திய இராணுவ யுத்தத்தின் போதே, தமிழ்நாட்டு மக்கள் எங்களை வெறுத்து ஒதுக்கி இருப்பர்கள்.

இன்றைக்கும் அங்கே தமிழுணர்வு இருக்கிறது. அதை அணையாமல் காப்பவர்கள் பெரியார் தொண்டர்கள்.

யார் பெரியாருக்கு எதிரிகளோ, அவர்கள்தான் தமிழீழப் போராட்டத்திற்கும் எதிரிகளாக இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்கள் ஆதரவு தாரமால் போனதற்கு திராவிடம்- ஆரியம் என்று பெரியார் தூண்டி விட்ட சிக்கல் தான் காரணம். அதை இப்போது அவரைப் பின்பற்றுபவை புரிஞ்சு கொள்ளணும். அப்படித் தூண்டி விடாமல் இருந்திருந்தால் இந்தியா முழுக்க ஆதரவு தந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் பெரியாருக்கு எதிரிகளோ, அவர்கள்தான் தமிழீழப் போராட்டத்திற்கும் எதிரிகளாக இருக்கிறார்கள்

உங்கட இந்த பிரகடனத்தைக் கொண்டு போய் குப்பையில் போடுங்கள். ஒரு கன்னடன் வழிகாட்டி.. தமிழீழப் போராட்டம் ஆரம்பமும் ஆகல்ல. தமிழனின் இருப்பும் தமிழகத்தில் உணரப்படேல்ல. பல தமிழ் அறிஞர்கள் வழிகாட்டித்தான் அது நடந்திருக்கு. அதற்கு 1947 இல் இருந்து ஆதாரமா கொடுக்கப்பட்டும் இருக்கிறது. சந்தர்ப்பவாத அரசியலுக்காக தமிழகத்தை உபயோகித்த ஒரு கன்னடனை.. நீங்கள் கோவில் கட்டிக் கும்பிடுங்கள். அந்தத் தேவை.. தமிழ் உணர்வுள்ள தமிழ் தேசிய உணர்வுள்ள.. தமிழனுக்கு அவசியமில்லை.

ஈழ விடுதலைப் போராட்டம்.. அடிப்படை போராட்ட நியாயங்களூடு நகர்வது. "திராவிடம்" என்ற மாயைக்குள்ளால் நகர்வதல்ல. ஈழத்தில் இந்தியப்படைகளின் அட்டகாசங்களை அறிந்த எந்த தமிழகத்தமிழனும்.. உணர்விழந்திரான். அரசியலுக்காக.. "திராவிட" முன்னேற்றக் கழகங்கள் காட்டும் மெளனமும் கூட்டணிகளும் தான்... தமிழர்கள் மத்தியில் உள்ள ஈழத்தமிழர் ஆதரவை.. வெளிக்காட்ட விடாமல் வைத்திருக்கு. அவை சுயநலத்தோடு இருப்பவை. ஆக திராவிடம் உச்சரிக்கின்ற.. ஈ வெ ரா சீடரிசும் பேசும் தலைவர்களே இரண்டு பாதையில நிக்கினம். அதில இருந்து தெரியுது அவைக்குள்ள உள்ள சுயநலம் தான் மிகுந்து வெளிப்படுகுது என்பதை. ஆனால் நீங்க என்னடான்னா.. ஈ வெ ரா இல்லாட்டி.. தமிழீழம் இல்லை என்றீங்க. நகைப்புக்கிடமா இருக்கிறது உங்கள் ஆத்தாத வாதம். :D

அண்மையில் யோகி அண்ணா கூட ஒரு உருக்கமான வேண்டுகோளை வைத்தார். தமிழகத் தலைவர்கள் ஈழ விடயத்தில் ஒருமித்த கருத்தோடு ஒரு பக்கம் நில்லுங்கள் என்று. நான் " ஈ வெ ரா வாரிசு" நான்.. ஈ வெ ரா வாரிசுதான் ஆனால் காங்கிரஸோட கூட்டணில இருக்கிறன.. நான்.. ஈ வெ ரா வாரிசு.. ஆனால் சாதிக்கட்சி நடத்திறனான்.. என்று.. காட்டிட்டு நிற்பதை தவிர்க்கக் கேட்டிருந்தார்...??! ஆக ஈ வெ ரா எங்கு போனாலும் தமிழர்களைப் பிளவு படுத்த நிற்கிறாரே தவிர ஒற்றுமைப்பட விடுறார் இல்ல. அதுதான்.. கன்னடன்.. கூட தமிழனை இழக்காரமா நோக்க வழி செய்திருக்கு. ஈ வெ ராவை தூக்கி எறிஞ்சிட்டு.. தமிழர்கள்.. தமிழ் தேசிய உணர்வை முன்னிலைப்படுத்தி நின்றார்கள் என்றால்.. எல்லோரும் ஓர் அணியில் நிற்பர். அந்த தமிழ் தேசிய உணர்வு எப்படி ஈழத்தில் சமூகவிடுதலைக்கு வித்திட்டிச்சுதோ.. அதை தமிழகத்திலும் செயற்படுத்தலாம். தமிழ் தேசிய உணர்வுமிக்க தமிழினம்.. சாதிய வேறுபாடுகளுக்கு அப்பால்.. மத சமவுரிமை கொண்டு.. உலகில் விளங்கனும். ஈ வெ ரா போன்ற கன்னடர்களின் நீலிக்கண்ணீரும்.. போலி வழிகாட்டல்களும் தமிழர்களுக்கு அவசியமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.