Jump to content

காதல் பிரிவு - சில கீற்றுக்கள்


Recommended Posts

கடற்கரையில்

நாம் நடந்த

சுவடுகளை

கடலலை அழிக்கும்!

கண்ணே நீ

என் இதயத்தில்

நடந்த சுவடுகளை

யாரழிப்பார்?

***********

மனசுக்குள்

மத்தாப்புக்

கொளுத்தியவள்...

மனசையே

கொளுத்துவாள் என்று

யார் அறிவார்?

***********

வீணை அங்கே

விரல்கள் இங்கே

இராகத்தை மட்டும்

ஏனடி

திருடிக் கொண்டாய்?

***********

என் இதயச்

சுவற்றில்

உன்

ஞாபகச் சிலுவைகள்!

எப்போதடி

உயிர்த்தெழும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் பிரிவில விரக்தியாய் வந்த உங்க கவிதை வரிகள் நன்றாய் இருக்கு .

Link to comment
Share on other sites

கடற்கரையில்

நாம் நடந்த

சுவடுகளை

கடலலை அழிக்கும்!

கண்ணே நீ

என் இதயத்தில்

நடந்த சுவடுகளை

யாரழிப்பார்?

கவிரூபன் அண்ணா காதல் பிரிவு கவிதை போல இருகிறது கவிதை வரிகள் நன்றாக இருகிறது!!ஆனால் காதல் பிரிவு நன்றாக இருக்காது!!இந்த வரிகளிற்கான கேள்விக்கு ஜம்மு பேபியின் பதில் கண்ணே நீ இதயத்தில் நடந்த சுவடுகளை யாரழிப்பர் என்றா என்னொருத்தி உங்கள் இதயத்தில் வந்தா தானா அழிந்திடும்!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

உறவென்று வந்ததும்,

உயிருருக வார்த்தைகளைத் தந்ததும்,

சிறகை விரித்ததும்.

பறந்ததும்.....!!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

க.பி அக்கா, ஜம்மு பேபி (???) நன்றிகள்...

Link to comment
Share on other sites

வீணை அங்கே

விரல்கள் இங்கே

இராகத்தை மட்டும்

ஏனடி

திருடிக் கொண்டாய்?

காதல் கவிதைகள் நன்றாக உள்ளது பாராட்டுக்கள் கவிரூபன்

Link to comment
Share on other sites

பிரிவில் வந்த உங்கள் கவிதை கூட அழகாக உள்ளது அண்ணா

மனசுக்குள்

மத்தாப்புக்

கொளுத்தியவள்...

மனசையே

கொளுத்துவாள் என்று

யார் அறிவார்?

நெ.போ அண்ணா பார்த்த சொல்லுவார்..... "இதுக்குதான் சொல்றனான் காதலிக்க வேண்டாம் என்று" :):(

Link to comment
Share on other sites

இலக்கியன், மருமகன் (கன நாளா ஆளைக் காணலைப் போல....), கவரிமான் உங்கள் கருத்துகளுக்கு நன்றி...

நெ.போ அண்ணா பார்த்த சொல்லுவார்..... "இதுக்குதான் சொல்றனான் காதலிக்க வேண்டாம் என்று"

எல்லாம் ஒரு வகை சுகம் தானே.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கவி ரூபன் கவிதை நல்லா இருக்கு...யம்முன்ர சிற்றுவேஸன் கவிதையும்தான் :-

Link to comment
Share on other sites

சிநேகிதி வருகைக்கு நன்றி...

Link to comment
Share on other sites

என் இதயச்

சுவற்றில்

உன்

ஞாபகச் சிலுவைகள்!

எப்போதடி

உயிர்த்தெழும்?

நல்ல வரிகள்!

காதல் சோகத்தில் வரைந்த கவிவரிகள் அழகு கவி ரூபன்!

உறவென்று வந்ததும்,

உயிருருக வார்த்தைகளைத் தந்ததும்,

சிறகை விரித்ததும்.

பறந்ததும்.....!!

நிழலென வந்ததும்,

விரல்களை கோர்த்ததும்,

இதயத்தை பறித்ததும்,

நிஜமற்று போனதும்....!

Link to comment
Share on other sites

சிநேக் அக்கா சிட்டுவேசன் கவிதை நல்லா இருக்கோ அது அரைவாசி உல்டா அது தான் நல்லா இருக்குது போல என்றாலும் நன்றி!! :unsure:

நிழலென வந்ததும்,

விரல்களை கோர்த்ததும்,

இதயத்தை பறித்ததும்,

நிஜமற்று போனதும்....!

சகி அக்கா உங்க சிட்டுவேசன் கவிதையும் நல்லா தான் இருக்கு :) ..........நிழல் எப்பவும் நிஜம் இல்லை என்று சகி அக்காவிற்கு தெரியாம போச்சு பேபிக்கே தெரியும்!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இதயத்தை காதல் தழுவ

பிரியா பிரிவு

சோகம் சொல்ல

கவிதை அருமை

என்றாலும் உன் சாபம் உடைத்து

வந்து விட்டேன் ஆனாலும்

அதிகாலை தேனீர் கசக்கின்றது

Link to comment
Share on other sites

கஜந்தி,

அதிகாலை தேநீர் கசக்கிறது என்றால் சில காரணங்கள் இருக்கலாம்

- கசப்பு மருந்து ஏதேனும் தேநீரில் கலந்திருக்கலாம்

- வாயில் ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம் (குறிப்பாக நாக்கில்... )

ஆகவே கவிஞர்களுடன் கலந்தாலோசிக்காமல் வைத்தியருடன் கலந்தாலோசியுங்கள்... :D

சரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படியே கவிதை எழுதிப் புலம்பிட்டு இருங்கோ.. ஏமாத்திட்டுப் போறவள்.. காயா இன்னொருத்தன் கூட சுத்திட்டு இருப்பாள்..! :D:D

Link to comment
Share on other sites

நீங்கள் இப்படியே கவிதை எழுதிப் புலம்பிட்டு இருங்கோ.. ஏமாத்திட்டுப் போறவள்.. காயா இன்னொருத்தன் கூட சுத்திட்டு இருப்பாள்..! :D:lol:

அநுபவம் பேசுது. பாவம் நம்ம நெடுக் அண்ணா :D

கவிரூபன் என்ன நீங்கள் கவிதையில் தான் பிரிவை உணர்ந்து கவலைப்படுறீங்களாஅ? இல்லை நிஜத்திலுமா? :D

நல்ல கவிவரிகள் கவிரூபன்

Link to comment
Share on other sites

கஜந்தி,

அதிகாலை தேநீர் கசக்கிறது என்றால் சில காரணங்கள் இருக்கலாம்

- கசப்பு மருந்து ஏதேனும் தேநீரில் கலந்திருக்கலாம்

- வாயில் ஏதாவது பிரச்சனையாக இருக்கலாம் (குறிப்பாக நாக்கில்... )

ஆகவே கவிஞர்களுடன் கலந்தாலோசிக்காமல் வைத்தியருடன் கலந்தாலோசியுங்கள்... jhq;f

தாங்கள் ஊற்றிய தேனீர் குடித்தால் வந்த பிரச்சனை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.