Jump to content

பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா?


Recommended Posts

பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா?

பேராசிரியர். இரா.மதிவாணன்

நெடுங்காலமாய் பார்ப்பனர் என்னும் சொல்லை விரும்பாமல் பிராமணர் எனத் தம்மை அழைத்துக் கொள்பவர்கள், பார்ப்பனர் வரலாறு என்று தலைப்பிடாமல் அந்தணர் வரலாறு என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டுள்ளனர். தமிழை நீசமொழி என்பவர்கள் அந்தணன் எனும் தமிழ்ச் சொல்லை விரும்பி ஏற்றுக் கொள்ளலாமா? எனும் வினா எழுந்துள்ளது.

அந்தணர் என்போர் அறவோர் என்பதை எவரும் அறிவர். பார்ப்பனர் யார் யாருக்கு என்னென்ன அறங்களை (தருமங்களை) வரலாற்றில் செய்திருக்கிறார்கள்? சமண மதத்தைப் போலச் சாதி வேறுபாடுகளை நீக்கினார்களா? கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் வழங்கினார்களா? பொன்னும் பொருளும் வாரி வழங்கினார்களா? வாழ்வியல் கொடுமைகளை எதிர்த்தும் மூட நம்பிக்கைகளை எதிர்த்தும் போராடினார்களா?

“நீர்ப்பலகால் மூழ்கி நிலத்தசைஇ தோலுடீஇ

சோர்சடை தாழ சுடரோம்பி - ஊரடையார்

கானகத்த கொண்டு கடவுள் உயிர் வாழ்க்கை

வானகத்து உய்க்கும் வழி’’

என வாழ்ந்திருந்தவர்கள் தமிழ் அந்தணராகிய துறவிகள். பார்ப்பனர் தோலுடை அணிந்திருந்தவர் அல்லர். உச்சிக் குடுமி வைக்காமல் சடைமுடி கொண்டவர்களும் அல்லர். ஆதலால் தமிழ் அந்தணர் கோலம் பார்ப்பனர் தோற்றமுடையது அன்று. சமண மதத்திலும் தோலுடையணிந்து சடை முடி கொண்டவர் எவரும் இலர்.

செம்பூ மூக்கின் நன்னார் களைந்து

தண்டோடு பிடித்த தாழ்கமண் டலத்து

படிவ உண்டி பார்ப்பன மகன்

எனப் பார்ப்பனனின் தோற்றம் முற்றிலும் வேறாகக் கூறப்பட்டுள்ளது. மரவுரி உடுத்த கோலத்திலும் பார்ப்பனர் எப்பொழுதும் காணப்பட்டதில்லை. இதிலிருந்து பார்ப்பனர்க்குத் தலை மொட்டையடித்த தவக்கோலமும் தமிழ் அந்தணர் தவக்கோலமும் முற்றிலும் மாறானவை எனத் தெரிகின்றது.

“காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’’

எனும் தொல்காப்பிய நூற்பாவும் அகவை முதிர்ந்த நிலையில் இல்லறம் நீங்கிக் கணவன் மனைவி ஆகிய இருவரும் துறவறம் மேற்கொள்வதைச் சுட்டிக்காட்டுகிறது. பார்ப்பனன் மனைவியும் துறவு மேற்கொண்ட காட்சியைக் காணமுடியாது.

குற்றிசை என்னும் புறத்துறை, கட்டிய மனைவியை முதுமைக் காலத்தில் தனியாக விட்டுவிட்டு ஆண் மகன் தான்மட்டும் துறவியாகக் கூடாது என்று சொல்கிறது. ஆதலால் பார்ப்பனர் துறவுக்கோலமும் தமிழர் துறவுக்கோலமும் முற்றிலும் வேறானவை: கொள்கையளவில் முரண்பட்டவை எனத் தெரிகிறது. தமிழிலக்கியங்களில் பார்ப்பார், அந்தணர், வேதியர், ஓகியர், தவத்தோர் முனிவர், மறையோர், துறவோர் அறவோர், நீத்தார், தாபதர், அறிவர். சான்றோர் போன்ற சொற்கள் ஆளப் பெற்றுள்ளன. அவற்றுள் எவ்வெச் சொல் என்னென்ன பொருள்களில் ஆளப்பட்டது என அறிதல் நலம்.

“பார்ப்பார் தவரே சுமந்தார் பிணி பட்டார்’’ எனும் பாடல் வரியில், பார்ப்பாரும் தவசிகளும் வேறுபட்டவர் எனப்படுகிறது. பார்ப்பார் என்பதற்கு வேதத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பார் என நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருக்கிறார். மேற்கொண்டு பார்த்தல் என்பதை அவர் விளக்கிச் சொல்லவில்லை. பார்ப்பார் என்பதை மேய்ப்பர் என்றாற்போல் வினையாலணையும் பெயராகக் கொள்ள முடியவில்லை. வேதம் எழுதக் கூடாத மொழியாதலால் வேதத்தைப் படிப்பவர் என்று சொல்ல முடியவில்லை. இனி, பார்ப்பன மக்கள் எனும் சொல் பாரதத்தில் “வேதப் பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்விப் பார்ப்பன மாக்களிடையே பாண்டு மைந்தர் ‘அவர் உருக்கொண்டு மாறியிருந்த தன்மை கண்டு’ (பாரத திரௌபதி 49) எனக் கூறப்பட்டுள்ளது யோகமும் தவமும் தமிழர்க்கேயுரியன. யாகமும் வேதமும் பார்ப்பனருக்கே உரியன. தமிழரின் தவமும் பார்ப்பனர்க்கு உரியதாக தமது பாரதக் கதையில் கூறியிருப்பது, பார்ப்பனரை அந்தணர் என்று சொல்வதைப் போன்ற முழுமையான பொய்யாகும். வேளாப் பார்ப்பான் எனும் சொல் பூணூல், உச்சிக் குடுமி கொள்ளுதல் தவிர வேதம் ஓதத் தகாத பார்ப்பனனைக் குறித்ததே ஆகும்.

பார்ப்பனரின் தொழில் (பார்ப்பார் தொழில்) முக்கடனாக - மூவகையாகப் பகுக்கப்பட்டதைத் திரிகடுகம். “மூன்று கடன் கழித்த பார்ப்பானும்’’ என்று (திரிக. 34) கூறுகிறது. தேவர் முனிவர் தென்புலத்தார் ஆகியோர்க்குச் செய்யும் வேள்வி, வேதம் ஓதுதல், மகப் பெறுதல் என்பவையே மூன்று கடன்களாகும். இவையல்லாமல் பார்ப்பான் தொழிலை மேலும் ஆறு வகைப்பட்டது என விரித்துக் கொண்டது ஏன் என்று எவரும் கேட்கவில்லை.

ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவற்றில் ஈதலும் ஏற்றலும் தொழில்களே அல்ல. வேட்பித்தலும் தொழிலாகாது. அரசனுக்குக் கோயில் கட்டுவித்தல் தொழிலாகலாம். ஆனால், கோயில் கட்டும் பணியாளர்க்குக் கட்டுவித்தல் தொழிலாகாது. ஆதலால் வேள்வி செய்யும் பார்ப்பாருக்கு வேள்வி செய்வித்தல் தொழிலாகாது; வேள்வி செய்வதே அவராகலான். வேட்பித்தல் தொழிலாயின் வேள்வி செய்யப் பெரும் பொருள் கொடுத்த கொடையாளியின் தொழிலே வேட்பித்தலாகும்.

இனி, ஓதுவித்தல் என்பது பார்ப்பனர், பார்ப்பனரையே ஓதுவித்தலாலும், ஓதும்போதே ஓதுவித்தல் பணி உடன் நிகழ்வதாலும், பார்ப்பனர் தொழில் ஓதலும் வேட்டலுமாக இரு வகைக்குள் அடங்கிவிடுகிறது. பார்ப்பனர் எவர்க்கும் ஈயாமையின் ஈதலை அவர்க்குரிய தொழிலாகச் சொல்லவே முடியாது.

தமிழர் ஏற்பது இகழ்ச்சி எனக் கருதுவர். அது தொழிலாகாது. இந்தியாவில் மலைவாழ் மக்கள்கூட இரந்து பிச்சையெடுக்க முன்வருவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். எனவே, பார்ப்பனர் அறு தொழில் என்பது வேளாளர் அறுதொழில் என்னும் சொல்லாட்சியை நோக்கித் தாமும் அறுதொழிலுடையோர் எனக் காட்டுதற்காகச் செய்த வெளிப்படையான சூழ்ச்சி என்பது உறுதியாகிறது.

தனக்கு வேண்டும் என நினைத்த பொருள் கிடைக்கும்வரை பேராசை தணியாமல் புலம்பிக் கொண்டிருப்பவன் என்னும் பொருளில் பார்ப்பனன் எனும் சொல்ல திருவிளையாடற் புராணத்தில்

“சாம்பிழி வதென்ன பார்ப்பான் என்ன’’

(திருவிளை. மா. பாத.28) ஆளப்பட்டுள்ளது.

பழந்தமிழில் பார்ப்பான் எனும் சொல் தமிழரின் நாகரிக வளர்ச்சி நிலைகளில் திடுமென மிகவும் சோர்வுற்றவர், நோயுற்றவர் ஆகியோருக்கு மணி, மந்திரம், மருந்து எனும் மூவகையால் மருத்துவம் செய்ய முயல்வதுண்டு.

மாணிக்கக் கற்களால் நோய் நீக்குவது, ஏதேனும் மந்திரம் சொல்லி நோய் நீக்குவது போன்றவை. அச்சம், வருத்தம், ஏமாற்றம் ஆகியவற்றால் தன்னிலையிழந்து நோயுற்றவர்க்குரியது.

உடல்நலக் குறைவுள்ளவர்களுக்கு நாடி பார்த்து மூலிகை மருத்துவம் செய்வது இயல்பான மருத்துவ முறை.

மந்திரம் சொல்லி இது எந்தத் தெய்வக் குற்றத்தால் ஏற்பட்டது என்று பார்க்கும் மந்திரக்காரனைப் பழங்காலத்தில் பார்வைக்காரன் - பார்ப்பான் என வட்டார வழக்காகக் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணம் கதிரை வேற்பிள்ளை தமிழகராதியில் பார்வைக்காரன் என்னும் சொல்லுக்கு நோய் தீர்க்க மந்திரம் கணித்துப் பார்ப்பார் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. மந்திரம் உச்சரித்தலை பார்வை பார்த்தல் என்று குறிப்பிட்டுள்ளனர். பார்ப்பனனின் மந்திரங்கள் வேள்விக்குரியன. நோய் தீர்ப்பதற்கு எங்கும் வேத மந்திரம் ஓதப்படாததால் மந்திரம் ஓதிய பார்வைக்காரன் பொருளில் பார்ப்பனர் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்க முடியாது.

பாரம் எனும் சொல் பருத்தியையும், வெண்மையையும், வெண்ணிறப் பூண்டையும் குறித்தது. பால் நிறம் வெண்ணிறத்தைக் குறித்தது. பால் - பார்ப்பு என்பதும் வெண்ணிறம் குறித்தது. சிவப்பு - கருப்பு என்பன போன்று பால் - பால்ப்பு - பார்ப்பு என வெண்ணிறப் பொருள் ஏற்றது. சிவப்பன், கருப்பன் என ஆண்பால் பெயர்ச் சொல் தன்மை பெற்றது போலப் பார்ப்பு - பார்ப்பனன் - பார்ப்பன் பார்ப்பான் என நிறங்குறித்த பெயர்ச் சொல்லாயிற்று.

பார்ப்பாரப் பூசணி, பார்ப்பாரக் கழுகு, பார்ப்பாரப் பசலை, பார்ப்பாரப் பூண்டு, பார்ப்பார நாகம் என்பவை வெண்ணிறம் குறித்தவை. பார்ப்பு என்பது தொழிற் பெயராயின் ஆர்ப்பு + இன் + அன் = ஆர்ப்பினன் என்றாற் போன்றது ‘இன்’ சாரியை பெற்றுப் பார்ப்பினன் என வடிவம் பெற்றிருத்தல் வேண்டும்.

பண்பு, நிறம் குறித்த சொற்களே அம் + தண் - அந்தண் + அன் + அன் - அந்தணன், பார்ப்பு + அன் + அன் - பார்ப்பனன் ‘அன்’ சாரியை பெறும். ‘பார்ப்பு’ இளமைப் பெயருமுண்டு எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ஆல்-ஆர்ப்பு (ஆலுதல்-ஒலித்தல்), கால் (காலுதல்) - கார்ப்பு என்றாற்போல், பால்-பார்ப்பு எனத் திரிந்து வெண்மை நிறம் குறித்தது.

பறவைக் குஞ்சுகள் பால் மணம் மாறாத பச்சிளமையுடைமை எனும் பொருளிலும் பறவைக் குஞ்சுகளின் வாய் வெளுத்திருக்கும் தோற்றம் குறித்தும் பார்ப்பு எனும் பெயர் பெற்றன. இதனாலும் பார்ப்பு வெண்மை நிறம் குறித்த சொல் என அறியலாம். இச் சொல்லே குழந்தையைக் குறிக்கும் ‘பாப்பா’ எனவும் மாறியது.

வெண்ணிறப் பொருள் கொண்ட பால் எனும் சொல் பிற உலக மொழிகளுக்கும் சென்றுள்ளது. ஆங்கிலத்தில் ஹடட எனும் சொல்லும். எபிரேய இனத் தைச் சார்ந்த கானானியரின் வெண்ணிறத் தெய்வத்தைக் குறிக்கும் பாஅல் எனும் சொல்லும் குறிப்பிடத்தக்கன. பால் எனும் சொல் வால் எனத் திரிந்து பலராமனைக் குறித்த வாலியோன் எனும் சொல்லாயிற்று. பால்-பாலிகை (வெண் முளை). பாளை, பாண்டு (வெள்ளை) பாண்டில் (வெள்ளை எருது). பானல் (வெள்ளை வெற்றிலை) எனும் சொற்களையும் நோக்குக.

அந்தணன் என்பது அறவோர், அருளாளர், முனிவர், கடவுள், சிவன், அருகன் ஆகியோரைக் குறித்த சொல். இதனைப் பார்ப்பனர் தம்மைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்திக் கொண்டனர். திருவள்ளுவர் நீத்தாராகிய துறவியரை மட்டும் அந்தணர் என்கிறார்.

எவ்வுயிர்க்கும் அருள் சுரக்கும் அறநெறி நூல் கருத்துகளை மக்கள் மனத்தில் விதைத்துப் பண்பும் ஒழுக்கமும் கட்டிக்காப்பது அவர் பணியாதலின் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் என வள்ளுவர் விளக்கியுரைத்தார்.

“நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயுங் காலை அந்தணர்க் குரிய’’

எனத் தொல்காப்பியர் மேலும் அந்தணன் எனும் சொல்லுக்கு விளக்கம் தந்தார். இது பார்ப்பனரைக் குறித்த சொல்லாயின் முப்புரி நூல், உச்சிக் குடுமி, தருப்பைப் புல் ஆகிய மூன்றையும் மறவாமல் குறித்திருப்பார். இதிலிருந்தே தொல்காப்பியர் காலத்தில் அந்தணர் எனும் சொல் பார்ப்பனரைக் குறிக்கவில்லை எனத் தெரிகிறது.

அந்தணர்க்கு ஆறு தொழில்களையும் தொல்காப்பியர் சொல்லவில்லை. ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர் என்னும் குறட்பா வரியிலும் ஆகு பயன்களாகிய விளையுள் குறைபடும். அறு தொழில்களுக்குரிய வேளாளர்தம் நூற்கல்வி மறப்பர் என்றே பொருள்படுகிறது.

அந்தணர் என்பதற்கு வேதாந்தத்தைப் பொருளாக மேற்கொண்டு பார்ப்பார் என்று நச்சினார்க்கினியர் வலிந்து விளக்கம் சொல்லி மழுப்பியிருக்கிறார். அந்தண்மை என்பதற்கு அருளுடைமை என்னும் நேரடியான பொருள் சொல்லாமல்,

‘குளித்து மூன்றனலை யோம்பும்

குறிக்கொள் அந்தணமை தன்னை

(நாலாயிர. திருமாமலை - 25)

என முத்தீ வளர்க்கும் பார்ப்பனத் தொழிலைக் குறிப்பிட்டிருப்பது சொற்களின் வரலாற்றையே திசை திருப்புவதாக உள்ளது. குறிஞ்சிக்குக் கபிலன் எனப் புகழ்பெற்ற கபிலரும் தன்னை அந்தணன் புலவன் எனக் கூறிக்கொண்டது காலத்தின் கோலமல்லாமல் வேறொன்றுமில்லை.

பார்ப்பான் கவுணியன், விண்ணந்தாயன் போன்றோர் வெளிப்படத் தம்மைப் பார்ப்பான் என வெளிப்படுத்திக் கொண்ட நேர்மை ஏற்கத்தக்கது. கபிலர், முக்கோல் மணை ஆகியவற்றை ஏந்தித் தவம் செய்யும் முனிவராகப் பாரியிடம் வரவில்லை. ஆதலால் தவக்கோலம் கொண்டவர் தவிர வேறு எவரும் தொல்காப்பிய நூற்பாவின் வண்ணம் தம்மை அந்தணர் என்று சொல்லிக்கொள்வது தவறாகும்.

“எப்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்

செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே’’

எனத் தெரிந்தும், கபிலர் போன்றோர் தம்மை அந்தணர் எனச் சொல்லிக் கொண்டதும் இக்காலத்தில் பார்ப்பனர் தம்மை அந்தணர் எனச் சொல்லிக் கொள்வதும் எட்டுணையும் பொருந்தாததும், தமிழ் மரபுகளை வேண்டுமென்றே மீறுவதும் ஆகும்.

பார்ப்பனர் வரலாற்றை அந்தணர் வரலாறு என நூல் எழுதி வெளியிட்டிருப்பதும், நடுவு நின்ற நன்னெஞ்சினோரும் அறத்தின் தன்மை உணர்ந்தாரும் செய்யத் தக்கதன்று. அதுமட்டுமின்றித் தம் சாதி உயர்வைத் தொடர்ந்து நிலைநாட்டுவதற்காக மேற்கொண்ட கொரில்லாப் போர்முறையாகவே கருதப்படும். பார்ப்பனர் முத்தீ வளர்ப்பது தவம் செய்வதாகாது. ஆதலால் பார்ப்பனர் தம்மை அந்தணர் என அழைத்துக் கொள்வது நகையாடத் தக்கதாகும். பார்ப்பனரை ஆங்கிலோ இந்தியர் என்றாற்போல் ஆரிய இந்தியர் எனக் கூறுவதே பொருந்தும்.

ஆரிய - திராவிடப் போராட்டம் என்று சொல்லப்பட்டதெல்லாம் யாகம் செய்வோர்க்கும் - யோகம் செய்வோர்க்கும் இடையிலான கருத்து வேற்றுமைகளே ஆகும். திராவிடர் தவம் (யோகம்) செய்வதை ஆரியர் தடுத்தனர். ஆரியரின் யாகங்களை அரக்கர் சிதைத்தனர் என்னும் வரலாற்று முரண்பாடுகள் அறிவியல் வளர்ந்த இந் நூற்றாண்டில் களையப்பட வேண்டும். அமைதியும் நல்லுறவும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படையாகச் சொற்களை வரம்போடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; அதுவே நல்லது.

உலக நாடுகள் எல்லாம் மக்களுக்குச் சமவுரிமை தந்து அமைதிப் பாதையில் அணி வகுத்து வழிநடத்தும் அறிவுலகச் சூழலில், சாதியுயர்வை நிலைநாட்டித் தாமே உயர்ந்தவர் எனத் தலைதூக்க முயன்று நிலை குலைந்துபோன செருமானிய மன்னன் இட்டலரைப் போல் பார்ப்பனச் சாதியுயர்வை நிலைநாட்ட அந்தணர் வரலாறு என நூலுக்குப் பெயரிடுவது நாணத்தக்க செயல். நடுவு நெஞ்சினர் நினைத்தும் பார்க்கக் கூடாத அடாத முயற்சி.

பார்ப்பனர் வரலாறு அல்லது பிராமணர் வரலாறு எனப் பெயரிட்டிருந்தால் பொய்யாகச் சாதிப்பதிலும் ஒரு நேர்மை காட்டுவதாக அமைந்திருக்கும். இப்பொழுதுகூட நேர்மைக்கும் உண்மைக்கும் மதிப்பு தரும் அந்தண்மை எள்ளள வேனும் அவர்களிடம் இருந்திருந்தால் அந்தணர் வரலாறு எனப் பெயரிட்டிருக்க மாட்டார்கள்.

“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’’ என்று பாரதி பாடியபோதே பார்ப்பானை அந்தணன் என்ற காலமும் போய்விட்டது. பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் என ஐ.நா. மன்றத்தில் நிறுவிக் காட்டி, முகம்மதியருக்கும் கிறித்தவர்க்கும் மேலான சாதியென்று உலக மக்களை ஒப்புக் கொள்ளச் செய்து உலக அரங்கில் சாதியுயர்வு முடிசூட்டிக்கொள்ள முயற்சி செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு தமிழர்களின் ஏமாளித்தனத்தை அறுவடை செய்து அதனையே மூலதனமாகக் கொண்டு நோகாமல் வாழும் வரலாற்றுப் புரட்டுவாதத் திறமை காட்டி அந்தணர் வரலாறு எழுதுவது யாரை ஏமாற்றுவதற்காக? உலக மக்கள் இன்னுமா ஏமாந்திருக்கிறார்கள்?

‘மன்னன் உயிர்த்தே மலர் தலை யுலகம்’ என மன்னனை முதற்குடியாகக் கொண்டது தமிழினம். பார்ப்பானை முதற்குடியாகக் கொண்டதில்லை. மன்னனும், பண்பாடு வளர்த்த தமிழ்ச் சான்றோராகிய புலவர்களையே தனக்கு வழிகாட்டும் குருவாகக் கொண்டிருந்தான். அமைதிப் புறா ஒளவை மூவேந்தரிடையே ஒற்றுமைக்காகப் பாடுபட்டது போல் எந்தப் பார்ப்பனப் புலவராவது போரைத் தவிர்த்து ஒற்றுமையாக வாழுங்கள் என ஒரு வரியாவது பாடியது உண்டா?

ஒளவையார் தொண்டைமானிடம் தூதுசென்று போர் தவிர்த்தது போல, கபிலர் தூது சென்று பாரியின்மீது போர் தொடுக்கும் முயற்சியை ஏன் தடுத்திருக் கக்கூடாது? ஒருகுடிப் பிறந்தவர்களுக்குள் போர் வேண்டா எனக் கோவூர் கிழார் பாடியதை ஏன் கபிலர் பின்பற்றவில்லை? பார்ப்பார் நோவன செய்யாதீர்கள் பார்ப்பன உயர்வை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் பாடியிருக்கிறார்.

தமிழர் மனம் நோவன செய்யாதீர்கள் எனப் பார்ப்பனர்க்கு அறிவுரைத்த பார்ப்பனப் புலவர் எவரும் இலர். மூவேந்தர்களிடையில் எப்போதும் பகை வளர்க்கும் நாரத வேலையே பார்ப்பனரின் முழு மூச்சாக இருந்திருக்கிறது. பாண்டிய குலத்துக்கு எமன் எனும் பொருளில் ‘சோழனுக்குப் பாண்டிய குலாந்தகன் என்றும் பாண்டிய மரபுக்கு இடி போன்றவன் எனும் பொருளில் பாண்டிய குலாசனி’ என்றும், பட்டம் தந்து பாராட்டி உசுப்பி விட்டிருக்கிறார்கள். கேரளாந்தகன், சோழகுலாந்தகன் என்பனவும் மூவேந்தர்களிடை கலகம் மூட்டிய பட்டங்களே.

மதுரையை அழிப்பவன் எனும் பொருளில் மதுராந்தகன் எனப் பாராட்டிப் புகழ்ந்திருக்கிறார்கள். தமிழினம் அழிய வேண்டும்; தமிழர்களிடையில் என்றும் ஒற்றுமை வளரவே கூடாது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு செழிப்பான நிலக்கொடைகளும் வளமான வாழ்வும் தந்த தமிழ் மன்னர் மரபுக்கு நன்றி மறந்து சொல்லொணாக் கொடுமை செய்தவர்களுக்கு அந்தணர் என்னும் பெயர் கனவிலும் கருதக் கூடாதது என்பதை அவர்கள் மனச் சான்றே அவர்களுக்கு வலியுறுத்தும்.

மனச்சான்று உடையவர்களாயிருந்தால், பார்ப்பனர்களால் இந்த நாட்டிற்கு விளைந்த நன்மை என்று ஒன்றே ஒன்றுகூடக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அடர்ந்த காடுகளிலும் ஆழ்கடலிலும் அஞ்சாது புக்கு காடு கொன்று நாடாக்கி, நாகரிகப் பயிர் வளர்த்து பண்பாட்டு வெற்றிக் கனி தந்த தமிழினத்தார் பதினெண் குடிப் பிரிவுள்ள ஐந்திணை மக்களே அன்றி நிற வேறுபாடு கொண்ட நால்வருணத்தார் அல்லர்.

பார்ப்பனர் என்று பொது மக்கள் தந்த சாதிப் பெயர் பிராமணர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆதலால் இந்தியா முழுவதிலும் பிராமணர் என்றே சொல்லிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஐயர். அந்தணர் என்னும் கூடுதல் விருதுகளைத் திருடிக் கொள்வது ஏன்? எதற்காகப் பிராமணர் தரும் சூத்திரப் பட்டத்தை மற்றவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்? பொதுமக்கள் தந்த பார்ப்பனர் பட்டம் மட்டும் ஏன் கசக்கிறது?

ஆப்பிரிக்க நிறவெறி போன்று நம் நாட்டின் வேற்றுமை குலைத்துப் பிறப்பு வழி சாதிப் பிரிவான நால்வருண வேறுபாடு, மாப்பிள்ளைப் பரிசமாகிய வரதட்சணை, பருவம் அடையுமுன் பெண் குழந்தைகளுக்குச் செய்யும் இராட்சசம் போன்ற கட்டாயத் திருமணம் ஆகிய மூன்றும் மருந்து கண்டறியாத தீராத நோய்களாகவும், பார்ப்பனரால் வித்தி விளைக்கப்பட்ட கொடுமைகளாகவும் இன்றும் நிலவுகின்றன. இத்தனை கொடுமைகளைப் புரிந்தவர்களுக்கா அந்தணர் பட்டம்!

http://www.keetru.com/anaruna/jul06/mathivaanan.php

Link to comment
Share on other sites

இக்கட்டுரையில் மிகப் பல தவறான முறையில் சங்க இலக்கிய ஆசிரியர் கூற்றுகளை திரித்து ஒரு பிரிவினையை வளர்க்கவே எழுதப் பட்டுள்ளது.

விரிவான பதில் விரைவில்.

ஆனால் கீள் உள்ள கருத்தையும் நினைவில் கொள்ளவேண்டும்.

தீய எண்ணம் கொண்டோர், நல்லெண்ணம் கொண்ட அந்தணர்களை பரம எதிரிகளாய் கருதி, அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கில் சாதியாய் ஒரு வேறுபாட்டுக் கூறாகத் திரித்து, வெறுப்பை வளர்தார்கள். எனெவே படைப்பாசிரியர்கள், ஒரு ஆரியன் எனக் கருதி, தவறான அர்ததை கற்பித்துக் கொண்டு படைப்பின் தரத்தை குறைவாக மதிப்பீடு செய்வதும், படைப்பை இகழ்வதும் அறிவுடைமையாகாது. -பக்கம்-31,தெய்வீக கீதையில் திருவள்ளுவம், பேராசிரியர்.Dர்.மெ.மெய்யப்பன் (அழகப்பா பல்கலைக்கழகம்), வானதி பதிப்பகம்.

தமிழன் நடந்து கொள்வதெற்கென்று என்று தனிமுறை, வழிதுறை கிடையாது. தமிழெனுக்கென்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது- ஈ.வெ.ராமசாமி நாயக்கர். குடியரசு. 27-11-1943.

Link to comment
Share on other sites

சிலம்பிலே திருமணக்காட்சி

தமிழர் திருமண முறை பற்றி அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் ஒன்றும்

கைகொடுக்கவில்லை. அவற்றில் ஒன்றிரண்டிலே உவமைப் பொருளாகத் திருமணம் பற்றிச்

சொல்லப்படுகிறது. திருமணத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தும் செய்யுள் ஒன்றுகூட

இல்லை. தொல்காப்பியத்திலே திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது என்றாலும் அதிலும்

மேலெழுந்தவாரியாகச் சுட்டிச் சொல்லப்படுவதன்றி விரிவாகக் கூறப்படவில்லை. திருமணக்

காட்சியை முழுமையாகக் காட்டும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அதிலே காப்பிய

நாயகி, நாயகனான கண்ணகி - கோவலன் திருமணம் பற்றிக் கூறப்படுகிறது. அது

வருமாறு:

"யானை யெருத்தத்து அணியிழையார் மேலிரீஇ

மாநகர்க் கீந்தார் மணம்

அவ்வழி

முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம்

வெண்குடை

அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள்மங்கல அணி

யெழுந்தது

மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து

நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்

வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்

சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்

தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை

விரையினர் மலரினர் விளங்கு மேனியர்

உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்

சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்

ஏந்திள முலையினர் இடித்த சுண்ணத்தர்

விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை

முனைக்குட நிரையினர் முகிழ்த்த மூரலர்

போதொடு விரிகூந்தற் பொலனறுங் கொடியன்னார்

காதலாற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்

தீதறு கெனவேத்எதிச் சின்மலர் கொடுதூவி

அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை

மங்கல நல்லமளி ஏற்றினார் தங்கிய

இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை

உப்பாலைப் பொற்கோட்டு

உழையதா வெப்பாலும்

செருமிகு சினவேற் செம்பியன்

ஒருதனி ழி உருட்டுவோ னெனவே

(மங்கல வாழ்த்துப் பாடல்)

மங்கல வாழ்த்துப் பாடலுள் வரும் "வானூர் மதியஞ் சகடு அணைந்த நன்னாள்"

என்பதற்கு "வானத்திலுள்ள ரோகிணி என்னும் நட்சத்திரத்தை சந்திரன் கூடிய நன்னாள்"

என்றுதான் பொருள் சொல்லப்படுகிறது. இதிலே புலவருலகில் கருத்து

வேறுபாடிருக்கவில்லை.

மணணுலக அருந்ததி

ரோகிணிக்கும் சந்திரனுக்குமுள்ள உறவு மனைவிக்கும் கணவனுக்குமுள்ளது போன்றது

என்று கதை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ரோகிணியைச் சந்திரன் கூடிய நாளே

திருமணத்திற்கான நன்னாள் என்று கருதி அந்நாளிலே கண்ணகி-கோவலனுக்குத்

திருமணம் செய்தனர் அவர்களின் பெற்றோர்- என்கிறார் இளங்கோவடிகள்.

இன்னும் "சாலியொரு மீன் தகையாள்" என்கிறார் கண்ணகியை. கற்புக்குக் கடவுளாக

அருந்ததி என்னும் நட்சத்திரத்தைக் குறிப்பிடுன்றன இந்து சமய காப்பியங்கள்.

அதையொட்டியே கண்ணகி அருந்ததியோடு ஒப்பிடப்படுகிறாள். விண்ணுலகில் கற்புக்குக்

கடவுள் அருந்ததி என்றால் மண்ணுலக மாதர்க்குக் கற்புக்கொரு கடவுளாவாள்

கண்ணகியென்பது சிலம்பு தந்த சேர முனிவரின் பிரகடனம். இது பாரதப் பெருநாடெங்கும்

பரவியுள்ள இந்துக்களின் நம்பிக்கையாகும். கவே இதுவும் தமிழருக்கேவுரிய திருமணச்

சடங்கல்ல.

இன்னும், "மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட", கண்ணகியைக் கைப்பிடித்துக்

கோவலன் புரோகிதன் வளர்த்த தீயை வலம் வருகிறான் என்பதும் இளங்கோ தரும்

திருமணச் செய்தி. "மாமுது பார்ப்பான்" என்பதற்கு, பிதாமகன் (பிரம்மதேவன்) என்றும்

"புரோகிதனுமாம்" என்னும் பொருள் கூறுகின்றார் அடியார்க்கு நல்லார். பிரம்மா நால்

வேதங்களைத் தந்தவன் என்பது பரத கண்டமெங்குமுள்ள இந்துக்களின் பொது

நம்பிக்கை. அதனால் இந்துக்களாகவுள்ள தமிழர்களும் இதை நம்புகின்றனர்.

"மாமுது பார்ப்பான்" என்பது புரோகிதனை மட்டும் குறிப்பதாகக் கொண்டு, அவன் வேத

வழிப்படி திருமணத்தை நடத்தி வைத்தான் என்று பொருள் கொள்ளத் தூண்டும் வகையிலே

"புரோகிதனுமாம்" என்கிறார் அடியார்க்கு நல்லார். இது ராயச்சிக்குரியது.

"மாமுது பார்ப்பான்" என்பதற்குப் பிரம்ம தேவன் என்று மட்டுமே பொருள் கொண்டால்

இடர்ப்பாடெதுவுமில்லை. மாறாக, "புரோகிதன்" என்பது மட்டுமே கொண்டால், அவன்

வயதால் முதியவன் என்று நம்பியாக வேண்டும்.

பொக்கை வாய்ப் புரோகிதர்

பற்களை இழந்த பொக்கை வாய்ப் பார்ப்பானை புரோகிதத்திற்கு அழைக்கக்கூடாது என்பது

இந்துக்களாகவுள்ள தமிழரின் நம்பிக்கை. "பல்லு போனால் சொல்லும் போம்" என்பதும்

பழமொழி. வடமொழி மந்திரம் உந்தியிலிருந்து எழுந்து வாய் வழி ஒலிப்பதாகும்.

அதனால்தான் அது மந்திர மொழி எனப்படுகிறது. அதிலேதான் புரோகிதம்

நடத்தப்படவேண்டும் என்ற நம்பிக்கையும் பிறந்தது. பல்லில்லாதவன் மந்திரஞ் சொன்னால்

சொற்களின் வலிமை போய்விடுமாம்! பொய்ப்பல் கட்டிக்கொள்ள வசதியில்லாத காலத்தில்

பிறந்த சிலப்பதிகாரம் தலால், "மாமுது பார்ப்பான் மறைவழி" என்பதற்கு பிரம்மதேவன்

தந்த வேதங்களில் சொல்லியுள்ள மந்திரங்களை யோதி புரோதிகன் திருமணத்தை

நடத்தினார் என்று சொல்வதுதான் முறையாகும்.

கண்ணகி கோவலன் திருமணம் தமிழர் இன வழி அல்லாமல் நால்வருணப்

பாகுபாட்டின்படி வணிகருக்குரிய முறையில் நடந்ததாகவும் அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.

ளவானூர் மதியம்" என்பதிலிருந்து "காண்பார்கண் நோன் பென்னை" என்பது

வரையுள்ள வரிகளுக்கு,

" மதியம் சகடணைந்த நான்னாளிலே பார்ப்பான் மறையிற் சோதிடாங்கத்துள்

வணிகர்களுக்குக் கூறிய நெறியிலே சடங்கு காட்ட இவர் இங்ஙனம் தீவலஞ் செய்கின்ற

இதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவத்திற் செய்த தவம் யாதுகாண் என்பாராய்."

என்பது அடியார்க்கு நல்லார் தரும் விளக்கம்.

சிலம்பில் படும் புரோகிதர்

இதுவரை கூறியவற்றால்-குறிப்பாக , சிலம்பு தந்த அடிகளாரும், அதற்கு விளக்கம் தந்த

அடியார்க்கு நல்லாரும் காட்சிப்படுத்தும் கண்ணகி-கோவலன் திருமணமானது வேத

(இந்து) மதத்தவருக்கு, அவர்களிலேயும் நால்வருணங்களிலே மூன்றாவது வருணத்தவரான

வணிகருக்குரிய நெறிப்படி நடந்ததென்பது உறுதிப்படுகிறது. இதிலே அந்நாளிலும்

இந்நாளிலும் தமிழ் இனத்தவருக்கே உரிய திருமணக்காட்சியில் சடங்காகிவிட்ட தாலி

அணிவிப்பது குறிப்பிடப்படாததால், சிலப்பதிகாரக் காலத்தில் அவ்வழக்கம் இல்லையென்று

கிவிடாது.

கண்ணகி-கோவலன் திருமணத்தில் வேத வழியிலிருந்து வேறுபட்ட -விரோதப்பட்ட அல்ல

- இனவழிப்பட்ட மணமகள் கழுத்தில் மணமகன் தாலியணிவிக்கும் சடங்கும் நடந்திருக்கும்

என்பதற்கு சிலப்பதிகாரத்திலுள்ள வேறு காதைகளிலிருந்து செய்தி கிடைக்கிறது.

சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல் 127-ல் "ஈகையரிய இழையணி மகளிர்" என

வரும் சொற்றொடருக்கு,

"மகளிர்க்கு மங்கல அணி ஒழியப் பிறவெல்லாம் நீக்குதற்கு உரியவாதலின் ஈகையறிய

இழைபெற்றார்" என்கிறார் பழைய உரைகாரர்.

சங்க இலக்கியமான நெடுதல் வாடையிலும், "ரந்தாங்கிய அவர் முலையகத்துப் பின்னமை

நெடுவீழ தாழத் துணைதுறந்து" என்று வருகிறது. இதற்கு

" முன் முத்தால் செய்த கச்சுச்சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது

குத்தலபுல் அமைந்த நெடிய தாலி நாண் ஒன்று மட்டுமே தூங்க"

என்று உரையெழுதியுள்ளார். புலவர்கெளல்லாம் உச்சி மேற்கொண்டு போற்றும்

நச்சினாக்கினியர்.

சிலம்பில், "அகலுள் மங்கல அணியெழுந்தது" என்னும் வரிக்கு, "ஊரிலே மாங்கல்ய

சூத்திரம் வலஞ்செய்தது" என்கிறார் அருபத உரைகாரர். மற்றும் கணவன் கோவலன்

பிரிந்த வருந்தத்தால் அணிகல்னகளையும் அலங்காரத்தையும் துறந்து வாழும் கண்ணகியை

பாதாதி கேசமாக வருணிக்குமிடத்து, கழுத்தண்டை வரும்போது "மஙகல அணியிற்பிறிதணி

மகிழாள்" என்கிறார் இளங்கோவடிகள்.

பிற அணிகளை அகற்றிவிடட்ட கண்ணகி, கணவன் இன்னும் உயிர்வாழ்கிறான்

என்பதற்கு அடையாளமாகவுள்ள மங்கல அணியான மாங்கல்யம் ஒன்றை மட்டும்

அணிந்திருந்தாளாம். அது ஒன்றுமட்டுமே அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்ததாம்.

வஞ்சிக் காண்டத்துக் காட்சிக் காதையில் சேரன் செங்குட்டுவனுக்கு நல்லணிகளோடு

கண்ணகி காட்சியளித்ததைக் கூறுமிடத்தும், " நாவலம் பொன் இழை" கழுத்தில்

இருந்ததாக இளங்கோ அடிகள் கூறுகிறார்.

திரும்பவும் கூறுகிறேன். சிலம்பில் திருமணத்தைக் காட்சிப் படுத்துமிடத்து கண்ணகி

கழுத்தில் கோவலன் தாலியணிவித்ததைக் கூறாமல் விட்டது, அது வேத வழிப் பட்டதாக

அல்லாமல் தமிழர் இனவழிப்படடதாக இளங்கோ கருதியதால்தான்.

நன்றி

மபொ சிவஞானம்

தமிழர் திருமணம்

பூங்கொடி பதிப்பகம்

Link to comment
Share on other sites

இக்கட்டுரையில் மிகப் பல தவறான முறையில் சங்க இலக்கிய ஆசிரியர் கூற்றுகளை திரித்து ஒரு பிரிவினையை வளர்க்கவே எழுதப் பட்டுள்ளது.

விரிவான பதில் விரைவில்.

எங்கே எது அப்படித் திரிக்கப்படுள்ளது என்பதை ஆதரங்களுடன் சுட்டிக் காட்டுங்கள்,உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

தயவு செய்து தலைப்புடன் சம்பந்தப்பட்டு கருத்தாதடைலைச் செய்யவும்,சம்பந்தா சம்பந்தம் அற்று இந்தத் தலைப்பிற்குள் கட்டுரைகளையோ கருதுக்களையோ இணைக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

//கண்ணகி கோவலன் திருமணம் தமிழர் இன வழி அல்லாமல் நால்வருணப்

பாகுபாட்டின்படி வணிகருக்குரிய முறையில் நடந்ததாகவும் அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.//

//திரும்பவும் கூறுகிறேன். சிலம்பில் திருமணத்தைக் காட்சிப் படுத்துமிடத்து கண்ணகி

கழுத்தில் கோவலன் தாலியணிவித்ததைக் கூறாமல் விட்டது, அது வேத வழிப் பட்டதாக

அல்லாமல் தமிழர் இனவழிப்படடதாக இளங்கோ கருதியதால்தான்//

கட்டுரையாளரின் மேற் குறிப்பிட்ட கருத்துக்கள் வேத வழி, தமி்ழர் இன வழி என இரு வெவ்வேறான வழிகளைக் கூறுகின்றார்.இது மேற் குறிப்பிட்ட கட்டுரைக்கு வலுச் சேர்க்கும் வன்ணமே உள்ளது.ஆகவே இங்கே இந்தக் கட்டுரையை நீங்கள் மேலே இடப்பட்ட கட்டுரைக்கு வலுச் சேர்க்கும் வண்ணமே இணைதிருகிறீர்கள் என்றே கருதுகிறேன்.

அல்லாது விடின் இதில் வேறு எதேனும் மாற்றுக் கருதுக்கள் இருக்கின்றனவா?

Link to comment
Share on other sites

எங்கே எது அப்படித் திரிக்கப்படுள்ளது என்பதை ஆதரங்களுடன் சுட்டிக் காட்டுங்கள்,உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

நீங்கள் ஒரே நாளில் பல தலைப்பில் இராம.கி. கட்டுரை கொடுத்துள்ளீர்கள். ஆனால் எல்லாமே அடிப்படை பிராமண எதிர்ப்பு- மக்கள் பிராமண வேறுப்பு தொடர வேண்டும் என்பதே.

சற்றே குழம்பி இங்கு வர வேண்டிய பதில்

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 1 சேர்ந்துள்ளது.

அது அங்கும் பொருத்தமே. மீண்டும் இங்குதருவது விட இணைப்பு தருகிறேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=28698&hl=

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.