Jump to content

கோழையாக நீ!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே புலத்தை பொறுத்தவரை இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று தான் கூறமுடியும் உதாரணதிற்கு என்னை எடுத்து கொள்ளுங்கோ இங்கே படிக்கிறேன் படித்து முடித்து நல்ல வேலை கிடைக்கும் அதற்கு பின்னர் ஒரு வீட்டை வாங்குவன் நல்லதொரு வாகனத்தை வாங்குவன் இதை எல்லாம் ஒரு 26 வயசிற்குள்ள செய்து முடித்திடுவன் அதே போல் தான் இங்கே இருக்கும் பெண்ணும் செய்வா இப்படியான நிலையில் "சீதனம்" என்ற பிரச்சினை வருவதில்லை என்றே சொல்லலாம்!!

உங்கட தன்னம்பிக்கையைப் பாராட்டலாம். ஆனால் புகலிடத்தில வீடோ வாகனமோ.. ஒரு "நல்ல வேலைல" இருந்து சுதந்திரமா வாங்கிப் போட முடியாது என்றதை ஒப்புக் கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கப் போறது நீண்ட கால கடனடிப்படையில். அப்படி வாங்கும் போது தினமும் உழைச்சே ஆகனும் என்ற நிலைக்குள்ள உங்களை தள்ளிவிடுறீங்க. ஒரு நாள் வேலைக்குப் போகல்லைன்னாக் கூட கடன் கழுத்தைத் திருகும் நிலை உருவாகிடும். அப்படியான கட்டமைப்புத்தான் புகலிடத்தில்.

ஊரில அப்படியல்ல. ஊரில வீடு வளவு காணி பூமி சொந்தமா இருக்கும். உழைக்கிறது மிச்சமா இருக்கும். ஊரில "நல்ல வேலை" என்றதில அர்த்தம் இருக்கு. புகலிடத்தில "நல்ல வேலை" என்றால் அறவிடப்படும் வரியும் "நல்லா" இருக்கும்.

எனி நல்ல வேலைல உள்ளவை ஆடம்பரமா வேற வாழ விரும்புவினம். அதுதான் புகலிடத்தில் பொருளாதார நிறுவமைப்பின் இலக்கே. உழைக்கிறதை செலவழிக்கும் வகையில் தான் புகலிடத்தில் பொருளாதார கட்டமைப்பு வலை மக்களை நோக்கி விரிக்கப்பட்டிருக்கு. அதில் அறிந்தும் தவிர்க்க முடியாமல் மக்கள் சிக்கித் தவிக்கிறதை நீங்கள் சின்னப்பிள்ளை இன்னும் காணேல்லப் போல. அனுபவிக்கேக்க புரியும் ராசா.. கொஞ்சம் பொறுங்கோ..! யுனில இருக்கேக்க வெளி உலகம் சொர்க்கமாத்தான் தெரியும். சுப்பர் சுப்பர் கனவுகள் சுதந்திரமா சுழன்றடிக்கும். வெளில வாங்க நிஜ உலகைக் காண்பீங்க..! :)

சீதனம் என்பது ஊரில பெண்ணின் பொருளாதார நிலையை மையப்படுத்திதான் கொடுக்கிறது. அவா நல்ல வேலையில இருந்தாலும் கொடுப்பினம். வீடு வளவை கொடுப்பினம். காரணம் இளம் சோடிகளின் தலையில பெரிய சுமையை தூக்கி வைச்சு அதுகளின்ர வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே சுமைகளை கூட்டி வாழ்க்கையில் விரக்தி ஏற்படுபதைத் தவிர்க்க.

ஆனால் புகலிடத்தில் எத்தினை இளம் சோடிகள் செலவுக்கு ஏற்ப போதிய வருமானமின்றி கிறடிட் காட்டுக்க மாட்டுப்பட்டு.. விவாகரத்துக்களை வரை போகினம். சும்மா ராசா.. புகலிடத்தைப் பற்றி பெரிசா படம் காட்டுறதை தவிர்த்து நடைமுறை யதார்த்தங்களைச் சொல்லுங்கோ. அப்பதான் தாயக மக்கள் புகலிடத்துக்கு வரேக்க அதற்கேற்ப தயாரிப்புக்களை செய்வினம். இங்க பல கனவோட சீதனமில்லாமல் மாப்பிள்ளை கிடைக்குது என்று கட்டி வந்து, சுப்பர் மார்க்கட்டையும் மக்டொனால்டுகளையும் மலிவு விலைக்கடைகளையும் நம்பி எத்தனை குடும்பங்கள் வாழுது.

எத்தனை பேர் தகுந்த வருமானமின்றி அரச பணத்தில அரச வீடுகளில வாழினம். ஊரில இருக்கிறவங்க காலப்போக்கில சுதந்திர வாழ்க்கைக்குள்ள வாறாங்க. புகலிடத்தில உள்ளவை காலப்போக்கில கடன் வாழ்க்கைக்குள்ள வாறாங்க. அவங்க கடன் அவங்க பென்சன் வாங்கேக்கதான் தீரும். அதுக்குப் பிறகு.. என்னத்தை வாழ்ந்து...???! இதுதான் புகலிட வாழ்க்கை. சுமைகள் கூடிய வாழ்க்கை..! ஊரில சுமைகள் குறைந்த வாழ்க்கை. அதற்கு சீதனமும் ஒரு வகையில உதவுது பெண்களைப் பொறுத்தவரை. :)

Link to comment
Share on other sites

உங்கட தன்னம்பிக்கையைப் பாராட்டலாம். ஆனால் புகலிடத்தில வீடோ வாகனமோ.. ஒரு "நல்ல வேலைல" இருந்து சுதந்திரமா வாங்கிப் போட முடியாது என்றதை ஒப்புக் கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கப் போறது நீண்ட கால கடனடிப்படையில். அப்படி வாங்கும் போது தினமும் உழைச்சே ஆகனும் என்ற நிலைக்குள்ள உங்களை தள்ளிவிடுறீங்க. ஒரு நாள் வேலைக்குப் போகல்லைன்னாக் கூட கடன் கழுத்தைத் திருகும் நிலை உருவாகிடும். அப்படியான கட்டமைப்புத்தான் புகலிடத்தில்.

ஊரில அப்படியல்ல. ஊரில வீடு வளவு காணி பூமி சொந்தமா இருக்கும். உழைக்கிறது மிச்சமா இருக்கும். ஊரில "நல்ல வேலை" என்றதில அர்த்தம் இருக்கு. புகலிடத்தில "நல்ல வேலை" என்றால் அறவிடப்படும் வரியும் "நல்லா" இருக்கும்.

எனி நல்ல வேலைல உள்ளவை ஆடம்பரமா வேற வாழ விரும்புவினம். அதுதான் புகலிடத்தில் பொருளாதார நிறுவமைப்பின் இலக்கே. உழைக்கிறதை செலவழிக்கும் வகையில் தான் புகலிடத்தில் பொருளாதார கட்டமைப்பு வலை மக்களை நோக்கி விரிக்கப்பட்டிருக்கு. அதில் அறிந்தும் தவிர்க்க முடியாமல் மக்கள் சிக்கித் தவிக்கிறதை நீங்கள் சின்னப்பிள்ளை இன்னும் காணேல்லப் போல. அனுபவிக்கேக்க புரியும் ராசா.. கொஞ்சம் பொறுங்கோ..! யுனில இருக்கேக்க வெளி உலகம் சொர்க்கமாத்தான் தெரியும். சுப்பர் சுப்பர் கனவுகள் சுதந்திரமா சுழன்றடிக்கும். வெளில வாங்க நிஜ உலகைக் காண்பீங்க..!

சீதனம் என்பது ஊரில பெண்ணின் பொருளாதார நிலையை மையப்படுத்திதான் கொடுக்கிறது. அவா நல்ல வேலையில இருந்தாலும் கொடுப்பினம். வீடு வளவை கொடுப்பினம். காரணம் இளம் சோடிகளின் தலையில பெரிய சுமையை தூக்கி வைச்சு அதுகளின்ர வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே சுமைகளை கூட்டி வாழ்க்கையில் விரக்தி ஏற்படுபதைத் தவிர்க்க.

ஆனால் புகலிடத்தில் எத்தினை இளம் சோடிகள் செலவுக்கு ஏற்ப போதிய வருமானமின்றி கிறடிட் காட்டுக்க மாட்டுப்பட்டு.. விவாகரத்துக்களை வரை போகினம். சும்மா ராசா.. புகலிடத்தைப் பற்றி பெரிசா படம் காட்டுறதை தவிர்த்து நடைமுறை யதார்த்தங்களைச் சொல்லுங்கோ. அப்பதான் தாயக மக்கள் புகலிடத்துக்கு வரேக்க அதற்கேற்ப தயாரிப்புக்களை செய்வினம். இங்க பல கனவோட சீதனமில்லாமல் மாப்பிள்ளை கிடைக்குது என்று கட்டி வந்து, சுப்பர் மார்க்கட்டையும் மக்டொனால்டுகளையும் மலிவு விலைக்கடைகளையும் நம்பி எத்தனை குடும்பங்கள் வாழுது.

எத்தனை பேர் தகுந்த வருமானமின்றி அரச பணத்தில அரச வீடுகளில வாழினம். ஊரில இருக்கிறவங்க காலப்போக்கில சுதந்திர வாழ்க்கைக்குள்ள வாறாங்க. புகலிடத்தில உள்ளவை காலப்போக்கில கடன் வாழ்க்கைக்குள்ள வாறாங்க. அவங்க கடன் அவங்க பென்சன் வாங்கேக்கதான் தீரும். அதுக்குப் பிறகு.. என்னத்தை வாழ்ந்து...???! இதுதான் புகலிட வாழ்க்கை. சுமைகள் கூடிய வாழ்க்கை..! ஊரில சுமைகள் குறைந்த வாழ்க்கை. அதற்கு சீதனமும் ஒரு வகையில உதவுது பெண்களைப் பொறுத்தவரை.

தாத்தா என்னை பாராட்டியதிற்கு மிக்க நன்றி :( !!வீடு வாங்குவது பெரிய விசயம் அல்ல "லோனில்" லட்டி கொண்டு இருக்க வேண்டும் வாகனம் சொந்த காசில் வாங்கலாம் தானே தாத்தா அதில ஒரு பெரிய பிரச்சினை இருப்பது போல எனக்கு தெரியவில்லை :) !!ஏன் தாத்தா வருவாயிற்கு மேல ஆசைபட்டு வாங்காம எங்கள் வருவாயிற்கு ஏற்ற மாதிரி கடனைடிப்படையில் வாங்கினா ஒரு பிரச்சினையும் இல்லை என்பது உங்களுக்கு தெரியாததா!!இந்த கட்டமைப்பில் பல நன்மைகளும் தீமைகளும் இருகிறது ஏன் நாம் நல்ல பக்கத்தை பார்க்க கூடாது தாத்தா!! :)

ஊரில காணி எல்லாம் சொந்தமாக இருக்கும் என்பது சரி ஒத்து கொள்கிறேன் அதே போல் புலத்தில் எங்களிடம் சொந்தமாக (கடன் அடிபடையில்" வாங்கினாலும் எமக்கு என்று வருகிறது ஆனா அங்கே தாத்தாவின் அல்லது அப்பாவின் சொத்தை அல்லவா எம் சொத்து என்று சொல்கிறோம் இது வெட்கமான செயற்பாடு இல்லையா :) மற்றையவர்களை பற்றி தெரியாது என்னால் அப்படி இருக்க முடியாது தாத்தா!!புகலிடத்தில வரியை அறவிடாலும் தாத்தா வயசு போன காலத்தில (உங்களை மாதிரி வயசு வந்த சமயம்) எவ்வளவு உதவிகளை அரசு செய்கிறது ஊரில மகன் பார்ப்பானா என்று ஏங்கி கொண்டு இருக்க வேண்டும் :) இங்கே அந்த பிரச்சினை இருக்கா ஏனைய நாடுகளை பற்றி தெரியாது மெடிகல் இலவசமாக அனைத்து மக்களிற்கும் கொடுக்கிறார்கள் இங்கே ஆகவே வரியை பற்றி பெரிதாக கதைப்பது பிரயோசனமற்றது தாத்தா!! :)

தாத்தா கிரடிட் கார்ட்டில மாட்டு பட்டு தவிர்கிறது எல்லாம் திருமணம் முடிந்து வாழ்கையின் நடுபகுதியிலே வாறவை சரியா அவர்களின் பிள்ளைகளை எடுத்து கொண்டா இந்த பிரச்சினையை காணவே மாட்டீங்க அப்படி நடந்தா வெகு சொற்பமே தாத்தா!!தாத்தா படம் எல்லாம் காட்டவில்லை எல்லாவற்றையும் நன்கு அநுபவித்து கொண்டு புகலிடத்தை குறை சொல்வது என்னால் முடியாது!!அதோட தாத்தா மக்டோனால்ஸ்சில் வேலை செய்வது ஒன்றும் தரகுறைவு இல்லையே அங்கே வேலை செய்தும் சந்தோசமாக வாழமுடியும் இங்கே ஆனா இதை மாதிரி ஊரில மக்டோனால்சில் வேலை செய்து காப்பாற்றமுடியுமா :) !!

ஊரில இருகிறவை காலபோக்கிறு சுகந்திர வாழ்க்கை வாழவில்லை தங்களை ஏமாற்றி கொண்டு வாழ்கையை கழிக்கீனம் என்றே சொல்லலாம் ஆனா இங்கே உள்ளவர்கள் நன்கு வாழ்க்கையை அநுபவிக்கிறார்கள் என்றே சொல்லலாம் :) !!ஊரை பொறுத்தவரை சுமை குறைந்த மாதிரி நடித்து தம் வாழ்க்கையை கொண்டு செல்லும் ஒரு வாழ்க்கை முறை இங்கே நடிக்கவில்லை அநுபவிக்கிறார்கள் வாழ்க்கையை அதில் சீதனம் என்பது பொருட்டல்ல!!சீதனம் ஊரில பெண்களை உதவில்லை இன்னும் அவர்களை மேலே உயரவிடாம தவிர்க்க ஊரில் உள்ள பெருசுகள் பின்பற்றும் ஒரு வகை தந்திரோபாயம் தாத்தா!! :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வாழ்க்கையை அநுபவிக்க வேண்டும் ஒழிய நடித்து வாழ்க்கையை கொன்டு செல்ல கூடாது"

Link to comment
Share on other sites

அட...இப்படி ஒருவிடையம் இருக்கு என்பதை மறந்து கட்டியாச்சு...... என்ன மாதிரி கட்டினாப்பிறகும் வாங்கலாமோ....??? யாராவது ஐடியாச் சொல்லுங்கப்பா...? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட...இப்படி ஒருவிடையம் இருக்கு என்பதை மறந்து கட்டியாச்சு...... என்ன மாதிரி கட்டினாப்பிறகும் வாங்கலாமோ....??? யாராவது ஐடியாச் சொல்லுங்கப்பா...? <_<

நானும் அதைத்தான் யோசிச்சு கொண்டு இருக்கிறேன்... ஏதாவது ஜடியா கிடைச்சால் எனக்கும் சொல்லுங்கோ.... :lol:

Link to comment
Share on other sites

நிச்சயமாக ஆண் மட்டும் வாங்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தால் 70% குறையும், உங்களுக்கு இதை எதிர்த்து நிக்க சக்தியில்லையா??ஏன் உங்களுக்கு சுய புத்தியில்லையா, ??

நன்றி

சுய புத்தியுடன் இலக்கியன் எழுதிக் கொள்ளவது என்னவெனில் :lol:

100 பவுனில தாலி கட்ட மாப்பிளை எங்கே போவது <_<:D

Link to comment
Share on other sites

சுய புத்தியுடன் இலக்கியன் எழுதிக் கொள்ளவது என்னவெனில் :lol:

100 பவுனில தாலி கட்ட மாப்பிளை எங்கே போவது <_<:D

100 பவுனில் நிச்சயமாக இந்த புது சமூதாயம் எதிர்பார்க்காது!!

நீங்கள் இந்த கிலட்டு சமூதாயத்துக்குள் இருந்து வேளியே வாருங்கள்!!

இப்படியே எத்தனை வருடங்களுக்கு கதைத்து நல்ல விடயங்களை முன்னேடுக்க தடையாக இருக்க பேறீங்கள்??

இப்படி சொல்லுவதுக்கு மூதியேறே என்னை மன்னித்து விடுங்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியவள் நீங்கள் வழமையாக எல்லோரும் செய்வது போல முதியோர்கள் மீது குற்றம் காட்டிவிட்டு தப்பிக்க முனைகிறீர்கள்.

புலம்பெயர்ந்த இடங்களில் பெரும்பாலான தமிழர்களின் விசேட நிகழ்வுகளின் போது இளம் பெண்கள் அணிந்திருக்கும் நகைகளின் அளவு ஊரில வயதானவங்க அணிந்ததைக் காட்டிலும் பல மடங்கு அதிகம்.

நீங்கள் புகலிடத்தில எங்கையோ தமிழர்கள் அல்லாத இடத்தில வாழுறீங்க போல...!! அல்லது உண்மையை மறைச்சு வயதானவங்க மீது குற்றத்தை சுமத்திட்டு தப்பிக்க முனையுறீங்க...!

கீழிரண்டு படங்களையும் பாருங்க.. சில இளம் பெண்களின் கழுத்துகளை அழங்கரிப்பவையை..???!

http://www.venkateswara.org.uk/photos/part...IMG_4208001.jpg

http://www.venkateswara.org.uk/photos/part...IMG_4215001.jpg

இவை சும்மா சாம்பிள்.. இதை விட மோசமா அணிந்து கொண்டு வருவதை வருடா வருடம் கோவில் திருவிழாக்களில் காணலாம்..! வயதானவங்களை நோக்கி வெளில வா என்று கூவிறதை விட்டிட்டு.. இந்த இளசுகளை நோக்கிக் கூவுங்க. பெண்களே பெண்களை நோக்கி.. வருகினமோ பாப்பம். <_<:lol:

Link to comment
Share on other sites

100 பவுனில் நிச்சயமாக இந்த புது சமூதாயம் எதிர்பார்க்காது!!

நீங்கள் இந்த கிலட்டு சமூதாயத்துக்குள் இருந்து வேளியே வாருங்கள்!!

இப்படியே எத்தனை வருடங்களுக்கு கதைத்து நல்ல விடயங்களை முன்னேடுக்க தடையாக இருக்க பேறீங்கள்??

இப்படி சொல்லுவதுக்கு மூதியேறே என்னை மன்னித்து விடுங்கள்!!

இனியவள் உங்கள் கோபம் ஆண்வர்க்கம் மீது மட்டும் ஏற்படுத்துவது நியாயமானதாக படவில்லை நிதானமாக சிந்தித்தால் புரிந்து கொள்ள முடியும். ஒரு கை மட்டும் தட்டுவதால் ஓசை வராது இரண்டு கைகளும் தட்டப்பட வேண்டும் .

எனக்கும் சீதனம் இதில் நம்பிக்கையில்லை. இனியவளின் கோபம் இப்போது புரிகிறது இப்போது புலம் பெயர் நாட்டில் மணமகளின் வயதுக்கு தாலி கட்டுகினமாம். அதுதான் புது நாகரீகமாம் :unsure::blink:

Link to comment
Share on other sites

இனியவள் உங்கள் கோபம் ஆண்வர்க்கம் மீது மட்டும் ஏற்படுத்துவது நியாயமானதாக படவில்லை நிதானமாக சிந்தித்தால் புரிந்து கொள்ள முடியும். ஒரு கை மட்டும் தட்டுவதால் ஓசை வராது இரண்டு கைகளும் தட்டப்பட வேண்டும் .

என் கோபம் ஆண்வர்க்கம் மீது இல்லை என்று பிறிந்து கொண்ட உங்களுக்கு எனது நன்றிகள்!!

நீங்கள் அனைவரும் நல்லவர்கள், வள்ளவர்கள்... இப்ப சந்தேசமா ???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.