Jump to content

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sputnikasmwp7.jpg

காலைச் சூரியனை

கையெடுத்துக் கும்பிட்டு..

மாலைச் சந்திரனை

வீழ்ந்து வணங்கி..

சுழன்றடிக்கும் சூறாவளிக்கு

பயந்து நடுங்கி...

மின்னலும் இடியும்

மரணத்தின் தூதென்று

ஓடி ஒளித்து..

தீயதும் சுடுவது

முன்வினைப் பயனென்றும்

பூமியது அதிர்ந்து பிளப்பது

பாவிகள் அழிவென்றும்

இயற்கைக்குள்

உள்ளதை விளங்காமல்

உளறிய கணங்களில்..

எதிர்வினை சொல்லி

பகுத்தறிவென்று

வாய் வீரம் பேசி

வீண் பொழுது கழித்திடாமல்

ஆயிரம் கதை கட்டி

அலைந்து கொண்டிராமல்..

மூளையைக் கசக்கி

விண்கலம் கட்டி

விண்ணுக்கு அனுப்பி

வீர சாதனை படைத்த

திருநாள் இன்று..!

"புட்னிக்" எனும் மனிதப்பட்சி

ரஷ்சிய மண்ணிருந்து

விண்ணேகி

அரை நூற்றாண்டும்

கடந்தாயிற்று.

மனித வரலாற்றின்

புது யுகம் இது..

புறப்படுங்கள்..

சுன்னாகம் சந்தியில்

இருந்து...

செவ்வாய் நோக்கி

செவ்வாய் தோசத்தை

சிதைத்து விட்டு வருவோம். :rolleyes:

செய்தி:

" உலகின் முதலாவதும் மனிதன் உருவாக்கியதுமான புட்னிக் (Sputnik) என்று பெயரிடப்பட்டதுமான விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அது ரஷ்சியத் தயாரிப்பில் ரஷ்சியாவில் இருந்து 04-10-1957 இல் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது."

Link to comment
Share on other sites

ஓ இதா சங்கதி தாத்தா நான் கூகிள் பேஜிற்கு போன போது இப்படி ஒரு படம் இருந்தது எனக்கு என்னவென்று விளங்கவில்லை :rolleyes: நீங்க சொன்ன பிறகு தான் என்னவென்று தெரிந்தது தகவலிற்கு நன்றி தாத்தா :( !!இது தான் சொல்லுறது வயசு போன ஆட்கள் கட்டாயம் தேவை என்று.................!! :)

பகுத்தறிவென்று

வாய் வீரம் பேசி

வீண் பொழுது கழித்திடாமல்

ஆயிரம் கதை கட்டி

அலைந்து கொண்டிராமல்..

மூளையைக் கசக்கி

விண்கலம் கட்டி

விண்ணுக்கு அனுப்பி

வீர சாதனை படைத்த

திருநாள் இன்று..!

என்றாலும் தாத்தா இந்த கவிதை வரிகளிள பல விசயங்களை சொல்ல வாறார் போல இருக்கு :) !!அது சரி தாத்தா பகுதறிவு என்றா என்ன?? :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் சொல்லுறது வயசு போன ஆட்கள் கட்டாயம் தேவை என்று.................!!

சும்மாவா சொன்னான்ங்க Old is Gold என்று.

இன்று நான் பிபிசி பார்த்த போது கண்டறிந்தேன்.. புட்னிக் பற்றி. ஆனால் புட்னிக் பற்றி எனக்கு எப்பவோ தெரியும்... நான் அது ஏவப்படும் போது 45 வயது வாலிபனாக இருந்தேன்.

புட்னிக் தான் இன்றைய செய்மதிகளின் முன்னோடி. செய்மதித் தொழில்நுட்பம் இன்று விரிவடைந்திருக்கக் காரணமே புட்னிக்கின் வெற்றியும்.. சோவியத் - அமெரிக்க குளிர் யுத்தத்தில் இராணுவ போட்டியுமே..! ஏன் இணையம் கூட குளிர் யுத்த கால இராணுவப் போட்டி தந்த பரிசுதான். :D

இரண்டாம் உலகப் போரில் வெள்ளையர்கள் எங்களைப் போல யுத்ததுக்கு பயந்து அகதியாக இந்தியாவுக்கு இலங்கைக்கு ஓடி வரல்ல. மாறாக.. தங்கள் தேசங்களை தாங்களே காக்க போராடினர்.. தங்கள் வீரர்களைக் காக்க மருந்துகளைக் கண்டு பிடித்தனர்.. தங்கள் வீரர்கள் வெல்ல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தனர். நாங்க யுத்தம் என்றதும்.. "அசைலம்" அடிச்சதைத் தவிர செய்தது என்ன...???! இதையேன் சொல்லுறன் என்றால் சோவியத் - அமெரிக்க குளிர் யுத்தத்தில் கூட அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைத்தான் தேடி ஓடினர். ஆனா நாங்க நாட்டை விட்டு ஓடிற கோழைகளாகத்தான் இருக்கிறம். ஆனால் கதையளவில் ஆளையாளை மட்டம் தட்டுறதில.. முன்னோடிகள்.. எங்களை விட்டா யாருமே இல்ல. :):rolleyes:

Link to comment
Share on other sites

ஓ இதுதானா விசயம். கவி வடிவிலேயே சொல்லிட்டீங்க. நானும் கூகிள் பக்கம் போனேன். அங்கே தான் பார்த்தேன் sputnik anniversary என்று இருந்திச்சு. நான் முதலில் என்னடா அண்டனா எல்லாம் போட்டிருக்கு னு நினைச்சேன்

நெடுக் அண்ணாக்கு தானே விண்னியல் விநோதங்கள் எல்லாம் தெரியும். சரி கவிதையில் சொன்ன தகவலுக்கு நன்றிகள் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இதுதானா விசயம். கவி வடிவிலேயே சொல்லிட்டீங்க. நானும் கூகிள் பக்கம் போனேன். அங்கே தான் பார்த்தேன் sputnik anniversary என்று இருந்திச்சு. நான் முதலில் என்னடா அண்டனா எல்லாம் போட்டிருக்கு னு நினைச்சேன்

நெடுக் அண்ணாக்கு தானே விண்னியல் விநோதங்கள் எல்லாம் தெரியும். சரி கவிதையில் சொன்ன தகவலுக்கு நன்றிகள் அண்ணா

அப்ப எல்லாரையும் கூகிள் தான் தட்டி எழுப்பி இருக்கி என்றீங்க. கூகிளுக்கு நன்றிகள் பல. மனித வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வைக் கூட மனிதன் அறியப் பிரியப்படாத போதும் கூகிள் இயக்கும் மனிதர்கள் பிரியப்பட்டதால் இன்று.. வெண்ணிலா குழந்தை கூட.. புட்னிக் பற்றி பேசுறா..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது. எண்டு அழகாய் ஒரு கவிதை . வாழ்த்துகள் .

"புட்னிக்" க்கு அகவை ஐம்பது எண்டு உங்க கவிதையை பார்த்துத்தான் தெரிஞ்சது.

இன்று நான் பிபிசி பார்த்த போது கண்டறிந்தேன்.. புட்னிக் பற்றி. ஆனால் புட்னிக் பற்றி எனக்கு எப்பவோ தெரியும்... நான் அது ஏவப்படும் போது 55 வயது வாலிபனாக இருந்தேன்.

ஆகா நெடுக்கு அண்மையில் உங்களை பார்த்திருக்கிறேனே. இப்போதும் உங்கள பார்த்தால் ஒரு 35 வயசு சொல்லலாம் .

Link to comment
Share on other sites

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது. எண்டு அழகாய் ஒரு கவிதை . வாழ்த்துகள் .

"புட்னிக்" க்கு அகவை ஐம்பது எண்டு உங்க கவிதையை பார்த்துத்தான் தெரிஞ்சது.

ஆகா நெடுக்கு அண்மையில் உங்களை பார்த்திருக்கிறேனே. இப்போதும் உங்கள பார்த்தால் ஒரு 35 வயசு சொல்லலாம் .

:unsure: நெடுக் அண்ணாவுக்கு 35? அட பாவமே அவ்வளவுக்கு கிழவனாகிட்டாரா? நான் 2 வருடத்திற்கு முன் பார்த்தப்போ 27 ஆக தானே இருந்தார் :(

அப்ப எல்லாரையும் கூகிள் தான் தட்டி எழுப்பி இருக்கி என்றீங்க. கூகிளுக்கு நன்றிகள் பல. மனித வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வைக் கூட மனிதன் அறியப் பிரியப்படாத போதும் கூகிள் இயக்கும் மனிதர்கள் பிரியப்பட்டதால் இன்று.. வெண்ணிலா குழந்தை கூட.. புட்னிக் பற்றி பேசுறா..! :D

பின்னை தமிழில் சொன்னால் வெண்ணிலா குழந்தை புட்னிக் பற்றி பேசும் தானே. அட எஸ் சைலன்ஸ் ஆகிட்டுது. நான் வாசிச்சப்போ எஸ் உச்சரிப்பும் வந்திச்சு போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது. எண்டு அழகாய் ஒரு கவிதை . வாழ்த்துகள் ."புட்னிக்" க்கு அகவை ஐம்பது எண்டு உங்க கவிதையை பார்த்துத்தான் தெரிஞ்சது.ஆகா நெடுக்கு அண்மையில் உங்களை பார்த்திருக்கிறேனே. இப்போதும் உங்கள பார்த்தால் ஒரு 35 வயசு சொல்லலாம் .

நீங்க எங்க என்னைப் பார்த்தீங்க. பொய் பேசக் கூடாது. நீங்கள் யாரோ நெடுக்கான 35 வயசு வாலிபரைப் பார்த்திட்டு நெடுக்ஸ் என்று நினைச்சிட்டீங்க போல. நான் 95 வயசு ஆள்...! :D

:unsure: நெடுக் அண்ணாவுக்கு 35? அட பாவமே அவ்வளவுக்கு கிழவனாகிட்டாரா? நான் 2 வருடத்திற்கு முன் பார்த்தப்போ 27 ஆக தானே இருந்தார் :Dபின்னை தமிழில் சொன்னால் வெண்ணிலா குழந்தை புட்னிக் பற்றி பேசும் தானே. அட எஸ் சைலன்ஸ் ஆகிட்டுது. நான் வாசிச்சப்போ எஸ் உச்சரிப்பும் வந்திச்சு போல

நான் நெடுக்ஸ் தாத்தா. நீங்க எந்த அண்ணாவைப் பார்த்தீங்க. அவர் அப்படி இருக்கலாம். நான் 95+ "ஓல்ட் மான்".

ஸ்புட்னிக் என்று தமிழில எழுதிறதில்ல.. புட்னிக் என்றுதான் எழுதிறது. அதுதான் ஆங்கிலப்பதத்தை கவிதைக்கு கீழ் செய்தியில் போட்டேன். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் போது எனது மனைவியின் தகப்பனார் வீட்டில் இருந்த நாய்க்கு லைகா என்று பெயரிட்டார்.அது என்ன லைகா என்றால் சந்திரனுக்கு ரசியர்அனுப்பிய நாயின் பெயரென்பார்.

லைகா புட்னிக்கில் போனதா?அல்லது அடுத்ததிலா?

Link to comment
Share on other sites

கவிதை அருமை

அன்றைய தாத்தாக்களின் சிந்தனைதான் இன்றைய இளைஞர்கண்டு பிடிப்புக்களுக்கு அத்திவாரம்.... இன்று விண்வெளிசென்று பார்க்கும் கோள்களை நமது மூதாதையர் அன்றே அறிந்திருந்தனர் சூநியன் உதிக்கும் நேரம் அஸ்த்மிக்கும் நேரம் கிரகணம் .... எல்லாம் கணித்திருக்கின்றார்கள்... என்ன அன்றைய மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக ஒவ்வொரு கதைகளாக எடுத்துவிட இப்போது அந்தக் கதைகளின் கருத்தை நோக்காது சிலர் அந்தக்கால விஞ்ஞானத் தாத்தாக்களை எல்லாம் விசரர் என்று நோக்குகின்றார்கள் :unsure:

இப்போதெல்லாம் அகழ்வாராட்சியில் கண்டுபிடிப்பவற்றை பார்த்து மூக்குக்குள் விரலை வைக்கின்றார்கள் :( அட அந்தக்காலத்தில் கூட இன்றைய நகர அமைப்பாக இருந்திருக்கின்றதே என (ஆதாரம் ... சிந்துவெளி நாகரீகத்தில் மொகஞ்சதாரா ஹரப்பா போன்றன )

இன்றைய விஞ்ஞானத்தின் ஆரம்ப அத்திவாரம் அன்று ... அதன் வளர்ச்சி இன்று.... இன்னும் பல்லாயிரம் வருடம் போன பின்பு அன்றைய மனிதன் இன்றைய மனிதனை மூடன் என்று சொன்னால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் போது எனது மனைவியின் தகப்பனார் வீட்டில் இருந்த நாய்க்கு லைகா என்று பெயரிட்டார்.அது என்ன லைகா என்றால் சந்திரனுக்கு ரசியர்அனுப்பிய நாயின் பெயரென்பார்.லைகா புட்னிக்கில் போனதா?அல்லது அடுத்ததிலா?

ரஷ்சியா நாய் அனுப்பியதை அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த புட்னிக் அதைக் காவிச் செல்லவில்லை. புட்னிக் 2 தான் அதைக் காவிச் சென்றிருந்தது.ஆனால் அந்த பெண் நாய் ஓர் துரதிஸ்டசாலி. அவர் விண்வெளிக்கு ஏவப்பட்டு சில மணி நேரங்களிலேயே இறந்து விட்டார்.அந்த நாய்க்கு இட்ட பெயர்.. Laika

Laika.jpg

இவர் தான் அந்த நாயார். இவர் விண்ணுக்கு ஏவப்பட்டது 3 November 1957 இல்.

http://en.wikipedia.org/wiki/Laika

கவிதை அருமைஅன்றைய தாத்தாக்களின் சிந்தனைதான் இன்றைய இளைஞர்கண்டு பிடிப்புக்களுக்கு அத்திவாரம்.... இன்று விண்வெளிசென்று பார்க்கும் கோள்களை நமது மூதாதையர் அன்றே அறிந்திருந்தனர் சூநியன் உதிக்கும் நேரம் அஸ்த்மிக்கும் நேரம் கிரகணம் .... எல்லாம் கணித்திருக்கின்றார்கள்... என்ன அன்றைய மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக ஒவ்வொரு கதைகளாக எடுத்துவிட இப்போது அந்தக் கதைகளின் கருத்தை நோக்காது சிலர் அந்தக்கால விஞ்ஞானத் தாத்தாக்களை எல்லாம் விசரர் என்று நோக்குகின்றார்கள் :unsure: இப்போதெல்லாம் அகழ்வாராட்சியில் கண்டுபிடிப்பவற்றை பார்த்து மூக்குக்குள் விரலை வைக்கின்றார்கள் :( அட அந்தக்காலத்தில் கூட இன்றைய நகர அமைப்பாக இருந்திருக்கின்றதே என (ஆதாரம் ... சிந்துவெளி நாகரீகத்தில் மொகஞ்சதாரா ஹரப்பா போன்றன )இன்றைய விஞ்ஞானத்தின் ஆரம்ப அத்திவாரம் அன்று ... அதன் வளர்ச்சி இன்று.... இன்னும் பல்லாயிரம் வருடம் போன பின்பு அன்றைய மனிதன் இன்றைய மனிதனை மூடன் என்று சொன்னால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.... :D

நியூட்டன் தாத்தாவும் கண்டுபிடிச்சவர் எங்கட தாத்தாவும் கன்று பிடிச்சவர். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. :lol::D

நன்றி கெளரி.

Link to comment
Share on other sites

புட்னிக் பற்றி விக்கிபீடியாவிலிருந்து :

ஸ்புட்னிக் 1தான் பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதலாவது மனிதனால் செய்யப்பட்ட செயற்கைக் கோள் ஆகும். இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இச் செயற்கைக் கோளின் நிறை 83 கிகி (184 இறாத்தல்) ஆகும். இது இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்தது. இது பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்கள்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. ஸ்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. ஸ்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.

ஸ்புட்னிக் 1 சோவியத் யூனியனுடைய ஸ்புட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றிற் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்ற இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக் கோள் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது.

ஐக்கிய அமெரிக்காவும் ஆரம்பகட்டமாக, அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த குழுக்களினூடாக, வான்காட் திட்டம் என்ற பெயரில், செயற்கைக் கோள் ஆராச்சியில் ஈடுபட்டிருந்தது. அவர்களுடைய முதல் ஏவுதலை, ஸ்புட்னிக்குக்கு முன்னரே செய்ய எண்ணியிருந்தும், அது நடைபெறாமல் பலமுறை தள்ளிப்போடப்பட்டது.

பின்னர், அமெரிக்கத் தரைப்படையின் ஜுபிடர் திட்டத்தின் கீழ் ஒரு அவசர முயற்சியொன்று தொடங்கப்பட்டு 1958 ஜனவரியில் எக்ஸ்புளோரர் 1 என்ற செயற்கைக் கோளை ஏவுவதில் வெற்றிகண்டனர்.

இது, Cold War இன் ஒரு பகுதியாக, இரு வல்லரசுகளுக்கிடையே நடைபெற்ற விண்வெளிப் போட்டியின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. இரு நாடுகளும், விண்வெளி ஆய்வில் ஒன்றையொன்று முந்தும் முயற்சியின் உச்சக் கட்டமாக, அமெரிக்கா, அப்பல்லோ 11 இல் மனிதர்களை அனுப்பிச் சந்திரனில் இறக்கியது. ஸ்புட்னிக் 1 ஜனவரி 4 1958ல் திரும்பவும் பூமியில் விழுந்தது.

http://ta.wikipedia.org/wiki/ஸ்புட்னிக்_1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாவா சொன்னான்ங்க Old is Gold என்று.

இன்று நான் பிபிசி பார்த்த போது கண்டறிந்தேன்.. புட்னிக் பற்றி. ஆனால் புட்னிக் பற்றி எனக்கு எப்பவோ தெரியும்... நான் அது ஏவப்படும் போது 45 வயது வாலிபனாக இருந்தேன். :lol:

புட்னிக் தான் இன்றைய செய்மதிகளின் முன்னோடி. செய்மதித் தொழில்நுட்பம் இன்று விரிவடைந்திருக்கக் காரணமே புட்னிக்கின் வெற்றியும்.. சோவியத் - அமெரிக்க குளிர் யுத்தத்தில் இராணுவ போட்டியுமே..! ஏன் இணையம் கூட குளிர் யுத்த கால இராணுவப் போட்டி தந்த பரிசுதான். :o

இரண்டாம் உலகப் போரில் வெள்ளையர்கள் எங்களைப் போல யுத்ததுக்கு பயந்து அகதியாக இந்தியாவுக்கு இலங்கைக்கு ஓடி வரல்ல. மாறாக.. தங்கள் தேசங்களை தாங்களே காக்க போராடினர்.. தங்கள் வீரர்களைக் காக்க மருந்துகளைக் கண்டு பிடித்தனர்.. தங்கள் வீரர்கள் வெல்ல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தனர். நாங்க யுத்தம் என்றதும்.. "அசைலம்" அடிச்சதைத் தவிர செய்தது என்ன...???! இதையேன் சொல்லுறன் என்றால் சோவியத் - அமெரிக்க குளிர் யுத்தத்தில் கூட அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைத்தான் தேடி ஓடினர். ஆனா நாங்க நாட்டை விட்டு ஓடிற கோழைகளாகத்தான் இருக்கிறம். ஆனால் கதையளவில் ஆளையாளை மட்டம் தட்டுறதில.. முன்னோடிகள்.. எங்களை விட்டா யாருமே இல்ல. :(:lol:

ஐயோ நெடுக்ஸ் சாமி!என்னதான் பனிப்போராக இருந்தாலும் அங்கே கொடூரமான இனப்பலிகள் நடக்கவில்லை,தாய்தந்தையர் கொல்லப்படவில்லை, சொந்தநிலபுலம் பறிக்கப்படவில்லை, கன்னியர் கற்பிணிகள் பாலியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட வில்லை. அமெரிக்கர்களோ,ரஷ்சியர்களோ சொந்தநாட்டில் அகதிகளாக ஓடித்திரியவில்லை. அவர்கள் சொந்த நிலத்தில், நிறுதிட்டமான அரசியலில் இருந்து கொண்டு ஒருசில அதிகாரலாபங்களுக்காக எதைஎதையோ செய்தார்கள்.அது சரி நீங்கள் இப்போது ஒரு நூற்றாண்டு தாண்டப்போகின்றீர்களல்லவா?கதைத்து என்ன பிரயோசனம்???? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நெடுக்ஸ் சாமி!என்னதான் பனிப்போராக இருந்தாலும் அங்கே கொடூரமான இனப்பலிகள் நடக்கவில்லை,தாய்தந்தையர் கொல்லப்படவில்லை, சொந்தநிலபுலம் பறிக்கப்படவில்லை, கன்னியர் கற்பிணிகள் பாலியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட வில்லை. அமெரிக்கர்களோ,ரஷ்சியர்களோ சொந்தநாட்டில் அகதிகளாக ஓடித்திரியவில்லை. அவர்கள் சொந்த நிலத்தில், நிறுதிட்டமான அரசியலில் இருந்து கொண்டு ஒருசில அதிகாரலாபங்களுக்காக எதைஎதையோ செய்தார்கள்.அது சரி நீங்கள் இப்போது ஒரு நூற்றாண்டு தாண்டப்போகின்றீர்களல்லவா?கதைத்து என்ன பிரயோசனம்???? :lol:

முதலாம் இரண்டாம் உலகப் போர்களில... எங்களை விட மோசமா பாதிக்கப்பட்டவை. ஆனால் எங்கையும் ஓடல்ல. யூதர்களைத் தவிர..! :lol::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாம் இரண்டாம் உலகப் போர்களில... எங்களை விட மோசமா பாதிக்கப்பட்டவை. ஆனால் எங்கையும் ஓடல்ல. யூதர்களைத் தவிர..! :lol::o

அன்று பல இடங்களுக்கு ஓடி ஒளித்த யூதர்கள்தான் இன்று ஆலமரம் போல் விருட்சமாகி பல நாடுகளிலிருந்தும் தங்கள் சொந்த நாட்டை தங்கள் உறவுகளை பல வழிகளிலும் பாதுகாத்துக்கொள்கிறார்கள் :lol: இரண்டாம் உலகப்போரின் போது வட,தென் அமெரிக்க நாடுகளுக்கு புலம் பெயந்த ஐரோப்பியர்களை நீங்கள் அறியவில்லையா?ஏன் இன்றைய பிரான்ஸ் ஜனாதிபதி கூட யுத்தம் காரணமாக புலம் பெயர்ந்தவர்தான். :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று பல இடங்களுக்கு ஓடி ஒளித்த யூதர்கள்தான் இன்று ஆலமரம் போல் விருட்சமாகி பல நாடுகளிலிருந்தும் தங்கள் சொந்த நாட்டை தங்கள் உறவுகளை பல வழிகளிலும் பாதுகாத்துக்கொள்கிறார்கள் :lol: இரண்டாம் உலகப்போரின் போது வட,தென் அமெரிக்க நாடுகளுக்கு புலம் பெயந்த ஐரோப்பியர்களை நீங்கள் அறியவில்லையா?ஏன் இன்றைய பிரான்ஸ் ஜனாதிபதி கூட யுத்தம் காரணமாக புலம் பெயர்ந்தவர்தான். :o

யூதர்களுக்கு இனப் பற்று உறுதியா இருந்திச்சு.. இருக்குது.. அதால நிலைத்திருக்கிறார்கள். நம்மாக்கள்...???! சும்மா சொல்லாதேங்க கு.சா. ஈழம் கிடைச்சா ஊருக்குப் போவிங்களா.. இல்ல...???!

முதலா இரண்டாம் உலகப் போரின் பேரழிவுக்கு மத்தியில் இடம்பெயர்ந்த மக்கள் தொகையும் உரிமைப் போராட்ட்டத்தில் 80 ஆயிரம் மக்களும் போராளிகளும் மடிய.. நாம் இலட்சக்கணக்கில்.. ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலியாக் கண்டம் நோக்கி பொருளாதார அகதியாக ( அதுதான் அதிகம்) வந்ததும்.. ஒன்றா..???! வந்ததும் வந்தம்.. இனப்பற்றை எத்தனை பேர் காக்கிறம். எத்தனை பேர் தாயகத்தைப் பற்றிச் சிந்திக்கினம்.. தாயக நிலமையில பங்களிப்புச் செய்யினம்...??! ஆனால் ஐரோப்பியர்களும் யூதர்களும் தகாத காலங்களில் தான் பெரும் கண்டுபிடிப்புக்களைச் செய்திருக்கினம்.. நாங்க என்னத்தை.. கண்டுபிடிச்சு.. தாயக்த்தை ஆக்கிரமிப்பில இருந்து காக்கிறம்..???! :(:o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கண்டுபிடித்தவையை வைத்து மனிதன் கைகால் தெரியாமல் நடக்கிறான் .அதைவிட கொடுமை என்னவெண்டால் இவ்வளவு வல்லரசுகளுடன் கூட்டு வைத்திருக்கும் மகிந்த சகோதரர்களுக்கு வன்னிக்கை கால் வைக்கேலாமல் இருக்கு???? :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.