Jump to content

மாலன், இந்து ராம், சார்ல்ஸ் அன்டனி, சூசையும் சிறிலங்காப் புலனாய்வுத் துறையும் ஆரியப் புரட்டும், தோலுரிக்கும் பெயரிலி.


Recommended Posts

வியாழன், செப்ரம்பர் 20, 2007

காகத்துக்குக் கனவிலையும்.....

கரைவு 11

நேரப்பற்றாக்குறை; ஆனாலும், தூண்டிலின் சுகம் பெரிது. நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.

மாலன் த ரைம்ஸ் ஒப் இந்தியாவிலே வந்த Power struggle surfaces in LTTE over successor கட்டுரையை, மிகவும் சிரத்தை எடுத்துத் தமிழாக்கித் தந்திருக்கின்றார். ஈழப்போர்ப்பூமியிலிருந்து அகதிகளாக ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுடன் ஆங்கிலமும் பேசாத பூமிகளுக்கெல்லாம் போயிருப்பவர்களும் புரிந்துகொள்ளமென்ற நோக்கத்துடன் அவர் தமிழாக்கம் செய்திருப்பதை நன்றியுடன் வரவேற்போம்.

சேதுசமுத்திரம் தொடர்பான தமிழக நிலைவரங்களிலே தமிழகமுதல்வர் கருணாநிதியின் கருத்தினை பிபிஸி சொல்லியிருக்கின்றது; பெங்களூரிலே அவரின் மகள் செல்வியின் வீடு தாக்கப்பட்டதும் இரு தமிழர்கள் கொல்லப்பட்டதும் செய்திகளாக இணையத்திலும் அலைகின்றன. சன் தொலைக்காட்சியிலே இருக்கும்வரையிலும் கருணாநிதி கொடுக்கும் செவ்வியின்போதும் உடனிருந்து கருத்தினைத் தெரிவித்தவர் மாலன். கருணாநிதியின் மகள் கனிமொழி வாரிசு அரசியலுக்கு வரப்போகின்றார் என்றறிந்தபோது, தமிழ் இலக்கியம் (?) அவரை இழந்துவிடுமா என்று பதிவு போட்டவரும் மாலன். ஆனால், இப்போதோ உரோமாபுரிபாண்டியனைச் சுற்றி சேதுடைத்து வெள்ளமோடுகையிலே ரைம்ஸ் ஒப் இந்தியாவிலே ஸ்ரீனிவாஸ ராகவன் எழுதிய கதை...அதாவது கட்டுரையைத் தமிழாக்கப்புல்லாங்குழல் வாசித்திருக்கின்றார். தன்மாநில வெள்ளத்துக்குச் சேதுகட்டாமல் உதிர்ந்த ஈழப்புட்டுத் தின்று தூங்கியிருக்கட்டுமென்று விட்டுவிடலாமேதான். ஆனாலும், "இந்தியா எனது நாடு! என் நாட்டினைப் பற்றி எவராவது.." என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய பின்னூட்ட நீரோட்டங்கள் எம்மூளைக்கலங்களிலிருந்து இன்னமும் ஆவியுயிர்ப்படைந்திடவில்லை என்பதாலே உசுப்பி எழுப்பவேண்டிய கடப்பாடுடைத்தோம்.

அதைவிடவும் இன்னொன்றுண்டு; விடுதலைப்புலிகளைவிடவும் மாற்றுத்தலைமைகளைக் கொண்ட ஈழத்தமிழர்களின் நலன்/நிலை குறித்த செய்திகளை, சொல்லப்போனால், இந்து ராம், மாலன் போன்றோர் ஆர்வமுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் ஸ்ரீலங்கா நலன் தொடர்பான கடந்த சில நாட்களின் செய்திகளைத் தேடினேன்; அகப்பட்டவற்றிலே சில இவை:

Asahi: Asia: Sri Lankan government suspected of kidnapping 1,000 people

BBC: Lanka abuse probe 'set to fail'

WSWS: Sri Lankan government imposes new taxes to fund war

Asia Times: Mgr Ranjith meets Tamil Tigers, urges them to join peace process

Reuters: Dozens die, disappear in Sri Lanka, UN must act: group

அவரின் 125 ஆண்டுக்காலப்பாரம்பரியத்தில

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.