Jump to content

இளையராஜாவின் இனிய கானம்


Recommended Posts

நன்றி ஈஸ். கதாநாயகி யார் என்று தெரியவில்லை.

ராதா, விஜயகாந்த்

அம்மன் கோயில் கிழக்காலே

இளையராஜா

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

(உன் பார்வையில்)

அசைந்து இசைத்தது வளைக்கரம்தான்

இசைந்து இசைத்தது புது சுரம்தான்

சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்

கழுத்தில் இருப்பது வலம்புரிதான்

இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் (2)

மனதை மயிலிடம் இழந்தேனே

மயங்கி தினம் தினம் விழுந்தேனே

மறந்து பிறந்து பறந்து தினம் மகிழ

(உன் பார்வையில்)

அணைத்து நனைந்தது தலையணைதான்

அடுத்த அடியென்ன எடுப்பது நான்

படுக்கை விரித்தது உனக்கெனத்தான்

இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்

நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் (2)

மறைத்த முகத்திரை திறப்பாயோ

திறந்து அகத்திடை இருப்பாயோ

இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

(உன் பார்வையில்)

Link to comment
Share on other sites

  • Replies 1.1k
  • Created
  • Last Reply

பாடல்: மேகம் கொட்டட்டும்

படம்: எனக்குள் ஒருவன்

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்

இந்தப் பாடலைப் பல நாட்களாக இணைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். முக்கியமாக சில இசை சித்து விளையாட்டுக்களுக்காக. இளையராஜா ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது புதுமை செய்ய நினைப்பவர் என்பது எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக 80 களில் வந்த பாடல்களில் இது தெளிவாகத் தெரியும். அப்படிப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. மேம்போக்காகப் பார்க்கும்போது சாதாரணமாகத் தோன்றும் இப்பாடலில் ராஜா ஒரு புதுமையைப் புகுத்தியிருக்கிறார்.

கிட்டார் வாசிப்பில் குறிப்பாக பேஸ் கிட்டார் வாசிப்பு என்பது அவர் அவர் கற்பனையைப் பொறுத்தது. பாடலின் சுரவரிசையில் இருந்து பிறழாது அதே சமயத்தில் பல விதங்களாக வாசிக்கலாம். பெரும்பாலான இசையமைப்பாளர்கள் கிட்டார் வாசிப்பவர்களிடம் அவர்கள் கற்பனைக்கு பேஸ் வாசிக்க விட்டுவிடுவார்கள். இளையராஜா பாடலின் எல்லா அம்சங்களையும் தானே உருவாக்க வேண்டும் என்று விரும்புவார். தாள வாத்திய தீர்மானங்கள், பாடல் சங்கதிகள் மற்றும் பேஸ் கிட்டார் எல்லாம் அவர் கற்பனைப்படி தான் இருக்கும். எல்லா வகை வாத்தியங்களிலும் அவருக்குள்ள ஆளுமை காரணமாக இது அவருக்கு சாத்தியமாகிறது.

இந்தப்பாடலில், என்ன புதுமை செய்திருக்கிறார் என்று கவனிப்போம். பாடலின் முதல் இரண்டு வரிகள்...

மேகம் கொட்டட்டும்.. ஆட்டம் உண்டு..

மின்னல் வெட்டட்டும்... பாட்டும் உண்டு..

இந்த இரண்டு வரிகளுக்கும் ஒரே மெட்டுத்தான். அதாவது ஒரே சுர வரிசைகள். ஆனால் லீட் (lead) மற்றும் பேஸ் (bass) கிட்டார் எப்படி வாசிக்கப் பட்டுள்ளது என்று கவனியுங்கள். முதல் வரிக்கு ஒரு சுர வரிசை கொடுக்கிறார். அடுத்த வரிக்கும் அதையே நீங்கள் எதிர்பார்த்தால் அது வராது. முதல் வரியைப் போன்ற அதே மெட்டுக்கு இரண்டாவது வரியில் வேறு சுரக்கோர்வைகளை கிட்டாரில் வாசிக்க வைக்கிறார். அந்த ஒரு ஆனந்த அதிர்ச்சி சுவை மிகுந்தது. பாடல் முழுவதுமே கிட்டார் பிரமாதமாக உபயோகிக்கப் பட்டுள்ளது. பாடலில் கவனியுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல்: இரு பறவைகள்

படம்: நிறம் மாறாத பூக்கள்

பாடியவர்கள்: ஜென்சி மற்றும் குழுவினர்

நிறம் மாறாத பூக்களில் எல்லாப் பாடல்களுமே இனிமை. "ஆயிரம் மலர்களே" அவற்றுள் எல்லாம் மிகப் பிரபலம் ஆனது. இரு பறவைகளும் அதற்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல.

இசைச் சேர்ப்பில் உள்ள ஒரு சில விடயங்களை அலச இப்பாடல் உதவும். பாடலுக்கு ஜீவன் சேர்ப்பது அதிலுள்ள பின்புல இசை. சில பாடல்கள் மெட்டமைப்பில் சிறந்ததாக இருக்கும். ஆனாலும் அதில் ஏதோ ஒன்று குறைவது போலிருக்கும். அதற்குப் பெரும்பாலும் பின்புல சுதி மீட்டல் சரி இல்லாததே காரணமாக இருக்கும். கர்நாடக இசையில் தம்புரா வாத்தியம், சுதிப்பெட்டி போன்றவை பின்புலமாக விளங்குகின்றன. திரை இசையில் பேஸ் கிட்டார் அல்லது கீபோட்டில் பேஸ் இசை பயன்படுகிறது. குரலுடன் சேர்ந்து அதன் சுதியில் பேஸ் இசைக்கப்படும் அதன் சுவையே அலாதி.

இப்பாடல் ஒரு ஆரம்ப இசையுடன் தொடங்குகிறது. அதில் வெறும் ரிதம் கிட்டார் கோரஸ் இசையுடன் ஒலிக்கிறது. இசையின் வெளிப்பாடு சாதாரணமாக உள்ளது. பேஸ் கிட்டார் இசைக்கப்படவில்லை. இப்போது 00:19 விநாடியில் வயலின் இசை தொடங்கும்போது பேஸ் கிட்டாரை உபயோகிக்கத் தொடங்குகிறார் ராஜா. அப்போது இசையில் ஏற்படும் மாற்றத்தைக் கவனியுங்கள். இன்னொரு பரிணாமத்துக்கு அது ரசிகர்களை செல்கிறது. சேர்த்துக் கேட்கும்போது அட பாடல் நல்லா இருக்கும் போல இருக்கே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

அதேபோல இரண்டாம் இடையீட்டு இசை. 02:57 வினாடிக்கணக்கில் இரூந்து பேஸ் இசை இல்லை. திடீரென்று 03:06 வினாடியிலிருந்து அதை உபயோகிக்கிறார். இசையின் இனிமை கூடுகிறது. அதைத் தொடர்ந்து வரும் சந்தூர் மற்றும் வயலின் இசைகளின் குழைவு தெவிட்டாத விருந்தல்லவா..!

இப்போது பாடலைக் கேளுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல்: ஊதக் காத்து

படம்: கிராமத்து அத்தியாயம்

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் மற்றும், எஸ். ஜானகி அவர்கள்

ஒரு மாறுதலுக்கு கிராமத்து இசை மறுபடியும். உச்சஸ்தாயியில் ஜெயச்சந்திரன் பாடும்போது அழகோ அழகு. இதை உணர்ந்து தானோ என்னவோ ராஜா அவரை அப்படிப்பட்ட பல பாடல்களில் பாட வைத்திருக்கிறார். காணொளியைப் பாராது பாடலை மட்டும் கேட்டால் உங்கள் உடல் நலத்துக்கு தீங்கு வராது. :lol:

Link to comment
Share on other sites

பாடல்: ஓ வசந்த ராஜா

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

வரிகள்: வைரமுத்து

இசை:இசைஞானி இளையராஜா

ஓ வசந்த ராஜ தேன் சுமந்த ரோஜா

என் தேகம் உன் தேசம் என்னாளும் சந்தோஷம் - என்

தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

(ஓ வசந்த)

வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்

மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு

விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ கண்ணே (2)

சூடிய பூச்சரம் வானவில்தானோ?

(ஓ வசந்த)

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்

அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்

என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு (2)

மன்மதக் கோயிலில் பாலபிஷேகம்

(ஓ வசந்த)

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

பாடல்: தென்றல் வரும்

படம்: பாரு பாரு பட்டணம் பாரு

பாடியவர்கள்: திரு. S.P. பாலசுப்ரமணியம் மற்றும் S. ஜானகி அவர்கள்

இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இரண்டு பாடல்களில் ஒன்று இது. மற்றையது, யார் தூரிகை என்ற பாடல்.

தென்றல் வரும் என்ற இந்தப்பாடலில் அதன் தாளக்கட்டு எனக்குப் பிடித்தது. பாடல் முழுவதும் கூடவே வரும் அந்த மேளச்சத்தம் மிக அருமை. பாடல் மேற்கத்தைய இசையான பியானோவுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்வது நமது வீணை இசை. பாடல் முழுவதுமே பியானோ மற்றும் வீணையின் இனிய ஆரோக்கியமான போட்டி. இரண்டு வேவ்வேறு கலாச்சாரங்களின் கூறுகளை எந்தச் சிக்கலும் இல்லாமல் கலந்தது தந்தது நமது இசைஞானியின் கைதேர்ந்த கலைவண்ணமன்றி வேறென்ன! இனி நம் பாடலிக் காண்போம்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தாயென்னும் கோயிலில் என்ற பாட்டை youtube ல் தரமுடியுமா டங்குவார்.

Link to comment
Share on other sites

கறுப்பி,

இதுவரை கிடைக்கவில்லை. கிடைத்தால் செய்கிறேன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்!என்னைப்போல் நீங்களும் இளையராஜாவின் இரசிகன் என்றமுறையில் கேட்கின்றேன்.

"மீன்குடி தேரில் மன்மதராஜன் ஊர்வம் போகின்றான்"(ள் )என்ற பாடலை ஒலி வடிவில் தர முடியுமா?

இப்பாடலை ஜான்சியும் ஜேசுதாசும் தனித்தனியாக பாடியுள்ளனர்.

திரைப்படத்தை ஞாபகத்திற்கு கொண்டு வர முடிய வில்லை :rolleyes:

கரும்புவில்?????????????

Link to comment
Share on other sites

டங்குவார்!என்னைப்போல் நீங்களும் இளையராஜாவின் இரசிகன் என்றமுறையில் கேட்கின்றேன்.

"மீன்குடி தேரில் மன்மதராஜன் ஊர்வம் போகின்றான்"(ள் )என்ற பாடலை ஒலி வடிவில் தர முடியுமா?

இப்பாடலை ஜான்சியும் ஜேசுதாசும் தனித்தனியாக பாடியுள்ளனர்.

திரைப்படத்தை ஞாபகத்திற்கு கொண்டு வர முடிய வில்லை :rolleyes:

கரும்புவில்?????????????

கு.சா. உங்கள் பாடலை நடாவின் பக்கத்தில் தருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெத்தப்பெரிய உபகாரம் டங்குவார் :rolleyes:

Link to comment
Share on other sites

பாடல்: மௌனமான நேரம்

படம்: சலங்கை ஒலி

பாடியவர்கள்: S.P. பாலாசுப்ரமணியம், S.ஜானகி

கதாநாயகனுக்கும், நாயகிக்கும் இடையே இழைந்தோடும் அந்தக் காதலை மெல்லிசை மூலம் வெளிப்படுத்துகிறார் ராஜா. பாடலில் உள்ள ஒவ்வொரு சங்கதிகளும் சொல்லும் ஒவ்வொரு சங்கதியும் அலாதியானது. உதாரணமாக இரண்டாவது சரணத்தில் வரும்,

பாதை தேடியே பாதம் போகுமோ..

என்ற வரியைக் கவனியுங்கள். நாயகியின் விரகத்தைப் பாடும்போது தேடியே மற்றும் போகுமோ ஆகிய சொற்களில் ராஜா உள்நுளைக்கும் சங்கதிகள் மிக நுட்பமானவை அல்லவா? திரு. பாலா அவர்களின் குரலில் சங்கதிகளின் மூலம் அந்த ஏக்கத்தை வெளிப்படுத்தும் அந்த மெட்டமைப்பு நிகரற்றதுதானே. இனி, பாடலைக் கேட்போம்.

Link to comment
Share on other sites

நல்ல பாடல்கள் டங்குவார்.

மெளனமான நேரம் - என்ன அருமையான பாடல். காதலை அழகாகப் படம் பிடிக்கிறது. காட்சி ஞாபகமா? கமலின் நண்பன் சரத்பாபுவின் முதலிரவுக்கு ஒழுங்குகள் செய்துவிட்டு பெண்ணையும் மாப்பிள்ளையும் சேர்த்துவிட்டு கமலும் ஜெயப்ரதாவும் வரும் போது இந்தப்பாடல் வரும். கமலும் ஜெயப்ரதாவும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாத ஆனால் புரிந்து கொண்டுள்ள காதல்.

Link to comment
Share on other sites

நல்ல பாடல்கள் டங்குவார்.

மெளனமான நேரம் - என்ன அருமையான பாடல். காதலை அழகாகப் படம் பிடிக்கிறது. காட்சி ஞாபகமா? கமலின் நண்பன் சரத்பாபுவின் முதலிரவுக்கு ஒழுங்குகள் செய்துவிட்டு பெண்ணையும் மாப்பிள்ளையும் சேர்த்துவிட்டு கமலும் ஜெயப்ரதாவும் வரும் போது இந்தப்பாடல் வரும். கமலும் ஜெயப்ரதாவும் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாத ஆனால் புரிந்து கொண்டுள்ள காதல்.

ஈஸ்,

காட்சி சரியாக ஞாபகத்தில் இல்லை. ஆனால் இருவரிடையே சொல்லிக் கொள்ளாத ஆனால் புரிந்து கொள்ளப்பட்ட காதல் என்பது நினைவில் உள்ளது. பாடலுக்கேற்ற காட்சி அமைப்பு செய்த இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். அப்போது வந்த படங்களில் எனக்குப் பிடித்த படம் இந்தச் சலங்கை ஒலி.

Link to comment
Share on other sites

பாடல்: தீர்த்தக் கரைதனிலே

படம்: தைப்பொங்கல் (1980)

பாடியவர்கள்: K.J. யேசுதாஸ், ஜென்சி

மெதுவான சோகம் இழையோடும் இந்தப் பாடல் கேட்கக் கேட்க இனிமை. படத்தை நான் பார்க்கவில்லை ஆதலால் என்ன மாதிரியான கட்டத்தில் இந்தப் பாடல் வருகிறது என்று தெரியவில்லை. சில படங்களைப் பாராதிருத்தல் பாடலை இரசிக்க மேலும் உதவும். :unsure:

Link to comment
Share on other sites

இசை : இளையராஜா

பாடியவர்கள் : எஸ்.பி.பி & ஜானகி

படம்: காக்கி சட்டை

கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

கன்னங்கள் புது ரோசாப்பூ

உன் கண்கள் இரு ஊதாப்பூ

இது பூவில் பூத்த பூவையோ

ஆ: அந்தப்புறம் இந்தப்புறம் விழி மையிட்ட

அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

பெ: ஆயிரம் பொன் பூக்கும் எந்தன் தேகம் எங்குமே

அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே

ஆ: தோளிலும் என் மார்பிலும்

கொஞ்சிடும் என் அஞ்சுகம் நான் நீ ஏது

பெ: உன்னைக் கொடு என்னைத் தருவேன்

ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்

சொல்லித் தருவேன் விழி மூடாமல்

ஆ: கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய்

கைகளால் என் பாதம் நீவி ஆறச் செய்கிறாய்

பெ: வானகம் இவ்வையகம் யாவுமே என் கைவசம் நீதான் தந்தாய்....

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

பாடல்: ஏ.. தென்றலே

படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980)

பாடியவர்: P. சுசீலா

நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் இடம் பெற்ற இந்தப் பாடல் சுசீலா அவர்களின் தனிக்குரலில் இடம்பெற்றது. பாடலுக்கு பல்லவியும் சரணமும் இனிதே அமைந்திருக்கிறது. சரணத்தின் முடிவில் உச்சஸ்தாயியை சுசீலா அவர்கள் தொடும் அழகே அழகு..

Link to comment
Share on other sites

பாடல்: என் இனிய பொன் நிலாவே

படம்: மூடுபனி

பாடியவர்: K.J. ஜேசுதாஸ்

கிட்டார் பிரியர்களுக்கு வேலை வைக்கும் பாட்டு. கிட்டத்தட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு chord அமைக்கப்பட்டிருக்கிறது பல்லவியில். இரண்டாவது இடையீட்டு இசையில் அமர்க்களமான கிட்டார் இசை 2:40 நேரக்கணக்கில் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இனி பாடலைக் கேளுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காதே கண்ணே

நீ இல்லையே இனி நான் இல்லையே

உயிர் நீயே..

படம்: கேளடிகண்மணி

பாடியவர்கள்: கே.ஜே ,உமா ரமணன்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

தென்மதுரை வைகைநதி

தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றதே பொன்மாலை நிலா

தேயாதது நம் ஆசை நிலா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

இசை : இளையராஜா பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பி & சுசீலா...

Link to comment
Share on other sites

பாடல்: பூங்காற்று

படம்: மூன்றாம்பிறை

பாடியவர்: K.J. யேசுதாஸ்

இனிமையான பேஸ் அமைப்புடன் வெளிவந்த வித்தியாசமான பாடல். மூன்றாம்பிறையின் இந்தி வடிவத்துக்கு பெரும்பாலும் இதே இசை அமைப்புடன் வேறு ஒரு மெட்டு உபயோகிக்கப்பட்டது. பிறகு அந்த மெட்டு தமிழில் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் "என் வாழ்விலே" என்ற பாடலுக்கு உபயோகிக்கப்பட்டது.

நன்றி.

இந்தி மூன்றாம்பிறை (சத்மா) பாடல் Ae zindagi gale laga le..

முதலாவது இடையீட்டு இசையின் தொடக்கம் தமிழிலும் இந்தியிலும் ஒரே மாதிரி இருப்பதைக் கவனியுங்கள். அத்துடன் வயலினுடன் சேர்ந்த சரணம் இனிமையானதல்லவா..!

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல்: என் வாழ்விலே

படம்: தம்பிக்கு எந்த ஊரு

பாடியவர்: S.P. பாலசுப்ரமணியம்

மேலே குறிப்பிட்ட இந்தி மெட்டை மறுபடியும் இளையராஜா இங்கே உபயோகிக்கிறார்..!

Link to comment
Share on other sites

பாடல்: கொஞ்சி கொஞ்சி அலைகளாட

இசை: இளையராஜா

படம்: வீரா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது

அள்ளி வந்த வண்ணங்களை எந்தன்நெஞ்சில் நீ தூவு!

படம்: ரமணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.