Jump to content

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் முதல்வர் பாலசுகுமார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிருக்கு உத்தரவாதமுள்ள வாழ்க்கை வாழும் புலம்பெயர் உறவுகள், சொந்த நாட்டில் உள்ள சகோதரர்களிடம் இருந்து பாடம்(நம் பண்பாட்டைத் தொடர்ந்து பேணுவது பற்றி) கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லிpயருப்பது நியாயமான ஒரு கருத்து.

Link to comment
Share on other sites

உயிருக்கு உத்தரவாதமுள்ள வாழ்க்கை வாழும் புலம்பெயர் உறவுகள், சொந்த நாட்டில் உள்ள சகோதரர்களிடம் இருந்து பாடம்(நம் பண்பாட்டைத் தொடர்ந்து பேணுவது பற்றி) கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லிpயருப்பது நியாயமான ஒரு கருத்து.

பாலசுகுமார் தமிழரின் பண்பாடு பற்றி மட்டுமே குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். மதச் சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கவில்லை. குறிப்பாக அவர் தமிழரின் பாரம்பரிய கலைகள் பற்றியதாகத் தான் தனது நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தோடு அவருடைய கருத்தில் முழுமையாக எனக்கு உடன்பாடில்லை. ஒரு போர்ச்சூழலில், அதுவும் இன அடிப்படையில் தமிழர்கள் புறக்கணிக்கப்படும் சூழலில் தமது இருப்பை நிலைநிறுத்தவேண்டிய தேவை அங்குள்ள மக்களுக்கு உள்ளது. அதன்காரணமாக தமது பாரம்பரிய கலைகளை தேடிய அவர்களது ஆர்வம் இயல்பானது தான். அத்தோடு வெளியுலகுடனான தொடர்புகள் பெருமளவில் இல்லாததால் இது இன்னமும் சாத்தியமானதுதான்.

ஆனால் வெளியுடனான தொடர்புகள் உள்ள நிலையிலும், பல்வேறுபட்ட கலாசார சூழல்களுக்கு மத்தியிலும் தமது மொழியையும் பண்பாட்டையும் கலையையும் பின்பற்றும் புலம்பெயர் தமிழர்களை உண்மையில் பாராட்டவே வேண்டும். இப்படியான சூழலிலும், அதாவது மிகச்சுலபமாக அந்நிய சக்திகளால் உள்வாங்கப்படக்கூடிய சூழலிலும் புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கிற முயற்சிகள் வியக்கதக்கன. சர்வதேச சமூகத்துக்கு நமது பண்பாட்டையும் கலைகளையும் எடுத்துச் செல்லும் முயற்சிகள் கூட நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது.

பிரான்சில் நடந்த பொங்கல் விழாவில் சிலம்புக்கலை, கோலமிடுதல் போன்றன நிகழ்வுகளாக செய்து காட்டப்பட்டன. இதுபோன்று பலவும் உள்ளன. ஆனால் என்ன... எது எமது பண்பாடு எது எமது கலை என்பதில் சரியான வரையறையும் தெளிவும் இல்லாத போக்கு புலம்பெயர்ந்த சமூகத்தில் உள்ளது. சரியான வழிகாட்டல்கள் குறைவாக உள்ளது. இந்திய இந்துத்துவ மேலாதிக்கத்தாலும், ஆங்கில காலனித்துவ தாக்கத்தாலும் இன்னும் சூழப்பட்டவர்களாகவே இருக்கிறோம். அவற்றிலிருந்து எமது கலை, எமது பண்பாடு என்ற தனித்துவத்தை வரையறுத்துக்கொள்ள வேண்டும். அதற்கான சரியான வழிகாட்டல்கள் எமக்கு புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தில் வேண்டும். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் நானும் இங்கே பண்பாட்டைப் பேணுவது பற்றி அவர் சொன்ன கருத்தைத் தானே சொல்கின்றேன். ஏன் அதை மதச் சார்பாக நான் சொல்வதாகக் கருதுகின்றீர்கள்.

*** நான் எழுதுவது எல்லாம் மதம் பற்றியதாகவே இருக்கும் என்று அபிப்பிராயம் கொள்ள வேண்டாம் இளைஞன்.

யுத்த சூழ்நிலையில் அடுத்த நிலை வாழ்வைப் பற்றிச் சிந்திக்க முடியாமல் வாழ்கின்ற தாயகத்து உறவுகள், கலைகளைப் பேணுகின்ற நிலமைக்கும், எல்லா வசதிகளும் நிரம்பப்பெற்ற சூழ்நிலையில் புலத்தில் வாழ்கின்ற எம்மவர்களில் ஓரிரண்டு பேரைத் தவிர மிகுதி அடிபட்டுப் போகின்ற நிலை உள்ளபோது தாயகத்தில் உள்ளவர்கள் ஒருபடி மேலானவர்கள் தான்.

நாமும் இருப்பைத் தொலைத்து விட்டு, நாம் வசிக்கின்ற இனத்தோடு இனமாக மறைந்து விடுவோமாக இருந்தால் இத்தனை காலப் போராட்டமும் தேவையில்லாத ஒன்றாகவே மாறும்.

நிர்வாகம் பற்றிய விமர்சனங்களை அதற்குரிய பிரிவில் எழுதுங்கள். தலைப்புக்கு அவசியமற்ற வலிந்த திணிப்புகளைத் தவிர்த்துக்கொள்ளவும். -வலைஞன்

Link to comment
Share on other sites

(நம் பண்பாட்டைத் தொடர்ந்து பேணுவது பற்றி)

நானும் நீங்கள் மதச் சார்பாக சொன்னதாகச் சொல்லவில்லை. நீங்கள் "பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்" என்று பாலசுகுமார் அவர்கள் சொன்னதை, "பண்பாடு பேணுவது பற்றி" என்று பொருள்விளக்கம் கொடுத்ததால், தமிழ்ப் பண்பாடு என்பதற்கு "(இந்து) மதச் சடங்குகள் சம்பிரதாயங்கள்" என்கிறதாய் யாரும் தவறாக அல்லது குறுகிற பொருள் விளக்கம் கொண்டுவிடக்கூடாது என்பதனாலேயே அதனைச் சுட்டிக்காட்டினேன்.

மற்றும்படி: குடிக்கிறதுக்கு வழியில்லாதவன் குடிக்காமல் இருப்பதற்கும், குடிக்கிறதுக்கு வசதியிருக்கிறவன் குடிக்காமலிருப்பதற்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. அது போன்றதுதான் களத்தில் நிற்கும் தமிழர்களுக்கும், புலத்தில் வாழும் தமிழர்களுக்குமான வேறுபாடு. :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
    • சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.