Jump to content

பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது- அரியநேத்திரன்

பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன்.

பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியமை என்பதே முதலாவது வெற்றி. ஏனெனில் ஓர் அரசுடைய தரப்பு வைக்கும் தேர்தலை அரசற்ற தரப்பு எப்படி படைப்புத்திறனோடும் புதுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு பொது வேட்பாளர் ஒரு முன்னுதாரணம். அரசற்ற தரப்பு ஒன்று அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்தலை தன்னுடைய கூட்டு விருப்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக பயன்படுத்தியது ;அத்தேர்தல் களத்தைத் தேசத்தைத் திரட்டும் ஒரு பயில் களமாகாகக் கையாண்டமை என்பது முதலாவது வெற்றி.

இரண்டாவது வெற்றி, பொது வேட்பாளர் தமிழ் மக்களை ஐக்கியப் படுத்துவதில் முதற்கட்டத் திரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அரியநேத்திரன் பெற்ற வாக்குகள் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம்.அது கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளில் அரைவாசியை விட அதிகம். இந்த அடிப்படையில் அவர் பெற்றது ஒரு தொடக்க வெற்றி. அது ஒரு பிரகாசமான வெற்றி இல்லைத்தான். ஆனாலும் வெற்றி. பொது வேட்பாளரை தமிழ் மக்கள் பொருட்படுத்தவில்லை என்று சுமந்திரன் கூறுகிறார். இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்களை அவர் பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு கணக்கு என்று கருதுகின்றாரா? இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொடுக்கும் மதிப்பு அதுதானா?

மூன்றாவது வெற்றி, பொது வேட்பாளர் தாயகத்தில் உள்ள மக்களை கட்சி கடந்து ஒன்று திரட்டியது மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒன்று திரட்டியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையீடு செய்த ஒரு தேர்தல் இது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது வேட்பாளரை நோக்கி ஒப்பீட்டளவில் அதிகமாக ஒன்று குவிந்தார்கள். இது மூன்றாவது வெற்றி.

நாலாவது வெற்றி, கிழக்கில் இருந்து வந்த ஒரு வேட்பாளர் வடக்கில் பெற்ற வாக்குகள்.வடக்கையும் கிழக்கையும் சட்டரீதியாக ஏற்கனவே பிரித்து விட்டார்கள் நிர்வாக எல்லைகளின் மூலமும் குடியேற்றங்களின் மூலமும் கிழக்கில் கிழக்கு மையக் கட்சிகளை வளர்த்தெடுப்பதன் மூலமும் வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முற்படும் சக்திகள் வெற்றி பெற்று வரும் ஒரு காலகட்டத்தில்,கிழக்க்கில் இருந்து ஒரு வேட்பாளர் பொது வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டார்.அவருக்கு வடக்கில் கிடைத்த ஆதரவு என்பது வடக்கையும் கிழக்கையும் உணர்வுபூர்வமாக பிரிக்க முடியாது என்பதனை உணர்த்தி இருக்கிறது.அதுவும் வடக்கு கிழக்கை சட்ட ரீதியாகப் பிரித்த கட்சியின் தலைவர் அரசுத் தலைவராகத் தெரித்தெடுக்கப்படட ஒரு தேர்தலில். இது ஒரு மகத்தான வெற்றி ஐந்தாவது வெற்றி, ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. சங்குச் சின்னத்தின் கீழ் ஏழு கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. மக்கள் அமைப்பு ஒன்றும் கட்சிகளும் இணைந்து அவ்வாறு தேர்தல் நடவடிக்கைகள் ஈடுபட்டமை தமிழ் அரசியல் பண்பாட்டில் ஒரு புதிய போக்கு. அது ஒரு புதிய பண்பாடு. அது ஒரு புதிய பரிசோதனையும் கூட. அந்த ஜனநாயகப் பரிசோதனையில் தமிழ் மக்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு சித்தி பெற்றிருக்கிறார்கள்.

பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ஜூலை 29 ஆம் தேதி. ஜனாதிபதி தேர்தல் நடந்தது செப்டம்பர் 21 ஆம் தேதி. இடைப்பட்ட சுமார் 50 நாட்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு மிகவும் புதிய ஒரு சின்னத்தை சங்குச் சின்னத்தை வெற்றிச் சின்னமாக மாற்றியது என்பதில் ஒரு செய்தி இருக்கிறது.தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு வாக்களிக்கும் பொழுது எந்த ஒரு புதிய சின்னத்தையும் ஸ்தாபிக்கலாம் என்பதுதான் அது. இது ஏற்கனவே தமிழ் மக்கள் உதயசூரியன் சின்னத்தை நிராகரித்த பொழுது நிரூபிக்கப்பட்டது. அதன் பின் ஈரோஸ் இயக்கம் சுயேட்சையாகப் போட்டியிட்ட பொழுது கிடைத்த வெற்றியும் அதனை நிரூபித்தது. இப்பொழுது சங்குக்கு கிடைத்த வெற்றியும் அத்தகையதுதான். முற்றிலும் புதிய ஒரு சின்னத்தை 50 நாட்களில் ஸ்தாபிக்க முடிந்தமை என்பது ஒற்றுமையின் விளைவு. ஒற்றுமையின் பலமும் தான்.

ஆனால் இந்த ஒற்றுமை இப்பொழுதும் பலவீனமானதாகவே காணப்படுகிறது பொதுக் கட்டமைப்பு ஒரு பலமான இறுகிப் பிணைந்த கூட்டாக இன்னமும் உருவாகவில்லை. ஒரு ஜனாதிபதித் தேர்தலை நோக்கி கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து செயல்பட்டன. இதே இணைந்த செயல்பாடு தொடர்ந்து வரும் தேர்தலிலும் இருக்குமா என்ற கேள்வி உண்டு. கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் நடந்த கூட்டத்தில் அது அது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் காணப்படும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக தனது கருத்தை தெரிவிப்பதற்கு சில நாட்கள் அவகாசத்தை கேட்டுள்ளது. அந்த மக்கள் அமைப்பு அதன் பொதுச்சபையைக் கூட்டி அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ஒரு மக்கள் அமைப்பு தொடர்ச்சியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து அந்த அமைப்பிடம் தயக்கம் காணப்படுவதாக தெரிகின்றது.தேர்தல் முடிந்த கையோடு தமிழ் மக்கள் பொதுச்சபை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வழியில் தேர்தல் ஒரு பகுதியே தவிர தேர்தல்கள் மூலம் மட்டும் தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது என்று தெளிவாகத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை தமிழ் ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு களமாக பயன்படுத்துவது என்று கூறிப் பொதுகட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பொதுக் கட்டமைப்பு எனப்படுவது தமிழ் ஐக்கியத்தின் ஆகப் பிந்திய முயற்சி.

கட்சிகள் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயாராகிவிட்டன.பொதுக் கட்டமைப்புக்குள் அங்கமாக உள்ள ஏழு கட்சிகளும் அது தொடர்பில் கூடி முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. ஆனால் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது அது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் கூடி முடிவெடுக்க விருப்பதாகத் தெரிகிறது.

ஒரு ஜனாதிபதித் தேர்தலை கையாள்வது வேறு, ஏனைய தேர்தல்களை கையாள்வது வேறு என்ற விளக்கம் பொதுச் சபையிடம் காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலை ஒரு தேர்தலாக அல்லாது தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்கான ஒரு பயில் களமாகவே பொதுச்சபை பார்த்தது. அந்த அடிப்படையில்தான் பொதுச்சபை பொதுக் கட்டமைப்புக்குள் இணைந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் முழு அளவுக்கு ஈடுபட்டது. ஆனால் ஏனைய தேதர்கள் அவ்வாறானவை அல்ல. எனவே அந்த தேர்தல் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு பொதுச் சபை கால அவகாசத்தை கேட்டது.

பொதுச்சபை எனப்படுவது ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி உதயமாகிய ஒரு கட்டமைப்பு. அதற்கு ஐந்து மாதங்கள் தான் வயது.5 மாத வயதான ஒரு கட்டமைப்பு அடுத்தடுத்து வரும் தேர்தல்களுக்கு பதில் வினை ஆற்ற வேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு விடை இன்று இரவுக்குள் தெரிய வந்து விடும்.

https://athavannews.com/2024/1401614

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@வாலி அண்ணை இத்திரிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாரி நிலாந்தன்,  

ஓடாத குதிரைக்குப் பந்தயம் கட்டித் தோற்ற தங்கள் ஆதங்கம் புரிகிறது . குதிரை ஓடாது என்பது மட்டுமல்ல, அது ஒரு நொண்டிக் குதிரை,  முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட,  குருட்டுக் குதிரை என்பது பொதுமக்களுக்குத் தெரிந்தது தங்களுக்குப் புரியாமல் போனதுதான் கவலைக்கிடமானது. 

சாரி,....சாரி,...நிலாந்தன். அது ஓடாத குதிரையல்ல,  கோவேறு கழுதை.

அது புரியாமல் அதில் அரியநேந்திரனை ஏற்றி ஊரூராக  இழுத்துவந்து பலிகொடுத்துவிட்டு இப்பொழுது குதிரை, ...ச்சாரி கழுதை பந்தையத்தில் ஜெயிக்கவில்லை, பார்வையாளர்கள் அதில் பந்தையம் கட்டவில்லை என்று அழுது என்ன பிரயோஜனம்? 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கை!!!
இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், இதயம் பலவீனமானவர்கள், வயித்தெரிச்சல் பிடித்தவர்கள்… இந்தப் பதிவை வாசிப்பது, உங்கள் உடல் நலத்திற்கு தீங்காக அமையலாம். 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

அவருக்கு வடக்கில் கிடைத்த ஆதரவு என்பது வடக்கையும் கிழக்கையும் உணர்வுபூர்வமாக பிரிக்க முடியாது என்பதனை உணர்த்தி இருக்கிறது

அப்போ கிழக்கில் கிடைத்த வாக்குகள் எதை உணர்த்துகிறது? 

நாங்கள் மண்ணுக்குமேலே விழுந்தால்தானே மீசையில் மண் ஒட்டும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

எச்சரிக்கை!!!
இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், இதயம் பலவீனமானவர்கள், வயித்தெரிச்சல் பிடித்தவர்கள்… இந்தப் பதிவை வாசிப்பது, உங்கள் உடல் நலத்திற்கு தீங்காக அமையலாம். 😂 🤣

 

வெற்றி வெற்றி வெற்றி என சங்கே முழங்கு! ஊஊஊஊஊ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

@வாலி அண்ணை இத்திரிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

நாட்டுக்கு நாரதர்கள் தேவை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நாட்டுக்கு நாரதர்கள் தேவை தான்.

நீங்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்து செய்யாத நாரதர் வேலையையா நாங்கள் செய்கின்றோம். நான் நினைக்கின்றேன் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்துவிட்டு அந்த நினைப்பில் எழுதிவிட்டீர்கள் போலுள்ளது.  ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல்நாள்கூட பொதுவேட்பாளருக்கான அலை அடிக்கிறதாக புலுடா விட்டீர்கள். நாங்கள் உங்களிடமும் புலம்பெயர் நாரதர்களிடமும் நிலாந்தன் மாஸ்டர் போன்ற அரசியல் சாணக்கியர்களிடம் சொல்லுவது ஒன்றுதான் “தாயகத்து மக்களை அவர்கள் பாட்டில் விட்டுவிடுங்கள் தங்கள் அரசியலை தாங்களே தீர்மானித்துக் கொள்ளுவார்கள்”. நீங்கள் உடுக்கடிக்கத் தேவையில்லை!

Edited by வாலி
Link to comment
Share on other sites

எம்மிடம் இருக்கும் குணங்களில் ஒன்று ஒரு போதும் தோல்வியை ஏற்றுக் கொள்ளாமை, இன்னொன்று, அத் தோல்வியை வெற்றி என நினைத்து அதன் வழியே தொடர்ந்து பயணிப்பது.

நிலாந்தன் போன்ற அதி புத்திசாலிகளும் இந்த குணாதிசயங்களை கொண்டிருப்பதில் வியப்பில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது வேட்பாளரை நோக்கி ஒப்பீட்டளவில் அதிகமாக ஒன்று குவிந்தார்கள்.

large.IMG_7125.jpeg.e0ee7a4bc44ccf7a0ff0

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுர செய்யக்கூடிய மாற்றம்? - நிலாந்தன் இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு நசுக்கப்பட்ட ஒரமைப்பு, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓரமைப்பு, அதன் தலைவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இன்றி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர். அப்படிப்பட்ட ஓரமைப்பின் தலைவர் இப்பொழுது நாட்டின் அரசுத் தலைவராக வந்திருக்கிறார். ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் பதவி வரையிலுமான இந்த வளர்ச்சியை ஏற்கனவே ஓர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களாகிய தமிழ் மக்கள் ஆர்வத்தோடு பார்க்க வேண்டும். அதன் பொருள் அனுரவின் மாற்றம் என்ற கோஷத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதோ, அல்லது இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வை நம்ப வேண்டும் என்பதோ அல்ல. ஆயுதப் போராட்டத்தில் தொடங்கி அரசுத் தலைவர் வரையிலுமான ஜேவிபியின் வெற்றிக்குள் இருந்து தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உண்டு. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படுகின்ற புதிய கூட்டை தமிழ் மக்கள் விருப்பு வெறுப்பு இன்றிக் கற்க வேண்டும். அரசியல் செயற்பாட்டாளர்களும் புத்திஜீவிகளும் இணைந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்பு அது. ஆயுதப் போராட்ட மரபில் வந்த ஓர் அமைப்பும் புத்திஜீவிகளும் இணைந்து அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அக்கூட்டின் மையக் கட்டமைப்புக்குள் 73 உறுப்பினர்கள் உண்டு. அதில் அறுவர் மட்டுமே தமிழர்கள். அங்கு இன விகிதாசாரம் பேணப்படவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஜேவிபியை ஆதரிக்கும் சில படித்தவர்கள் இம்முறை தேர்தலில் இனவாதம் பின்வாங்கி விட்டது என்று புளகாங்கிதம் அடைகிறார்கள். தமிழ் பொது வேட்பாளர் இனவாதத்தை முன் வைத்ததாகவும் விமர்சிக்கின்றார்கள். ஆனால் “அரகலிய” போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதியது போல, தேர்தல் பிரச்சாரங்களில் இனவாதம் பெரிய அளவில் கதைக்கப்படவில்லை என்பதை வைத்து இனவாதம் இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது. அனுர கூறும் மாற்றம் எனப்படுவது இனவாதம் இல்லாத ஓர் இலங்கை தீவா? இது தேர்தல் காலம் மட்டுமல்ல, ஐநா மனித உரிமைகள் சபையின் பொறுப்புக் கூறலுக்கான விவாதங்கள் நடக்கும் ஒரு காலகட்டமும் ஆகும். வரும் ஏழாம் திகதி வரையிலும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறும். இதில் பொறுப்புக் கூறல் தொடர்பில் அனுரவின் நிலைப்பாடு என்ன? அசோசியேட்டட் பிரஸ் என்ற ஊடகத்துக்கு அவர் வழங்கிய செவ்வியை இங்கு பார்க்கலாம் “பொறுப்புக் கூறல் தொடர்பான கேள்வியைப் பொறுத்தவரை அது பழிவாங்குகலுக்கான ஒரு வழியாக அமையக்கூடாது. யாரையாவது குற்றச்சாட்டுவதாகவும் அமையக்கூடாது. மாறாக உண்மையைக் கண்டுபிடிப்பதாக மட்டும் அமைய வேண்டும்….. பாதிக்கப்பட்ட மக்கள் கூட யாராவது தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் என்ன நடந்தது என்பதனை அறிவதற்கு மட்டும்தான் விரும்புகிறார்கள் ” என்று அனுர கூறுகிறார். அதாவது அவர் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குத் தயாரில்லை. குற்றங்களை விசாரிப்பது உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு என்று கூறுகிறார். ஆயின் யார் குற்றவாளி என்ற உண்மையை கண்டுபிடித்த பின் அவரை தண்டிக்காமல் விட வேண்டும் என்று அவர் கூற வருகிறாரா? பாதிக்கப்பட்ட மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று அவருக்கு யார் சொன்னது? அதாவது அனுர பொறுப்புக் கூறுவதற்குத் தயார் இல்லை. குற்றவாளிகளைப் பாதுகாப்பது என்பதே இனவாதம்தான். நாட்டின் இனவாதச் சூழலை அனுர மாற்றுவார் என்று தமிழ் மக்களை நம்ப வைப்பதாக இருந்தால் அவர், கடந்த காலங்களில் அவருடைய கட்சி குறிப்பாக அவர் தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்த இரண்டு பிரதான நிலைப்பாடுகளுக்கு பொறுப்புக் கூறுவாரா? மன்னிப்புக் கேட்பாரா? தமிழ் மக்களின் தாயகத்தை அதாவது வடக்கையும் கிழக்கையும் சட்ட ரீதியாகப் பிரித்தது ஜேவிபிதான். இது முதலாவது. இரண்டாவது, சுனாமிக்குப் பின்னரான சுனாமிப் பொதுக் கட்டமைப்பை எதிர்த்து அனுர தனது அமைச்சுப் பதவியைத் துறந்தார். சுனாமிப் பொதுக்கட்டமைப்பு எனப்படுவது மனிதாபிமான நோக்கங்களுக்கானது. இயற்கைப் பேரழிவு ஒன்றுக்குப் பின் உருவாக்கப்பட இருந்த மனிதாபிமானக் கட்டமைப்பு அது. அதைக் கூட எதிர்த்த ஒருவர் இப்பொழுது அதற்கு பொறுப்பு கூறுவாரா? தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா? அவரிடம் இனவாதம் இல்லை என்று கூறி அவருக்கு வாக்களிக்குமாறு மறைமுகமாகக் கேட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள படித்தவர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா? அதுமட்டுமல்ல தமிழ் பொது வேட்பாளரோடு அனுர பேச முற்படவில்லை. ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தமிழ் பொது வேட்பாளரோடு உரையாடத் தயாராக இருந்தார்கள். ஆனால் அனுர உரையாடத் தயாராக இருக்கவில்லை. யாழ்ப்பாணம் வணிகர் கழகத்திடம் ஜேவிபி அதுதொடர்பான கோரிக்கைகளை முன்வைத்ததாகத் தெரிகிறது. எனினும் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பிடம் அவர் உத்தியோகபூர்வமான கோரிக்கைகள் எவற்றையும் முன் வைத்திருக்கவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளரை அவர் பொருட்படுத்தவில்லை. அதாவது தமிழ் வாக்குகளை அவர் பொருட்படுத்தவில்லை ? அவர் பதவியேற்றபோது தேசிய கீதம் இசைக்கப்படுகையில் ஒரு பகுதி பிக்குகள் எழுந்து நின்றமையை சில தமிழர்கள் பெரிய மாற்றமாகச் சித்திருக்கிறார்கள். ஆனால் பதவியேற்ற போது பௌத்தப்பிக்குகளின் முன் அவர் மண்டியிட்டு அமர்ந்து ஆசீர்வாதம் பெறுவதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர் இடதுசாரி மரபில் வந்த ஒரு தலைவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரால் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் வழமைகளை மீறிச் செயல்பட முடியவில்லை என்பதைத்தான் அந்த ஆசீர்வாதம் பெறும் நிகழ்ச்சி நமக்கு உணர்த்தியது. அந்த மத ரீதியான சிஸ்டத்தை அவரால் மாற்ற முடியவில்லை. அவரும் அந்த சிஸ்டத்தின் கைதிதான். அதனால்தான் தமிழ் மக்கள் அவர் கூறும் மாற்றத்தை அதாவது சிஸ்டத்தில் மாற்றம் என்பதனை சந்தேகத்தோடு பார்க்கின்றார்கள். ஏனெனில், தமிழ் மக்கள் கேட்பது மேலோட்டமான சிஸ்டத்தில் மாற்றத்தை அல்ல. தமிழ் மக்கள் கேட்பது அதைவிட ஆழமான கட்டமைப்பு மாற்றத்தை. ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் மாற்றம். அதைச் செய்ய அனுராவால் முடியுமா? பதவியேற்ற பின் அவர் ஆற்றிய உரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பின்வருமாறு கூறுகிறார்.. “சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் “நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார, அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம். தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்.” இது அரசியல் அடர்த்தி குறைந்த வார்த்தைகளால் வழங்கப்படும் கவர்ச்சியான ஆனால் மேலோட்டமான வாக்குறுதி. இப்படிப்பட்ட லிபரல் வாக்குறுதிகள் பலவற்றை தமிழ் மக்கள் ஏற்கனவே கடந்து வந்து விட்டார்கள். தமிழ் மக்கள் கேட்பது அடிப்படையான கட்டமைப்பு மாற்றத்தை. இலங்கைத் தீவின் பல்லினத் தன்மையை உறுதிப்படுத்தும் கடடமைப்பு மாற்றத்தை. இலங்கைத் தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள், தேசங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ளும் மாற்றத்தை. அந்த அடிப்படையில் வழங்கப்படும் ஒரு தீர்வை. தமிழ் மக்களை இறைமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கும் ஒரு தீர்வை. அப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அனுரவால் முடியுமா?   https://www.nillanthan.com/6909/
    • ஆம்  தமிழ்த் தேசியத்தை அழிக்க வேண்டும் என்று எவர் செயற்பட்டாலும் பேசினாலும் எழுதினாலும் அவர்களைத் தான் குறிப்பிடுகிறேன். அவர்கள் என்னை பெத்தவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பேன். மரியாதை தரமாட்டேன். 
    • தாயகத்தில் தமிழ் தேசியத்தை அழிக்க முனைவது, புலம்பெயர் தமிழ் அமைப்புகளில் உள்ள நாட்டாமைகளும் அவர்களின் எடுபிடிகளாக உள்ள வயது போயும் ஓய்வெடுக்க விரும்பாத கிழட்டு அரசியல்வாதிகளும் தான்.  புலிகள் அழிக்கப்பட்ட பின் அதை அழித்த மகிந்தவின் ஆட்சியை அகற்ற தாயக மக்கள் சரத் பொன்சேக்கா, மைத்திரி, சஜித் என்று மாறி மாறி வாக்களித்தனர். ஆனால் புலிகள் அழியப் போகிறார்கள் என தெளிவாக புரிந்த பின் இறுதி யுத்ததிற்கென காசு சேர்த்து அதை ஆட்டையை போட்ட புலம்பெயர் அமைப்புகள் பல, புலிகள் அழிந்த பின் மகிந்தவுடன் டீல் பேசி அவருடன் கைகுலுக்கினர். எனவே தாயக மக்களின் நோக்கத்திற்கு எதிராகவே எப்பவும் இந்த புலம்பெயர் புண்ணாக்கு கோஷ்டிகள் இயங்கி வருகின்றனர் என்பது கண்கூடு. நீங்கள் மேலே குறிப்பிட்டது அப்படியானவர்களைத் தானே!
    • தமிழரசுக் கட்சியில் இருக்கும் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களே ஒரு பொருளில் ஒரே கருத்தில் ஒரே குறிக்கோளுடன் பேசுவதில்லை. இதில் மற்றவர்களையும் கூப்பிட்டு ....?
    • 2009க்கு முன்னர் இப்படி தான் புலிகளை அழித்தால் அல்லது புலிகள் இல்லாமல் ஆக்கப்பட்டால் போதும் மற்ற அனைத்தும் சரியாகும் என்று ஒருசிலர் ஊரிலும் இங்கும் கூவித்திரிந்தார்கள்.  அதேபோல் தான் இன்று தமிழ்த்தேசியம் அழிந்தால் அல்லது இல்லாமல் ஆக்கப்பட்டால் போதும் அனைத்தும் சரியாகும் என்று அதே நபர்கள் கூவித் திரிகிறார்கள்.  என்ன விலை கொடுத்தும் புலிகளை அழிக்க துணை போனவர்களுக்கு தமிழர்களுக்கான தீர்வு என்பது இரண்டாம் பட்சமாக கூட இருக்கவில்லை. அதுவே இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது. தமிழ்த் தேசிய அழிப்பும் அப்படித்தான். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.