Jump to content

ஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்-2


Recommended Posts

தயா!

நீங்கள் எழுதிய கருத்துக்கள் எதுவும் இங்கே நீக்கப்படத் தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

நீங்கள் கருத்துக்களை கண்ணியமான முறையில் தெரிவிக்கிறீர்கள். உங்களுடைய எழுத்துக்கள் யார் மீது வெறுப்புக்களையும், குரோதங்களையும் கொட்டவில்லை.

உங்களுடைய கருத்துக்கள் எனக்கு தவறாகப் படுகிறது. ஆனால் நீக்கப்படுகின்ற அளவிற்கு பண்பு மீறி நீங்கள் இங்கே எழுதிய கருத்துக்கள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

80கள், அல்லது அதற்கு அண்மைய காலத்தில் கொடுக்கப்பட்ட ஆதரவுகளுக்கும், 90களின் பிற்பகுதியில் கொடுக்கப்பட்ட ஆதரவுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.

80களில் இந்திராக்காந்தியும் ஆதரவு தந்தார், எம்ஜிஆர் தந்தார், கருணாநிதி தந்hர். ஏன் இயக்கத்தை விரோதமாகப் பார்க்கின்ற ஜெயலலிதா ஆதரித்துப் பேசாத பேச்சா?

ஒருவகையில் அந்த நாட்களில் பொதுப்படையான ஆதரவு தந்தமைக்கு மரியாதை அளிக்கின்றேன். ஆனால் தயா சொன்னது போலத் தமிழர்களுக்கு வந்த சேகுவரா கிடையாது.

Link to comment
Share on other sites

ஈழத்தில் தமிழ்த்தேசியம் என்பது ஓரளவு பெறுமதியாக உருவாக்கம் கொண்டிருப்பது தலைவர் பிரபாகரனின் இந்த காலத்தில் தான் தவிர முன்னெப்போதும் அல்ல. தேசத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் உள்வாங்கி அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளையும் மதிக்கின்ற அதே நேரம் அனைத்து தரப்பு மக்களும் சரி சமமாக போராட்டத்தில் பங்கு பெறும் நிகழ்வு இப்போது தான் நிகழ்கின்றது. இங்கே ஓரளவு என்று நான் குறிப்பிடுவதுக்கு காரணம் இருக்கின்றது. மதவாரியாக வேறுபட்டு நிற்கும் இஸ்லாமிய சமூகத்தினருக்கும் ஏனைய தரப்ப்பும் மொழி வாழ்விடம் அடிப்படையில் ஒன்றிணையும் போது தான் ஓரளவு என்பது முழுமை பெறும்.

தலைவர் பிரபாகரனுக்கு முற்பட்ட காலத்தில் தமிழ்தேசியம் என்பது அடிமட்ட மக்களும் சம்மந்தப்பட்டதில்லை. அது மேட்டுக்குடியின் பிரதிபலிப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய தேசியம் என்பது அடிமட்ட மக்களை பிரதிபலிக்கும் ஒன்றாகவோ அல்லது அனைத்து தரப்பு மக்களின் வாழ்வுரிமைகளையும் மதிக்கும் ஒன்றாகவே எந்த காலத்திலும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. இந்திய தேசியம் என்பது அங்கு உயர்வர்கத்தின் ஒரு கருவியாகவே என்றும் இருந்து வருகின்றது. இந்த நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடும் ஒரு விதிவிலக்கல்ல.

தேசியம் ஒரு தரப்பின் வாழ்வுரிமையை மறுதலிக்கின்றது என்றால் அந்த தரப்பு தேசியத்தை தலையில் தூக்கி வைத்து ஆடத்தேவையில்லை. இன்றைய தாழ்தப்பட்ட மக்களுக்கு இந்திய தேசியம் எதிரானது என்பது வெளிப்படை. இந்த நிலையில் இந்திய அதிகார வர்கத்துக்கு எதிராக போராட வேண்டிய தேவைதான் அவர்களிடம் உண்டு தவிர இந்திய தேசியம் என்றொரு மாயையை கட்டிக்கொண்டு அழவேண்டிய அவசியம் என்ன அவர்களுக்கு உண்டு?

உதாரணத்துக்கு ஈழத்தமிழர்களில் நாவலர் மட்டுமே குறிப்பிடும் படியாக காலனித்துவ அரசை எதிர்த்தார் என்பது தெரிந்த ஒன்று. அவர் எதிர்ததுக்கான காரணமும் தெரிந்த ஒன்று. அவரின் செயற்பாட்டை ஈழ தேசய செயற்பாடாக முன்னெடுத்தால் ஈழத்தில் நாவலரின் சாதியை தவிர்ந்த ஏனைய சாதிகளுக்கு அந்த தேசியம் விரோதமானதாக இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகின்றது? ஏனெனில் நாவலரின் சாதியம் சம்மந்தமான நிலைப்பாடு என்ன என்பதும் வெளிப்படையானது.

ஈழத்தில் முன்பு அடயாளப்படுத்தப்பட்ட தேசியம் என்பது வேறு, இப்போது உள்ள தேசியம் என்பதின் வளர்ச்சிப்போக்கு வேறு. இப்போது உள்ள வளர்ச்சியானது ஒரு முழுமையை எட்டிவிடும் என்ற நம்பிக்கை உண்டு.

காலனித்துவத்தை எதிர்ப்பது பெரியாரின் குறிக்கோளாக இருந்ததில்லை. பெரியார் கையில் எடுத்த பிரச்சனை இந்திய தேசியம் என்ற மாயைக்குள் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகள் சார்ந்தது. பெரியார் காலத்தில் அவர் தேசியத்தை தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டிய தேவை இல்லை. அவர் கையில் எடுத்த விசயங்கள் அது சார்ந்ததும் இல்லை. ஆனால் பெரியாரின் செயற்பாடுகளின் விழைவுகள் ஒரு பெறுமதியான தேசிய வளர்ச்சிக்கு அல்லது இந்திய தேசியத்திலும் அரசிலும் கணிசமான பங்கு மேலும் இந்திய அதிகார வர்க்கத்தை நோக்கி உரிமைகள் கேட்க கூடிய வலு என்பன வளர வித்திட்டது என்பது உண்மை.

தேசியம் என்பது தேசத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் அவர்களினது உரிமைகளையும் பிரதிபலிக்கும் ஒன்றாக இல்லதாத பட்சத்தில் அதனை முக்கியத்துவப்படுத்த வேண்டிய தேவை எதுவும் இல்லை. வாழ்வுரிமையை மறுதலிப்பது தேசியமாக இருந்தால் அதையும் எதிர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

தலைவர் பிரபாகரன் காலத்தில் நாம் காணும் தேசிய எழுச்சி என்பது தமிழர் வரலாற்றில் ஒரு புதிய விசயம். தமிழர் தேசியம் இப்போது உள்ளது போல் எந்தக்காலத்திலும் வலுவாக இருந்ததில்லை. ஆரோக்கியமாக இருந்ததில்லை. இந்த தேசிய வாத எழுச்சியை முழுமையடைய செய்ய வேண்டும். அதற்கு அனுசரிப்புகள் விட்டுக்கொடுப்புகள் என்னும் எராளமான நல்ல விசயங்கள் செய்ய வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

தயா!

உங்களுடைய கருத்துக்கள் எனக்கு தவறாகப் படுகிறது. ஆனால் நீக்கப்படுகின்ற அளவிற்கு பண்பு மீறி நீங்கள் இங்கே எழுதிய கருத்துக்கள் இல்லை.

எனது கருத்துக்களை தேவை ஏற்பட்டால் நீக்க சொன்னதுக்கு முக்கிய காரணமே இண்றைக்கு தமிழீழ தேசியத்துக்காக பாடு படும் எல்லோரிலும் அங்கமாக திகழும் பெரியாரின் வளிவந்தவர்களை காயப்படுத்த வேண்டாம் என்பதினால் மட்டும்தான்... எங்களின் விடுதலைக்கு எல்லோரின் உதவியும் வேண்டும்... அதனால்தான்...!

மற்றும் உங்களு்க்கு தெரிந்த விடயம் எண்டாலும் ஒருமுறை மீண்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்...

1956 ம் வருடம் . சிங்களம் தனிச்சட்டம்தான் தமிழரை விடுதலை நோக்கி பயனிக்க தள்ளியது என்பது உங்களுக்கு தெரியாதது இல்லை... அதே காலப்பகுதியில் அறிஞர் அண்ணாவின் தி. மு. க தலைமையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களும் கட்டுரைகளும், மேடை பேச்சுகளும் பரவலாக ஈழத்துக்கும் எட்டிய காலப்பகுதி அது...!!

அந்த காலப்பகுதியில் தான் தமிழரசு கட்சியும் சரி, பேரவையும் சரி அறிஞர் அண்ணாவின் செயற்பாடுகளால் உந்தப்படார்கள், செயற்படார்கள் எண்று சொன்னால் மிகையானது அல்ல... அதில் தந்தை செல்வா திமுக தலைவர் அண்ணாவை அடிக்கடி சந்தித்து ஆதரவையும் ஆலோசனைகளையும் பெற்றும் இருக்கிறார்....! இதில் கலைஞர் கருணாநிதியின் பேச்சுகள் ஈழத்தில் மிகவும் பிரபல்யம்.. அதில் கவரப்பட்டவர்கள் எனது குடும்பதில் பலர் இருந்தனர்.. அவர் இந்தியை எதிர்த்து பேசவில்லை சிங்களதை பற்றித்தான் பேசுகிறார் எனும் உணர்வை தோற்றுவித்தவர் கலைஞர்.... தமிழீழ எழுச்சியை தோற்றுவித்தவர்களுக்கு உற்ற்சாகம் தந்தவர்கள் அறிஞர் அண்ணாத்துரையும் அவர் தொண்டர்களும் தானே அண்றி பெரியார் அல்ல...!

விடயம் இப்படி இருக்க, அண்ணாவால் தமிழக தமிழர் தேசியம் எழுச்சியாக்க பட்டதை பெரியார் கண்டிக்கிறார்...( இதைத்தான் நீங்கள் இந்திய தேசியதை கண்டித்ததாக அர்த்தப் படுத்தி உள்ளீர்கள்) அவர் சொன்னதில் அறிஞர் அண்ணாவின் தேசியம் மீண்டும் இன்னும் ஒரு சுறண்டலை தமிழக தாள்த்த பட்ட மக்களுக்கு செய்து இன்னல்கலை விளைவிக்க கூடாது எனும் நல்ல நோக்கமாக கூட இருந்து இருக்கலாம்...!

ஆனால் பெரியார் அவ்வளவாக ஈழத்தமிழர் பிரச்சினைகளில் நாட்டம் இல்லாதோ, இல்லை அறிந்து கொள்ளாதவராகவோதான் இருந்தார்... அதுக்காக பெரியாரை நான் குறை சொல்ல வரவில்லை... அவரின் நாட்டில் மட்டும் அவர் அக்கறைகொள்வதை நான் எப்படி குறையாக சொல்ல முடியும்... ??

ஆனால் அறிஞர் அண்ணா பெற வேண்டிய ஒரு பெரு்மையை பெரியாருக்கு நான் கொடுக்க விரும்பவில்லை...

யாழ்களத்தில் இளங்கோ அவர்கள் பேரவை தலைவராக இருந்த சத்தியசீலன் அவர்களின் பேட்டி ஒண்றை இணைத்து இருந்தார்.. அதில் சத்தியசீலன் அவர்கள் பெரியாரை சந்தித்ததை கனிவாகவும் மகிழ்வாகவும் சொல்கிறார்...

  • " 1971 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாங்கள் பெரியாரைச் சந்தித்தோம். அப்போது பெரியார் உடல் நலமில்லாமல் திருச்சியில் தங்கியிருந்தார். அவரைச் சந்தித்து எங்களின் போராட்டத்தை விளக்கினோம். அப்போது அவர் சிங்களவன் பெரிய பெரிய டாங்கிகள் பீரங்கிகளால் உங்கள் எல்லாரையும் நசுக்கிப் போடுவானே என்று கவலைப்பட்டுக் கூற, நாங்கள் இல்லை ஐயா அதையும் எதிர்த்து நாங்கள் உறுதியாகப் போராடுவேம் என்றோம். அவர் உடனே நீங்கள் உங்கள் போராட்டத்தை விளக்கி எனக்கு எழுதித் தாருங்கள் நான் விடுதலையில் போட்டுவிடுகிறேன் என்றார்.

1971 ம் ஆண்டுவரை பெரியாருக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை எண்று நான் சொல்ல வரவில்லை... அவர் செய்ய நல்லதுகளில் அந்த கட்டுரையை விடுதலையில் பிரசுரிக்க சொன்னதாக இருக்கலாம்.... ஆனால் பெரிதாக ஈழதமிழரின் விடிவுக்காக பெரியார் பாடுபட வில்லை, குரல் கொடுக்கவில்லை......!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.