Jump to content

இளையராஜாவின் இனிய கானம்


Recommended Posts

நன்றி ஈஸ். கதாநாயகி யார் என்று தெரியவில்லை.

ராதா, விஜயகாந்த்

அம்மன் கோயில் கிழக்காலே

இளையராஜா

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

(உன் பார்வையில்)

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்

இசைந்து இசைத்தது புது சுரம்தான்

சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்

கழுத்தில் இருப்பது வலம்புரிதான்

இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் (2)

மனதை மயிலிடம் இழந்தேனே

மயங்கி தினம் தினம் விழுந்தேனே

மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்

அடுத்த அடியென்ன எடுப்பது நான்

படுக்கை விரித்தது உனக்கெனத்தான்

இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்

நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் (2)

மறைத்த முகத்திரை திறப்பாயோ

திறந்து அகத்திடை இருப்பாயோ

இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

(உன் பார்வையில்)

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

பாடல்: மேகம் கொட்டட்டும்

படம்: எனக்குள் ஒருவன்

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்

இந்தப் பாடலைப் பல நாட்களாக இணைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். முக்கியமாக சில இசை சித்து விளையாட்டுக்களுக்காக. இளையராஜா ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது புதுமை செய்ய நினைப்பவர் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக 80 களில் வந்த பாடல்களில் இது தெளிவாகத் தெரியும். அப்படிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. மேம்போக்காகப் பார்க்கும்போது சாதாரணமாகத் தோன்றும் இப்பாடலில் ராஜா ஒரு புதுமையைப் புகுத்தியிருக்கிறார்.

கிட்டார் வாசிப்பில் குறிப்பாக பேஸ் கிட்டார் வாசிப்பு என்பது அவர் அவர் கற்பனையைப் பொறுத்தது. பாடலின் சுரவரிசையில் இருந்து பிறழாது அதே சமயத்தில் பல விதங்களாக வாசிக்கலாம். பெரும்பாலான இசையமைப்பாளர்கள் கிட்டார் வாசிப்பவர்களிடம் அவர்கள் கற்பனைக்கு பேஸ் வாசிக்க விட்டுவிடுவார்கள். இளையராஜா பாடலின் எல்லா அம்சங்களையும் தானே உருவாக்க வேண்டும் என்று விரும்புவார். தாள வாத்திய தீர்மானங்கள், பாடல் சங்கதிகள் மற்றும் பேஸ் கிட்டார் எல்லாம் அவர் கற்பனைப்படி தான் இருக்கும். எல்லா வகை வாத்தியங்களிலும் அவருக்குள்ள ஆளுமை காரணமாக இது அவருக்கு சாத்தியமாகிறது.

இந்தப்பாடலில், என்ன புதுமை செய்திருக்கிறார் என்று கவனிப்போம். பாடலின் முதல் இரண்டு வரிகள்...

மேகம் கொட்டட்டும்.. ஆட்டம் உண்டு..

மின்னல் வெட்டட்டும்... பாட்டும் உண்டு..

இந்த இரண்டு வரிகளுக்கும் ஒரே மெட்டுத்தான். அதாவது ஒரே சுர வரிசைகள். ஆனால் லீட் (lead) மற்றும் பேஸ் (bass) கிட்டார் எப்படி வாசிக்கப் பட்டுள்ளது என்று கவனியுங்கள். முதல் வரிக்கு ஒரு சுர வரிசை கொடுக்கிறார். அடுத்த வரிக்கும் அதையே நீங்கள் எதிர்பார்த்தால் அது வராது. முதல் வரியைப் போன்ற அதே மெட்டுக்கு இரண்டாவது வரியில் வேறு சுரக்கோர்வைகளை கிட்டாரில் வாசிக்க வைக்கிறார். அந்த ஒரு ஆனந்த அதிர்ச்சி சுவை மிகுந்தது. பாடல் முழுவதுமே கிட்டார் பிரமாதமாக உபயோகிக்கப் பட்டுள்ளது. பாடலில் கவனியுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல்: இரு பறவைகள்

படம்: நிறம் மாறாத பூக்கள்

பாடியவர்கள்: ஜென்சி மற்றும் குழுவினர்

நிறம் மாறாத பூக்களில் எல்லாப் பாடல்களுமே இனிமை. "ஆயிரம் மலர்களே" அவற்றுள் எல்லாம் மிகப் பிரபலம் ஆனது. இரு பறவைகளும் அதற்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல.

இசைச் சேர்ப்பில் உள்ள ஒரு சில விடயங்களை அலச இப்பாடல் உதவும். பாடலுக்கு ஜீவன் சேர்ப்பது அதிலுள்ள பின்புல இசை. சில பாடல்கள் மெட்டமைப்பில் சிறந்ததாக இருக்கும். ஆனாலும் அதில் ஏதோ ஒன்று குறைவது போலிருக்கும். அதற்குப் பெரும்பாலும் பின்புல சுதி மீட்டல் சரி இல்லாததே காரணமாக இருக்கும். கர்நாடக இசையில் தம்புரா வாத்தியம், சுதிப்பெட்டி போன்றவை பின்புலமாக விளங்குகின்றன. திரை இசையில் பேஸ் கிட்டார் அல்லது கீபோட்டில் பேஸ் இசை பயன்படுகிறது. குரலுடன் சேர்ந்து அதன் சுதியில் பேஸ் இசைக்கப்படும் அதன் சுவையே அலாதி.

இப்பாடல் ஒரு ஆரம்ப இசையுடன் தொடங்குகிறது. அதில் வெறும் ரிதம் கிட்டார் கோரஸ் இசையுடன் ஒலிக்கிறது. இசையின் வெளிப்பாடு சாதாரணமாக உள்ளது. பேஸ் கிட்டார் இசைக்கப்படவில்லை. இப்போது 00:19 விநாடியில் வயலின் இசை தொடங்கும்போது பேஸ் கிட்டாரை உபயோகிக்கத் தொடங்குகிறார் ராஜா. அப்போது இசையில் ஏற்படும் மாற்றத்தைக் கவனியுங்கள். இன்னொரு பரிணாமத்துக்கு அது ரசிகர்களை செல்கிறது. சேர்த்துக் கேட்கும்போது அட பாடல் நல்லா இருக்கும் போல இருக்கே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

அதேபோல இரண்டாம் இடையீட்டு இசை. 02:57 வினாடிக்கணக்கில் இரூந்து பேஸ் இசை இல்லை. திடீரென்று 03:06 வினாடியிலிருந்து அதை உபயோகிக்கிறார். இசையின் இனிமை கூடுகிறது. அதைத் தொடர்ந்து வரும் சந்தூர் மற்றும் வயலின் இசைகளின் குழைவு தெவிட்டாத விருந்தல்லவா..!

இப்போது பாடலைக் கேளுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல்: ஊதக் காத்து

படம்: கிராமத்து அத்தியாயம்

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் மற்றும், எஸ். ஜானகி அவர்கள்

ஒரு மாறுதலுக்கு கிராமத்து இசை மறுபடியும். உச்சஸ்தாயியில் ஜெயச்சந்திரன் பாடும்போது அழகோ அழகு. இதை உணர்ந்து தானோ என்னவோ ராஜா அவரை அப்படிப்பட்ட பல பாடல்களில் பாட வைத்திருக்கிறார். காணொளியைப் பாராது பாடலை மட்டும் கேட்டால் உங்கள் உடல் நலத்துக்கு தீங்கு வராது. :lol:

Link to comment
Share on other sites

பாடல்: ஓ வசந்த ராஜா

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

வரிகள்: வைரமுத்து

இசை:இசைஞானி இளையராஜா

ஓ வசந்த ராஜ தேன் சுமந்த ரோஜா

என் தேகம் உன் தேசம் என்னாளும் சந்தோஷம் - என்

தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

(ஓ வசந்த)

வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்

மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு

விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ கண்ணே (2)

சூடிய பூச்சரம் வானவில்தானோ?

(ஓ வசந்த)

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்

அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்

என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு (2)

மன்மதக் கோயிலில் பாலபிஷேகம்

(ஓ வசந்த)

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

பாடல்: தென்றல் வரும்

படம்: பாரு பாரு பட்டணம் பாரு

பாடியவர்கள்: திரு. S.P. பாலசுப்ரமணியம் மற்றும் S. ஜானகி அவர்கள்

இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இரண்டு பாடல்களில் ஒன்று இது. மற்றையது, யார் தூரிகை என்ற பாடல்.

தென்றல் வரும் என்ற இந்தப்பாடலில் அதன் தாளக்கட்டு எனக்குப் பிடித்தது. பாடல் முழுவதும் கூடவே வரும் அந்த மேளச்சத்தம் மிக அருமை. பாடல் மேற்கத்தைய இசையான பியானோவுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்வது நமது வீணை இசை. பாடல் முழுவதுமே பியானோ மற்றும் வீணையின் இனிய ஆரோக்கியமான போட்டி. இரண்டு வேவ்வேறு கலாச்சாரங்களின் கூறுகளை எந்தச் சிக்கலும் இல்லாமல் கலந்தது தந்தது நமது இசைஞானியின் கைதேர்ந்த கலைவண்ணமன்றி வேறென்ன! இனி நம் பாடலிக் காண்போம்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தாயென்னும் கோயிலில் என்ற பாட்டை youtube ல் தரமுடியுமா டங்குவார்.

Link to comment
Share on other sites

கறுப்பி,

இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் செய்கிறேன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்!என்னைப்போல் நீங்களும் இளையராஜாவின் இரசிகன் என்றமுறையில் கேட்கின்றேன்.

"மீன்குடி தேரில் மன்மதராஜன் ஊர்வம் போகின்றான்"(ள் )என்ற பாடலை ஒலி வடிவில் தர முடியுமா?

இப்பாடலை ஜான்சியும் ஜேசுதாசும் தனித்தனியாக பாடியுள்ளனர்.

திரைப்படத்தை ஞாபகத்திற்கு கொண்டு வர முடிய வில்லை :rolleyes:

கரும்புவில்?????????????

Link to comment
Share on other sites

டங்குவார்!என்னைப்போல் நீங்களும் இளையராஜாவின் இரசிகன் என்றமுறையில் கேட்கின்றேன்.

"மீன்குடி தேரில் மன்மதராஜன் ஊர்வம் போகின்றான்"(ள் )என்ற பாடலை ஒலி வடிவில் தர முடியுமா?

இப்பாடலை ஜான்சியும் ஜேசுதாசும் தனித்தனியாக பாடியுள்ளனர்.

திரைப்படத்தை ஞாபகத்திற்கு கொண்டு வர முடிய வில்லை :rolleyes:

கரும்புவில்?????????????

கு.சா. உங்கள் பாடலை நடாவின் பக்கத்தில் தருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெத்தப்பெரிய உபகாரம் டங்குவார் :rolleyes:

Link to comment
Share on other sites

பாடல்: மௌனமான நேரம்

படம்: சலங்கை ஒலி

பாடியவர்கள்: S.P. பாலாசுப்ரமணியம், S.ஜானகி

கதாநாயகனுக்கும், நாயகிக்கும் இடையே இழைந்தோடும் அந்தக் காதலை மெல்லிசை மூலம் வெளிப்படுத்துகிறார் ராஜா. பாடலில் உள்ள ஒவ்வொரு சங்கதிகளும் சொல்லும் ஒவ்வொரு சங்கதியும் அலாதியானது. உதாரணமாக இரண்டாவது சரணத்தில் வரும்,

பாதை தேடியே பாதம் போகுமோ..

என்ற வரியைக் கவனியுங்கள். நாயகியின் விரகத்தைப் பாடும்போது தேடியே மற்றும் போகுமோ ஆகிய சொற்களில் ராஜா உள்நுளைக்கும் சங்கதிகள் மிக நுட்பமானவை அல்லவா? திரு. பாலா அவர்களின் குரலில் சங்கதிகளின் மூலம் அந்த ஏக்கத்தை வெளிப்படுத்தும் அந்த மெட்டமைப்பு நிகரற்றதுதானே. இனி, பாடலைக் கேட்போம்.

Link to comment
Share on other sites

நல்ல பாடல்கள் டங்குவார்.

மெளனமான நேரம் - என்ன அருமையான பாடல். காதலை அழகாகப் படம் பிடிக்கிறது. காட்சி ஞாபகமா? கமலின் நண்பன் சரத்பாபுவின் முதலிரவுக்கு ஒழுங்குகள் செய்துவிட்டு பெண்ணையும் மாப்பிள்ளையும் சேர்த்துவிட்டு கமலும் ஜெயப்ரதாவும் வரும் போது இந்தப்பாடல் வரும். கமலும் ஜெயப்ரதாவும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாத ஆனால் புரிந்து கொண்டுள்ள காதல்.

Link to comment
Share on other sites

நல்ல பாடல்கள் டங்குவார்.

மெளனமான நேரம் - என்ன அருமையான பாடல். காதலை அழகாகப் படம் பிடிக்கிறது. காட்சி ஞாபகமா? கமலின் நண்பன் சரத்பாபுவின் முதலிரவுக்கு ஒழுங்குகள் செய்துவிட்டு பெண்ணையும் மாப்பிள்ளையும் சேர்த்துவிட்டு கமலும் ஜெயப்ரதாவும் வரும் போது இந்தப்பாடல் வரும். கமலும் ஜெயப்ரதாவும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாத ஆனால் புரிந்து கொண்டுள்ள காதல்.

ஈஸ்,

காட்சி சரியாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் இருவரிடையே சொல்லிக் கொள்ளாத ஆனால் புரிந்து கொள்ளப்பட்ட காதல் என்பது நினைவில் உள்ளது. பாடலுக்கேற்ற காட்சி அமைப்பு செய்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். அப்போது வந்த படங்களில் எனக்குப் பிடித்த படம் இந்தச் சலங்கை ஒலி.

Link to comment
Share on other sites

பாடல்: தீர்த்தக் கரைதனிலே

படம்: தைப்பொங்கல் (1980)

பாடியவர்கள்: K.J. யேசுதாஸ், ஜென்சி

மெதுவான சோகம் இழையோடும் இந்தப் பாடல் கேட்கக் கேட்க இனிமை. படத்தை நான் பார்க்கவில்லை ஆதலால் என்ன மாதிரியான கட்டத்தில் இந்தப் பாடல் வருகிறது என்று தெரியவில்லை. சில படங்களைப் பாராதிருத்தல் பாடலை இரசிக்க மேலும் உதவும். :unsure:

Link to comment
Share on other sites

இசை : இளையராஜா

பாடியவர்கள் : எஸ்.பி.பி & ஜானகி

படம்: காக்கி சட்டை

கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

கன்னங்கள் புது ரோசாப்பூ

உன் கண்கள் இரு ஊதாப்பூ

இது பூவில் பூத்த பூவையோ

ஆ: அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட

அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

பெ: ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே

அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே

ஆ: தோளிலும் என் மார்பிலும்

கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது

பெ: உன்னைக் கொடு என்னைத் தருவேன்

ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்

சொல்லித் தருவேன் விழி மூடாமல்

ஆ: கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்

கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்

பெ: வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்....

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

பாடல்: ஏ.. தென்றலே

படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980)

பாடியவர்: P. சுசீலா

நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் இடம் பெற்ற இந்தப் பாடல் சுசீலா அவர்களின் தனிக்குரலில் இடம்பெற்றது. பாடலுக்கு பல்லவியும் சரணமும் இனிதே அமைந்திருக்கிறது. சரணத்தின் முடிவில் உச்சஸ்தாயியை சுசீலா அவர்கள் தொடும் அழகே அழகு..

Link to comment
Share on other sites

பாடல்: என் இனிய பொன் நிலாவே

படம்: மூடுபனி

பாடியவர்: K.J. ஜேசுதாஸ்

கிட்டார் பிரியர்களுக்கு வேலை வைக்கும் பாட்டு. கிட்டத்தட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு chord அமைக்கப்பட்டிருக்கிறது பல்லவியில். இரண்டாவது இடையீட்டு இசையில் அமர்க்களமான கிட்டார் இசை 2:40 நேரக்கணக்கில் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இனி பாடலைக் கேளுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காதே கண்ணே

நீ இல்லையே இனி நான் இல்லையே

உயிர் நீயே..

படம்: கேளடிகண்மணி

பாடியவர்கள்: கே.ஜே ,உமா ரமணன்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

தென்மதுரை வைகைநதி

தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றதே பொன்மாலை நிலா

தேயாதது நம் ஆசை நிலா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

இசை : இளையராஜா பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பி & சுசீலா...

Link to comment
Share on other sites

பாடல்: பூங்காற்று

படம்: மூன்றாம்பிறை

பாடியவர்: K.J. யேசுதாஸ்

இனிமையான பேஸ் அமைப்புடன் வெளிவந்த வித்தியாசமான பாடல். மூன்றாம்பிறையின் இந்தி வடிவத்துக்கு பெரும்பாலும் இதே இசை அமைப்புடன் வேறு ஒரு மெட்டு உபயோகிக்கப்பட்டது. பிறகு அந்த மெட்டு தமிழில் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் "என் வாழ்விலே" என்ற பாடலுக்கு உபயோகிக்கப்பட்டது.

நன்றி.

இந்தி மூன்றாம்பிறை (சத்மா) பாடல் Ae zindagi gale laga le..

முதலாவது இடையீட்டு இசையின் தொடக்கம் தமிழிலும் இந்தியிலும் ஒரே மாதிரி இருப்பதைக் கவனியுங்கள். அத்துடன் வயலினுடன் சேர்ந்த சரணம் இனிமையானதல்லவா..!

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல்: என் வாழ்விலே

படம்: தம்பிக்கு எந்த ஊரு

பாடியவர்: S.P. பாலசுப்ரமணியம்

மேலே குறிப்பிட்ட இந்தி மெட்டை மறுபடியும் இளையராஜா இங்கே உபயோகிக்கிறார்..!

Link to comment
Share on other sites

பாடல்: கொஞ்சி கொஞ்சி அலைகளாட

இசை: இளையராஜா

படம்: வீரா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது

அள்ளி வந்த வண்ணங்களை எந்தன்நெஞ்சில் நீ தூவு!

படம்: ரமணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.