Jump to content

இளையராஜாவின் இனிய கானம்


Recommended Posts

படம்:அரங்கேற்ற வேளை

பாடியவர்: கே ஜே ஜேசுதாஸ்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் பூவாரம்

சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண்: தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு

மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்: இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்: நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்

ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்

கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன

பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

இசைஞானியின் தனிப்பட்ட பல நடவடிக்கைகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை.

ஆனால் அவர் தமிழினத்திற்கு கிடைத்த ஒரு பெரும் சொத்து. தமிழர்களுக்கு தமிழ் இசையை கொடுத்த தாய் அவர்.

சபேசன் நீங்களா இப்படி ஏன் இளையராஜாவுக் முன்பு இசையே இருக்கவில்லையா?

ஒவ்வொரு இசையமைப்பாளரும் தன்னுடைய காலத்துக்கு ஏற்ப இசையமைத்துள்ளனர்.இதில் ஒருவரை உயர்த்தி பேசுவது நல்லதல்ல.

15 16 வயசு பிள்ளைகளை கேட்டால் சொல்வார்கள் ரகுமான்தான் சிறந்த இசையமைப்பாளர். என்று.

35 வயசுக்கு மேற்பட்டவர்களை கேட்டால் விஸ்வநாதன்தான் சிறந்தவர் என்பார்கள்.அவரவர் தங்கள் காலத்தில் கேட்ட பாடல்களi இசையமைத்தவர்களை சிறந்தவர்கள் என்பது இயல்பு.

இளையராஜாவும் சினிமாவுக்கு பல நல்ல பாடல்களை வழங்கியிருக்கின்றார் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் தாய் அவர்தான் இசையை வளர்த்தார் என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது.

Link to comment
Share on other sites

உலகிலே அழகி

பாடியவர்: விஜய் ஜேசுதாஸ், நந்திதா

இந்தப் பாட்டு இளையராஜா ஸ்பெஷல். அங்கங்கு “அது ஒரு கனாக்காலம்” என்று நினைக்கத் தோன்றும் பாட்டு இது. இளையராஜாவின் மெலடி மெட்டு என்றாலே ஒரு தனித்தன்மை இருப்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம். சரணத்தில் குரல்களோடு வயலின்கள் தொடர்ந்து வருவதைக் கொஞ்சம் கேளுங்கள். சின்ன விஷயம் கூட எப்படிப் பாட்டு அமைப்பை மாற்றும் என்று தெரிய வரும்.

Link to comment
Share on other sites

படம்: தளபதி

பாடியவர்கள்:எஸ்.பி .பி, ஜானகி

இசை:இசைஞானி இளையராஜா.

சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி

என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே... (சுந்தரி)

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா

பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

அ அ அ வாள்பிடித்து நின்றால் கூட நெஞ்ஜில் உந்தன் ஊர்வலம்

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்

தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை

வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை

எனைத் தான் அன்பே மறந்தாயோ

மறப்பேன் என்றே நினைத்தாயோ... (சுந்தரி)

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்

பாலயெங்கும் பூக்கள் ஆகும் நீ என் மார்பில் தூங்கினால்

அ அ அ வாரங்கலும் மாதம் ஆகும் நானும் நீயும் நீங்கினல்

மாதங்களும் வாரம் ஆகும் பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ நீ எனைத் தீண்டினால்

காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால் உயிர் வாழும்

வருவேன் அன்னாள் வரக்கூடும்... (சுந்தரி)

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

கம்ப்யூட்டர் மூலம் இசை என்று செய்தி வந்து ஜூரம் போன்று கம்ப்யூட்டர் ம்யூசிக் என்று எல்லாரும் சிலாகித்த நேரம் அது. புன்னகை மன்னனில் (1986) இளையராஜா கம்ப்யூட்டரை வைத்து இசையமைத்திருக்கிறார் என்று பரபரப்பாகப் பேசிக்கொண்டார்கள். கேஸட் வந்ததும் அடித்துப் பிடித்து வாங்கிப் பாடல்களைக் கேட்டால் இசை பளிங்கு மாதிரி படு துல்லியமாக இருந்தது. கேட்கும்போதே புல்லரித்தது. கம்ப்யூட்டர் இசையென்றால் படங்களில் பார்த்ததுபோல் ரிகார்டிங் தியேட்டரில் வயலின் வரிசைகள் எதுவும் இல்லாது, கம்ப்யூட்டர் முன் இளையராஜா ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டு இசையைத் தட்டச்சுவது போன்ற காட்சி மனக்கண்ணில் ஓடியது.

பின்பு ஏதோ ஒரு பேட்டியில் இளையராஜா "கம்ப்யூட்டர் இசை என்றால் பெரிதாக ஒன்றும் இல்லை. நாம் உள்ளே செலுத்துவதை அது வெளியே தள்ளுகிறது" என்பது போன்று சொன்ன மாதிரி நினைவு. (இதே பாணியில் குப்பையைக் கொடுத்தால் குப்பையைத் தள்ளும் என்ற பழமொழியையும் கணிணித் துறையைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி உபயோகிப்பார்கள்). அதாவது கம்ப்யூட்டர் ஒருநாளும் இசைஞானியாக முடியாது!

படத்தில் கமல் (குரு பக்தியினாலோ என்னவோ) நிறைய சிரத்தையுடன் கஷ்டப்பட்டுச் செய்திருந்தார். அபூர்வ சகோதரர்கள் அப்புவுக்கு முன்னோட்டமாக சார்லி சாப்ளின் குள்ளமாகும் காட்சியைப் புன்னகை மன்னனில் செய்திருந்தார் கால்களை மடக்கிக் கட்டிக்கொண்டு முழங்காலில் ஷூக்களை வைத்து நின்றார் என்பது புரிந்தாலும், ஒரு முறை மடக்கிக் கட்டி நின்றோ நடந்தோ நாம் பார்த்தால்தான் அவர் பட்ட சிரமம் எவ்வளவு என்று புரியும்.

வழக்கமான காதல் கதை என்றாலும், கமலின் அட்டகாசமான நடிப்பு, நடனம், பாடல்கள், இசை என்று பல காரணங்களுக்காகப் படம் 100 நாள் மதுரையில் ஓடியது. டைட்டில் பாடலான "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" முழுவதிலும் சில்-அவுட் போன்று உருவங்கள் நிழலாக வரும்.

மேடைப் பாடலுக்கு கமலும், ரேவதியும், இருக்கை மீது சாப்ளின் செல்லப்பாவும் நடனமாடும் காலம் காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் பாடல் அருமையான தாளத்துடன் நன்றாக இருக்கும். வயலின்கள் நிறைந்த வெண்மைப் பின்னணியுடன் மேடை அமைப்பு சிறப்பாக இருக்கும்.

ஊட்டியின் தேயிலைத் தோட்டச் சரிவுகளில் IND SUZUKI சிவப்பு பைக்கில் கமலும் ரேவதியும் பிரயாணித்துக்கொண்டே பாடும் "சிங்களத்துச் சின்னக் குயிலே" பாடலும் ஓஹோ ரகம். சரணத்திற்கு முன்னால் கை தட்டல்கள் வரும். பொறுமையாக எண்ணி 36 தடவை கை தட்டுகிறார்கள் என்று கணக்கிட்டிருக்கிறேன்.

இரண்டு சாப்ளின்கள் மோதிக்கொள்ளும் மாமாவுக்குக் குடுமா குடுமா பாடல் ஒரு ஸ்பெஷல். ரேவதி அமர்ந்திருக்க பின்புறமாக வரும் சாப்ளின் கமல் மூங்கில் இருக்கையில் அமர்வதும், இருக்கையோடு எழுந்து உருண்டு புரள்வதும் கைத்தடியைச் சுழற்றுவதும் என்று கமல் பின்னியெடுத்திருப்பார். பின்பு ரேவதியை நோக்கி, பின்புறம் ஒட்டியிருக்கும் இருக்கையோடு ஒரு நடை நடந்து வருவார் பாருங்கள் - அபாரம்! நிறைய இடங்களில் சாப்ளினை அப்படியே கொண்டு வந்தது அவர் சாதனை.

ரேவதி ஸ்ரீவித்யாவிற்கு தனது நடனத்தின் மீதான அபிமானத்தை நிரூபிக்க இரவுபகலாக ஆடும் கவிதைக் கேளுங்கள் பாடலும் அருமையான பாடல்.

கமல் ரேவதியிடம் காதலை வெளிப்படுத்தும் Love theme இசையும் நடனமும் கண்ணிலேயே நிற்கின்றன. இன்றைய காக்கா வலிப்பு நடனங்களுக்கு நளினமான அந்த நடனம் எவ்வளவோ மேல்.

இந்தப் பாடலில் பாலு அசத்தியிருப்பார். இசை, குரல் என்று எல்லாவிதத்திலும் இன்று வரை மெய்மறந்து கேட்கச் செய்யும் பாடல் "என்ன சத்தம் இந்த நேரம்" பாடல். காட்சியாக்கமும், சூழ்நிலையும் அருமையாக அமைந்த பாடல்.

"கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே"யில் ரேகாவின் கன்னத்தில் முத்தத்தின் ஈரம் தெரியும்.

"மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு" வரிக்கு ரேகாவும் கமலும் கண்ணிமைகளை மூடுவது நல்ல டைமிங்.

ரேகாவின் அடர்த்தியான கூந்தலைக் காட்டி, திடுக்கென்று அதை ஊடுருவி வரும் கமலின் விரல்களைக் காட்டுவார் பாலசந்தர் "கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ" வரிக்கு. ஒரு மாதிரியான ஹஸ்கி குரலில் பாலு அவ்வளவு மென்மையாகப் பாடியிருப்பார். அந்த மந்திரக் குரலுக்கு வந்தனங்கள்! அதை அவருக்களித்த இறைவனுக்கு நன்றி.

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா

கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா

அடடா..

(என்ன)

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே

கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே

கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே

காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு

ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு

ஆரிரரோ இவர் யார் எவரோ

பதில் சொல்வார் யாரோ

(என்ன)

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ

தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ

உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ

உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்

ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்

யாரிவர்கள் இரு பூங்குயில்கள்

இளங்காதல் மான்கள்

(என்ன)

Link to comment
Share on other sites

திரைப்படம் : ஆறிலிருந்து அறுபது வரை!

ரஜினியின் 51-வது படம். 1979-இல் வந்தது. S.P. முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலம் தயாரிப்பில்.

இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் பாலுவும் ஜானகியும் அழகாகப் பாடியிருக்கும் இந்தப் பாடல் கண்மணியேஎஏஎஏ கற்பனையோஒஓஒஓ காவியமோஒஓஒஓ என்று தென்றலைப் போலவே மிதந்து மிதந்து காதில் ஒலிக்கிறது. சரணத்தின் வரிகளுக்குப் பின்னணியாக 'லாலல லாலல' என்று தொடர்ச்சியாக குரல்களை ஒலிக்க விட்டிருப்பதே ஒரு கனவுலகத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது.

கண்மணியே காதல் என்பது கற்பனையோ

காவியமோ கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

கண்மணியே காதல் என்பது கற்பனையோ

காவியமோ கண் வரைந்த ஓவியமோ

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்

பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா

மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா

நேரமும் வந்ததம்மா

பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே

இந்தப் பாவையின் உள்ளத்திலே

பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க

ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்

(கண்மணியே)

பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய்

தேவையை நானறிவேன்

நாளொரு தேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்

இளம் வயதினில் வந்த சுகம்

தோள்களை நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க

ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்

(கண்மணியே)

Link to comment
Share on other sites

படம்:விறுமாண்டி

இசை: இளையராஜா

உன்னை விட இந்த உலகத்தில் உள்ளது ஒண்ணும் இல்லை (2)

உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை

வாக்குபட கிடைசான் விருமாண்டி

சாட்சி சொல்ல சன்திரன் வருவாண்டி

சாதி சனம் எல்லாம் அவன் தான்டி

கேட்ட வரம் உடனே தந்தான்டி

என்னை விட உன்னை சரிவர புரின்சிக்க யாருமில்லை யெவளுமில்லை

உன்னை விட..... என்னை விட........

அல்லி கொடிய காது அசைக்குது

அசையும் கொளதுக் உடம்பு கோசுது

புல்லரிசு பாவம் என்னை போலவே அலை பாயுது

நிலவில் காயும் வஎட்டி சேலையும்

நம்மை பார்து சோடி சேருது

சேர்து வைச்ச காதே துதி பாடுது சுதி சேருது

என்ன புது தாகம் அனல் ஆகுதேய் என் தயக்கம்

யாரு சொல்லி தந்து வந்தது

கான கனவு வந்து கொள்ளுது

இதுக்கு பாரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா....

உன்னை விட.................................

காட்டு வழி காளைங்க கழுத்து மணி

கஎட்கயில நமக்கு அது கோயில் மணி

ராதிரியில் புல் வெளி நனைக்கும் பனி

போதிகிற நமக்கு அது மூடு பனி - உன்னை விட......

உன் கோட நான் கோடி இருந்திட

எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா

நூறு ஜென்மம் வேணும் கேட்குறேன் சாமியே

(என்ன கேட்குற சாமிய? - 100 ஜென்மம் உன் கூட - போதுமா?)

நூறு ஜென்மம் நமக்கு போதுமா

வேற வரம் யாதும் கேட்போமா?

சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

காத அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்

ஆகாசம ஆன போதிலும்

என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்து தான் பொறக்கனும்

இருக்கனும் கலக்கனும்

(உன்னை விட...)

வாழ்கை தர வன்தான் விருமான்டி

சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி

சாதி சனம் எல்லாம் அவன் தான்டி

கேட்ட வரம் உடனே தன்தான்டி

(உன்னை விட....)

Link to comment
Share on other sites

பொன் மானே கோபம் ஏனோ

காதல் பால்குடம் கள்ளாய் போனது

ரோஜா ஏனடி முள்ளாய் போனது

(பொன்)

காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா..

ஊடல் என்பது காதலின் கௌரவம் போ..

ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கொபம் கொள்வதா

லா..லலா..லலா.. லா.. லலா..லலா.. லா..லலா..லலா..

ஆண்கள்.. எல்லம்.. பொய்யின் வம்சம்

கோபம்.. கூட.. அன்பின் அம்சம்

நாணம் வந்தால் ஊடல் போகும் ஓகோ....

(பொன்)

உந்தன் கண்களில் என்னையே பார்கிறேன் நான்

ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்கிறேன் வா.

உன்னை பார்ததும் எந்தன் பெண்மைதான் கண்ணை திறந்ததே

லா..லலா..லலா.. லா.. லலா..லலா.. லா..லலா..லலா..

கண்ணஎ.. மேலும்.. காதல்.. பேசு

நேரம்.. பார்த்து.. நீயும்.. பேசு

பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓகோ....

பொன் மானே கோபம் எங்கே

பூக்கள் மோதினால் காயம் நேருமா

தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா லா... லாலா..லாலா..லாலா....

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

இதயம் திரைப்படத்தில் இடம் பெற்ற என் இதயம் கவர்ந்த இனிய பாடல் காந்தர்வக்குரலோன் கே.ஜே.ஜேசுதாசண்ணாவின் குரலில்.

http://www.youtube.com/watch?v=atFl3KQcdBY

Link to comment
Share on other sites

இந்தப் பாடல் இளையராஜாவின் மற்றுமொரு இன்னிசைப் பிரவாகம். ஒரு பாடல் என்றென்றும் மனதில் நிலைத்திருக்க அதற்குப் பல காரணிகள் சரியாக அமைந்திருக்க வேண்டும். அதில் பிரத்தியேகமான தாளக்கட்டும் (பாடலில் அது அடிக்கடி மாறினால் இன்னும் சிறப்பு) பல்லவியில் ஒரே மெட்டு திரும்பவும் உபயோகிக்காமல் இருத்தலும் இன்றியமையாதது.

இந்தப்பாடலில் தாளம் 3x4 இல் அமைந்து அந்த அமைப்புக்குள் வித்விதமாக மாறிக்கொண்டே இருக்கும். இதனால் ஒரு சோர்வு ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் பல்லவியின் ஒவ்வொரு வரியும் ஒரு தனித்துவமான மெட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

பாடலின் இடையீட்டு இசை என்னை மிகவும் கவர்ந்தது. முக்கியமாக முதலாவது இடையீட்டு இசையில் நேரக்கணக்கில் 1:10 க்கு வரும் புல்லாங்குழல் மற்றும் அதைத் தொடர்ந்த வயலின் இசை மிகவும் அமர்க்களம்.

இதுவரை இதன் ஒளிவடிவை நான் பார்த்திருக்கவில்லை. தற்போதுதான் பார்த்தேன். ஐயகோ..! இப்படிக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்களே..! :D இதனால் யாம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், யாரும் இதன் ஒளிவடிவத்தைப்பார்க்காமல் இசையை மட்டும் கேட்டுக்கொண்டு தளத்தில் வேறு எதையாவது செய்யுங்கள்..! :wub::)

Link to comment
Share on other sites

டங்குவார்

நீங்கள் மேலே சொல்லியுள்ள தீபம் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்ப் பதிவின்போதுதான் கவியரசு வைரமுத்துவிற்கும் கே.ஜே.ஜேசுதாசிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. காரணம் கே.ஜே.ஜேசுதாசிற்கு தமிழில் , உச்சரிப்பு சரியாக வராது. அதனால்த்தான் பாடலில் வரும் கிளியே கிளியே என்பதை கிலியே கிலியே என அவர் பாட அதை வைரமுத்து திருத்த முயன்றும் முடியாமல் போய்விட்டது. இப்படி உச்சரிப்புப் பிரைச்சினைகள் பல தடவைகள் ஏற்பட்டு கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் ஒலிப்பதிவிலிருந்து இசையமைப்பாளர்களுக்குச் சொல்லாமலேயே வெளியேறியிருக்கின்றார். இதை மெல்லிசைமன்னர் விஸ்வநாதனும் ஒரு செவ்வியின் போது சொல்லியிருந்தார்.

Link to comment
Share on other sites

தீபம் திரைப்படத்திற்கு வைரமுத்து பாடல் எழுதியிருக்க சந்தர்ப்பமே இல்லை. தீபம் 1977ஆம் ஆண்டு வெளிவந்தது.

வைரமுத்து அறிமுகமான நிழல்கள் 1980இல் வெளிவந்தது.

தீபம் திரைப்படம்தான் இளையராஜா முதல் ஒப்பந்தமான படம் என்றும், அதற்கு தான் பாட்டு எழுதியதன் மூலம் இளையராஜாவின் இசையில் முதலாவதாக பாடல் எழுதியதுதான் தான்தான் என்று கங்கைஅமரன் கூறிய ஒரு பேட்டி படித்திருக்கிறேன்.

வசம்பு வேறு ஒரு படத்தை மாறிச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

பாடல்: நீ இல்லாதபோது

படம்: இளமைக் கோலம்

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், ஜென்சி

இசை: இளையராஜா

ஒரு ஏகாந்த உலகத்தில் சஞ்சரிக்க வைக்கும் இனிய காதல் மெட்டு. எண்பதுகளில் தாயகத்தில் இருந்தவர்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள். இதுபோன்ற பாடல்களைக் கேட்கும்போது ஏக்கம் பரவுவது தவிர்க்க முடியாதது.

பாடலில் சிறப்பம்சங்களில் ஒன்று தபலா. வித்தியாசமான முயற்சி. குறிப்பாக "நீ இல்லாதபோது ஏங்கும் நெஞ்சம்" என்ற வரிகள் முழுக்க பாடலின் தாளத்துக்குள் வாசிக்காமல் இருப்பது நன்றாக இருக்கும்.

கேட்டு மகிழுங்கள்.

http://www.youtube.com/watch?v=pX3gACqUZuM

Link to comment
Share on other sites

படம்: புது புது அர்த்தங்கள்
இசை: இசைஞானி
பாடியவர்:எஸ் .பி பாலசுப்பிரமணியம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

விஜயகாந்த் சுகன்யா நடித்திருக்கும் சின்னக் கவுண்டர் (1991) படத்தில் பல அருமையான பாடல்கள். ஆர்.வி.உதயகுமார் இயக்கியிருக்கிறார். இந்தப் பாடலை பாலுவும் சுசீலாவும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசைஞானியின் இசை ஒரு தென்றல். "அந்த வானத்தப் போல" பாடல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

விஜயகாந்த் தவசி பாத்திரத்தில் நன்றாகச் செய்திருந்தார். தமிழ்ச் சினிமாக்களின் வழக்கமான கிராமத்துக் கதை.

படத்தை முழுவதுமாக உட்கார்ந்து ஒருமுறை கூட பார்த்ததில்லை. பகுதி பகுதிகளாக சில காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். மனதில் நிற்கும் காட்சிகளில் ஒன்று பணத்தைப் புரட்டுவதற்காக விருந்தளித்து சாப்பிட்டுவிட்டு இலைக்கடியில் வைத்துவிட்டுப் போகும் பணத்தைச் சுகன்யா வரிசையாக எடுத்துக்கொண்டு வரும்போது விஜயகாந்த் தனது இலைக்கடியில் தாலியை வைப்பதும் அதைச் சுகன்யா பார்ப்பதும் - அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார் சுகன்யா - ஆயிரம் கதை சொல்லும் அந்த ஒரு காட்சி.

இந்தப் பாடலின் சூழ்நிலையும் அதைப் படமாக்கியிருக்கும் விதமும் வரிகளும் கச்சிதமாக ஒன்றுக்கொன்று பொருந்தியிருக்கின்றன. சுகன்யாவின் தாய் இறக்கும்போது அளித்துவிட்டுப் போகும் ஒரே சொத்தான முத்துமணி மாலையை பணப்பிரச்சினைகளுக்காக அடகு வைக்க நேர்வதும் அதை விஜயகாந்த் மீட்டெடுத்து திருமண நாளின் இரவில் திரும்ப அளிப்பதும் நன்றாக அமைக்கப்பட்ட - வசனங்களை நம்பியிராமல் காட்சிகளில் உணர்வுகளை வெளிப்படுத்தும் - காட்சிகள்.

பாலு பாடுவதைப் போலவே அவர் குரலுக்கு "மவுசுதான் கொறயுமா?" என்று மிடுக்கோடு கேட்டுக் கொள்ளலாம். தெளிந்த நீரோடை போன்ற சுசீலாவின் குரல்.

உண்ட மயக்கத்தில் வேப்பமர நிழலில் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருக்கும்போது லேசாக வீசும் தென்றல் காற்று கிளப்பும் இதமான சுகமான அந்த உணர்வு இந்தப் பாடலைக் கேட்கும்போதும் எழுகிறது.

முத்து மணி மாலை

ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீதானே

உத்தமி உன் பேர்தானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

முத்து மணி மாலை

ஒன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

கொலுசுதான் மெளனமாகுமா

மனசுதான் பேசுமா

மேகந்தான் நிலவை மூடுமா

மவுசுதான் கொறயுமா

நேசப்பட்டு வந்த பாசக்குடிக்கு

காசிப்பட்டு தந்த ராசாவே

வாக்கப்பட்டு வந்த வாசமலரே

வண்ணம் கலையாத ரோசாவே

தாழம்பூவுல வீசும் காத்துல

வாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

காலிலே போட்ட மிஞ்சிதான்

காதுல பேசுதே

கழுத்துல போட்ட தாலிதான்

காவியம் பாடுதே

நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில்

பொட்டுவச்சதாரு நாந்தானே

அத்திமரப் பூவும் அச்சப்படுமா?

பக்கத்துணையாரு நீதானே

ஆசை பேச்சுல பாதி மூச்சுல

லேசா தேகம் சூடேற

முத்து மணி மாலை

என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

வெட்கத்துல சேலை

கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

உள்ளத்துல நீதானே

உத்தமரும் நீதானே

இது நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

ஒரு நந்தவனப் பூதானே

புது சந்தனமும் நீதானே

Link to comment
Share on other sites

விஜயகாந்த் சுகன்யா நடித்திருக்கும் சின்னக் கவுண்டர் (1991) படத்தில் பல அருமையான பாடல்கள். ஆர்.வி.உதயகுமார் இயக்கியிருக்கிறார். இந்தப் பாடலை பாலுவும் சுசீலாவும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசைஞானியின் இசை ஒரு தென்றல். "அந்த வானத்தப் போல" பாடல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

நுணாவிலான்,

இந்தப்பாடலைப் பற்றி ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்றை இயக்குனர் உதயகுமார் ஒரு பேட்டியில் சொல்லக் கேட்டேன். அதாவது, இந்தக் காட்சிக்கு இளையராஜா மற்றும் பாடலாசிரியருடன் அமர்ந்து மெட்டமைத்து பாடல் எழுதி முடித்துவிட்டார்களாம். பின்பு ஒருநாள் பாடல் பதிவுக்கு எல்லோரும் வந்திருக்கிறார்கள். காலை 7 மணி. இளையராஜா பாடலுக்கான இச்சைக்குறிப்புகளை உருவாக்கி எழுதிக்கொண்டிருக்கிறார். ஆனால் உதயகுமாரின் முகத்தில் ஒரு வாட்டம். என்னவென்று ராஜா கேட்க இவர் தனக்கு அந்த மெட்டில் பெரிதாகத் திருப்தியில்லை என்றிருக்கிறார்.

அதற்கு ராஜா பாடல், மெட்டு, இசை எல்லாம் போட்டு முடித்து இசைக்கலைஞர்களும் பாடல் பதிவுக்காக ஒத்திகையில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, என்ன இது என்று சிறிது கோபத்துடன் கேட்டாராம். அதற்கு உதயகுமார் எப்படியாவது நீங்கள்தான் மாற்றிக்கொடுக்கவேண்டும் என்று சொன்னாராம்.

சரியென்று அமர்ந்த ராஜா அரைமணி நேரத்தில் மெட்டுப்போட்டு இசையமைத்த பாடல்தான் இந்த முத்து மணிமாலையாம். :rolleyes: முதலில் போட்ட மெட்டு பிறகு எந்தப்படத்தில் வந்ததோ தெரியவில்லை. :)

Link to comment
Share on other sites

பாடல்: என் மன வானில்

படம்: காசி

இசை: இளையராஜா

பிரமாதமான இசை மற்றும் பாடல் வரிகள். மெய்சிலிர்க்கவைக்கும் விக்ரமின் நடிப்பு. பிறகென்ன..? :unsure:

பல்லவி:

என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே

என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்

என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப்பறவைகளே

என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்

கலகலகலவெனத் துள்ளிக்குதித்திடும் சின்னஞ்சிறு அலையே

என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

உங்களைப்போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசைகொண்டேன்

சிறகுகளின்றி வானத்தில் பறந்து தினம்தினம் திரும்பி வந்தேன்

ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக்கூறவே

இதயம் தாங்குமோ நீ கூறு

(என் மன..)

சரணம் 1:

இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான்

மனிதரில் இதை யாரும் அறிவாரோ

நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ

பூமியில் இதை யாரும் உணர்வாரோ

மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம்

எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே

ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக்கொள்வேன்

என் நெஞ்சில் உண்மையுண்டு வேறென்ன வேண்டும்

(என் மன..)

சரணம் 2:

பொருளுக்காய்ப் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும்

பாடினேன் அதை நாளும் நாளும்

பொருளிலாப் பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்

போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்

மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரைப் பார்ப்பேன்

மறந்திடா ராகம் இதுதானே

வாழ்க்கை என்னும் மேடைதனில் நாடகங்கள் ஓராயிரம்

பார்க்க வந்தேன் நானும் பார்வையின்றி

(என் மன..)

Link to comment
Share on other sites

பாடல்: நிற்பதுவே

படம்: பாரதி

பாடல் மூலம்: மகாகவி சுப்பிரமணிய பாரதி

இசை: இளையராஜா

இனிய யாழ்கள நேயர்களே.. :unsure:

நான் அண்மையில் கேட்டு ரசித்த ஒரு இனிய பாடல்.. இதில் முழுமையான பாடல் உபயோகிக்கப்படவில்லை. இரண்டாவது சரணம் வெட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் எனக்கு சிறிது வருத்தம். உள்ளதை உள்ளபடியே உபயோகிக்கவேண்டுமென்பது என் விருப்பம்.

மற்றும்படி, பாடல் வரிகளில் உள்ள அர்த்தங்கள் ஆழமானவை. படைப்பைப் பற்றி ஆராயும் பாரதியின் பாங்கு அற்புதம். ஒரு சிறு வருத்தம் தோய்ந்த உணர்வு பாடல் வரிகள்தோறும் இழையோடுகிறது. அதற்கேற்றாற்போல் ராஜாவின் இசை வேறு.. சொல்லவும் வேண்டுமா? :wub:

பல்லவி:

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்

சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்

அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

சரணம் 1:

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்

கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?

போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்

நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

சரணம் 2:

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்

கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?

நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

இரண்டாவது சரணம் தொடங்கி பாரதியின் வரிகள் முழுமையாக:

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்

கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?

சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்

சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?

வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?

காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை

காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.

Link to comment
Share on other sites

படம்: இரட்டை வால் குருவி.

உயிர்: இளையராஜா.

குரல்: கே.ஜே.யேசுதாஸ்.

ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

பூவே காதல் தீவே

மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே

உல்லாச பூமி இங்கு உண்டானதே

(ராஜ ராஜ சோழன் நான்...)

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே

கை நீட்டும் போது பாயும் மின்சாரமே

உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்

இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்

இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்

அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்

உன் ராக மோகனம் என் காதல் வாகனம்

செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

(ராஜ ராஜ சோழன் நான்...)

கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே

துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே

வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே

பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே

முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே

என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே

தேனோடை ஓரமே நீராடும் நேரமே

புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி

(ராஜ ராஜ சோழன் நான்...)

இசைத்தோர் இளையராஜா, கே.ஜே.யேசுதாஸ், மோகன்

Fantastic interludes and violin work at the end..

Link to comment
Share on other sites

படம்: புவனா ஒரு கேள்விகுறி

பாடல்: விழியிலே மலர்ந்தது

இசை: இசைஞானி

பாடியவர்: எஸ்.பி.பி

Link to comment
Share on other sites

பாடல்: கீரவாணி

படம்: பாடும் பறவைகள் (தமிழில்)

இசை இளையராஜா

எண்பதுகளில் வெளிவந்த இந்தப் பாடலைப் பலரும் கேட்டிருப்பீர்கள். மிக இனிமையான அதே சமயம் ஒரு வித்தியாசமான மெட்டு. பாடலைமட்டும் கேட்டு அனுபவித்துவிட்டு பிறகு அதன் காட்சியைப் படத்தில் பார்த்தபோது அது படமாக்கப்பட்ட விதம் பிடிக்கவில்லை.. இது இந்தப்பாட்டுக்கு மட்டுமல்ல. இன்னும் பல இனிய பாடல்களுக்கு இந்தக் கொடுமை நடந்துள்ளது. அதனால் ஒரு மேடையில் தெலுங்கில் பாடப்பட்ட ஒளிவடிவை இங்கே இணைக்கிறேன். இசைக்கு மொழி தடையில்லைதானே? :unsure:

Link to comment
Share on other sites

படம்: தளபதி.

உயிர்: இளையராஜா.

உடல்: வாலி.

குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.

சுந்தரி கண்ணால் ஒரு சேதி

சொல்லடி இந்நாள் நல்ல சேதி

என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக

நானுனை நீங்க மாட்டேன்

நீங்கினால் தூங்க மாட்டேன்

சேர்ந்ததே நம் ஜீவனே

(சுந்தரி கண்ணால் ஒரு சேதி...)

வாய்மொழிந்த வார்த்தை யாவும்

காற்றில் போனால் நியாயமா

பாய்விரித்துப் பாவை பார்த்த

காதல் இன்பம் மாயமா?

வாள் பிடித்து நின்றால் கூட

நெஞ்சில் உந்தன் ஊர்வலம்

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட

ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்

தேனிலவுதான் வாட ஏனிந்த சோதனை

வானிலவை நீ கேளு கூறுமென் வேதனை

எனைத்தான் அன்பே மறந்தாயோ

மறப்பேன் என்றே நினைத்தாயோ

(சுந்தரி கண்ணால் ஒரு சேதி...)

சோலையிலும் முட்கள் தோன்றும்

நானும் நீயும் நீங்கினால்

பாலையிலும் பூக்கள் பூக்கும்

நானுன் மார்பில் தூங்கினால்

மாதங்களும் வாரம் ஆகும்

நானும் நீயும் கூடினால்

வாரங்களும் மாதம் ஆகும்

பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ

நீயெனைத் தேடினால்

காயங்களும் ஆறாதோ

நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால் உயிர் வாழும்

வருவேன் அந்நாள் வரக் கூடும்

(சுந்தரி கண்ணால் ஒரு சேதி...)

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.