Jump to content

இளையராஜாவின் இனிய கானம்


Recommended Posts

நன்றி ஈஸ். கதாநாயகி யார் என்று தெரியவில்லை.

ராதா, விஜயகாந்த்

அம்மன் கோயில் கிழக்காலே

இளையராஜா

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

(உன் பார்வையில்)

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்

இசைந்து இசைத்தது புது சுரம்தான்

சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்

கழுத்தில் இருப்பது வலம்புரிதான்

இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் (2)

மனதை மயிலிடம் இழந்தேனே

மயங்கி தினம் தினம் விழுந்தேனே

மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்

அடுத்த அடியென்ன எடுப்பது நான்

படுக்கை விரித்தது உனக்கெனத்தான்

இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்

நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் (2)

மறைத்த முகத்திரை திறப்பாயோ

திறந்து அகத்திடை இருப்பாயோ

இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

(உன் பார்வையில்)

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

பாடல்: மேகம் கொட்டட்டும்

படம்: எனக்குள் ஒருவன்

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்

இந்தப் பாடலைப் பல நாட்களாக இணைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். முக்கியமாக சில இசை சித்து விளையாட்டுக்களுக்காக. இளையராஜா ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது புதுமை செய்ய நினைப்பவர் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக 80 களில் வந்த பாடல்களில் இது தெளிவாகத் தெரியும். அப்படிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. மேம்போக்காகப் பார்க்கும்போது சாதாரணமாகத் தோன்றும் இப்பாடலில் ராஜா ஒரு புதுமையைப் புகுத்தியிருக்கிறார்.

கிட்டார் வாசிப்பில் குறிப்பாக பேஸ் கிட்டார் வாசிப்பு என்பது அவர் அவர் கற்பனையைப் பொறுத்தது. பாடலின் சுரவரிசையில் இருந்து பிறழாது அதே சமயத்தில் பல விதங்களாக வாசிக்கலாம். பெரும்பாலான இசையமைப்பாளர்கள் கிட்டார் வாசிப்பவர்களிடம் அவர்கள் கற்பனைக்கு பேஸ் வாசிக்க விட்டுவிடுவார்கள். இளையராஜா பாடலின் எல்லா அம்சங்களையும் தானே உருவாக்க வேண்டும் என்று விரும்புவார். தாள வாத்திய தீர்மானங்கள், பாடல் சங்கதிகள் மற்றும் பேஸ் கிட்டார் எல்லாம் அவர் கற்பனைப்படி தான் இருக்கும். எல்லா வகை வாத்தியங்களிலும் அவருக்குள்ள ஆளுமை காரணமாக இது அவருக்கு சாத்தியமாகிறது.

இந்தப்பாடலில், என்ன புதுமை செய்திருக்கிறார் என்று கவனிப்போம். பாடலின் முதல் இரண்டு வரிகள்...

மேகம் கொட்டட்டும்.. ஆட்டம் உண்டு..

மின்னல் வெட்டட்டும்... பாட்டும் உண்டு..

இந்த இரண்டு வரிகளுக்கும் ஒரே மெட்டுத்தான். அதாவது ஒரே சுர வரிசைகள். ஆனால் லீட் (lead) மற்றும் பேஸ் (bass) கிட்டார் எப்படி வாசிக்கப் பட்டுள்ளது என்று கவனியுங்கள். முதல் வரிக்கு ஒரு சுர வரிசை கொடுக்கிறார். அடுத்த வரிக்கும் அதையே நீங்கள் எதிர்பார்த்தால் அது வராது. முதல் வரியைப் போன்ற அதே மெட்டுக்கு இரண்டாவது வரியில் வேறு சுரக்கோர்வைகளை கிட்டாரில் வாசிக்க வைக்கிறார். அந்த ஒரு ஆனந்த அதிர்ச்சி சுவை மிகுந்தது. பாடல் முழுவதுமே கிட்டார் பிரமாதமாக உபயோகிக்கப் பட்டுள்ளது. பாடலில் கவனியுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல்: இரு பறவைகள்

படம்: நிறம் மாறாத பூக்கள்

பாடியவர்கள்: ஜென்சி மற்றும் குழுவினர்

நிறம் மாறாத பூக்களில் எல்லாப் பாடல்களுமே இனிமை. "ஆயிரம் மலர்களே" அவற்றுள் எல்லாம் மிகப் பிரபலம் ஆனது. இரு பறவைகளும் அதற்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல.

இசைச் சேர்ப்பில் உள்ள ஒரு சில விடயங்களை அலச இப்பாடல் உதவும். பாடலுக்கு ஜீவன் சேர்ப்பது அதிலுள்ள பின்புல இசை. சில பாடல்கள் மெட்டமைப்பில் சிறந்ததாக இருக்கும். ஆனாலும் அதில் ஏதோ ஒன்று குறைவது போலிருக்கும். அதற்குப் பெரும்பாலும் பின்புல சுதி மீட்டல் சரி இல்லாததே காரணமாக இருக்கும். கர்நாடக இசையில் தம்புரா வாத்தியம், சுதிப்பெட்டி போன்றவை பின்புலமாக விளங்குகின்றன. திரை இசையில் பேஸ் கிட்டார் அல்லது கீபோட்டில் பேஸ் இசை பயன்படுகிறது. குரலுடன் சேர்ந்து அதன் சுதியில் பேஸ் இசைக்கப்படும் அதன் சுவையே அலாதி.

இப்பாடல் ஒரு ஆரம்ப இசையுடன் தொடங்குகிறது. அதில் வெறும் ரிதம் கிட்டார் கோரஸ் இசையுடன் ஒலிக்கிறது. இசையின் வெளிப்பாடு சாதாரணமாக உள்ளது. பேஸ் கிட்டார் இசைக்கப்படவில்லை. இப்போது 00:19 விநாடியில் வயலின் இசை தொடங்கும்போது பேஸ் கிட்டாரை உபயோகிக்கத் தொடங்குகிறார் ராஜா. அப்போது இசையில் ஏற்படும் மாற்றத்தைக் கவனியுங்கள். இன்னொரு பரிணாமத்துக்கு அது ரசிகர்களை செல்கிறது. சேர்த்துக் கேட்கும்போது அட பாடல் நல்லா இருக்கும் போல இருக்கே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

அதேபோல இரண்டாம் இடையீட்டு இசை. 02:57 வினாடிக்கணக்கில் இரூந்து பேஸ் இசை இல்லை. திடீரென்று 03:06 வினாடியிலிருந்து அதை உபயோகிக்கிறார். இசையின் இனிமை கூடுகிறது. அதைத் தொடர்ந்து வரும் சந்தூர் மற்றும் வயலின் இசைகளின் குழைவு தெவிட்டாத விருந்தல்லவா..!

இப்போது பாடலைக் கேளுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல்: ஊதக் காத்து

படம்: கிராமத்து அத்தியாயம்

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் மற்றும், எஸ். ஜானகி அவர்கள்

ஒரு மாறுதலுக்கு கிராமத்து இசை மறுபடியும். உச்சஸ்தாயியில் ஜெயச்சந்திரன் பாடும்போது அழகோ அழகு. இதை உணர்ந்து தானோ என்னவோ ராஜா அவரை அப்படிப்பட்ட பல பாடல்களில் பாட வைத்திருக்கிறார். காணொளியைப் பாராது பாடலை மட்டும் கேட்டால் உங்கள் உடல் நலத்துக்கு தீங்கு வராது. :lol:

Link to comment
Share on other sites

பாடல்: ஓ வசந்த ராஜா

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

வரிகள்: வைரமுத்து

இசை:இசைஞானி இளையராஜா

ஓ வசந்த ராஜ தேன் சுமந்த ரோஜா

என் தேகம் உன் தேசம் என்னாளும் சந்தோஷம் - என்

தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

(ஓ வசந்த)

வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்

மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு

விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ கண்ணே (2)

சூடிய பூச்சரம் வானவில்தானோ?

(ஓ வசந்த)

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்

அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்

என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு (2)

மன்மதக் கோயிலில் பாலபிஷேகம்

(ஓ வசந்த)

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

பாடல்: தென்றல் வரும்

படம்: பாரு பாரு பட்டணம் பாரு

பாடியவர்கள்: திரு. S.P. பாலசுப்ரமணியம் மற்றும் S. ஜானகி அவர்கள்

இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இரண்டு பாடல்களில் ஒன்று இது. மற்றையது, யார் தூரிகை என்ற பாடல்.

தென்றல் வரும் என்ற இந்தப்பாடலில் அதன் தாளக்கட்டு எனக்குப் பிடித்தது. பாடல் முழுவதும் கூடவே வரும் அந்த மேளச்சத்தம் மிக அருமை. பாடல் மேற்கத்தைய இசையான பியானோவுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்வது நமது வீணை இசை. பாடல் முழுவதுமே பியானோ மற்றும் வீணையின் இனிய ஆரோக்கியமான போட்டி. இரண்டு வேவ்வேறு கலாச்சாரங்களின் கூறுகளை எந்தச் சிக்கலும் இல்லாமல் கலந்தது தந்தது நமது இசைஞானியின் கைதேர்ந்த கலைவண்ணமன்றி வேறென்ன! இனி நம் பாடலிக் காண்போம்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தாயென்னும் கோயிலில் என்ற பாட்டை youtube ல் தரமுடியுமா டங்குவார்.

Link to comment
Share on other sites

கறுப்பி,

இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் செய்கிறேன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்!என்னைப்போல் நீங்களும் இளையராஜாவின் இரசிகன் என்றமுறையில் கேட்கின்றேன்.

"மீன்குடி தேரில் மன்மதராஜன் ஊர்வம் போகின்றான்"(ள் )என்ற பாடலை ஒலி வடிவில் தர முடியுமா?

இப்பாடலை ஜான்சியும் ஜேசுதாசும் தனித்தனியாக பாடியுள்ளனர்.

திரைப்படத்தை ஞாபகத்திற்கு கொண்டு வர முடிய வில்லை :rolleyes:

கரும்புவில்?????????????

Link to comment
Share on other sites

டங்குவார்!என்னைப்போல் நீங்களும் இளையராஜாவின் இரசிகன் என்றமுறையில் கேட்கின்றேன்.

"மீன்குடி தேரில் மன்மதராஜன் ஊர்வம் போகின்றான்"(ள் )என்ற பாடலை ஒலி வடிவில் தர முடியுமா?

இப்பாடலை ஜான்சியும் ஜேசுதாசும் தனித்தனியாக பாடியுள்ளனர்.

திரைப்படத்தை ஞாபகத்திற்கு கொண்டு வர முடிய வில்லை :rolleyes:

கரும்புவில்?????????????

கு.சா. உங்கள் பாடலை நடாவின் பக்கத்தில் தருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெத்தப்பெரிய உபகாரம் டங்குவார் :rolleyes:

Link to comment
Share on other sites

பாடல்: மௌனமான நேரம்

படம்: சலங்கை ஒலி

பாடியவர்கள்: S.P. பாலாசுப்ரமணியம், S.ஜானகி

கதாநாயகனுக்கும், நாயகிக்கும் இடையே இழைந்தோடும் அந்தக் காதலை மெல்லிசை மூலம் வெளிப்படுத்துகிறார் ராஜா. பாடலில் உள்ள ஒவ்வொரு சங்கதிகளும் சொல்லும் ஒவ்வொரு சங்கதியும் அலாதியானது. உதாரணமாக இரண்டாவது சரணத்தில் வரும்,

பாதை தேடியே பாதம் போகுமோ..

என்ற வரியைக் கவனியுங்கள். நாயகியின் விரகத்தைப் பாடும்போது தேடியே மற்றும் போகுமோ ஆகிய சொற்களில் ராஜா உள்நுளைக்கும் சங்கதிகள் மிக நுட்பமானவை அல்லவா? திரு. பாலா அவர்களின் குரலில் சங்கதிகளின் மூலம் அந்த ஏக்கத்தை வெளிப்படுத்தும் அந்த மெட்டமைப்பு நிகரற்றதுதானே. இனி, பாடலைக் கேட்போம்.

Link to comment
Share on other sites

நல்ல பாடல்கள் டங்குவார்.

மெளனமான நேரம் - என்ன அருமையான பாடல். காதலை அழகாகப் படம் பிடிக்கிறது. காட்சி ஞாபகமா? கமலின் நண்பன் சரத்பாபுவின் முதலிரவுக்கு ஒழுங்குகள் செய்துவிட்டு பெண்ணையும் மாப்பிள்ளையும் சேர்த்துவிட்டு கமலும் ஜெயப்ரதாவும் வரும் போது இந்தப்பாடல் வரும். கமலும் ஜெயப்ரதாவும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாத ஆனால் புரிந்து கொண்டுள்ள காதல்.

Link to comment
Share on other sites

நல்ல பாடல்கள் டங்குவார்.

மெளனமான நேரம் - என்ன அருமையான பாடல். காதலை அழகாகப் படம் பிடிக்கிறது. காட்சி ஞாபகமா? கமலின் நண்பன் சரத்பாபுவின் முதலிரவுக்கு ஒழுங்குகள் செய்துவிட்டு பெண்ணையும் மாப்பிள்ளையும் சேர்த்துவிட்டு கமலும் ஜெயப்ரதாவும் வரும் போது இந்தப்பாடல் வரும். கமலும் ஜெயப்ரதாவும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாத ஆனால் புரிந்து கொண்டுள்ள காதல்.

ஈஸ்,

காட்சி சரியாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் இருவரிடையே சொல்லிக் கொள்ளாத ஆனால் புரிந்து கொள்ளப்பட்ட காதல் என்பது நினைவில் உள்ளது. பாடலுக்கேற்ற காட்சி அமைப்பு செய்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். அப்போது வந்த படங்களில் எனக்குப் பிடித்த படம் இந்தச் சலங்கை ஒலி.

Link to comment
Share on other sites

பாடல்: தீர்த்தக் கரைதனிலே

படம்: தைப்பொங்கல் (1980)

பாடியவர்கள்: K.J. யேசுதாஸ், ஜென்சி

மெதுவான சோகம் இழையோடும் இந்தப் பாடல் கேட்கக் கேட்க இனிமை. படத்தை நான் பார்க்கவில்லை ஆதலால் என்ன மாதிரியான கட்டத்தில் இந்தப் பாடல் வருகிறது என்று தெரியவில்லை. சில படங்களைப் பாராதிருத்தல் பாடலை இரசிக்க மேலும் உதவும். :unsure:

Link to comment
Share on other sites

இசை : இளையராஜா

பாடியவர்கள் : எஸ்.பி.பி & ஜானகி

படம்: காக்கி சட்டை

கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

கன்னங்கள் புது ரோசாப்பூ

உன் கண்கள் இரு ஊதாப்பூ

இது பூவில் பூத்த பூவையோ

ஆ: அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட

அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

பெ: ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே

அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே

ஆ: தோளிலும் என் மார்பிலும்

கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது

பெ: உன்னைக் கொடு என்னைத் தருவேன்

ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்

சொல்லித் தருவேன் விழி மூடாமல்

ஆ: கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்

கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்

பெ: வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்....

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

பாடல்: ஏ.. தென்றலே

படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980)

பாடியவர்: P. சுசீலா

நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் இடம் பெற்ற இந்தப் பாடல் சுசீலா அவர்களின் தனிக்குரலில் இடம்பெற்றது. பாடலுக்கு பல்லவியும் சரணமும் இனிதே அமைந்திருக்கிறது. சரணத்தின் முடிவில் உச்சஸ்தாயியை சுசீலா அவர்கள் தொடும் அழகே அழகு..

Link to comment
Share on other sites

பாடல்: என் இனிய பொன் நிலாவே

படம்: மூடுபனி

பாடியவர்: K.J. ஜேசுதாஸ்

கிட்டார் பிரியர்களுக்கு வேலை வைக்கும் பாட்டு. கிட்டத்தட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு chord அமைக்கப்பட்டிருக்கிறது பல்லவியில். இரண்டாவது இடையீட்டு இசையில் அமர்க்களமான கிட்டார் இசை 2:40 நேரக்கணக்கில் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இனி பாடலைக் கேளுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காதே கண்ணே

நீ இல்லையே இனி நான் இல்லையே

உயிர் நீயே..

படம்: கேளடிகண்மணி

பாடியவர்கள்: கே.ஜே ,உமா ரமணன்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

தென்மதுரை வைகைநதி

தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றதே பொன்மாலை நிலா

தேயாதது நம் ஆசை நிலா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

இசை : இளையராஜா பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பி & சுசீலா...

Link to comment
Share on other sites

பாடல்: பூங்காற்று

படம்: மூன்றாம்பிறை

பாடியவர்: K.J. யேசுதாஸ்

இனிமையான பேஸ் அமைப்புடன் வெளிவந்த வித்தியாசமான பாடல். மூன்றாம்பிறையின் இந்தி வடிவத்துக்கு பெரும்பாலும் இதே இசை அமைப்புடன் வேறு ஒரு மெட்டு உபயோகிக்கப்பட்டது. பிறகு அந்த மெட்டு தமிழில் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் "என் வாழ்விலே" என்ற பாடலுக்கு உபயோகிக்கப்பட்டது.

நன்றி.

இந்தி மூன்றாம்பிறை (சத்மா) பாடல் Ae zindagi gale laga le..

முதலாவது இடையீட்டு இசையின் தொடக்கம் தமிழிலும் இந்தியிலும் ஒரே மாதிரி இருப்பதைக் கவனியுங்கள். அத்துடன் வயலினுடன் சேர்ந்த சரணம் இனிமையானதல்லவா..!

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல்: என் வாழ்விலே

படம்: தம்பிக்கு எந்த ஊரு

பாடியவர்: S.P. பாலசுப்ரமணியம்

மேலே குறிப்பிட்ட இந்தி மெட்டை மறுபடியும் இளையராஜா இங்கே உபயோகிக்கிறார்..!

Link to comment
Share on other sites

பாடல்: கொஞ்சி கொஞ்சி அலைகளாட

இசை: இளையராஜா

படம்: வீரா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது

அள்ளி வந்த வண்ணங்களை எந்தன்நெஞ்சில் நீ தூவு!

படம்: ரமணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.