Jump to content

......ஜரோப்பிய அவலம்


Recommended Posts

ஜரோப்பிய அவலம்

ஜெர்மனிய நகரம் ஒன்றில் ஒரு தமிழ்குடும்பத்தில் அவர்களிற்கு மூன்று பிள்ளைகள் இதில் மூத்த மகளிற்கு 12 வயது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைக்கு கணணி பற்றி படிப்பிக்க ஆசைப்பட்டனர் . ஆனால் பெற்றோர்களிற்கு கணணி பற்றிய அறிவு இல்லை அதன் காரமாக அவர்களிற்கு தெரிந்த ஒரு தமிழர் அவரிற்கு கணணி பற்றி ஒரளவு தெரியும் அவரிற்கு வயது 43 அவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் இருக்கின்றனர். அவரின் வீட்டிற்கு தங்கள் மகளை கணணி பற்றி தெரிந்து கொள்ள அனுப்பி வைத்தனர். அந்த நபரோ படிக்க வந்த சிறுமிக்கு கணணியில் பாலியல் பற்றிய படங்களை போட்டு காட்டி அந்த சிறுமியையும் தனது பாலியல் சேட்டைகளிற்கு அடிமைப்படுத்தி விட்டார். ஒரு நாள் இந்த சிறுமி தனது கணணியில் அந்த மாதிரி படங்களை பார்த்து கொண்டிரந்தபோது அவரது தங்கை அதனை பார்த்து விட்டு பொற்றோரிடம் சொல்லவே விவகாரம் வெளியில் வந்தது. பெற்றோர்கள் அந்த சிறுமியை விசாரிக்கவே கணணி வித்தைகள் காட்டிகொடுத்தவரின் விழையாட்டுக்களும் வெளியில் வந்தது. சிறுமியின் பெற்றோகள் காவல்துறையின் உதவியை நாடவே அவர்களும் அந்த நபரின் கணணி மற்றும் சிறுமியின் கணணணிகளை பரிசோதித்தும் பின்னர் விசாரணைகள் மூலமும் அந்த நபர் குற்:றவாளிஎன நிரூபித்து இப்போ அந்த நபர் சிறையில் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பும் பஞ்சும் பக்கத்தில் இருந்தால் என்ன தான் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் யாரை நம்புவதென்றே தெரியவில்லை?வேலியே பயிரை மேய்வது போல் இருக்கின்றது :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு இங்கே பெற்றோரிடம் தான் இருக்கிறது . புலம் பெயர்ந்து வந்து, இந்த நாட்டு பாசையை படிக்கிறதிலும் பார்க்க பணம் உழைக்கிறதுதில் தான் மும்முரமா இருக்கிறாங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு இங்கே பெற்றோரிடம் தான் இருக்கிறது . புலம் பெயர்ந்து வந்து, இந்த நாட்டு பாசையை படிக்கிறதிலும் பார்க்க பணம் உழைக்கிறதுதில் தான் மும்முரமா இருக்கிறாங்க .

ரெம்பக் கொடுமையா இருக்கு கருப்பி உங்க கருத்து. எங்களால ஏலுமெண்டா படிச்சிருப்பம் தானே. ஏலாததை செய்யென்றால் எப்படி...???!

ஊரில ஒழுங்கா படிச்சிருந்தா ஏன் இங்க வரப் போயினம்.. ஏஜென்சிக்கு காசு கட்டி. ஊரில ஸ்கூலை இடைல விட்டவ.. ஓல் பெயில் விட்டவை.. ஏல் பெயில் விட்டவை.. யுனில குண்டு அடிச்சவவைதான்.. முதலில வெளிநாட்டுக்கு கிளம்ப முன்னிற்கிற ஆக்கள்...!

நானும் ஊரில இருக்கேக்க யோசிக்கிறனான்.. என்னடா இங்க ஓல் பெயில் விட்டவன் எல்லாம்.. வெளிநாட்டில போய்.. பெரியாளா வாரானே.. அங்க என்னவன் மந்திரம் தந்திரம் இருக்கோ என்று. இங்க வந்தாப் பிறகுதானே தெரிஞ்சுது கோலங்கள்...!

அதுதான் அந்தக் காலத்தில் எல்லாரும் BSc (London) என்று பட்டம் வைச்சிருப்பினம். ஆனால் லோக்கல் ஸ்கூலில ரீச்சரா இருப்பினம். காரணம்.. லண்டன் வந்து படிச்சிட்டு.. ஊருக்கு வந்து.. தங்கள் சேவையை வழங்கி தங்களை பெருமைப்படுத்திக் கொள்ளத்தான். ஆனால்.. இப்ப.. லண்டனுக்கு வந்தா.. படிக்கத் தேவையில்ல... ரெஸ்கோவில.. துடைக்க விட்டாலே போதும்.. நாங்க சமாளிச்சிடுவம்.

அதுவும் புலத்தில பிறந்து வளர்ந்தவை இருக்கினமே.. புலத்தில அப்பா அம்மா அசைலம் அடிக்க அவையை அண்டி பிழைக்க வந்தவை இருக்கினமே.. அவைட நினைப்பு.. கொஞ்ச நெஞ்சமில்ல. படிக்க யுனிக்கி வருவினம்.. ஆனா.. சோடி போட்டிட்டு.. சுத்திறதுதான் படிப்பே. அப்புறம்.. பிரேக்.. சோதனை அம்போ.. அதுவும் அரசாங்க லோன் எடுத்து படிக்கிறவைக்கு.. ஒரு கவலையும் இல்ல. ஏதோ சுதந்திரமான உலகில.. பறக்கிறதாத்தான் அவைட நினைப்பு. லோன்.. மூட்டையை தோளில போடுது தெரியாம.. துள்ளினம் பின்னால தெரியும்...! :D

இப்படியான நிலை இருக்கேக்க.. என்னதான் நடக்காது...! பெற்றோருக்குத் தெரியாமலே காதலிக்கினம்.. கைவிடுகினம்.. பின்னர் பெற்றோருக்கு முன்னால.. நல்ல பிள்ளைகளா நிக்கினம். இது செய்யுறவைக்கு கணணில... சேட்டை செய்யத் தெரியாதோ...????! நாங்கள் தான் நினைக்கிறம்.. பிள்ளையள் மனசு வெள்ளை என்று. அதுகள்.. மனசோ.. மலை மடு எல்லாம் கடந்து வந்திருக்கும்...! எதிர்பார்த்து ஏமாறுறது அப்பாவிப் பெற்றோர்.. இப்ப பிள்ளைகள் எதுவுமே.. பால் போல வெள்ளை மனசோட இல்லை. இருக்கவும் முடியாது. :D:lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்பக் கொடுமையா இருக்கு கருப்பி உங்க கருத்து. எங்களால ஏலுமெண்டா படிச்சிருப்பம் தானே. ஏலாததை செய்யென்றால் எப்படி...???!

ரொம்பக் கொடுமைதானுங்க 43 க்கு 12 .

Link to comment
Share on other sites

கறுப்பி அக்கா சொன்னது போல் தவறு பெற்றோரிடம் தான் இருக்கு... அவர்கள் அந்த சிறுமியை படிக்க அனுப்பு முன் 42 வயது நபர் பற்றி அறிந்துவிட்டு படிக்க அனுப்பி இருக்க வேண்டும்.... இல்லை அவர்களும் கூட சென்றிருக்கலாம்....... இல்லை சிறுமி வீடு வந்ததும் என்ன சொல்லி கொடுத்தார் என்று விசாரித்திருக்கலாம்.. இது எல்லாம் செய்யாமல் விட்டது பெற்றோரின் பிழை தானே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணுக்கு 18 வயதென்றால் சட்டம் ஓகே சொல்லியிருக்கும் . அதற்குமுன் ஆணுக்கு எத்தனை வயசாயிருக்கட்டும் அது தப்புத்தான் . ஆண் தண்டிக்கப்பட வேண்டியவரே என்று சட்டம சொல்லுகிறது.

இப்ப புலம்பிப் பிரயோசனம் இல்லைத்தான் . ஆனா இனிமே இதுமாதிரி நடந்து , புலம்பாம இருக்கனும் எம்மவர் .

இப்போ பாடசாலையில் எல்லாம் கணனி பற்றிய விளக்கம் இருக்குது .

கணனி பற்றிய புத்தகங்கள் நிறையவே கடைகளில் கிடைக்கின்றது .அந்த நாட்டுமொழி தெரிந்த பிள்ளையால் ஏன் கணனியை அறிந்து கொள்ள முடியாமல் போய் விட்டது என்பது கேள்விக்குறியே .

பெற்றோர் பிள்ளை கணனியில் தேர்ச்சி பெற வேண்டும் எண்டு விரும்பி படிக்க அனுப்பினாங்களோ தெரியல . அப்படியெண்டால் பல இடங்களில் கணனி வகுப்புகள் நடைபெறுகிறது அங்கே பிள்ளையை சேர்த்து விட்டிருக்கலாம் .

பிள்ளை வீட்டில் என்ன கணனியில் படிக்கின்றாள் என்பது பற்றிய ஒரளவுக்கெணும் அதைப்பற்றி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அதைவிட்டு தொலைக்காட்சியில் நாடகத்தொடர் பார்ப்பதும் , ஒருவர் மாறி ஒருவர் வேலைக்கு செல்வதுமாய் இருந்தால் இவர்களை கண்காணிப்பவர்கள் யார் ?

இனி வருங்காலங்களில பெற்றோரும் பிள்ளைகளில் நிறைய அக்கரை எடுத்துக்க வேணும் . பிள்ளைகளுக்கு விருப்பமான வற்றை வேண்டிகொடுத்து அதில் இன்பங்கண்டு அவர்களை திருப்திபடுத்துவது மட்டும் அல்ல வாழ்க்கை . அதையும் விட பிள்ளைகளை ஆளுமை நிறைந்தவர்களாக சமூகத்தில் வழிநடத்துவது பெற்றோரின் பாரிய கடமை .

Link to comment
Share on other sites

என்ன எங்கே பார்த்தாலும் இப்படி தான் செய்தியா இருக்கு என்னால முடியல நான் வேற பேபி கவனமாக இருக்க வேண்டும் :lol: !!கறுப்பி அக்கா சொல்லுறது எல்லாம் சரி கணணி பற்றி அறிவு வேண்டும் என்றா கணணி புத்தகம் வாங்கொ கொடுக்கலாம் அல்லது கண்ணி பிரத்தியோக வகுப்புகளிற்கு அனுப்பலாம் :lol: ..........ஆனா நம்ம ஆட்கள் காசை மிச்ச படுத்த போய் தான் இப்படி எல்லாம் அனுப்புறவை பிறகு ஏதாவது நடந்த பிறகு மூக்கால அழுது கொண்டு இருப்பீனம் :lol: .....பெற்றொரின் பிழை தான் 12 வயசு சிறுமி என்றாலும் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிற்கு இப்படியான விசயங்கள் எல்லாம் அத்துபடி (ஜம்மு பேபியை தவிர :lol: ) அப்படி இருந்தும் இந்த பிள்ளைக்கு இந்த அறிவு இல்லாம இருந்ததிற்கு பெற்றோரும் ஒரு காரணம் :o ......!!சிலர் பிள்ளைகளிற்கு சிலவிசயங்கள் தெரியகூடாது என்று வளர்ப்பார்கள் அதனால் தான் இப்படியான பிரச்சினைகள் எல்லாம் தோற்றம் பெறுகிறது என்பது என் பார்வையில்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"உலகத்தில் இருக்கிறவன் திருந்த வேண்டும் என்று பார்க்காம நாம நாலு விசயத்தை தெரிந்து உலகதிற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்"!!

Link to comment
Share on other sites

நானும் ஊரில இருக்கேக்க யோசிக்கிறனான்.. என்னடா இங்க ஓல் பெயில் விட்டவன் எல்லாம்.. வெளிநாட்டில போய்.. பெரியாளா வாரானே.. அங்க என்னவன் மந்திரம் தந்திரம் இருக்கோ என்று. இங்க வந்தாப் பிறகுதானே தெரிஞ்சுது கோலங்கள்...!

இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?

"ஊரில எங்களுக்கு கீழ இருந்தவனெல்லாம், இங்க வந்து பொருளாதாரரீதியா முன்னேறிட்டான்"

"ஊரில ஓ.எல். இல் சித்தியடையாவிட்டால், அவனால வாழ்க்கைல முன்னேற முடியாது"

"படிச்சு பாஸ் பண்ணினவனின்ர தலைக்கு பின்னால ஒளிவட்டம் இருக்கு"

"ஊரில ஒழுங்கா படிக்காதவனெல்லாம் இங்க இப்படி நல்ல நிலைமையில இருக்கிறான் எண்டால் அவன் கள்ளவேலையள் செய்துதான் அப்பிடி முன்னேறியிருக்கிறான்"

:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.