Jump to content

துளிகள்


Recommended Posts

அமாவாசை இரவுகளில்..

அவளோடு புறப்பட்டால்..

நிலவை மறந்து விடுகிறேன்...

பனித்துளிகள் படர்வதனால்...

நான் ஏக்கப்பட்டும்

பூக்களைப் பறிப்பதில்லை..

சலங்கைகள்..

அடிபட்டுக்கொள்வதை..

தலையாட்டி ரசிப்பவன்..

விமர்சகன்..

மழைத்துளி விழுந்து வழிந்து..

ஓடாவிட்டால்....

நதிகள் பாவம்..

இரவில் மட்டும் பெருமையடிக்கும்..

மின்மினிப்பூச்சிகளுக்கு..

அருந்ததி..நகர்வது..

தெரிவதில்லை..

என் திருவிழா நாட்கள்..

என் செல்வத்தைக் கரைப்பதில்லை..

இதயத்தை..

தந்தை சொன்னது போல்..

நண்பர்கள்..துன்பத்தில்..

உதவிட வரவில்லை

உயிர் விட வந்தார்கள்..

கசக்கிய காகிதத்தைப் பார்த்து

பேனா சிரிக்கிறது..

அதன்..மை முடிவது தெரியாமல்.

Link to comment
Share on other sites

உங்கள் கைகூர் துளிகள் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்.

என் திருவிழா நாட்கள்..

என் செல்வத்தைக் கரைப்பதில்லை..

இதயத்தை..

இதன் அர்த்தம் என்ன?? :rolleyes:

Link to comment
Share on other sites

திருவிழா நாட்கள்...

பொதுவாக சில்லறையை காலி செய்யும்..

என் போன்ற காளைகளுக்கு :rolleyes: .. தாவணி பெண்களிடம்..இதயம் தொலைந்துவிடும் என்பதை சொல்ல நினைத்தேன்..

சரி வர சொல்லவில்லைப் போலும்.. :unsure:

Link to comment
Share on other sites

திருவிழா காலம் ஏன் வெல்வத்தை காலி செய்யும் என்று தான் முதலில் புரியவில்லை.... சரி ஏனோ பணத்தை செவவு செய்வீங்க போல... :lol:

Link to comment
Share on other sites

திருவிழா நாட்களில் உங்களுக்கு பணவிரயம் ஏற்படாதா கவரிமான்...

சரி போகட்டும் விடுங்கள்... :lol:

Link to comment
Share on other sites

விகடகவி,

//கசக்கிய காகிதத்தைப் பார்த்து

பேனா சிரிக்கிறது..

அதன்..மை முடிவது தெரியாமல். //

கடைசியில் நல்ல முத்திரை வைத்திருக்கிறீர்கள்... வாழ்க்கையின் பாடமும் அதுவே தான்... சொல்லாமல் சொல்லும் உத்தி.... நல்லது...

ஒரு சின்னச் சந்தேகம்... (உனக்குமா என்று கேட்காதீர்கள்..)

//அமாவாசை இரவுகளில்..

அவளோடு புறப்பட்டால்..

நிலவை மறந்து விடுகிறேன்...//

இதில் அமாவாசை இரவுகளில் என்று தொடங்கியிருக்கிறீர்கள்.... பெளர்ணமி இரவுகளில் என்று தொடங்கியிருந்தால் கன கச்சிதமாய் இருந்திருக்கும் போல் தோன்றுகிறது... பெளர்ணமி இரவில் தான் நிலாவின் அழகைப் பருகலாம்.... அவளோடு புறப்படுவதால் வானத்து நிலா எதற்கு என்ற சிந்தனையில் நிலாவை மறந்திருக்கலாம் என்று யோசிக்கலாம்.... (அது சரி வெண்ணிலா இல்லை தானே ;0) )

ஆனாலும் உங்கள் வரிகளை வைத்துக் கொண்டு படிக்கும் போதும் கருத்து சரியாக வருகிறது ... இல்லாத போது தானே நினைப்பு வரும்... இன்று அமாவாசை ...நிலா இருக்காது... அவளோடு நடப்பதால் அந்த நினைப்பை மறந்து விடுகிறேன் என்று கூட யோசிக்கலாம்... என்ன விகடகவி உங்கள் பெயரைப் போல எப்படிப் பார்த்தாலும் ஏதோ ஒரு பொருள் வருகிறதே... கவிஞர்கள் எழுதும் போது யோசிக்காத கருத்தை வாசகன் இப்படி நினைந்து தான் கவிஞர் எழுதியிருக்கிறார் என்று கருதிக்கொள்வதுமுண்டு...!

என் சந்தேகம் என்னவென்றால் இதில் நீங்கள் எதை யோசித்து எழுதினீர்கள்...? ஆரோக்கியமான கேள்வியாகக் கருதி பதில் சொல்லுங்கள்...

Link to comment
Share on other sites

பசிக்கும்போதுதானே உணவின் எண்ணம் தோன்றும்..

நிலவின் வெளிச்சம் இருளில்தானே கைகொடுக்கும்..

அந்த நிலா இல்லாத குறையை.. நிரப்புகின்ற என்னவள்..

இருளில் ஒளி வீசும் தேவதை போல.. :lol:

அவள் வெளிச்சத்தில் நிலா பற்றிய சிந்தனை வருவதில்லை என்று சொல்லவந்தேன்.. :lol:

சொல்ல வந்தது சரியாக சேராவிட்டால் கவிதை சரியாக எழுதப்படவில்லை என்று பொருள்..

ஆனால் புதுக்கவிதைக்கு இப்படியான வரைமுறை விலக்கு இருக்கிறது..

வாசகர்கள் தங்கள் கருத்தை பன்முகமாகத் திருப்பிக்கொள்ளலாம்..

Link to comment
Share on other sites

தந்தை சொன்னது போல்..

நண்பர்கள்..துன்பத்தில்..

உதவிட வரவில்லை

உயிர் விட வந்தார்கள்..

சூப்பர் துளிகள்.

அதிலும் என் மனதை தொட்டது நட்பின் துளி.

தொடர்ந்து தூறட்டும் விகடகவியாரே உங்கள் துளிகள்.

(அது சரி வெண்ணிலா இல்லை தானே ;0) )

ரூபன் க்கு இப்ப எல்லாம் நக்கல் கூடிட்டு. வாறன் இருங்கோ

Link to comment
Share on other sites

கசக்கிய காகிதத்தைப் பார்த்து

பேனா சிரிக்கிறது..

அதன்..மை முடிவது தெரியாமல்]

:lol::lol:

நன்றாக உள்ளது....

Link to comment
Share on other sites

//ரூபன் க்கு இப்ப எல்லாம் நக்கல் கூடிட்டு. வாறன் இருங்கோ //

வெண்ணிலா எங்க வரப்போறியள்... :lol:

Link to comment
Share on other sites

//ரூபன் க்கு இப்ப எல்லாம் நக்கல் கூடிட்டு. வாறன் இருங்கோ //

வெண்ணிலா எங்க வரப்போறியள்... :D

:D லண்டனுக்குத்தான். :lol:

Link to comment
Share on other sites

ஐயோடா.. அப்ப கனடாக்காரர்?. ^_^

:D:lol: ஆரம்பிச்சிட்டாங்க.

கனடாக்காரர் இப்ப லண்டனுக்கு வந்துட்டார் :D

Link to comment
Share on other sites

:D:lol: ஆரம்பிச்சிட்டாங்க.

கனடாக்காரர் இப்ப லண்டனுக்கு வந்துட்டார் ^_^

அட சொல்லியிருந்தா போய் சந்திச்சு இருப்பேன்லா.. :D

Link to comment
Share on other sites

அட சொல்லியிருந்தா போய் சந்திச்சு இருப்பேன்லா.. :D

:lol: நீங்கதான் பிசி ஆச்சுதே. ஏன் சிரமம் கொடுப்பான் என்று சொல்லாமல் இருந்துட்டேன். :D

Link to comment
Share on other sites

மாமோய் கவிதை சூப்பரா இருக்கு அதிலும் இந்த துளி மிகவும் நன்றாக இருகிறது வாழ்த்துகள்!! :)

கசக்கிய காகிதத்தைப் பார்த்து

பேனா சிரிக்கிறது..

அதன்..மை முடிவது தெரியாமல்.

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.