Jump to content

ஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்-2


Recommended Posts

தயா!

நீங்கள் எழுதிய கருத்துக்கள் எதுவும் இங்கே நீக்கப்படத் தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

நீங்கள் கருத்துக்களை கண்ணியமான முறையில் தெரிவிக்கிறீர்கள். உங்களுடைய எழுத்துக்கள் யார் மீது வெறுப்புக்களையும், குரோதங்களையும் கொட்டவில்லை.

உங்களுடைய கருத்துக்கள் எனக்கு தவறாகப் படுகிறது. ஆனால் நீக்கப்படுகின்ற அளவிற்கு பண்பு மீறி நீங்கள் இங்கே எழுதிய கருத்துக்கள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80கள், அல்லது அதற்கு அண்மைய காலத்தில் கொடுக்கப்பட்ட ஆதரவுகளுக்கும், 90களின் பிற்பகுதியில் கொடுக்கப்பட்ட ஆதரவுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.

80களில் இந்திராக்காந்தியும் ஆதரவு தந்தார், எம்ஜிஆர் தந்தார், கருணாநிதி தந்hர். ஏன் இயக்கத்தை விரோதமாகப் பார்க்கின்ற ஜெயலலிதா ஆதரித்துப் பேசாத பேச்சா?

ஒருவகையில் அந்த நாட்களில் பொதுப்படையான ஆதரவு தந்தமைக்கு மரியாதை அளிக்கின்றேன். ஆனால் தயா சொன்னது போலத் தமிழர்களுக்கு வந்த சேகுவரா கிடையாது.

Link to comment
Share on other sites

ஈழத்தில் தமிழ்த்தேசியம் என்பது ஓரளவு பெறுமதியாக உருவாக்கம் கொண்டிருப்பது தலைவர் பிரபாகரனின் இந்த காலத்தில் தான் தவிர முன்னெப்போதும் அல்ல. தேசத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் உள்வாங்கி அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளையும் மதிக்கின்ற அதே நேரம் அனைத்து தரப்பு மக்களும் சரி சமமாக போராட்டத்தில் பங்கு பெறும் நிகழ்வு இப்போது தான் நிகழ்கின்றது. இங்கே ஓரளவு என்று நான் குறிப்பிடுவதுக்கு காரணம் இருக்கின்றது. மதவாரியாக வேறுபட்டு நிற்கும் இஸ்லாமிய சமூகத்தினருக்கும் ஏனைய தரப்ப்பும் மொழி வாழ்விடம் அடிப்படையில் ஒன்றிணையும் போது தான் ஓரளவு என்பது முழுமை பெறும்.

தலைவர் பிரபாகரனுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ்தேசியம் என்பது அடிமட்ட மக்களும் சம்மந்தப்பட்டதில்லை. அது மேட்டுக்குடியின் பிரதிபலிப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய தேசியம் என்பது அடிமட்ட மக்களை பிரதிபலிக்கும் ஒன்றாகவோ அல்லது அனைத்து தரப்பு மக்களின் வாழ்வுரிமைகளையும் மதிக்கும் ஒன்றாகவே எந்த காலத்திலும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. இந்திய தேசியம் என்பது அங்கு உயர்வர்கத்தின் ஒரு கருவியாகவே என்றும் இருந்து வருகின்றது. இந்த நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடும் ஒரு விதிவிலக்கல்ல.

தேசியம் ஒரு தரப்பின் வாழ்வுரிமையை மறுதலிக்கின்றது என்றால் அந்த தரப்பு தேசியத்தை தலையில் தூக்கி வைத்து ஆடத்தேவையில்லை. இன்றைய தாழ்தப்பட்ட மக்களுக்கு இந்திய தேசியம் எதிரானது என்பது வெளிப்படை. இந்த நிலையில் இந்திய அதிகார வர்கத்துக்கு எதிராக போராட வேண்டிய தேவைதான் அவர்களிடம் உண்டு தவிர இந்திய தேசியம் என்றொரு மாயையை கட்டிக்கொண்டு அழவேண்டிய அவசியம் என்ன அவர்களுக்கு உண்டு?

உதாரணத்துக்கு ஈழத்தமிழர்களில் நாவலர் மட்டுமே குறிப்பிடும் படியாக காலனித்துவ அரசை எதிர்த்தார் என்பது தெரிந்த ஒன்று. அவர் எதிர்ததுக்கான காரணமும் தெரிந்த ஒன்று. அவரின் செயற்பாட்டை ஈழ தேசய செயற்பாடாக முன்னெடுத்தால் ஈழத்தில் நாவலரின் சாதியை தவிர்ந்த ஏனைய சாதிகளுக்கு அந்த தேசியம் விரோதமானதாக இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகின்றது? ஏனெனில் நாவலரின் சாதியம் சம்மந்தமான நிலைப்பாடு என்ன என்பதும் வெளிப்படையானது.

ஈழத்தில் முன்பு அடயாளப்படுத்தப்பட்ட தேசியம் என்பது வேறு, இப்போது உள்ள தேசியம் என்பதின் வளர்ச்சிப்போக்கு வேறு. இப்போது உள்ள வளர்ச்சியானது ஒரு முழுமையை எட்டிவிடும் என்ற நம்பிக்கை உண்டு.

காலனித்துவத்தை எதிர்ப்பது பெரியாரின் குறிக்கோளாக இருந்ததில்லை. பெரியார் கையில் எடுத்த பிரச்சனை இந்திய தேசியம் என்ற மாயைக்குள் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகள் சார்ந்தது. பெரியார் காலத்தில் அவர் தேசியத்தை தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டிய தேவை இல்லை. அவர் கையில் எடுத்த விசயங்கள் அது சார்ந்ததும் இல்லை. ஆனால் பெரியாரின் செயற்பாடுகளின் விழைவுகள் ஒரு பெறுமதியான தேசிய வளர்ச்சிக்கு அல்லது இந்திய தேசியத்திலும் அரசிலும் கணிசமான பங்கு மேலும் இந்திய அதிகார வர்க்கத்தை நோக்கி உரிமைகள் கேட்க கூடிய வலு என்பன வளர வித்திட்டது என்பது உண்மை.

தேசியம் என்பது தேசத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் அவர்களினது உரிமைகளையும் பிரதிபலிக்கும் ஒன்றாக இல்லதாத பட்சத்தில் அதனை முக்கியத்துவப்படுத்த வேண்டிய தேவை எதுவும் இல்லை. வாழ்வுரிமையை மறுதலிப்பது தேசியமாக இருந்தால் அதையும் எதிர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

தலைவர் பிரபாகரன் காலத்தில் நாம் காணும் தேசிய எழுச்சி என்பது தமிழர் வரலாற்றில் ஒரு புதிய விசயம். தமிழர் தேசியம் இப்போது உள்ளது போல் எந்தக்காலத்திலும் வலுவாக இருந்ததில்லை. ஆரோக்கியமாக இருந்ததில்லை. இந்த தேசிய வாத எழுச்சியை முழுமையடைய செய்ய வேண்டும். அதற்கு அனுசரிப்புகள் விட்டுக்கொடுப்புகள் என்னும் எராளமான நல்ல விசயங்கள் செய்ய வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

தயா!

உங்களுடைய கருத்துக்கள் எனக்கு தவறாகப் படுகிறது. ஆனால் நீக்கப்படுகின்ற அளவிற்கு பண்பு மீறி நீங்கள் இங்கே எழுதிய கருத்துக்கள் இல்லை.

எனது கருத்துக்களை தேவை ஏற்பட்டால் நீக்க சொன்னதுக்கு முக்கிய காரணமே இண்றைக்கு தமிழீழ தேசியத்துக்காக பாடு படும் எல்லோரிலும் அங்கமாக திகழும் பெரியாரின் வளிவந்தவர்களை காயப்படுத்த வேண்டாம் என்பதினால் மட்டும்தான்... எங்களின் விடுதலைக்கு எல்லோரின் உதவியும் வேண்டும்... அதனால்தான்...!

மற்றும் உங்களு்க்கு தெரிந்த விடயம் எண்டாலும் ஒருமுறை மீண்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்...

1956 ம் வருடம் . சிங்களம் தனிச்சட்டம்தான் தமிழரை விடுதலை நோக்கி பயனிக்க தள்ளியது என்பது உங்களுக்கு தெரியாதது இல்லை... அதே காலப்பகுதியில் அறிஞர் அண்ணாவின் தி. மு. க தலைமையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களும் கட்டுரைகளும், மேடை பேச்சுகளும் பரவலாக ஈழத்துக்கும் எட்டிய காலப்பகுதி அது...!!

அந்த காலப்பகுதியில் தான் தமிழரசு கட்சியும் சரி, பேரவையும் சரி அறிஞர் அண்ணாவின் செயற்பாடுகளால் உந்தப்படார்கள், செயற்படார்கள் எண்று சொன்னால் மிகையானது அல்ல... அதில் தந்தை செல்வா திமுக தலைவர் அண்ணாவை அடிக்கடி சந்தித்து ஆதரவையும் ஆலோசனைகளையும் பெற்றும் இருக்கிறார்....! இதில் கலைஞர் கருணாநிதியின் பேச்சுகள் ஈழத்தில் மிகவும் பிரபல்யம்.. அதில் கவரப்பட்டவர்கள் எனது குடும்பதில் பலர் இருந்தனர்.. அவர் இந்தியை எதிர்த்து பேசவில்லை சிங்களதை பற்றித்தான் பேசுகிறார் எனும் உணர்வை தோற்றுவித்தவர் கலைஞர்.... தமிழீழ எழுச்சியை தோற்றுவித்தவர்களுக்கு உற்ற்சாகம் தந்தவர்கள் அறிஞர் அண்ணாத்துரையும் அவர் தொண்டர்களும் தானே அண்றி பெரியார் அல்ல...!

விடயம் இப்படி இருக்க, அண்ணாவால் தமிழக தமிழர் தேசியம் எழுச்சியாக்க பட்டதை பெரியார் கண்டிக்கிறார்...( இதைத்தான் நீங்கள் இந்திய தேசியதை கண்டித்ததாக அர்த்தப் படுத்தி உள்ளீர்கள்) அவர் சொன்னதில் அறிஞர் அண்ணாவின் தேசியம் மீண்டும் இன்னும் ஒரு சுறண்டலை தமிழக தாள்த்த பட்ட மக்களுக்கு செய்து இன்னல்கலை விளைவிக்க கூடாது எனும் நல்ல நோக்கமாக கூட இருந்து இருக்கலாம்...!

ஆனால் பெரியார் அவ்வளவாக ஈழத்தமிழர் பிரச்சினைகளில் நாட்டம் இல்லாதோ, இல்லை அறிந்து கொள்ளாதவராகவோதான் இருந்தார்... அதுக்காக பெரியாரை நான் குறை சொல்ல வரவில்லை... அவரின் நாட்டில் மட்டும் அவர் அக்கறைகொள்வதை நான் எப்படி குறையாக சொல்ல முடியும்... ??

ஆனால் அறிஞர் அண்ணா பெற வேண்டிய ஒரு பெரு்மையை பெரியாருக்கு நான் கொடுக்க விரும்பவில்லை...

யாழ்களத்தில் இளங்கோ அவர்கள் பேரவை தலைவராக இருந்த சத்தியசீலன் அவர்களின் பேட்டி ஒண்றை இணைத்து இருந்தார்.. அதில் சத்தியசீலன் அவர்கள் பெரியாரை சந்தித்ததை கனிவாகவும் மகிழ்வாகவும் சொல்கிறார்...

  • " 1971 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாங்கள் பெரியாரைச் சந்தித்தோம். அப்போது பெரியார் உடல் நலமில்லாமல் திருச்சியில் தங்கியிருந்தார். அவரைச் சந்தித்து எங்களின் போராட்டத்தை விளக்கினோம். அப்போது அவர் சிங்களவன் பெரிய பெரிய டாங்கிகள் பீரங்கிகளால் உங்கள் எல்லாரையும் நசுக்கிப் போடுவானே என்று கவலைப்பட்டுக் கூற, நாங்கள் இல்லை ஐயா அதையும் எதிர்த்து நாங்கள் உறுதியாகப் போராடுவேம் என்றோம். அவர் உடனே நீங்கள் உங்கள் போராட்டத்தை விளக்கி எனக்கு எழுதித் தாருங்கள் நான் விடுதலையில் போட்டுவிடுகிறேன் என்றார்.

1971 ம் ஆண்டுவரை பெரியாருக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை எண்று நான் சொல்ல வரவில்லை... அவர் செய்ய நல்லதுகளில் அந்த கட்டுரையை விடுதலையில் பிரசுரிக்க சொன்னதாக இருக்கலாம்.... ஆனால் பெரிதாக ஈழதமிழரின் விடிவுக்காக பெரியார் பாடுபட வில்லை, குரல் கொடுக்கவில்லை......!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.