Jump to content

நட்சத்திற ஹோட்டலில் நடந்த நடிகைளின் குடும்மி பிடி சன்டை பெண்களே நீங்களும் வாசித்து பயன் பெறுங்கள்


Recommended Posts

நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவு பார்ட்டி : போதையில் நடிகைகள் குடுமிப்பிடி சண்டை

சென்னை: போதையில் நள்ளிரவு சூடிஸ்கோத்தே' நடனத்தில் நடிகைகள் இருவர் குடிமிப்பிடி சண்டை போட்ட விவகாரம் குறித்து விசாரணை நடக்கிறது. சூதுணை நடிகை அடியாட்களுடன் எனது வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்' என நடிகை ஐஸ்வர்யா போலீசில் புகார் கொடுத்தார்.

நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. சூஎஜமான், ராசுக்குட்டி' உட்பட பல படங்களில் நடித்தவர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த துணை நடிகை ப்ரீத்தி உன்னி. இவர்கள் இருவரும் கோலிவுட்டில் நுழைவதற்கு முன் இருந்தே தோழிகளாக பழகினர். சினிமாவிற்கு நடிப்பதற்கு முன் சூடான்ஸ் கிளப்' உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றினர். இடையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அடையாறில் உள்ள டிஸ்கோத்தே டான்ஸ் கிளப்பிற்கு அவர்கள் சென்றனர். போதையில் நடனம் ஆடிக் கொண்டிருந்த நடிகைகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த நடிகை ஐஸ்வர்யா, துணை நடிகை ப்ரீத்தி உன்னியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், அந்த இடமே களேபரமானது. டான்ஸ் கிளப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் பாடுபட்டு ஐஸ்வர்யாவையும், ப்ரீத்தி உன்னியையும் வெளியேற்றினர். போதையில் இருந்த ப்ரீத்தி உன்னி அடியாட்கள் சிலரை அழைத்தார். நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள சூநெல்சன் ஸ்கொயர் பிளாட்டில்' முதல் மாடியில் ஐஸ்வர்யா வசித்து வருகிறார். ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு நான்கு குண்டர்களுடன் நுழைந்தார் ப்ரீத்தி உன்னி. ஐஸ்வர்யா வீட்டில் இல்லை. வீட்டில் இருந்த வேலைக்காரி வள்ளியை மிரட்டி சென்றனர். சனிக்கிழமை இரவு முழுவதில் பல்வேறு இடங்களுக்கு சென்ற நடிகை ஐஸ்வர்யா, அதிகாலை ஐந்து மணிக்கு வீடு திரும்பினார். துணை நடிகை வீடு புகுந்து மிரட்டியதை கேள்விப்பட்டார். அதிகாலை 5.30 மணிக்கு அமைந்தகரை போலீசில் நடிகை ஐஸ்வர்யா புகார் கொடுத்தார். சூதுணை நடிகை ப்ரீத்தி உன்னி வாய் தகராறில் ஈடுபட்டதாக' நடிகை ஐஸ்வர்யாவுக்கு புகார் மனு ரசீது அளித்துள்ளனர். புகார் கொடுக்கும் போது நடிகை ஐஸ்வர்யா போதையில் இருந்துள்ளார். சூவீட்டிற்கு சென்று ஓய்வெடுத்த பின்பு பிற்பகல் போலீஸ் நிலையம் வாருங்கள். நடந்த சம்பவம் குறித்து உங்களிடம் விசாரித்து தெளிவான புகார் மனு பெற வேண்டும்' என போலீசார் கூறினர். திரும்ப வருவதாக கூறி சென்ற நடிகை ஐஸ்வர்யா, நேற்றிரவு வரை போலீஸ் நிலையம் வரவில்லை.

News by SNS news service and thanks to Dinamalar.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா சுண்டல் அண்ணா சரியான முக்கியமான செய்தி தான் தந்துள்ளீர்கள். :(

அது சரி இந்த மாதிரி செய்தி எல்லாம் எங்க தான் தேடி கண்டுபிடிக்கிறீங்க??? :lol:

Link to comment
Share on other sites

எல்லாம உங்கள போல ஆக்களுக்கு உதவ வேணும் என்டு தான்...இதெல்லாம் தானா கிடைக்கிதுங்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க செய்தி நல்லா இருக்கு சுண்டல் . ஆனால் தலைப்பில் நட்சத்திற ஹோட்டலில் நடந்த நடிகைளின் குடும்மி பிடி சன்டை நடிகைகளே(பெண்களே) நீங்களும் வாசித்து பயன் பெறுங்கள்

எண்டு போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும் பட் போட்டிட்டிங்க பரவாயில்லை.

Link to comment
Share on other sites

என்ன சுண்டல் நீங்கள் இணைத்த இதே செய்தி தற்ஸ்தமழில் கீழேயுள்ள மாதிரி போட்டுள்ளார்கள். அதுபோல் தினமுரசு பத்திரிகையிüல் இன்னொன்றாக எழுதியுள்ளார்கள். எனக்கொரு சந்தேகம் போதை நடிகைகளுக்கா அல்லது பத்திரிகை நிருபர்களுக்கா??

ஐஸ்வர்யாவுக்கு சரமாரி அடி!

நடிகை லட்சுமியின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், ஜூனியர் நடிகை ப்ரீத்தி உண்ணி என்பவருக்கும் ஹோட்டலில் டான்ஸ் ஆடும்போது மோதல் ஏற்பட்டது. இதில் ப்ரீத்தி உண்ணி, தனது அடியாட்களுடன் வந்து ஐஸ்வர்யாவை சரமாரியாக அடித்து உதைத்தார்.

நடிகை ஐஸ்வர்யா தற்போது முன்பு போல நடிப்பதில்லை. முன்பு தனது தாயாருடன் கோபம் கொண்டு தனித்து வசித்து வந்த ஐஸ்வர்யா, லட்சுமியுடனேயே தற்போது சேர்ந்து வசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு இரவில் சென்றார் ஐஸ்வர்யா. அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார். டான்ஸ் ஆடும்போது அங்கு ஆடிக் கொண்டிருந்த ப்ரீத்தி உண்ணி என்கிற ஜூனியர் நடிகையுடன் ஐஸ்வர்யாவுக்கு தகராறு ஏற்பட்டது.

இருவரும் சரமாரியாக திட்டிக் கொண்டனர். அபபோது ப்ரீத்தியை, ஐஸ்வர்யா கடுமையாகத் திட்டி கேவலப்படுத்தியதாக தெரிகிறது.

பின்னர் அங்கிருந்து கிளம்பினார் ஐஸ்வர்யா. அவர் திட்டியதால் கடுப்பான ப்ரீத்தி உண்ணி, அங்கு தன்னுடன் ஆடிக் கொண்டிருந்த நண்பர்கள் மற்றும் சில அடியாட்களுடன் ஐஸ்வர்யாவின் காரைப் பின் தொடர்ந்தார்.

ஒரு இடத்தில் ஐஸ்வர்யாவின் காரை அவர்கள் மடக்கி நிறுத்தினர். பின்னர் ஐஸ்வர்யாவை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி விட்டனர்.

அடிபட்ட ஐஸ்வர்யா இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் புகாரைப் பதிவு செய்து ப்ரீத்தி உண்ணியையும், அவரது அடியாட்களையும் தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் துணை நடிகை மற்றும் அவரது அடியாட்களிடம் ஐஸ்வர்யா அடி வாங்கிய சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

நடிகைகள் குடுமி பிடி சண்டையா...?? அவர்களுக்கு எங்கையய்யா குடுமி இருக்கு..?? எல்லாம் விக் தானே... அதை விக் பிடி சண்டை எண்டு சொல்ல வேணுமாக்கும்...! :(:lol::)

Link to comment
Share on other sites

அட சுண்டல் அண்ணாவிற்கு என்ன தாராள மனசு நீங்களும் வாசித்து பயன் பெறட்டாம்!! :lol: என்னவோ சுண்டல் அண்ணா வர வர பெண்களை தாக்கு அறிக்கை விடுறார்.... :( !!எதறகும் துங்காபி காரியாலயம் கவனமப்பா!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எமது தலைமை காரியாலயத்தின் பாதுகாப்பு நன்கு பலப்படுத்த பட்டுள்ளது

நன்றிகள் வம்பு அண்ணா..

Link to comment
Share on other sites

ஆமாம் அது தான் நேற்று நான் வரும் போது ஒருவரும் இல்லை :( !!இப்படி கவலையான நிலைக்கு காரியாலயம் தள்ளபட்டுள்ளது!! :lol:

Link to comment
Share on other sites

நேற்றைய தினம் aishfeild il இருக்கும் எமது அதி உயர் பீடத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய ஆலேசனைக்காக சென்று இருந்தேன்...

Link to comment
Share on other sites

ஓ அதுவா சங்கதி அப்ப சரி ஆனாலும் பாதுகாப்பு ஏற்பாட்டுகளை அதிகரிக வேண்டும் எமது தலைமைபீடதிற்கு :wub: !!எதிரிகளின் நடமாட்டம் கூடிவிட்டது!! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.