Jump to content

நியூமராலஜி நிஜமா........!!!


Recommended Posts

நியூமராலஜி நிஜமா........!!!

நேற்று காலையில் வண்டியில் போய் கொண்டிருக்கும் போது ரேடியோ மிர்ச்சியில் கேட்ட ஒரு செய்திதான் இந்த பதிவெழுதுவதற்கான காரணம். அதாவது ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் வரையில் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெருவாரியான காரணம் நியூமராலஜியாம்....

இப்போது நியூமராலஜியுடன்...நேமியாலஜி என்கிறா ஜியும் சேர்ந்துள்ளதால் இத்தனை கூத்தும் நடக்கிறது.வேறு மாதிரியில் சொன்னால் ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் தங்களின் பெயரை மாற்றிக் கொள்வதால் வாழ்க்கையில் சுபிட்சம் அடைகிறார்கள் என கொள்ளலாம்.

என்ன அபத்தம் இது...... இதை மூடநம்பிக்கை என சொல்வதை விட பேராசை மற்றும் அறியாமையின் உச்சம் என்றே சொல்லலாம்.

வாஸ்து சாஸ்திரம், ஃபெய்ங் ஷீய் மாதிரி நியுமராலஜியும் நிரூபிக்கப் படாத/நிரூபிக்க முடியாத புதிரான அறிவியல் என்பதுதான் என்னுடைய தெளிவு. எனக்கும் நியூமராலஜியில் ஓரளவு பரிச்சயம் உண்டு, அதில் வியக்கவைக்கும் சில ஆச்சர்யங்களும் உண்மைகளும் இருக்கிறது.மற்றபடி பெயரை மாற்றுவதால் மட்டுமே ஒருவனுக்கு சுபிட்சம் வரவழைக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது சாத்தியமும் இல்லை

நியுமராலஜியின் பூர்வீகம் பற்றி நான் படித்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.....

எகிப்தில் வாழ்ந்த(வாழும்) 'Rosicrusians' இன மக்கள் வைத்திருந்ததாக சொல்லப்படும் 'Rose Cross' என்கிற அமைப்பு(நம்ம தமிழ்சங்கம் மாதிரி..) எழுத்துக்களுக்கான சப்த எண் குறித்து ஆராய்ந்தார்களாம்.

இவர்களிடமிருந்து இந்த கலை Hebrews கற்றுக் கொண்டதாக தெரிகிறது.இவர்கள் உறுவாக்கியதே Hebrew Kabala என்கிற முறை...

இவர்களை தொடர்ந்து கிரேக்கர்களும் இந்த கலையை கைகொண்டதாக தெரிகிறது.

நியூமராலஜி குறித்து புத்தகங்களாக நமக்கு கிடைத்திருப்பவை

12ம் நூற்றாண்டில் "மோஸஸ் டி லியான்" என்பவர் எழுதிய "The Book of Formation", "The Book of Splendour"

14ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "The Book of Thoth"

16ம் நூற்றாண்டில் John Hyden "Holy Guide"

18ம் நூற்றாண்டில் ஜெயின் ஜெர்மைன் எழுதிய Practical Astrology

நியுமராலஜி என்கிற பெயர் Cheiro என்பாரால்தான் முதன் முதலில் பாவிக்கப்பட்டது. இது நடந்தது பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில்

நியூமராலஜியின் நீட்சியே Tarot எனப்படும் சித்திரங்களை வைத்து பலன் சொல்லும் சோதிடமுறை

சீனர்கள் தங்களுக்கேயுரித்தான தனித் தன்மையுடன் ஒரு வகையான எண் கணிதத்தினை கையாண்டது தெரியவருகிறது. ஆனால் இது அரச குடும்பத்தினர் மட்டுமே பழக்கத்தில் வைத்திருந்தனர். மிக ரகசியமாக காக்கப் பட்டது.

இனி நம்மூருக்கு வருவோம்....

சம்ஸ்கிருதத்தில் "அஷரலஷா" என்கிற நூலில் எழுத்துக்களுக்கான ஒலி அளவும் அதன் பலன்களும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நமது மந்திர சாஸ்திரங்களில் எண்களை வைத்து யந்திரம் எழுதும் முறை இன்றளவும் உள்ளது.

அகத்தியரும்,வராகமிகிரரும் இது பற்றிய குறிப்புகளை தங்களது படைப்புகளில் குறிப்பிட்ட்டுள்ளனர்.

நம்ம திருவள்ளுவர் கூட "எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்"...என ஒரு குறளில் இது குறித்து கூறியிருக்கிறார். 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்பது இன்னொரு பிரபலமான சொற்றொடர்.

நியூமராலஜியின் மகத்துவம் பற்றி மொழி ஆளுமை கொண்ட யாரும் பக்கம் பக்கமாய் எழுதிக் குவிக்க முடியும்...ஆனால் என் வரையில் நியுமராலஜி என்பது 'எழுத்துக்களில் ஒலி அது உருவாக்கும் அதிர்வு அதன் அளவுகோல்...அதை பொருத்தமாக அமைப்பதனால் உருவாகும் ஒத்திசைவு(Harmony)....அதன் பலாபலன்களே நியுமராலஜி

ஒவ்வொரு எழுத்தின் அதிர்வுகளை வைத்து அதனை ஒன்பது கிரகங்களுக்கு இனையாக்கி அதன் தாக்கம் அந்த எழுத்துக்களின் மீது பிற்காலத்தில் திணிக்கப்பட்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.ஒவ்வொரு எண்ணின் ஒலி அதிர்வும் மற்ற ஒலி அதிர்வுடன் ஒத்திசைவும்,ஒவ்வாமையும் கொண்டிருக்கின்றன. இதையே சோதிடர்கள் 3 க்கு 6 பகை என சொல்ல கேட்டிருப்பீர்கள்.தமிழ் இலக்கணத்தில் வரும் மாத்திரை, நேரசை,நிரையசை போன்றவையும் இத்தகைய சூத்திரக் கணக்குகளே.....

நமது உடலானது பல நாடிகளால் ஆனதாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.நாடிகளை வசப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகுமாம்.சப்த சலனமாய் உச்சரிக்கும் மந்திர ஒலிகள் இந்த நாடிகளைத் தூண்டி உச்சரிப்பவர் மற்றும் கேட்பவரிடம் சலனத்தை உண்டாக்கும் என்கிறார்கள்.மந்திரங்களை உச்சரிக்கும்போது அந்தந்த பீஜங்களுக்கான உடல் உறுப்பின்மீது சித்தத்தை நிறுத்தி தொடர்ந்து கூற அந்த மந்திரங்களுக்கான பலனை பெறலாமாம்.

மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதை 'உருவேற்றுதல்' என்பர்.மந்திர சொற்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உருவேற்றினால் உள்ளம் உறுதி பெற்று தான் சொல்வதும் செய்வதும் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது.

இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் நமது எண் கனித வல்லுனர்கள் செயல்படுகின்றனர் என்பது என்னுடைய கணிப்பு......

பெயரை மாற்றுவதால் பலன் இருக்கிறதோ இல்லையோ என் அனுபவத்தில் சில பெயர்கள் அத்தனை சரியில்லை என்பதே என்னுடைய அனுபவம். ஆண்களை பொருத்த வரையில் ரமேஷ், சுரேஷ் என்கிற பெயர் இருப்பவர்களின் வாழ்க்கை ஏமாற்றங்களும், போராட்டங்களும் மிகுந்ததாக இருப்பதை பார்த்திருக்கிறேன். அதே வகையில் பெண்களில் கீதா, சுதா போன்ற பெயர்கள். இது என்னுடைய அனுபவம் மட்டுமே இது பிழையாக கூட இருக்க வாய்ப்புள்ளது.

பதிவு நீளமாகிக் கொண்டிருக்கிறது....உண்மை தமிழன் பார்த்தால் டென்சனாகிவிடுவார் எனவே...

ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன், இங்கே பேசப்படும் அல்லது புழக்கத்தில் இருக்கும் நியுமராலஜி வெறும் ஆரம்ப நிலை மட்டுமே...அவிழ்க்கப் பட வேண்டியவை நிறையவே இருக்கின்றன.சூட்சும எண்கள் அதன் தாக்கம், எண் இயந்திரம் என பேச எழுத நிறையவே இருக்கின்றன.ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கூட இயந்திரம் எழுத முடியும் அதற்கான முறைகள் சூத்திரங்கள் எல்லாம் இருக்கின்றன......அதையெல்லாம் எழுதப்போனால் ஒரு மெகா தொடராக போய்விடக் கூடிய ஆபத்து(!) இருப்பதால் இந்த அளவில் இந்த பதிவினை முடிக்கிறேன்....

பதிவின் ஸ்வாரஸ்யம் கருதி...அடுத்த பதிவில் சில வலை பதிவர்களின்...வலைப் பெயர்களை பிரித்து மேயலாமென நினைக்கிறேன்....விருப்பம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடாலாம்.....ஹி...ஹி....

http://pangaali.blogspot.com/2007/09/blog-post_13.html

Link to comment
Share on other sites

இந்த கணனியின் இயக்கத்துக்கும் அடிப்படையில் இரண்டே இரண்டு இலக்கங்கள்தான் காணமாம்.. மனுசனுக்கு இருப்பதில தப்பில்லைத்தானே?! :blink::unsure:

Link to comment
Share on other sites

எஸ்கீயூஸ் மீ என்ட பெயரை எப்படி மாற்றினா நான் அவுஸ்ரெலிய பிரதமாரா வருவேன் என்று ஒருக்கா சொல்லுங்கோ!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜமுனா, பெயரை மாற்ற முதல் வெள்ளை தோலாக இருக்க வேண்டும் அவுஸ்திரேலியாவின் பிரதமராக வருவதற்கு.

Link to comment
Share on other sites

வெள்ள தோல் எல்லாம் தேவையில்லை நல்ல நம்பரா பார்த்து பெயரை மாற்றுங்கோ நுணாவிலன் அண்ணா நான் பிரதமரா ஆனதும் உங்களுக்கு நிதிஅமைச்சர் பதவியை தருகிறேன்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.