Jump to content

ஏழைகள்.. வயிற்றுக்கு..இயன்றதை நீ செய்..


Recommended Posts

என்ன உலகமிது..ஐயா

என்ன உலகமிது...

பசியினில் மனிதன்

பரிதவித்தே..

தூக்கிலிட்டு..வாழ்விழந்து

போகிறதே...

பார்க்க.. கேட்க

மனிதத்தின் உதவியின்றி..

ஒரு சமுதாயம்..

உணவின்றி சாகிறதே..

உணவின் மேலே..

உருளுது

ஒரு உலகம்..

உணவிற்காக உயிரைக்

கரைத்து அலையுது

ஒரு உலகம்..

பசி பசி என்றே

அழுகின்ற குழந்தையை

பார்த்திட மறுத்தே..

உயிரைத்துறக்கிறான்

ஒரு தந்தை..

பசியில்லை என்றே..

மறுக்கின்ற குழந்தைக்கு

பலவித உணவாய்ப் படைக்கின்றான்

ஒரு தந்தை..

ஏற்றமும் இறக்கமும்..

ஏனிந்த உலகில்-நல்

மாற்றங்கள் வருமோ

மனிதனின் வாழ்வில்

உனக்கான உணவை..

அளவாக அருந்து..

பிறர்க்காக உனது..

உணவினைப்பகிர்ந்து

ஏழைக்கு உதவ

நாளைக்கு என்றேன்..

இன்றே ஏதும் செய்..

மானிட உணர்வை..

மனதினில் வை

மனித நேயத்தை

மலர்ந்திட வை

இறைவன் இப்போது

இளைப்பாறும் வேளை..

ஏழைகள்.. வயிற்றுக்கு..

இயன்றதை நீ செய்..

ஏழைகள்.. வயிற்றுக்கு..

இயன்றதை நீ செய்..

ஏழைகள்.. வயிற்றுக்கு..

இயன்றதை நீ செய்..

ஏழைகள்.. வயிற்றுக்கு..

இயன்றதை நீ செய்..

ஏழைகள்.. வயிற்றுக்கு..

இயன்றதை நீ செய்..

ஏழைகள்.. வயிற்றுக்கு..

இயன்றதை நீ செய்..

Link to comment
Share on other sites

பசி பசி என்றே

அழுகின்ற குழந்தையை

பார்த்திட மறுத்தே..

உயிரைத்துறக்கிறான்

ஒரு தந்தை..

பசியில்லை என்றே..

மறுக்கின்ற குழந்தைக்கு

பலவித உணவாய்ப் படைக்கின்றான்

ஒரு தந்தை..

நல்லாக இருக்கு உங்க கவிதை

சிந்திக்க தூண்டுகின்றன வரிகள்.

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடிது கொடிது பசிக்கொடுமை கொடிது.

உங்க கவிதை வாசிக்கும் போது இன்று நிகழ்ந்த "அனலைதீவில் பெரும் பட்டினி அவலம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி தற்கொலை" என்ற நிகழ்வுதான் நினைவுக்கு வருகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உனக்கான உணவை..

அளவாக அருந்து..

பிறர்க்காக உனது..

உணவினைப்பகிர்ந்து

<<

தம்பி (விகட)கவி, ஒவ்வோர் வரிகளிலுமே ஏக்கமும் உதவிடு என்கிற நோக்கமும் வேகமும் தெறிக்கின்றன.

மேற்கண்ட வரிகள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய மிகச் சிறந்த விடயம்.

"எழுதிக்கொண்டே இருக்கின்றோம்!! இருளைக் கடக்க நினைக்கின்றோம்! சூரியனின் கதிர்களை எங்களுக்காய் திருப்புவோம்"..

விடியும்!" பகை முடியும்" ஆனால்!! போராட்டம் ஓயாது!

நன்றி! வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

நன்றி விகடகவி!

நல்ல வரிகள், சிந்தித்தால் மட்டும்போதுமா? ஊருக்கு உபதேசம் பண்ணியால் மட்டும் போதுமா?

Link to comment
Share on other sites

பசி பசி என்றே

அழுகின்ற குழந்தையை

பார்த்திட மறுத்தே..

உயிரைத்துறக்கிறான்

ஒரு தந்தை..

பசியில்லை என்றே..

மறுக்கின்ற குழந்தைக்கு

பலவித உணவாய்ப் படைக்கின்றான்

ஒரு தந்தை..

விகடகவிமாமா ஸ்பேசல் வாழ்த்துகள் இந்த கவிதைக்கு அப்படி ஒரு பல விடயங்களை உள்ளடக்கிய கவிதை வாழ்த்துகள் மாமா!!அதிலும் இந்த வரிகளிள் பல அர்த்தங்களை காண்பித்து செல்வது அழகு மாமா!! :rolleyes:

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

மண்ணில் வந்து இறங்கிய போது

மலைத்து போயின மழலையின் கண்கள்.

ஆகா உலகம் எத்தனை அழகு!

இன்னும் எனகாய் என்னென்ன உளது!

பொருட்களை எல்லாம் பங்கிடபடத்து

பிஞ்சு முகதிற்கு தெரியுமா!! :D

அப்ப நான் வரடா!!

Link to comment
Share on other sites

மானிட உணர்வை..

மனதினில் வை

மனித நேயத்தை

மலர்ந்திட வை

அழகான கவிதை வரிகள் விகடகவி... உங்கள் எண்ணம் கூட அழகு...

Link to comment
Share on other sites

உணவின் மேலே..

உருளுது

ஒரு உலகம்..

உணவிற்காக உயிரைக்

கரைத்து அலையுது

ஒரு உலகம்..

இது கவிதை மட்டும் அல்ல , இது தான் நிஜம்,

மாற்றம் காண அனைவரும் பாடுபடுவேம்....

நன்றி

Link to comment
Share on other sites

அருமையான கவிதை தந்த விகடகவிக்கு நன்றிகள். தொடர்ந்தும் இப்படியான கவிதைகளை எதிர்பார்த்த வண்ணம்.....................

இயன்றதை செய்வோம்

ஏழையை சிரிக்க வைப்போம்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்

அன்புடன்

சுகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கசப்பான நிஜத்தை கவிதையாக வடித்த விகடகவிக்கு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நல்ல கவி வரிகள்.

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

ஏற்றமும் இறக்கமும்..

ஏனிந்த உலகில்-நல்

மாற்றங்கள் வருமோ

மனிதனின் வாழ்வில்

மேலே குறிப்பிட்ட வரிகள்

இன்றைய யதார்த்தத்தின் விம்பங்கள்.

Link to comment
Share on other sites

என்னோட இந்த எழுத்தை நீங்க வரவேற்றால் உங்கள் பணத்தில் ஒருநாள் ஒரு ஏழை பசியை போக்கினால்... அந்த ஏழை வடிவில் கடவுள் ஆசி உங்களைச் சேரும்..

எல்லோருக்கும் அன்பு கலந்த நன்றிகள்..

Link to comment
Share on other sites

பசி பசி என்றே

அழுகின்ற குழந்தையை

பார்த்திட மறுத்தே..

உயிரைத்துறக்கிறான்

ஒரு தந்தை..

பசியில்லை என்றே..

மறுக்கின்ற குழந்தைக்கு

பலவித உணவாய்ப் படைக்கின்றான்

ஒரு தந்தை..

உங்கள் கவிதையில் பசியால் குழந்தை துடிக்கும்போது தந்தையின் மனக் குமுறலை உணர முடிகிறது.

எமக்குப் பசிக்கும்போது உணவைத் தவிர எதுவும் நினைவிற்கு வருவதில்லை. ஆனால் தினமும் உலகில் பசியால் இறக்கும் நூற்றுக்கணக்கான சிறார்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பது சோகமான உண்மை.

Link to comment
Share on other sites

இணையவன்... எதியோப்பியாவில் வறமையில் குழந்தைகள் சாவது எப்போதோ கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால்..

அதை பெரிய வலியாக உணரவில்லை .. இப்போது எங்கள் உறவுகள்.. பசியால் வாடி இறப்பதாக அறிந்ததும்.. வேதனையாக இருக்கிறது..

Link to comment
Share on other sites

வறுமையில் உழலும் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்ட தூண்டவைக்கும் கவிதை உணர்வுபூர்மகாக உள்ளது

Link to comment
Share on other sites

//ஏற்றமும் இறக்கமும்..

ஏனிந்த உலகில்-நல்

மாற்றங்கள் வருமோ

மனிதனின் வாழ்வில்//

மிகவும் நல்ல வரிகள்..உண்மையிலேயே அருமையான கவிதை ..கவிதைக்கரு...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.