Jump to content

கோழையாக நீ!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே புலத்தை பொறுத்தவரை இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று தான் கூறமுடியும் உதாரணதிற்கு என்னை எடுத்து கொள்ளுங்கோ இங்கே படிக்கிறேன் படித்து முடித்து நல்ல வேலை கிடைக்கும் அதற்கு பின்னர் ஒரு வீட்டை வாங்குவன் நல்லதொரு வாகனத்தை வாங்குவன் இதை எல்லாம் ஒரு 26 வயசிற்குள்ள செய்து முடித்திடுவன் அதே போல் தான் இங்கே இருக்கும் பெண்ணும் செய்வா இப்படியான நிலையில் "சீதனம்" என்ற பிரச்சினை வருவதில்லை என்றே சொல்லலாம்!!

உங்கட தன்னம்பிக்கையைப் பாராட்டலாம். ஆனால் புகலிடத்தில வீடோ வாகனமோ.. ஒரு "நல்ல வேலைல" இருந்து சுதந்திரமா வாங்கிப் போட முடியாது என்றதை ஒப்புக் கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கப் போறது நீண்ட கால கடனடிப்படையில். அப்படி வாங்கும் போது தினமும் உழைச்சே ஆகனும் என்ற நிலைக்குள்ள உங்களை தள்ளிவிடுறீங்க. ஒரு நாள் வேலைக்குப் போகல்லைன்னாக் கூட கடன் கழுத்தைத் திருகும் நிலை உருவாகிடும். அப்படியான கட்டமைப்புத்தான் புகலிடத்தில்.

ஊரில அப்படியல்ல. ஊரில வீடு வளவு காணி பூமி சொந்தமா இருக்கும். உழைக்கிறது மிச்சமா இருக்கும். ஊரில "நல்ல வேலை" என்றதில அர்த்தம் இருக்கு. புகலிடத்தில "நல்ல வேலை" என்றால் அறவிடப்படும் வரியும் "நல்லா" இருக்கும்.

எனி நல்ல வேலைல உள்ளவை ஆடம்பரமா வேற வாழ விரும்புவினம். அதுதான் புகலிடத்தில் பொருளாதார நிறுவமைப்பின் இலக்கே. உழைக்கிறதை செலவழிக்கும் வகையில் தான் புகலிடத்தில் பொருளாதார கட்டமைப்பு வலை மக்களை நோக்கி விரிக்கப்பட்டிருக்கு. அதில் அறிந்தும் தவிர்க்க முடியாமல் மக்கள் சிக்கித் தவிக்கிறதை நீங்கள் சின்னப்பிள்ளை இன்னும் காணேல்லப் போல. அனுபவிக்கேக்க புரியும் ராசா.. கொஞ்சம் பொறுங்கோ..! யுனில இருக்கேக்க வெளி உலகம் சொர்க்கமாத்தான் தெரியும். சுப்பர் சுப்பர் கனவுகள் சுதந்திரமா சுழன்றடிக்கும். வெளில வாங்க நிஜ உலகைக் காண்பீங்க..! :)

சீதனம் என்பது ஊரில பெண்ணின் பொருளாதார நிலையை மையப்படுத்திதான் கொடுக்கிறது. அவா நல்ல வேலையில இருந்தாலும் கொடுப்பினம். வீடு வளவை கொடுப்பினம். காரணம் இளம் சோடிகளின் தலையில பெரிய சுமையை தூக்கி வைச்சு அதுகளின்ர வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே சுமைகளை கூட்டி வாழ்க்கையில் விரக்தி ஏற்படுபதைத் தவிர்க்க.

ஆனால் புகலிடத்தில் எத்தினை இளம் சோடிகள் செலவுக்கு ஏற்ப போதிய வருமானமின்றி கிறடிட் காட்டுக்க மாட்டுப்பட்டு.. விவாகரத்துக்களை வரை போகினம். சும்மா ராசா.. புகலிடத்தைப் பற்றி பெரிசா படம் காட்டுறதை தவிர்த்து நடைமுறை யதார்த்தங்களைச் சொல்லுங்கோ. அப்பதான் தாயக மக்கள் புகலிடத்துக்கு வரேக்க அதற்கேற்ப தயாரிப்புக்களை செய்வினம். இங்க பல கனவோட சீதனமில்லாமல் மாப்பிள்ளை கிடைக்குது என்று கட்டி வந்து, சுப்பர் மார்க்கட்டையும் மக்டொனால்டுகளையும் மலிவு விலைக்கடைகளையும் நம்பி எத்தனை குடும்பங்கள் வாழுது.

எத்தனை பேர் தகுந்த வருமானமின்றி அரச பணத்தில அரச வீடுகளில வாழினம். ஊரில இருக்கிறவங்க காலப்போக்கில சுதந்திர வாழ்க்கைக்குள்ள வாறாங்க. புகலிடத்தில உள்ளவை காலப்போக்கில கடன் வாழ்க்கைக்குள்ள வாறாங்க. அவங்க கடன் அவங்க பென்சன் வாங்கேக்கதான் தீரும். அதுக்குப் பிறகு.. என்னத்தை வாழ்ந்து...???! இதுதான் புகலிட வாழ்க்கை. சுமைகள் கூடிய வாழ்க்கை..! ஊரில சுமைகள் குறைந்த வாழ்க்கை. அதற்கு சீதனமும் ஒரு வகையில உதவுது பெண்களைப் பொறுத்தவரை. :)

Link to comment
Share on other sites

உங்கட தன்னம்பிக்கையைப் பாராட்டலாம். ஆனால் புகலிடத்தில வீடோ வாகனமோ.. ஒரு "நல்ல வேலைல" இருந்து சுதந்திரமா வாங்கிப் போட முடியாது என்றதை ஒப்புக் கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கப் போறது நீண்ட கால கடனடிப்படையில். அப்படி வாங்கும் போது தினமும் உழைச்சே ஆகனும் என்ற நிலைக்குள்ள உங்களை தள்ளிவிடுறீங்க. ஒரு நாள் வேலைக்குப் போகல்லைன்னாக் கூட கடன் கழுத்தைத் திருகும் நிலை உருவாகிடும். அப்படியான கட்டமைப்புத்தான் புகலிடத்தில்.

ஊரில அப்படியல்ல. ஊரில வீடு வளவு காணி பூமி சொந்தமா இருக்கும். உழைக்கிறது மிச்சமா இருக்கும். ஊரில "நல்ல வேலை" என்றதில அர்த்தம் இருக்கு. புகலிடத்தில "நல்ல வேலை" என்றால் அறவிடப்படும் வரியும் "நல்லா" இருக்கும்.

எனி நல்ல வேலைல உள்ளவை ஆடம்பரமா வேற வாழ விரும்புவினம். அதுதான் புகலிடத்தில் பொருளாதார நிறுவமைப்பின் இலக்கே. உழைக்கிறதை செலவழிக்கும் வகையில் தான் புகலிடத்தில் பொருளாதார கட்டமைப்பு வலை மக்களை நோக்கி விரிக்கப்பட்டிருக்கு. அதில் அறிந்தும் தவிர்க்க முடியாமல் மக்கள் சிக்கித் தவிக்கிறதை நீங்கள் சின்னப்பிள்ளை இன்னும் காணேல்லப் போல. அனுபவிக்கேக்க புரியும் ராசா.. கொஞ்சம் பொறுங்கோ..! யுனில இருக்கேக்க வெளி உலகம் சொர்க்கமாத்தான் தெரியும். சுப்பர் சுப்பர் கனவுகள் சுதந்திரமா சுழன்றடிக்கும். வெளில வாங்க நிஜ உலகைக் காண்பீங்க..!

சீதனம் என்பது ஊரில பெண்ணின் பொருளாதார நிலையை மையப்படுத்திதான் கொடுக்கிறது. அவா நல்ல வேலையில இருந்தாலும் கொடுப்பினம். வீடு வளவை கொடுப்பினம். காரணம் இளம் சோடிகளின் தலையில பெரிய சுமையை தூக்கி வைச்சு அதுகளின்ர வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே சுமைகளை கூட்டி வாழ்க்கையில் விரக்தி ஏற்படுபதைத் தவிர்க்க.

ஆனால் புகலிடத்தில் எத்தினை இளம் சோடிகள் செலவுக்கு ஏற்ப போதிய வருமானமின்றி கிறடிட் காட்டுக்க மாட்டுப்பட்டு.. விவாகரத்துக்களை வரை போகினம். சும்மா ராசா.. புகலிடத்தைப் பற்றி பெரிசா படம் காட்டுறதை தவிர்த்து நடைமுறை யதார்த்தங்களைச் சொல்லுங்கோ. அப்பதான் தாயக மக்கள் புகலிடத்துக்கு வரேக்க அதற்கேற்ப தயாரிப்புக்களை செய்வினம். இங்க பல கனவோட சீதனமில்லாமல் மாப்பிள்ளை கிடைக்குது என்று கட்டி வந்து, சுப்பர் மார்க்கட்டையும் மக்டொனால்டுகளையும் மலிவு விலைக்கடைகளையும் நம்பி எத்தனை குடும்பங்கள் வாழுது.

எத்தனை பேர் தகுந்த வருமானமின்றி அரச பணத்தில அரச வீடுகளில வாழினம். ஊரில இருக்கிறவங்க காலப்போக்கில சுதந்திர வாழ்க்கைக்குள்ள வாறாங்க. புகலிடத்தில உள்ளவை காலப்போக்கில கடன் வாழ்க்கைக்குள்ள வாறாங்க. அவங்க கடன் அவங்க பென்சன் வாங்கேக்கதான் தீரும். அதுக்குப் பிறகு.. என்னத்தை வாழ்ந்து...???! இதுதான் புகலிட வாழ்க்கை. சுமைகள் கூடிய வாழ்க்கை..! ஊரில சுமைகள் குறைந்த வாழ்க்கை. அதற்கு சீதனமும் ஒரு வகையில உதவுது பெண்களைப் பொறுத்தவரை.

தாத்தா என்னை பாராட்டியதிற்கு மிக்க நன்றி :( !!வீடு வாங்குவது பெரிய விசயம் அல்ல "லோனில்" லட்டி கொண்டு இருக்க வேண்டும் வாகனம் சொந்த காசில் வாங்கலாம் தானே தாத்தா அதில ஒரு பெரிய பிரச்சினை இருப்பது போல எனக்கு தெரியவில்லை :) !!ஏன் தாத்தா வருவாயிற்கு மேல ஆசைபட்டு வாங்காம எங்கள் வருவாயிற்கு ஏற்ற மாதிரி கடனைடிப்படையில் வாங்கினா ஒரு பிரச்சினையும் இல்லை என்பது உங்களுக்கு தெரியாததா!!இந்த கட்டமைப்பில் பல நன்மைகளும் தீமைகளும் இருகிறது ஏன் நாம் நல்ல பக்கத்தை பார்க்க கூடாது தாத்தா!! :)

ஊரில காணி எல்லாம் சொந்தமாக இருக்கும் என்பது சரி ஒத்து கொள்கிறேன் அதே போல் புலத்தில் எங்களிடம் சொந்தமாக (கடன் அடிபடையில்" வாங்கினாலும் எமக்கு என்று வருகிறது ஆனா அங்கே தாத்தாவின் அல்லது அப்பாவின் சொத்தை அல்லவா எம் சொத்து என்று சொல்கிறோம் இது வெட்கமான செயற்பாடு இல்லையா :) மற்றையவர்களை பற்றி தெரியாது என்னால் அப்படி இருக்க முடியாது தாத்தா!!புகலிடத்தில வரியை அறவிடாலும் தாத்தா வயசு போன காலத்தில (உங்களை மாதிரி வயசு வந்த சமயம்) எவ்வளவு உதவிகளை அரசு செய்கிறது ஊரில மகன் பார்ப்பானா என்று ஏங்கி கொண்டு இருக்க வேண்டும் :) இங்கே அந்த பிரச்சினை இருக்கா ஏனைய நாடுகளை பற்றி தெரியாது மெடிகல் இலவசமாக அனைத்து மக்களிற்கும் கொடுக்கிறார்கள் இங்கே ஆகவே வரியை பற்றி பெரிதாக கதைப்பது பிரயோசனமற்றது தாத்தா!! :)

தாத்தா கிரடிட் கார்ட்டில மாட்டு பட்டு தவிர்கிறது எல்லாம் திருமணம் முடிந்து வாழ்கையின் நடுபகுதியிலே வாறவை சரியா அவர்களின் பிள்ளைகளை எடுத்து கொண்டா இந்த பிரச்சினையை காணவே மாட்டீங்க அப்படி நடந்தா வெகு சொற்பமே தாத்தா!!தாத்தா படம் எல்லாம் காட்டவில்லை எல்லாவற்றையும் நன்கு அநுபவித்து கொண்டு புகலிடத்தை குறை சொல்வது என்னால் முடியாது!!அதோட தாத்தா மக்டோனால்ஸ்சில் வேலை செய்வது ஒன்றும் தரகுறைவு இல்லையே அங்கே வேலை செய்தும் சந்தோசமாக வாழமுடியும் இங்கே ஆனா இதை மாதிரி ஊரில மக்டோனால்சில் வேலை செய்து காப்பாற்றமுடியுமா :) !!

ஊரில இருகிறவை காலபோக்கிறு சுகந்திர வாழ்க்கை வாழவில்லை தங்களை ஏமாற்றி கொண்டு வாழ்கையை கழிக்கீனம் என்றே சொல்லலாம் ஆனா இங்கே உள்ளவர்கள் நன்கு வாழ்க்கையை அநுபவிக்கிறார்கள் என்றே சொல்லலாம் :) !!ஊரை பொறுத்தவரை சுமை குறைந்த மாதிரி நடித்து தம் வாழ்க்கையை கொண்டு செல்லும் ஒரு வாழ்க்கை முறை இங்கே நடிக்கவில்லை அநுபவிக்கிறார்கள் வாழ்க்கையை அதில் சீதனம் என்பது பொருட்டல்ல!!சீதனம் ஊரில பெண்களை உதவில்லை இன்னும் அவர்களை மேலே உயரவிடாம தவிர்க்க ஊரில் உள்ள பெருசுகள் பின்பற்றும் ஒரு வகை தந்திரோபாயம் தாத்தா!! :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வாழ்க்கையை அநுபவிக்க வேண்டும் ஒழிய நடித்து வாழ்க்கையை கொன்டு செல்ல கூடாது"

Link to comment
Share on other sites

அட...இப்படி ஒருவிடையம் இருக்கு என்பதை மறந்து கட்டியாச்சு...... என்ன மாதிரி கட்டினாப்பிறகும் வாங்கலாமோ....??? யாராவது ஐடியாச் சொல்லுங்கப்பா...? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட...இப்படி ஒருவிடையம் இருக்கு என்பதை மறந்து கட்டியாச்சு...... என்ன மாதிரி கட்டினாப்பிறகும் வாங்கலாமோ....??? யாராவது ஐடியாச் சொல்லுங்கப்பா...? <_<

நானும் அதைத்தான் யோசிச்சு கொண்டு இருக்கிறேன்... ஏதாவது ஜடியா கிடைச்சால் எனக்கும் சொல்லுங்கோ.... :lol:

Link to comment
Share on other sites

நிச்சயமாக ஆண் மட்டும் வாங்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தால் 70% குறையும், உங்களுக்கு இதை எதிர்த்து நிக்க சக்தியில்லையா??ஏன் உங்களுக்கு சுய புத்தியில்லையா, ??

நன்றி

சுய புத்தியுடன் இலக்கியன் எழுதிக் கொள்ளவது என்னவெனில் :lol:

100 பவுனில தாலி கட்ட மாப்பிளை எங்கே போவது <_<:D

Link to comment
Share on other sites

சுய புத்தியுடன் இலக்கியன் எழுதிக் கொள்ளவது என்னவெனில் :lol:

100 பவுனில தாலி கட்ட மாப்பிளை எங்கே போவது <_<:D

100 பவுனில் நிச்சயமாக இந்த புது சமூதாயம் எதிர்பார்க்காது!!

நீங்கள் இந்த கிலட்டு சமூதாயத்துக்குள் இருந்து வேளியே வாருங்கள்!!

இப்படியே எத்தனை வருடங்களுக்கு கதைத்து நல்ல விடயங்களை முன்னேடுக்க தடையாக இருக்க பேறீங்கள்??

இப்படி சொல்லுவதுக்கு மூதியேறே என்னை மன்னித்து விடுங்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியவள் நீங்கள் வழமையாக எல்லோரும் செய்வது போல முதியோர்கள் மீது குற்றம் காட்டிவிட்டு தப்பிக்க முனைகிறீர்கள்.

புலம்பெயர்ந்த இடங்களில் பெரும்பாலான தமிழர்களின் விசேட நிகழ்வுகளின் போது இளம் பெண்கள் அணிந்திருக்கும் நகைகளின் அளவு ஊரில வயதானவங்க அணிந்ததைக் காட்டிலும் பல மடங்கு அதிகம்.

நீங்கள் புகலிடத்தில எங்கையோ தமிழர்கள் அல்லாத இடத்தில வாழுறீங்க போல...!! அல்லது உண்மையை மறைச்சு வயதானவங்க மீது குற்றத்தை சுமத்திட்டு தப்பிக்க முனையுறீங்க...!

கீழிரண்டு படங்களையும் பாருங்க.. சில இளம் பெண்களின் கழுத்துகளை அழங்கரிப்பவையை..???!

http://www.venkateswara.org.uk/photos/part...IMG_4208001.jpg

http://www.venkateswara.org.uk/photos/part...IMG_4215001.jpg

இவை சும்மா சாம்பிள்.. இதை விட மோசமா அணிந்து கொண்டு வருவதை வருடா வருடம் கோவில் திருவிழாக்களில் காணலாம்..! வயதானவங்களை நோக்கி வெளில வா என்று கூவிறதை விட்டிட்டு.. இந்த இளசுகளை நோக்கிக் கூவுங்க. பெண்களே பெண்களை நோக்கி.. வருகினமோ பாப்பம். <_<:lol:

Link to comment
Share on other sites

100 பவுனில் நிச்சயமாக இந்த புது சமூதாயம் எதிர்பார்க்காது!!

நீங்கள் இந்த கிலட்டு சமூதாயத்துக்குள் இருந்து வேளியே வாருங்கள்!!

இப்படியே எத்தனை வருடங்களுக்கு கதைத்து நல்ல விடயங்களை முன்னேடுக்க தடையாக இருக்க பேறீங்கள்??

இப்படி சொல்லுவதுக்கு மூதியேறே என்னை மன்னித்து விடுங்கள்!!

இனியவள் உங்கள் கோபம் ஆண்வர்க்கம் மீது மட்டும் ஏற்படுத்துவது நியாயமானதாக படவில்லை நிதானமாக சிந்தித்தால் புரிந்து கொள்ள முடியும். ஒரு கை மட்டும் தட்டுவதால் ஓசை வராது இரண்டு கைகளும் தட்டப்பட வேண்டும் .

எனக்கும் சீதனம் இதில் நம்பிக்கையில்லை. இனியவளின் கோபம் இப்போது புரிகிறது இப்போது புலம் பெயர் நாட்டில் மணமகளின் வயதுக்கு தாலி கட்டுகினமாம். அதுதான் புது நாகரீகமாம் :unsure::blink:

Link to comment
Share on other sites

இனியவள் உங்கள் கோபம் ஆண்வர்க்கம் மீது மட்டும் ஏற்படுத்துவது நியாயமானதாக படவில்லை நிதானமாக சிந்தித்தால் புரிந்து கொள்ள முடியும். ஒரு கை மட்டும் தட்டுவதால் ஓசை வராது இரண்டு கைகளும் தட்டப்பட வேண்டும் .

என் கோபம் ஆண்வர்க்கம் மீது இல்லை என்று பிறிந்து கொண்ட உங்களுக்கு எனது நன்றிகள்!!

நீங்கள் அனைவரும் நல்லவர்கள், வள்ளவர்கள்... இப்ப சந்தேசமா ???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.