Jump to content

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sputnikasmwp7.jpg

காலைச் சூரியனை

கையெடுத்துக் கும்பிட்டு..

மாலைச் சந்திரனை

வீழ்ந்து வணங்கி..

சுழன்றடிக்கும் சூறாவளிக்கு

பயந்து நடுங்கி...

மின்னலும் இடியும்

மரணத்தின் தூதென்று

ஓடி ஒளித்து..

தீயதும் சுடுவது

முன்வினைப் பயனென்றும்

பூமியது அதிர்ந்து பிளப்பது

பாவிகள் அழிவென்றும்

இயற்கைக்குள்

உள்ளதை விளங்காமல்

உளறிய கணங்களில்..

எதிர்வினை சொல்லி

பகுத்தறிவென்று

வாய் வீரம் பேசி

வீண் பொழுது கழித்திடாமல்

ஆயிரம் கதை கட்டி

அலைந்து கொண்டிராமல்..

மூளையைக் கசக்கி

விண்கலம் கட்டி

விண்ணுக்கு அனுப்பி

வீர சாதனை படைத்த

திருநாள் இன்று..!

"புட்னிக்" எனும் மனிதப்பட்சி

ரஷ்சிய மண்ணிருந்து

விண்ணேகி

அரை நூற்றாண்டும்

கடந்தாயிற்று.

மனித வரலாற்றின்

புது யுகம் இது..

புறப்படுங்கள்..

சுன்னாகம் சந்தியில்

இருந்து...

செவ்வாய் நோக்கி

செவ்வாய் தோசத்தை

சிதைத்து விட்டு வருவோம். :rolleyes:

செய்தி:

" உலகின் முதலாவதும் மனிதன் உருவாக்கியதுமான புட்னிக் (Sputnik) என்று பெயரிடப்பட்டதுமான விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அது ரஷ்சியத் தயாரிப்பில் ரஷ்சியாவில் இருந்து 04-10-1957 இல் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது."

Link to comment
Share on other sites

ஓ இதா சங்கதி தாத்தா நான் கூகிள் பேஜிற்கு போன போது இப்படி ஒரு படம் இருந்தது எனக்கு என்னவென்று விளங்கவில்லை :rolleyes: நீங்க சொன்ன பிறகு தான் என்னவென்று தெரிந்தது தகவலிற்கு நன்றி தாத்தா :( !!இது தான் சொல்லுறது வயசு போன ஆட்கள் கட்டாயம் தேவை என்று.................!! :)

பகுத்தறிவென்று

வாய் வீரம் பேசி

வீண் பொழுது கழித்திடாமல்

ஆயிரம் கதை கட்டி

அலைந்து கொண்டிராமல்..

மூளையைக் கசக்கி

விண்கலம் கட்டி

விண்ணுக்கு அனுப்பி

வீர சாதனை படைத்த

திருநாள் இன்று..!

என்றாலும் தாத்தா இந்த கவிதை வரிகளிள பல விசயங்களை சொல்ல வாறார் போல இருக்கு :) !!அது சரி தாத்தா பகுதறிவு என்றா என்ன?? :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் சொல்லுறது வயசு போன ஆட்கள் கட்டாயம் தேவை என்று.................!!

சும்மாவா சொன்னான்ங்க Old is Gold என்று.

இன்று நான் பிபிசி பார்த்த போது கண்டறிந்தேன்.. புட்னிக் பற்றி. ஆனால் புட்னிக் பற்றி எனக்கு எப்பவோ தெரியும்... நான் அது ஏவப்படும் போது 45 வயது வாலிபனாக இருந்தேன்.

புட்னிக் தான் இன்றைய செய்மதிகளின் முன்னோடி. செய்மதித் தொழில்நுட்பம் இன்று விரிவடைந்திருக்கக் காரணமே புட்னிக்கின் வெற்றியும்.. சோவியத் - அமெரிக்க குளிர் யுத்தத்தில் இராணுவ போட்டியுமே..! ஏன் இணையம் கூட குளிர் யுத்த கால இராணுவப் போட்டி தந்த பரிசுதான். :D

இரண்டாம் உலகப் போரில் வெள்ளையர்கள் எங்களைப் போல யுத்ததுக்கு பயந்து அகதியாக இந்தியாவுக்கு இலங்கைக்கு ஓடி வரல்ல. மாறாக.. தங்கள் தேசங்களை தாங்களே காக்க போராடினர்.. தங்கள் வீரர்களைக் காக்க மருந்துகளைக் கண்டு பிடித்தனர்.. தங்கள் வீரர்கள் வெல்ல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தனர். நாங்க யுத்தம் என்றதும்.. "அசைலம்" அடிச்சதைத் தவிர செய்தது என்ன...???! இதையேன் சொல்லுறன் என்றால் சோவியத் - அமெரிக்க குளிர் யுத்தத்தில் கூட அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைத்தான் தேடி ஓடினர். ஆனா நாங்க நாட்டை விட்டு ஓடிற கோழைகளாகத்தான் இருக்கிறம். ஆனால் கதையளவில் ஆளையாளை மட்டம் தட்டுறதில.. முன்னோடிகள்.. எங்களை விட்டா யாருமே இல்ல. :):rolleyes:

Link to comment
Share on other sites

ஓ இதுதானா விசயம். கவி வடிவிலேயே சொல்லிட்டீங்க. நானும் கூகிள் பக்கம் போனேன். அங்கே தான் பார்த்தேன் sputnik anniversary என்று இருந்திச்சு. நான் முதலில் என்னடா அண்டனா எல்லாம் போட்டிருக்கு னு நினைச்சேன்

நெடுக் அண்ணாக்கு தானே விண்னியல் விநோதங்கள் எல்லாம் தெரியும். சரி கவிதையில் சொன்ன தகவலுக்கு நன்றிகள் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இதுதானா விசயம். கவி வடிவிலேயே சொல்லிட்டீங்க. நானும் கூகிள் பக்கம் போனேன். அங்கே தான் பார்த்தேன் sputnik anniversary என்று இருந்திச்சு. நான் முதலில் என்னடா அண்டனா எல்லாம் போட்டிருக்கு னு நினைச்சேன்

நெடுக் அண்ணாக்கு தானே விண்னியல் விநோதங்கள் எல்லாம் தெரியும். சரி கவிதையில் சொன்ன தகவலுக்கு நன்றிகள் அண்ணா

அப்ப எல்லாரையும் கூகிள் தான் தட்டி எழுப்பி இருக்கி என்றீங்க. கூகிளுக்கு நன்றிகள் பல. மனித வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வைக் கூட மனிதன் அறியப் பிரியப்படாத போதும் கூகிள் இயக்கும் மனிதர்கள் பிரியப்பட்டதால் இன்று.. வெண்ணிலா குழந்தை கூட.. புட்னிக் பற்றி பேசுறா..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது. எண்டு அழகாய் ஒரு கவிதை . வாழ்த்துகள் .

"புட்னிக்" க்கு அகவை ஐம்பது எண்டு உங்க கவிதையை பார்த்துத்தான் தெரிஞ்சது.

இன்று நான் பிபிசி பார்த்த போது கண்டறிந்தேன்.. புட்னிக் பற்றி. ஆனால் புட்னிக் பற்றி எனக்கு எப்பவோ தெரியும்... நான் அது ஏவப்படும் போது 55 வயது வாலிபனாக இருந்தேன்.

ஆகா நெடுக்கு அண்மையில் உங்களை பார்த்திருக்கிறேனே. இப்போதும் உங்கள பார்த்தால் ஒரு 35 வயசு சொல்லலாம் .

Link to comment
Share on other sites

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது. எண்டு அழகாய் ஒரு கவிதை . வாழ்த்துகள் .

"புட்னிக்" க்கு அகவை ஐம்பது எண்டு உங்க கவிதையை பார்த்துத்தான் தெரிஞ்சது.

ஆகா நெடுக்கு அண்மையில் உங்களை பார்த்திருக்கிறேனே. இப்போதும் உங்கள பார்த்தால் ஒரு 35 வயசு சொல்லலாம் .

:unsure: நெடுக் அண்ணாவுக்கு 35? அட பாவமே அவ்வளவுக்கு கிழவனாகிட்டாரா? நான் 2 வருடத்திற்கு முன் பார்த்தப்போ 27 ஆக தானே இருந்தார் :(

அப்ப எல்லாரையும் கூகிள் தான் தட்டி எழுப்பி இருக்கி என்றீங்க. கூகிளுக்கு நன்றிகள் பல. மனித வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வைக் கூட மனிதன் அறியப் பிரியப்படாத போதும் கூகிள் இயக்கும் மனிதர்கள் பிரியப்பட்டதால் இன்று.. வெண்ணிலா குழந்தை கூட.. புட்னிக் பற்றி பேசுறா..! :D

பின்னை தமிழில் சொன்னால் வெண்ணிலா குழந்தை புட்னிக் பற்றி பேசும் தானே. அட எஸ் சைலன்ஸ் ஆகிட்டுது. நான் வாசிச்சப்போ எஸ் உச்சரிப்பும் வந்திச்சு போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"புட்னிக்" எனும் பட்சிக்கு அகவை ஐம்பது. எண்டு அழகாய் ஒரு கவிதை . வாழ்த்துகள் ."புட்னிக்" க்கு அகவை ஐம்பது எண்டு உங்க கவிதையை பார்த்துத்தான் தெரிஞ்சது.ஆகா நெடுக்கு அண்மையில் உங்களை பார்த்திருக்கிறேனே. இப்போதும் உங்கள பார்த்தால் ஒரு 35 வயசு சொல்லலாம் .

நீங்க எங்க என்னைப் பார்த்தீங்க. பொய் பேசக் கூடாது. நீங்கள் யாரோ நெடுக்கான 35 வயசு வாலிபரைப் பார்த்திட்டு நெடுக்ஸ் என்று நினைச்சிட்டீங்க போல. நான் 95 வயசு ஆள்...! :D

:unsure: நெடுக் அண்ணாவுக்கு 35? அட பாவமே அவ்வளவுக்கு கிழவனாகிட்டாரா? நான் 2 வருடத்திற்கு முன் பார்த்தப்போ 27 ஆக தானே இருந்தார் :Dபின்னை தமிழில் சொன்னால் வெண்ணிலா குழந்தை புட்னிக் பற்றி பேசும் தானே. அட எஸ் சைலன்ஸ் ஆகிட்டுது. நான் வாசிச்சப்போ எஸ் உச்சரிப்பும் வந்திச்சு போல

நான் நெடுக்ஸ் தாத்தா. நீங்க எந்த அண்ணாவைப் பார்த்தீங்க. அவர் அப்படி இருக்கலாம். நான் 95+ "ஓல்ட் மான்".

ஸ்புட்னிக் என்று தமிழில எழுதிறதில்ல.. புட்னிக் என்றுதான் எழுதிறது. அதுதான் ஆங்கிலப்பதத்தை கவிதைக்கு கீழ் செய்தியில் போட்டேன். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் போது எனது மனைவியின் தகப்பனார் வீட்டில் இருந்த நாய்க்கு லைகா என்று பெயரிட்டார்.அது என்ன லைகா என்றால் சந்திரனுக்கு ரசியர்அனுப்பிய நாயின் பெயரென்பார்.

லைகா புட்னிக்கில் போனதா?அல்லது அடுத்ததிலா?

Link to comment
Share on other sites

கவிதை அருமை

அன்றைய தாத்தாக்களின் சிந்தனைதான் இன்றைய இளைஞர்கண்டு பிடிப்புக்களுக்கு அத்திவாரம்.... இன்று விண்வெளிசென்று பார்க்கும் கோள்களை நமது மூதாதையர் அன்றே அறிந்திருந்தனர் சூநியன் உதிக்கும் நேரம் அஸ்த்மிக்கும் நேரம் கிரகணம் .... எல்லாம் கணித்திருக்கின்றார்கள்... என்ன அன்றைய மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக ஒவ்வொரு கதைகளாக எடுத்துவிட இப்போது அந்தக் கதைகளின் கருத்தை நோக்காது சிலர் அந்தக்கால விஞ்ஞானத் தாத்தாக்களை எல்லாம் விசரர் என்று நோக்குகின்றார்கள் :unsure:

இப்போதெல்லாம் அகழ்வாராட்சியில் கண்டுபிடிப்பவற்றை பார்த்து மூக்குக்குள் விரலை வைக்கின்றார்கள் :( அட அந்தக்காலத்தில் கூட இன்றைய நகர அமைப்பாக இருந்திருக்கின்றதே என (ஆதாரம் ... சிந்துவெளி நாகரீகத்தில் மொகஞ்சதாரா ஹரப்பா போன்றன )

இன்றைய விஞ்ஞானத்தின் ஆரம்ப அத்திவாரம் அன்று ... அதன் வளர்ச்சி இன்று.... இன்னும் பல்லாயிரம் வருடம் போன பின்பு அன்றைய மனிதன் இன்றைய மனிதனை மூடன் என்று சொன்னால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் போது எனது மனைவியின் தகப்பனார் வீட்டில் இருந்த நாய்க்கு லைகா என்று பெயரிட்டார்.அது என்ன லைகா என்றால் சந்திரனுக்கு ரசியர்அனுப்பிய நாயின் பெயரென்பார்.லைகா புட்னிக்கில் போனதா?அல்லது அடுத்ததிலா?

ரஷ்சியா நாய் அனுப்பியதை அறிந்திருக்கிறேன். ஆனால் இந்த புட்னிக் அதைக் காவிச் செல்லவில்லை. புட்னிக் 2 தான் அதைக் காவிச் சென்றிருந்தது.ஆனால் அந்த பெண் நாய் ஓர் துரதிஸ்டசாலி. அவர் விண்வெளிக்கு ஏவப்பட்டு சில மணி நேரங்களிலேயே இறந்து விட்டார்.அந்த நாய்க்கு இட்ட பெயர்.. Laika

Laika.jpg

இவர் தான் அந்த நாயார். இவர் விண்ணுக்கு ஏவப்பட்டது 3 November 1957 இல்.

http://en.wikipedia.org/wiki/Laika

கவிதை அருமைஅன்றைய தாத்தாக்களின் சிந்தனைதான் இன்றைய இளைஞர்கண்டு பிடிப்புக்களுக்கு அத்திவாரம்.... இன்று விண்வெளிசென்று பார்க்கும் கோள்களை நமது மூதாதையர் அன்றே அறிந்திருந்தனர் சூநியன் உதிக்கும் நேரம் அஸ்த்மிக்கும் நேரம் கிரகணம் .... எல்லாம் கணித்திருக்கின்றார்கள்... என்ன அன்றைய மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக ஒவ்வொரு கதைகளாக எடுத்துவிட இப்போது அந்தக் கதைகளின் கருத்தை நோக்காது சிலர் அந்தக்கால விஞ்ஞானத் தாத்தாக்களை எல்லாம் விசரர் என்று நோக்குகின்றார்கள் :unsure: இப்போதெல்லாம் அகழ்வாராட்சியில் கண்டுபிடிப்பவற்றை பார்த்து மூக்குக்குள் விரலை வைக்கின்றார்கள் :( அட அந்தக்காலத்தில் கூட இன்றைய நகர அமைப்பாக இருந்திருக்கின்றதே என (ஆதாரம் ... சிந்துவெளி நாகரீகத்தில் மொகஞ்சதாரா ஹரப்பா போன்றன )இன்றைய விஞ்ஞானத்தின் ஆரம்ப அத்திவாரம் அன்று ... அதன் வளர்ச்சி இன்று.... இன்னும் பல்லாயிரம் வருடம் போன பின்பு அன்றைய மனிதன் இன்றைய மனிதனை மூடன் என்று சொன்னால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.... :D

நியூட்டன் தாத்தாவும் கண்டுபிடிச்சவர் எங்கட தாத்தாவும் கன்று பிடிச்சவர். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. :lol::D

நன்றி கெளரி.

Link to comment
Share on other sites

புட்னிக் பற்றி விக்கிபீடியாவிலிருந்து :

ஸ்புட்னிக் 1தான் பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட முதலாவது மனிதனால் செய்யப்பட்ட செயற்கைக் கோள் ஆகும். இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இச் செயற்கைக் கோளின் நிறை 83 கிகி (184 இறாத்தல்) ஆகும். இது இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்தது. இது பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்கள்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. ஸ்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. ஸ்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.

ஸ்புட்னிக் 1 சோவியத் யூனியனுடைய ஸ்புட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றிற் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்ற இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக் கோள் என்ற பெருமையைப் பெற்றது. ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது.

ஐக்கிய அமெரிக்காவும் ஆரம்பகட்டமாக, அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த குழுக்களினூடாக, வான்காட் திட்டம் என்ற பெயரில், செயற்கைக் கோள் ஆராச்சியில் ஈடுபட்டிருந்தது. அவர்களுடைய முதல் ஏவுதலை, ஸ்புட்னிக்குக்கு முன்னரே செய்ய எண்ணியிருந்தும், அது நடைபெறாமல் பலமுறை தள்ளிப்போடப்பட்டது.

பின்னர், அமெரிக்கத் தரைப்படையின் ஜுபிடர் திட்டத்தின் கீழ் ஒரு அவசர முயற்சியொன்று தொடங்கப்பட்டு 1958 ஜனவரியில் எக்ஸ்புளோரர் 1 என்ற செயற்கைக் கோளை ஏவுவதில் வெற்றிகண்டனர்.

இது, Cold War இன் ஒரு பகுதியாக, இரு வல்லரசுகளுக்கிடையே நடைபெற்ற விண்வெளிப் போட்டியின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. இரு நாடுகளும், விண்வெளி ஆய்வில் ஒன்றையொன்று முந்தும் முயற்சியின் உச்சக் கட்டமாக, அமெரிக்கா, அப்பல்லோ 11 இல் மனிதர்களை அனுப்பிச் சந்திரனில் இறக்கியது. ஸ்புட்னிக் 1 ஜனவரி 4 1958ல் திரும்பவும் பூமியில் விழுந்தது.

http://ta.wikipedia.org/wiki/ஸ்புட்னிக்_1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாவா சொன்னான்ங்க Old is Gold என்று.

இன்று நான் பிபிசி பார்த்த போது கண்டறிந்தேன்.. புட்னிக் பற்றி. ஆனால் புட்னிக் பற்றி எனக்கு எப்பவோ தெரியும்... நான் அது ஏவப்படும் போது 45 வயது வாலிபனாக இருந்தேன். :lol:

புட்னிக் தான் இன்றைய செய்மதிகளின் முன்னோடி. செய்மதித் தொழில்நுட்பம் இன்று விரிவடைந்திருக்கக் காரணமே புட்னிக்கின் வெற்றியும்.. சோவியத் - அமெரிக்க குளிர் யுத்தத்தில் இராணுவ போட்டியுமே..! ஏன் இணையம் கூட குளிர் யுத்த கால இராணுவப் போட்டி தந்த பரிசுதான். :o

இரண்டாம் உலகப் போரில் வெள்ளையர்கள் எங்களைப் போல யுத்ததுக்கு பயந்து அகதியாக இந்தியாவுக்கு இலங்கைக்கு ஓடி வரல்ல. மாறாக.. தங்கள் தேசங்களை தாங்களே காக்க போராடினர்.. தங்கள் வீரர்களைக் காக்க மருந்துகளைக் கண்டு பிடித்தனர்.. தங்கள் வீரர்கள் வெல்ல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்தனர். நாங்க யுத்தம் என்றதும்.. "அசைலம்" அடிச்சதைத் தவிர செய்தது என்ன...???! இதையேன் சொல்லுறன் என்றால் சோவியத் - அமெரிக்க குளிர் யுத்தத்தில் கூட அவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியைத்தான் தேடி ஓடினர். ஆனா நாங்க நாட்டை விட்டு ஓடிற கோழைகளாகத்தான் இருக்கிறம். ஆனால் கதையளவில் ஆளையாளை மட்டம் தட்டுறதில.. முன்னோடிகள்.. எங்களை விட்டா யாருமே இல்ல. :(:lol:

ஐயோ நெடுக்ஸ் சாமி!என்னதான் பனிப்போராக இருந்தாலும் அங்கே கொடூரமான இனப்பலிகள் நடக்கவில்லை,தாய்தந்தையர் கொல்லப்படவில்லை, சொந்தநிலபுலம் பறிக்கப்படவில்லை, கன்னியர் கற்பிணிகள் பாலியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட வில்லை. அமெரிக்கர்களோ,ரஷ்சியர்களோ சொந்தநாட்டில் அகதிகளாக ஓடித்திரியவில்லை. அவர்கள் சொந்த நிலத்தில், நிறுதிட்டமான அரசியலில் இருந்து கொண்டு ஒருசில அதிகாரலாபங்களுக்காக எதைஎதையோ செய்தார்கள்.அது சரி நீங்கள் இப்போது ஒரு நூற்றாண்டு தாண்டப்போகின்றீர்களல்லவா?கதைத்து என்ன பிரயோசனம்???? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நெடுக்ஸ் சாமி!என்னதான் பனிப்போராக இருந்தாலும் அங்கே கொடூரமான இனப்பலிகள் நடக்கவில்லை,தாய்தந்தையர் கொல்லப்படவில்லை, சொந்தநிலபுலம் பறிக்கப்படவில்லை, கன்னியர் கற்பிணிகள் பாலியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட வில்லை. அமெரிக்கர்களோ,ரஷ்சியர்களோ சொந்தநாட்டில் அகதிகளாக ஓடித்திரியவில்லை. அவர்கள் சொந்த நிலத்தில், நிறுதிட்டமான அரசியலில் இருந்து கொண்டு ஒருசில அதிகாரலாபங்களுக்காக எதைஎதையோ செய்தார்கள்.அது சரி நீங்கள் இப்போது ஒரு நூற்றாண்டு தாண்டப்போகின்றீர்களல்லவா?கதைத்து என்ன பிரயோசனம்???? :lol:

முதலாம் இரண்டாம் உலகப் போர்களில... எங்களை விட மோசமா பாதிக்கப்பட்டவை. ஆனால் எங்கையும் ஓடல்ல. யூதர்களைத் தவிர..! :lol::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாம் இரண்டாம் உலகப் போர்களில... எங்களை விட மோசமா பாதிக்கப்பட்டவை. ஆனால் எங்கையும் ஓடல்ல. யூதர்களைத் தவிர..! :lol::o

அன்று பல இடங்களுக்கு ஓடி ஒளித்த யூதர்கள்தான் இன்று ஆலமரம் போல் விருட்சமாகி பல நாடுகளிலிருந்தும் தங்கள் சொந்த நாட்டை தங்கள் உறவுகளை பல வழிகளிலும் பாதுகாத்துக்கொள்கிறார்கள் :lol: இரண்டாம் உலகப்போரின் போது வட,தென் அமெரிக்க நாடுகளுக்கு புலம் பெயந்த ஐரோப்பியர்களை நீங்கள் அறியவில்லையா?ஏன் இன்றைய பிரான்ஸ் ஜனாதிபதி கூட யுத்தம் காரணமாக புலம் பெயர்ந்தவர்தான். :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று பல இடங்களுக்கு ஓடி ஒளித்த யூதர்கள்தான் இன்று ஆலமரம் போல் விருட்சமாகி பல நாடுகளிலிருந்தும் தங்கள் சொந்த நாட்டை தங்கள் உறவுகளை பல வழிகளிலும் பாதுகாத்துக்கொள்கிறார்கள் :lol: இரண்டாம் உலகப்போரின் போது வட,தென் அமெரிக்க நாடுகளுக்கு புலம் பெயந்த ஐரோப்பியர்களை நீங்கள் அறியவில்லையா?ஏன் இன்றைய பிரான்ஸ் ஜனாதிபதி கூட யுத்தம் காரணமாக புலம் பெயர்ந்தவர்தான். :o

யூதர்களுக்கு இனப் பற்று உறுதியா இருந்திச்சு.. இருக்குது.. அதால நிலைத்திருக்கிறார்கள். நம்மாக்கள்...???! சும்மா சொல்லாதேங்க கு.சா. ஈழம் கிடைச்சா ஊருக்குப் போவிங்களா.. இல்ல...???!

முதலா இரண்டாம் உலகப் போரின் பேரழிவுக்கு மத்தியில் இடம்பெயர்ந்த மக்கள் தொகையும் உரிமைப் போராட்ட்டத்தில் 80 ஆயிரம் மக்களும் போராளிகளும் மடிய.. நாம் இலட்சக்கணக்கில்.. ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலியாக் கண்டம் நோக்கி பொருளாதார அகதியாக ( அதுதான் அதிகம்) வந்ததும்.. ஒன்றா..???! வந்ததும் வந்தம்.. இனப்பற்றை எத்தனை பேர் காக்கிறம். எத்தனை பேர் தாயகத்தைப் பற்றிச் சிந்திக்கினம்.. தாயக நிலமையில பங்களிப்புச் செய்யினம்...??! ஆனால் ஐரோப்பியர்களும் யூதர்களும் தகாத காலங்களில் தான் பெரும் கண்டுபிடிப்புக்களைச் செய்திருக்கினம்.. நாங்க என்னத்தை.. கண்டுபிடிச்சு.. தாயக்த்தை ஆக்கிரமிப்பில இருந்து காக்கிறம்..???! :(:o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே கண்டுபிடித்தவையை வைத்து மனிதன் கைகால் தெரியாமல் நடக்கிறான் .அதைவிட கொடுமை என்னவெண்டால் இவ்வளவு வல்லரசுகளுடன் கூட்டு வைத்திருக்கும் மகிந்த சகோதரர்களுக்கு வன்னிக்கை கால் வைக்கேலாமல் இருக்கு???? :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.